சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம்

சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில், சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் சிங்கப்பூரின் மொத்த வரலாறும் அருமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில், மலேசிய ஆட்சியில், ஆங்கிலேயர் ஆட்சியில், ஜப்பானிய ஆதிக்கத்தில், விடுதலைக்குப் பிறகு பிரதமர் லீ குவான் யூ ஆட்சியில் சிங்கப்பூர் எப்படியெல்லாம் இருந்தது என்பதை நேரடியாகக் காணும் வகையில் தனித் தனி உள்ளரங்க வடிவமைப்புடன் அமைத்துள்ளார்கள். புகைப்படங்களை மாதிரியாகக் கொண்டு அதே போல் தத்ரூபமாகச் சிலைகளையும் உள்ளரங்கத்தையும் ஒளி ஒலி அமைப்புகளையும் செய்துள்ளார்கள். சில இடங்களில் சிலைகள் அசைகின்றன, பேசுகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதில் இவை வெற்றி பெற்றுள்ளன. இந்த அபாரமான அருங்காட்சியகத்தைக் கண்டு மகிழுங்கள்.

படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *