திருநீர்மலையை மாமலை ஆவது நீர்மலையே எனத் திருமங்கை ஆழ்வார் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து காண்டாவனம் என்பதோர் காடு எனத் தொடங்கும் பாசுரத்தை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.
திருமங்கை ஆழ்வார் அருளிய ‘திருவல்லிக்கேணிக் கண்டேனே!’ என்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அமுதத் தமிழில் திளையுங்கள்.
திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.