Tag: திரிவேணி சுப்ரமணியம்

  • இறகைச் சுமக்கும் காற்று

    திரிவேணி சுப்ரமணியம்
    கோயம்புத்தூர்

    பறவையின் எல்லை –
    கூண்டு கிடையாது
    பரந்த வானம்.
    சிறு இறகைச் சுமக்கும்
    காற்றென சுமந்து
    செல்கிறோம் வாழ்வை.
    நீரில் விழும் கல்
    பிம்பத்தை சலனப்படுத்துகிறது.
    நம் பிம்பங்களின் மீதும்
    கொட்டப்படுகிறது விமர்சனக்கல்.
    மனவலியின் சாயல்
    படிந்து படிந்து இறகின்
    சுமைதாங்காமல்
    தள்ளாடுகிறது காற்று.

    Share
  • எழுவதே இயல்பு

    எழுவதே இயல்பு

    திரிவேணி சுப்ரமணியம்
    கோயம்புத்தூர்

    எல்லாம் முடிந்ததாய்
    ஆங்காரமாய் எழும்
    மனதின் பேரிரைச்சல்
    தாளாமல் கண்களை மூடுகிறேன்.
    நெருப்புக் குழம்பில் வீழும்
    நீர்த் துளிகளாய்
    மனதில் வழிகிறது கண்ணீர்.
    அழுகையின் முடிவில்
    சுயம் எழுந்து
    முழங்குகிறது கம்பீரமாய்.
    வாழ்வதை விட வலுவாய்
    எழுவது இயல்பாகிறது!!

    Share