Tag: சீர்காழி உ. செல்வராஜு

  • விளைநிலம்

    -சீர்காழி செல்வராஜு

    ஆழ்மனமெனும் நிலத்தினிலே நல்
    எண்ணமெனும்
    விதைவிதைப்பின்
    நறுமணக்கும் தூரமெங்கும்
    நன்மை
    செய்தே பெயரெடுக்கும்!

    அரைகுறையாய் மேலோட்ட
    அறிவாற்றல்
    அடித்துச் செல்லும்
    உவர்ப்பு
    நிலம்போல் பயனற்று
    உழைத்த
    பலனை கெடுத்துவிடும்!

    செயல்களை உரங்கள்போலச்
    செவ்வனே
    இட்டு வந்தால்
    செழிப்பாய்க்
    கனிதந்து
    செந்தமிழ்போல்
    இனித்திடுமே!

    சுயமான சிந்தனையும்
    சுயமான
    முயற்சியுமே
    நன்மை
    தரும் விளைநிலம்போல்
    நற்பண்புகளாய்
    மகசூல் தரும்!

    நல்லதொரு சூழலிலே
    நம்குழந்தைகளை
    வளர்த்து வந்தால்
    நல்ல
    குடிமக்களாக
    நானிலத்தில்
    விளங்கிடுவர்!

     

    Share
  • நிலவே சாட்சி!

    -சீர்காழி உ செல்வராஜு

    அமைதியான அலைகளற்ற                                                 
    அந்திநேரப் பொழுதினிலே                                                     moon for kavithai
    மெல்ல மெல்லத் தெரிகிறாயே
    மென்மையான வெண்ணிலவே!

    சூடான நிலைமாறிச்
    சுகமான பால்நிலவே
    உன்னழகு என்னருமை!
    உனக்கு எங்கும் ரசிகர்களே…!

    ஓய்வெடுக்க அணியணியாய்
    ஓகோவெனத் திரண்டிடுவர்
    களிப்புடனே ரசிகர்களோ
    கடந்தகாலம் பகிர்ந்திடுவர்!

    எட்டாத தூரத்தில்
    கிட்டாத காதலியாய்
    மட்டிலா அன்புடனே
    மயக்கத்திலே மூழ்கடிப்பாய்!

    உம்முடனே எம்முன்னோர்
    உரைத்ததெல்லாம் சொல் நிலவே!
    இறந்தகாலம் நிகழ்காலம்
    எதிர்காலம் நீ அறிவாய்!

    அத்தனையும் அங்கிருந்தே
    அற்புதமாய் நோக்குகிறாய்
    நிழல்படம் எடுத்திருப்பாய்
    நிறைமதியே! நீ தானே சாட்சி…!

    Share