Tag: ராஜ்ப்ரியன்

  • அன்பே அழகானது. – பகுதி 6.

    – ராஜ்ப்ரியன்

     

    ஏண்டா ஐஸ்கிரிம் வாங்க போறவன் கூட யாரையாவது அழைச்சி போகலாம்மில்ல.

    இல்ல டாடி.

    நீ வர வர ரொம்ப மோசமா நடந்துக்கற ரஞ்சித் என கோபமாக சொன்னதும் அமைதியாக வந்தான்.

    பாஸ் தப்பு ரேவதி மேல. நீங்க ஏன் குட்டி பையனை திட்டறிங்க.

    ரேவதிக்கிட்ட ஒப்படைச்சிட்டு போனா நீங்க யாரும் அவனை பாத்துக்கமாட்டிங்களா என கேட்டதும் அதில்ல சார் என ஸ்ரீதர் தலை குனிந்தான். மஞ்சு சோகமாக அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

    கிடைச்சிட்டான்யில்ல விடுடா என்ற பிரபு, ரஞ்சித்தை அழைத்து புதுயிடத்துக்கு வந்தா தனியா போக கூடாது. யாராவது பெரியவங்க ஒருத்தர் துணையோடத்தான் போகனும். இங்கயெல்லாம் நீ தொலைஞ்சி போய்ட்டின்னா உன்ன கண்டு பிடிக்கவே முடியாது. அதனால ஜாக்கிரதையா இருக்கனும் சரியா என்றான்.

    சரி அங்கிள்.

    ஆமாம் ஐஸ்கிரிம் வாங்க உனக்கேது காசு என நான் கேட்டதும்

    அமைதியாக இருந்தான்

    கேட்கரன்யில்ல பதில் சொல்லு என கோபமாக கேட்டதும் ட்ரஸ் எடுக்க போனப்ப ஐஸ்கிரிம் வாங்க பணம் தந்திங்களேப்பா அதல மீதி காசு எங்கிட்ட இருந்துச்சி அதலதான் வாங்கனன்.

    உனக்கு காசு தர்றது தப்பா போச்சி.

    சின்னப்பையன் சொன்னா புரிஞ்சிக்கபோறான். அதவிட்டுட்டு திட்டிக்கிட்டே இருக்கற என பிரபு மீண்டும் சொல்ல அமைதியாக வந்தேன். இரவு 8 மணியளவில் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தோம்.

    வீட்டுக்கு வந்து உள் நுழைந்ததும் என்னடா கோபமா என கேட்டேன்.

    அமைதியாக இருந்த ரஞ்சித் எதுவும் சொல்லமால் நி;ன்றான். இந்த வயசுல உங்க பையன் பிர்லியன்டா இருக்கான்னு மத்தவங்க சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா நீ பண்ற வாலு தனத்த தான் பொருத்துக்க முடியல என்றதும். அதற்கும் அமைதியாக இருந்தான். சரி ட்ரஸ் மாத்திக்க டிபன் செய்யறன் சாப்பிடலாம் என்றதும் அமைதியாக பெட்ரூம்குள் நுழைந்தான். நானும் சென்று உடை மாற்றிக்கொண்டு டிபன் செய்ய தொடங்கினேன். தோசை ஊத்தி சட்னி வைத்து தந்ததும் சாப்பிட்டுவிட்டு ரூம்குள் சென்றுவிட்டான். நான் பெட்ரூம்குள் நுழைந்த போது அவன் தூங்கியிருந்தான். அவன் தலையை தடவி தந்தபடி நானும் தூங்கியிருந்தேன்.

    காலையில் எழுந்தவன் அவனே குளிக்க சென்றான். என்ன சார் இன்னும் கோபம் போகலயா ?

    அதெல்லாம் ஒன்னும்மில்ல.

    உன் முகத்த பாரு குரங்கு மாதிரியிருக்கு.

    உன் மூஞ்சிதான் எங்கிட்டயிருக்கு என பதில் சொல்ல அவனை முறைப்பது போல பார்த்ததும் பாத்ரூம்குள் ஓடிவிட்டான். குளித்துவிட்டு வெளியே வந்து பள்ளிக்கு கிளம்பியவனின் கழுத்தில் டை கட்டியபடி மெல்லிய குரலில் நீ அவுங்க கூட இல்லன்னதும் நான் எப்படி துடிச்சன் தெரியுமா. அந்த கோபத்தல திட்டிட்டன்டா ஸாரி.

    நீங்க சென்னை அழைச்சிம் போகும்போது என்ன சொன்னிங்க.

    என்ன சொன்னன்.

    பொம்மையெல்லாம் வாங்கி தர்றன்னு சொன்னீங்க. எதுவும் வாங்கி தரல.

    மஞ்சுக்கிட்ட நான் தான் வாங்கி தரச்சொன்னனே.

    எதுவும் வாங்கி தரலப்பா.

    நானும் டென்ஷன்ல மறந்துட்டன். அடுத்தமுறை போறப்ப நிறைய வாங்கி தர்றன்.

    ஓ.கே டாடி என தலையாட்டியவன் சந்தோஷத்தில் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தான். தட்டில் போட்டு வைத்திருந்த மூன்று இட்லியை சாப்பிட்டபோது வெளியே வீட்டு வாசலில் வந்து நின்று ஹாரன் அடித்தது ஆட்டோ. இரு ரஞ்சித் உன்ன நான் ட்ராப் பண்றன்.

    வேணாம் டாடி. நான் ஆட்டோவுல போறன். மதியம் லஞ்ச் டாடி. மறந்துட்டன் இரு என சமையல் அறைக்கு சென்று அவனுக்காக வைத்திருந்த டிபன் பாக்ஸ் எடுத்து வந்து தந்தபடி ஐந்து இட்லி வச்சியிருக்கன். மிச்சம் வைக்காம சாப்பிடு என டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டிலை தந்ததும் வாங்கிக்கொண்டு வெளியே நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு சிரித்தபடி டாடா காட்டினான்.

    நானும் குளித்துவிட்டு முடித்து சாப்பிட்டுவிட்டு அலுவலம் சென்ற போது வேலைகள் நடந்துக்கொண்டு இருந்தன. ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்து பிரபு டிசைன் செய்துக்கொண்டு இருந்தவனை உள்ள வாடா என்றதும் வந்தவன் வீட்ல போயும் அவனை திட்டனியா ?.

    இல்லடா. காலையில வரைக்கும் கோபமா இருந்தான். ஸ்கூல் போகும்போது தான் கொஞ்சம் சிரிச்சான்.

    அவனுக்கு அம்மா பாசமும், அரவணைப்பும் தேவைடா. ஒரு அப்பா எவ்ளோ பாசத்த காட்டனாலும், அம்மா மாதிரி வராது. அதனால கோபப்படாம நாங்க சொல்றத கொஞ்சம் கேளுடா என்னும் போதே ஃபோன் மணி அடித்தது. மதன் ஃபோனை எடுத்து ஹலோ என்றான்.

    எதிர் தரப்பு குரலை கேட்டதும் வணக்கம் சார். நல்லாயிருக்கிங்களா ?

    நல்லாயிருக்கனப்பா. நீ எப்படியிருக்கற ?.

    நான் நல்லாயிருக்கன் சார்.

    செல்போன்க்கு கூப்பிட்டன் எடுக்கல.

    பைக்ல ஆபிஸ் வந்துக்கிட்டு இருந்தன் சத்தத்தல கேட்கல சார்.

    தலைவர் அடுத்த மாசம் இங்க வர்றாரு.

    என்ன சார் திடீர்ன்னு.

    மாவட்ட தலைவர் பையன்க்கு கல்யாணம். அதுக்காக வர்றாரு. நாம நல்லா விளம்பரம் செய்யனும்.

    செய்துடலாம் சார்.

    வாசகம் சொல்றன் குறிச்சிக்கப்பா.

    சொல்லுங்க சார் என ஒரு பேப்பர் பேனாவை எடுத்து அவர் சொன்னதை குறிக்க தொடங்கினான். பத்து நிமிடம்மானது. டிசைன் பண்ணி நாளைக்கு ஆபிஸ்க்கு 11 மணிக்கு தந்து அனுப்பறன் சார். கரெக்ஷன் ஏதாவது இருந்து சொன்னிங்கன்னா மாத்தி நாளைக்கு ஈவ்னிங் பைனல் பண்ணிடலாம் சார் என முடித்து ஃபோனை வைக்க 15 நிமிடமானது.

    பிரபுவிடம் எல்லாரையும் உள்ள வரச்சொல்லு.

    எதுக்கு.

    வரச்சொல்லு சொல்றன்.

    கண்ணாடி டோரை திறந்த பிரபு, ஆல் ஆபிசர்ஸ் ப்ளீஸ் கம் என்றதும் அடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லோரும் மதன் முன் அமர்ந்திருந்தனர்.

    அடுத்த மாசம் மக்கள் முன்னேற்ற முன்னணி கட்சியோட தலைவர் முக்கிய கட்சிக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு இங்க வர்றாறாம். இப்பத்தான் டேட் கன்பார்ம்மாச்சாம். அந்த கட்சி மா.செவாயிருக்கற வேலாயுதம் எம்.எல்.ஏ இப்பத்தான் போன் பண்ணி சொன்னாரு. நியூஷ் பேப்பர், பேனர், போஸ்டர்க்கு டிசைன் கேட்டுயிருக்காரு. ரொம்ப நல்லாயிருக்கன்னு தலைவர் நின்னு ரசிக்கற மாதிரி இருக்கனம்ன்னு சொல்றாரு.

    செய்து தந்துடலாம் சார் என்றான் பாண்டியன்.

    ஆனா நாளைக்கே வேணும்ன்னு கேட்கறாரு.

    நாளைக்கா என ரேவதி அதிர்ச்சியாக.

    ஆமாம்.

    ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டைம் சார். வாராவாரம் புது டிசைன்ங்க தந்துக்கிட்டே இருக்கனம்ன்னு சொல்லியிருக்காங்க. நம்மோட ரெகுலர் கஸ்டமர்களோடதே நிறைய பென்டிங் இருக்கு. அதனால இத நாளைக்கே செய்து தர முடியாது சார் இரண்டு நாளாவது ஆகும் சார் என்றாள் ரேவதி.

    இவரும் நம்ம ரெகுலர் கஸ்டமர் தான் ரேவதி என்ற நான் கொஞ்சம் யோசித்துவிட்டு

    எம்.எல்.ஏவத பாண்டியனும், ரேவதியும் செய்யட்டும். காலேஜ், ஸ்கூல் ஓர்க்குகள பிரபு செய்யட்டும். மஞ்சு நீ கொஞ்சம் அப்படியே இந்த வேலைகளையும் கவனி.

    சரியென தலையாட்டிய மஞ்சு. சார் அந்த எம்.எல்.ஏ போனமுறையே ஐந்தாயிரம் பென்டிங் வச்சியிருக்காரு என்றாள் மஞ்சு.

    இந்தமுறை வாங்கிடலாம் மஞ்சு. ஸ்ரீதர் எங்க?.

    இன்னும் வரல சார்.

    பேங்க்ல ஏதாவது ஓர்க் இருக்கா.

    செக்குங்க இருக்கு சார் அத அக்கவுண்ட்ல போடனும்.

    அத எங்கிட்ட குடு நான் பாத்துக்கறன். ஸ்ரீதர் வந்ததும் எம்.எல்.ஏ விளம்பரத்த டிசைன் பண்ணச்சொல்லு.

    சரி சார்.

    பாண்டியன் வேலைய பிரிச்சி பாருங்க. நீங்க பேனர் வேலைகள பாருங்க, ரேவதி பேப்பர் விளம்பரத்த டிசைன் பண்ணட்டும், போஸ்டர் விளம்பரத்த ஸ்ரீதர்க்கிட்ட தந்துவிடுங்க. தேதியும், வாசகமும் சொல்லியிருக்காரு. எல்லாத்தலயும் அவர் படமும், கட்சி தலைவர் படமும் தான் போடனுமாம். தம்பதிங்க படத்த தந்துவிட்டுயிருக்காறாம். அதுக்கு இடத்த விட்டுட்டு டிசைன் பண்ணுங்க. சி.டி வந்ததும் படத்த எடுத்து வச்சி ஃபில் பண்ணுங்க.

    சரி சார்.

    சரி எல்லோரும் போய் வேலைய பாருங்க என்றதும் அனைவரும் எழுந்து சென்றனர்.

    பிரபு எனக்கொரு ஐடியா, நாம இதுவரைக்கும் டிசைன் மட்டும் தான் செய்து தந்துக்கிட்டு இருந்தோம். இந்தமுறை அதை பிரிண்ட் செய்து தர ஆர்டரை எடுத்த எப்படியிருக்கும் ?.

    என்னடாயிது புதுசா.

    ஆமாம் புதுசு தான். வளருனும்டா. எத்தனை வருஷத்துக்கு தான் அப்படியே இருக்கறது. கொஞ்சம் வளருவோம்;டா. நீ ஒருவேளை செய். நல்லா பிரிண்ட் போடறவங்க எங்க எங்க இருக்காங்கன்னு பாரு. ரேட் எவ்ளோன்னு விசாரி நான் இதோ வந்துடறன்.

    ஏத்தனை வேலைடா நான் செய்யறது.

    சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்த வச்சிக்கிட்டு வேலையப்பாரு. நான் வரும் போது பட்டியல் ரெடியா இருக்கட்டும்.

    ம்.

    ஃபைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் மதன்.

    மதியம் 2 மணிக்கு திரும்பி வரும்போது ரிஷப்சனில் அமர்ந்து அனைவரும் அரட்டையடித்துக்கொண்டு இருந்தனர்.

    ஏய் என்னப்பாயிது, நிறைய ஓர்க் பென்டிங் இருக்குன்னு காலையில தான் சொன்னிங்க. இப்ப என்னடான்னா எல்லாரும் உக்காந்து கதையடிச்சிக்கிட்டு இருக்கிங்க.

    கரண்ட் இல்ல சார்.

    நாம தான் யூ.பி.எஸ் போட்டுயிருக்கோம்மே?.

    நாம போட்ட யூ.பி.எஸ் நாலு மணி நேரம் தான் வருது. காலையில 9 மணிக்கு போன கரண்ட் இப்பவரை வரல. மதியம்மே பேக்கப் காலியாகி ஒரே ஒரு சிஸ்டம் தான் ஒர்க்காகுது. அதலத்தான் பாண்டியன் சார் வேலை பாத்துக்கிட்டு இருக்காரு என்றான் ஸ்ரீதர்.

    காலையில நீ எங்க போன ?

    ஓர்க் பாஸ்.

    என்ன வேலை பாத்த.

    ஃபில் வராம சிலது இருந்தது அத வாங்கிவர போனன் பாஸ்.

    வாங்கிட்டியா

    நாளைக்கு வரச்சொல்லிட்டாங்க.

    ஊர் சுத்த நிறைய காரணத்த வச்சியிருக்க

    இல்ல பாஸ்.

    பிரபு எங்க ?.

    லஞ்ச்க்கு போயிருக்கார் சார்.

    அவனை மொபைல் லைனில் பிடித்து சாப்பிட்டியா ?.

    ம் என்றவனிடம் வேலை முடிஞ்சதா.

    உன் லேப்டாப்ல ஸ்டோர் பண்ணி வச்சியிருக்கன் பாரு.

    சரி சீக்கிரம் வா எனச்சொல்லிவிட்டு மதன் தன் அறைக்குள் சென்றான். லேப்டாப்பை ஆன் செய்து பிரபு ஸ்டோர் செய்த ஃபைலை ஓப்பன் செய்து பார்த்தபோது விதவிதமான ரேட்களில் பிரிண்ட் போடப்படுவது தெரிந்தது. தன்னிடம்மிருந்த சில குறிப்புகளை பார்த்தான் அவன் சொன்னதை விட விலை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. பிரபு உள்ளே நுழைந்தவன் கரண்ட் வந்துடுச்சிடா என சொன்னபடி ஃபேனை சுழல விட்டவன் பாத்துட்டியா ?

    பாத்துக்கிட்டு தான் இருக்கன். இத நீயும் பாரு என நான் குறித்து வந்திருந்த சில தகவல்களை அவனிடம் தந்தேன். கொஞ்சம் நேரம் பார்த்தவன் எனக்கு குழப்பமாயிருக்கு என்ன பண்றதா ஐடியா என கேட்டான்.

    விதவிதமான ரேட்களா இருக்கு. இதல கொஞ்சம் டீப்பா போனாதான் குவாலிட்டி தர முடியும், நாமளும் லாபம் பாக்க முடியும் அதனால இப்போதைக்கு பெருசா வேணாம். இத படிப்படியா செய்வோம். அவசரப்பட்டு இறங்கி சிக்கிட்டோம் இருக்கறதும் போயிடும்.

    இந்த கம்பெனி ஆரம்பிச்ச இந்த எட்டு வருஷத்தல இப்பத்தாண்டா ஒழுங்க யோசிச்சியிருக்கற என்றான் பிரபு.

    பாஸ் என அழைத்தபடி வேகவேகமாக அறைக்குள் வந்த ஸ்ரீதர், பாஸ் ஆல் இன்டியா முழுக்க பிராஞ்ச் வச்சியிருக்கற தேவ் கம்பெனியோட பெங்களுரூ பிராஞ்ச் மேனேஜர் பேசனாரு. அவுங்களோட கிளையண்ட் ஒருத்தர் நம்மவூர்ல பெரிய ஜிவல்லரி திறக்கறாறாம். அதை மக்கள்க்கிட்ட புரமோட் பண்ணனுமாம், ஜிவல்லரி ஓனர் பிரஸ்ச மீட் பண்ணனும்மாம் அரேஞ்ச் பண்ணி தர முடியுமான்னு கேட்கறாரு.

    ஓ.கே சொல்லு. அவுங்க நம்மள ஓவர் லுக் பண்ணக்கூடாது. பிடி நம்மக்கிட்ட இருக்கட்டும் ஸ்ரீதர்.

    நீங்க பேசறிங்களா பாஸ்.

    இல்ல மேனேஜர் பேசுவாருன்னு சொல்லு.

    ஓ.கே பாஸ் என்றபடி வெளியே சென்றான்.

    ஓபி அடிச்சாலும் நல்ல கான்டக்ட் வச்சியிருக்கனேடா.

    அவன் கேடி. ஒரு நாள் நமக்கு அல்வா தரப்போறான் பாரு என்றவனிடம்

    தரும்போது பாத்துக்கலாம். இங்க அந்த கம்பெனி எது பண்றதாயிருந்தாலும் அது நம்ம ஏஜென்சி வழியாத்தான் பண்ணனும் அந்தளவுக்கு பேசி அவனை நம்ம கண்ட்ரோல்ல வச்சிக்க. நமக்கு தர்ற ரேட் விஷயத்தல தயங்குவாங்க. எங்க ரேட் இதுதான்னு கட்டன்ரைட்ட பேசிடு.

    பெரிய கம்பெனிடா விட்டு பிடிப்பமே ?.

    ஒன்னும் வேணாம். நம்மக்கிட்ட வர்றது அந்த ஜிவல்லரி கிடையாது. ஜிவல்லரி நியமிச்சியிருக்கற அட்வர்டைசிங் கம்பெனி. நியூஸ் பேப்பர், மீடியா விளம்பரத்த அவுங்களே தயாரிப்பாங்க. வெளியிடப்போறதும் அந்த கம்பெனி தான். இங்க லோக்கல்ல தெருவுல, வினையல் போர்டு, பிட் நோட்டீஸ் தர்ற சின்ன சின்ன விஷயத்துக்கு தான் நம்மள பயன்படுத்துவாங்க. அவனால அவ்வளவா வருமானம் கிடையாது. அதனால அவன் சொல்ற வேலைய கேட்டுக்க செஞ்சிட்டு அதுக்கு ஏத்தமாதிரி பில் போட்டு அனுப்பிடு.

    நாம ஏன் அந்த ஜிவல்லரி ஓனரை அப்ரோச் பண்ணி இங்கத்தி அட்வர்டைசிங்க நாங்க பாத்துக்கறன்னு கேட்டா பிரபுவை முறைத்தேன்.

     

    தொடரும்……………

     

    Share
  • அன்பே அழகானது – 5

    ராஜ்ப்ரியன்

    மதியம் என்ன லஞ்ச் என சுதாவிடம் மாலாதி டீச்சர் கேட்டதும்.

    உதடு பிரியாமல் புன்னகைத்த சுதா, அப்பாவோட ப்ரண்ட் பொண்ணுக்கு கல்யாணம். அதனால காலையில எல்லாரும் அங்க போய்ட்டாங்க. அதனால லஞ்ச் கொண்டு வரல. வீட்டுக்கு போய் சாப்பிட்டு தான் வரனும் மேடம்.

    என்ன மேடம் வந்து ஓருவாரம்மாச்சி. உங்க வீட்டப்பத்தி சொல்லவேயில்ல என ப்ரியா தான் கிளறினாள்.

    நான், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பொண்ணு சுவாதி ஐந்து பேர் தான். அப்பாவும், அண்ணனும் பிஸ்னஸ் பண்றாங்க, அம்மா ஹவுஸ்ஒய்ப், அண்ணி இந்தியன் பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்காங்க.

    ப்ரியா தயங்கி தயங்கி உங்களுக்கு கல்யாணம்மாயிடுச்சில்ல.

    ம்.

    வீட்டுக்காரர் என மாலதி இழுக்க சுதாவின் செல்போன் அன்பென்ற மழையிலே என பாடல் பாட அதை எடுத்து பார்த்தவள் அம்மா கூப்பிடறாங்க எனச்சொல்லியபடி ஆன் செய்தாள். சொல்லும்மா. இன்னும் கொஞ்ச நேரத்தல லஞ்ச் ஃபெல் அடிப்பாங்க வீட்டுக்கு வர்றம்மா எனச்சொல்லிவிட்டு காலை கட் செய்யவும் லஞ்ச் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

    நானும் இன்னைக்கு வீட்டுக்கு தான் போறன் வாங்களேன் உங்கள ட்ராப் பண்றன் என்றாள் ப்ரியா.

    உங்களுக்கு எதுக்கு சிரமம்.

    இதலபோய் என்னயிருக்கு வாங்க என்றாள்.

    ப்ரியாவும், சுதாவும் பார்கிங் ஏரியாவுக்கு நடந்து செல்ல குட் ஆப்டர்னோ மேடம் என்றார் கணக்கு ஆசிரியரான ஸ்டீபன்.

    திரும்பி பார்த்த ப்ரியா வணக்கம் சார் என்றாள்.

    எங்க போறிங்க ?.

    லஞ்ச் கொண்டு வரல சார் அதனால வீட்டுக்கு போறன். அதிருக்கட்டும் சார் ஸ்கூல் திறந்தது ஒருவாரம்மாச்சி இப்பத்தான் வர்றிங்க.

    ஃபேமிலி டூர் முடிஞ்சி, சொந்த ஊர்க்கு போய்ட்டு நேத்து தான் வந்தோம்.

    ஓஹே.

    இவுங்க யார் டீச்சர் ?.

    நியூ அப்பாய்மென்ட் சார். பேரு சுதா.

    சுதா பக்கம் திரும்பி ஸ்டீபன் புன்னகைக்க சுதாவும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

    சார் டுவல்த்துக்கு மேக்ஸ் எடுக்கறாரு என ப்ரியா அறிமுகப்படுத்த சுதா ஹலோ சார் என்றாள்.

    சரி சார் டைம்மாகிடுச்சி போய்ட்டு வந்துடறோம் என்றாள் ப்ரியா. அவரும் தலையாட்டிவிட்டு தன் டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றார். ப்ரியா தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வர சுதா ஏறி அமர இருவரும் பள்ளியில் இருந்து வந்தனர். சுதா தன் வீட்டுக்கு வழிச்சொல்ல ப்ரியா வண்டியை விரட்டினாள். காந்தி நகரில் உள்ள தன் வீட்டு முன் வந்ததும் நீங்களும் வாங்க இப்படியே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம் என அழைக்க ப்ரியா மறுத்துவிட்டு ரிட்டன் நான் வந்து பிக்கப் பண்ணிக்கட்டுமா என கேட்டதும் சுதா உங்களுக்கு எதுக்கு சிரமம். நூன் ஸ்கூல்க்கு வந்துடறன் எனச்சொல்ல ப்ரியா கிளம்பினாள்.

    வீட்டுக்குள் நுழைந்த சுதாவை கண்டதும் அவளது அம்மா காவேரி, ஏண்டீ காலையில தோசையாவது சுட்டு சாப்பிட்டுட்டு போக வேண்டியதுதானே.

    குhலையில பசிக்கல அதனால அப்படியே போய்ட்டன் என்றபடி பாத்ரூம் சென்று திரும்பி வந்து டைனிங்டேபிள் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டபடியே கல்யாணம் எப்படிம்மா நடந்தது என கேட்டபடியே சாப்பிட்டாள். சுhப்பிட்டு முடித்ததும் ஃபேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப எப்படிடீ போற என கேட்டார் காவேரி.

    ஏதாவது ஆட்டோ புடிச்சி போய்க்கறம்மா எனச்சொல்லியபடி வெளியே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்தாள்.

    அப்போது அவள் அருகே சர்ரென ஒரு டூவீலர் வந்து பிரேக் அடித்து நின்றார் ஆசியர் ஸ்டீபன். மேடம் இங்க என்ன நிக்கறிங்க ?

    பக்கத்தல தான் சார் வீடு. ஸ்கூல்க்கு போகனும் ஆட்டோவுக்காக நிக்கறன்.

    எதுக்கு ஆட்டோ நானும் ஸ்கூல் தான் போறன், எதுவும் சங்கடம்மில்லைன்னா என்னோட வாங்க.

    பரவாயில்ல சார். ஆட்டோவுலயே வந்துடறன்.

    நீங்க என்னை ஃப்ரண்டா நினைச்சி வாங்க என சொல்லியபடி ஸ்டீபன் சுதாவை பார்க்க அதை காதில் வாங்கியபடி ரோட்டில் காலியாக வந்த ஆட்டோவை சுதா பார்க்க அது அவள் அருகே வந்து நின்றது. ஸாரி சார் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என்றபடி ஆட்டோவில் அமர்ந்தபடி குழந்தை ஏசு ஸ்கூல் போங்க எனச்சொல்ல ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவையே பார்த்தபடி நின்றிருந்தார் ஸ்டீபன்.

    பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்தியவள் மாலை வீட்டுக்கு கிளம்பும்போது  ப்ரியாவிடம் மதியம் ஸ்டீபன் வண்டியில் வாங்க என அழைத்தது பற்றி சுதா சொன்னாள்.

    வந்தன்னைக்கே உங்கிட்ட ஆரம்பிச்சிட்டாரா?.

    என்ன மேடம் சொல்றிங்க என சந்தேகமாகவே கேட்டாள்.

    அவர் ரொமான்ஸ் மன்னன். கூட வேலை பாக்கற டீச்சராச்சேன்னு பாக்கமாட்டாரு வழிவாரு. மேனேஜ்மென்ட் அவர் விவகாரத்த கண்டுக்கறதில்ல. சர்ச்ல அவருக்கு செல்வாக்குயிருக்கு. அரசியல் செல்வாக்கும் வச்சியிருக்காரு. அதனால அவர்க்கிட்ட ஒதுங்கியே இருக்காங்க. அவரோட மனைவியும் டீச்சர் தான் ரொம்ப நல்லவங்க. மதியம் உன்ன பாத்துட்டு நீ யாருன்னு தெரிஞ்சிக்க தான் பேச்சு கொடுத்தாரு. நீ மட்டும் அவரோட வண்டியில வந்திருந்த உன் இமேஜ் காலியாகியிருக்கும். அவர்கிட்ட ஜாக்கிரதையா இரு. உங்க ஏரியாவுக்கு பக்கத்து ஏரியால தான் அவரோட வீடு இருக்கு என்றாள்.

    பாத்து ஒரு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள உங்கள ட்ராப் பண்றன்னு கேட்கறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க. வந்த கோபத்துக்கு திட்டிட்டுயிருப்பன் வேணாம்ன்னு விட்டுட்டன்.

    அவர் விவகாரத்தல கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்றவள் வாங்க உங்கள வீட்ல ட்ராப் பண்ணிடறன். சரியென சுதா தலையாட்ட ஸ்கூட்டி சுதாவின் வீட்டுக்கு சென்றது. கதவை திறந்து வரவேற்ற காவேரியிடம் இவுங்க பேர் ப்ரியா கூட வேலை பாக்கறாங்கன்னு சொன்னயில்ல இவுங்க தான் என அறிமுகப்படுத்தினாள் சுதா.

    வாம்மா என்றவர் இருங்க காபி போட்டு எடுத்து வர்றன் எனச்சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சுதா ப்ரியாவுக்கு வீட்டை சுற்றி காட்டினாள். காபியுடன் வந்த காவேரி, ப்ரியாவிடம் நீ எங்கம்மாயிருக்க என விசாரிக்க தொடங்கினார். எனக்கு சொந்தவூர் விழுப்புரம். இங்க கல்யாணம் பண்ணி தந்தாங்க. என் வீட்டுக்காரரும் ஆசிரியரா இருக்காரு. ஒரு பொண்ணு. லலிதான்னு பேரு நாமக்கல் போர்டிங் ஸ்கூல்ல எட்டாவது படிக்கறா என்றார்.

    வேலைக்கு போய் சம்பாதிக்கனும்கிற நிலமையில இவயில்ல. வேலைக்கு போகனம்ன்னு அடம்பிடிச்சதால தான் இவுங்கப்பா அனுப்பிவைக்கறாரு. இவ சந்தோஷமா இருக்கனம்ன்னு நினைக்கறோம். அவ விதி அவளை சுத்தி விட்டு வேடிக்கை பாக்குது என கண் கலங்க ப்ரியாவுக்கு புரியவில்லை என்றாளும், சுதா வாழ்க்கை மகிழ்ச்சியா இல்லை என்பதை உணர்ந்தாள். காவேரி அழுவதை கண்டதும் என்னம்மா நீ என சுதா கேட்க தன் கண்களை முந்தானியால் துடைத்தபடி நான் ஒன்னும் அழுவலடியம்மா என்ற காவேரி கிச்சன் பக்கம் நடந்தார்.

    ஏதோ ஞாபகம் வந்தவளாக திரும்பி, மதியம் சாப்பிட வந்த உங்கப்பா நீ சாப்பிட வந்தியான்னு கேட்டாரு. வந்து சாப்பிட்டுட்டு ஆட்டோவுல திரும்ப போய்ட்டான்னு சொன்னதும் என்னை திட்டி தீத்துட்டாரு. உனக்கு ஸ்கூட்டி வாங்க போயிருக்காரு என்ன கலர் வேணும்ன்னு உன்ன போன் பண்ணச்சொன்னாரு என காவேரி சொன்னபோது ப்ரியா ஜெர்க்காகிவிட்டாள்.

    முன் சீட்டில் பாண்டியன், ரஞ்சித் அமர்ந்திருக்க, நடு சீட்டில் நான், பிரபு, ஸ்ரீதர் அமர்ந்திருந்தோம். பின் சீட்டில் மஞ்சு, கீதா, ரேவதி அமர்ந்திருந்த குவாலிஸ் கார் சென்னையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது.

    ஏன் கீதா ஆஸ்பிட்டல் சேர்த்து பத்து நாளாகியிருக்கு. அத ஆபிஸ்ல யார்க்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டு கொஞ்சம் பணம் வேணும்ன்னு கேட்கற. பிரபு மட்டும் பிரச்சனை என்னன்னு சொல்லலன்னா இது தெரிஞ்சே இருக்காது. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. எதுக்கு அலையனும் என கேட்டதற்க்கு அமைதியாகவே வந்தது.

    நேத்து காலையில எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வந்தப்ப அவுங்க தான் கீதா அம்மா பத்தி சொன்னாங்க. நான் கீதாக்கிட்ட கேட்கலாம்ன்னு இருந்தன் மறந்தே போய்ட்டன். அது வெறும் முப்பதாயிரம் கேட்குதுன்னு சொன்னப்ப தான் கோபம் வந்துச்சி. 2 லட்ச ரூபாய் செலவாகும்ன்னு ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்களாம். நிறைய இடத்தல பணம் கேட்டுயிருக்கு. கடைசி வரை நம்மக்கிட்ட கேட்கவேயில்ல முப்பதாயிரம் தாங்கன்னு கேட்டதும் தான் கோபம் வந்துடுச்சி அதான் திட்டிட்டன் என்றான் பிரபு.

    ஸாரி சார் என்ற கீதா அவ்ளோ பணம் என்னை நம்பி தருவீங்களான்னு சந்தேகத்தல கேட்காம விட்டுட்டன் சார் என்றாள்.

    ஐந்து வருஷமா வேலை பாக்கற. இன்னமும் கூட வேலை பாக்கறவங்கள புரிஞ்சிக்கலயே என்றதும் அமைதியாக இருந்தாள்.

    ஏதாவது வேலை பாக்கனும்மேன்னு நானும், பிரபுவும் கல்யாண பத்திரிக்கை, போஸ்டர் விளம்பரம் டிசைன் பண்ணி தர்றவங்களா பத்துக்கு பத்து அறையில ஒரு கம்ப்யூட்டர வச்சிக்கிட்டு வேலை செய்ய ஆரம்பிச்சோம். மாசத்தல பாதி நாள் வெட்டியா உட்கார்ந்துயிருப்போம். பாண்டியன் வந்தப்பிறகு பாண்டியனோட கைவண்ணம் தான் பெருசா வளர முடிஞ்சது. பெரிய அளவுல ஆபிஸ் திறக்கலாம்ன்னு முடிவு செய்தப்ப நானும் பிரபுவும் பணம் போட்டோம், பாண்டியனால பணம் போட முடியலன்னாலும் பாண்டியனும் பாட்னர் மாதிரி தான். பாண்டியன் மட்டுமல்ல இந்த கம்பெனியில யார் வந்து வேலைக்கு சேர்ந்து உழைச்சாலும் அவுங்களோட நல்லது கெட்டதுல எல்லாருக்கும் பங்குயிருக்கும்ன்னு சொன்னோம். அதுப்பிறகாறம் தான் நடந்துக்கிட்டு வர்றோம். இத கம்பெனியா பதிவு செய்ததால நான் எம்.டி, இவன் மேனேஜர், மஞ்சுக்கு அக்கவுண்டன்ட்ன்னு பதவியிருக்கே தவிர அதுயெல்லாம் சும்மா. என்னைப்பொருத்தவரை எல்லாரும்மே ஒன்னு தான். இன்னைக்கு எங்களை தவிர 5 பேர் இருக்கிங்க. அதுவே 70 பேர் வேலை செய்யற இடமா மாறனாலும் இப்படித்தான் நடந்துப்போம்.

    பாஸ் அப்போ நாங்களும் பாட்னர்களா பாஸ்.

    இருக்க இடம் கொடுத்தா மடத்த புடிக்கனும்ன்னு நினைக்காதடா என பாண்டியன் சவுண்ட் விட்டதும் அமைதியானான்.

    மருத்துவ செலவுக்குன்னு தர்ற பணம் கடன் தான். சம்பளத்தல புடிச்சிக்குவோம் என பிரபு சொன்னதும் என்னயிருந்தாலும் நீங்க கணக்குல சரியா இருக்கிங்க சார் என்றான் ஸ்ரீதர்.

    சும்மா தருதுன்னு வச்சிக்க நீ மாசத்துக்கு இரண்டு முறை வண்டியில இருந்து கீழ விழுந்து ஆஸ்பிட்டல் பில் கட்டுன்னுவ அதனால தான் கடிவாளம் போட்டு வச்சியிருக்காரு சார் என மஞ்சு சொன்னதும் ஈஈ என சிரித்தான்.

    டாப்பிக்கை மாத்துவோம் என நினைத்து என்ன ஸ்ரீதர் எப்போ கல்யாணம்.

    யாருக்கு பாஸ்.

    உனக்குதான்யா

    நான் குழந்தை பாஸ்.

    டேய் உனக்கு காலாகாலத்துல கல்யாணம்மாகியிருந்தா இன்னேறம் நாலு புள்ளைக்கு அப்பனாயிருப்ப. நீ குழந்தையா என பிரபு காலாய்த்ததும் அனைவரும் சிரித்துவிட்டோம்.

    உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் சார்.

    கேட்டதுக்கு பதில் சொல்லுடா என பாண்டியன் சொன்னதும் தங்கச்சியிருக்கு பாஸ். அதுக்கப்பறம் தான் எனக்கு என்றான்.

    உன்னாலே உன்னாலே என திடீரென கார் ஸ்பீக்கரில் பாட்டு அலறியது. என்னவென பார்த்தாள் ரஞ்சித் தான் பாட்டு போட்டுயிருந்தான்.

    எங்கடா அமைதியா வர்றானேன்னு பாத்தன். ஆரம்பிச்சிட்டியா ?.

    ஃபோர் அடிக்குதுப்பா.

    சவுண்ட் கம்பியா வச்சி கேளு.

    தலையாட்டினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனை முன் நின்றிருந்தோம். கீதா அனைவரையும் வார்டுக்கு அழைத்து சென்றாள். வெளியே கீதாவின் அண்ணனும், அப்பாவும் நின்றிருந்தார்கள். எங்களைப்பார்த்து வாங்க என அழைத்தனர்.

    மஞ்சு, ரேவதி, ரஞ்சித்தை தன் அம்மா இருந்த அறைக்குள் கீதா அழைத்து சென்றாள்.

    எப்படி இருக்காங்க என கீதாவின் அப்பாவிடம் நாங்கள் கேட்டதும், உள்ள தான் இருக்கா போய் பாருங்க என்றார். அவுங்க பாத்துட்டு வரட்டும் எனச்சொல்லிவிட்டு ஆரம்பத்தலயே பாக்க வேண்டியது தானே.

    நம்ம ஊர்லயே பாத்துக்கிட்டு தான் இருந்தோம், சரியா வைத்தியம் பாக்காததால வந்த விணை சார். எல்லாம் விதி என்றார் விரக்தியான குரலில்.

    ஆஸ்பிட்டல்ல சேர்த்திங்கயில்ல பணம்மில்லைன்னா கீதாக்கிட்ட சொல்லி ஆபிஸ்ல கேட்க சொல்ல வேண்டியதானே என பிரபு கேட்டதும் சொந்தக்காரங்ககிட்ட கேட்டுயிருந்தன் தர்றன்னு சொன்னாங்க கடைசியல தரல அதான் என்றார் தயங்கி தயங்கி.

    இப்ப எவ்ளோ கட்டனும் என பாண்டியன் கேட்டதும் ஒரு லட்ச ரூபாய் கட்டியாச்சி. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண டேட் குறிச்சியிருக்காங்க மீதிய டிஸ்சார்ஜ் பண்ணறப்ப கட்டனா போதும்ன்னு சொன்னாங்க என்றான் கீதாவின் அண்ணன்.

    உள்ளே போனவர்கள் வெளியே வர நாங்கள் உள்ளே சென்றோம். வாங்க என கிதாவின் அம்மா அழைத்தார். கையில் வைத்திருந்த பொருட்களை பெட் அருகே வைத்துவிட்டு உடம்பு எப்படியிருக்கும்மா என ஸ்ரீதர் தான் கேட்டான்.

    நாளைக்கு ஆப்ரேஷன்னு சொல்லியிருக்காங்;க தம்பி.

    கவலைப்படற அளவுக்கு ஒன்னும்மில்ல. சுகர், பிபி அதிகமாயிருக்கும் அதனால முடியாம போயிருக்கும். நாளைக்கு சின்ன ஆப்ரேஷன் தான் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் என்றான் பிரபு. பின் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தோம்.

    மஞ்சு என அழைத்ததும் அனைவரும் உள்ளே வந்தனர். தலையாட்டியதும் உள்ளே வந்த மஞ்சு தன் ஃபேக்கில் இருந்த 500 ரூபாய் கட்டுகள் இரண்டை எடுத்து கீதாவிடம் தந்தாள்.

    என்னத்துக்குங்க இவ்ளோ பணம் என கீதாவின் அம்மா பதற. ஓன்னும்மில்லம்மா மெடிக்கல் செலவுக்குண்ணு கடன் கேட்டா அதான் சார் தரச்சொன்னாரு என மஞ்சு சொன்னதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.

    வெளியே வந்த நாங்கள் கீதாவின் அண்ணன், அப்பாவிடம் பணம் வேணும்ன்னா கேளுங்க தந்து விடறோம். காசுயில்லன்னு அலையாதிங்க எனச்சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

    கார் வரை வந்த கீதாவிடம் அம்மா வீட்டுக்கு அழைச்சி வந்ததுக்கப்பறம் ஆபிஸ் வந்தா போதும் கீதா எனச்சொல்லிவிட்டு கிளம்பினோம்.

    கார் மெயின் ரோட்டுக்கு வந்ததும் பாஸ் என அழைத்தான் ஸ்ரீதர்.

    ம்.

    இங்க எக்ஸ்பிரஸ் மால், ஸ்பென்சர் பிளாசான்னு ஏதோ இருக்காம் பாஸ். அங்க போய்ட்டு போகலாம் பாஸ்.

    அவன் பக்கம் திரும்பி அங்க எதுக்கு என கேட்டதும் ஈஈஈ என இளித்தான். பின்னால் உட்கார்ந்திருந்த ரேவதி சைட் அடிக்கவா இருக்கும் சார் எனச்சொல்ல அதெல்லாம் இல்ல சார் என பதறி மறுத்தான்.

    டிரைவர் சார். எல்.ஐ.சி பக்கம் போங்க என்றதும் அவர் சரியென தலையாட்டினார். எல்.ஐ.சி தாண்டி ஸ்பென்ஸர் வந்ததும் காரை நிறுத்தி இறங்கிக்க ஸ்ரீதர், நீங்களும் போறதாயிருந்தா போங்க என மஞ்சு, ரேவதியிடம் சொன்னதும் நீங்க பாஸ் என கேட்டவனிடம், கொஞ்சம் ஒர்க் இருக்கு போய்ட்டு வந்துடறோம். நாங்க வர்றதுக்கு இரண்டு மணி நேரமாகும் அதுவரைக்கும் ஏதாவது வாங்கறதாயிருந்தா வாங்கிக்கிட்டு வெயிட் பண்ணுங்க எனச்சொன்னதும் மூவரும் இறங்கினர். நானும் போய்ட்டு வர்றன் டாடி என்றான் ரஞ்சித்.

    கொஞ்சம் யோசித்துவிட்டு ரேவதி இவனை பாத்துக்க என பொறுப்பை ஒப்படைத்ததோடு ஏதாவது கேட்டான்னா வாங்கித்தா, ஐஸ்கிரிம் மட்டும் அதிகம் வாங்கி தராத எனச்சொல்லிவிட்டு சேட்டை பண்ணாம ஒழுங்கா அவுங்களோட இரு என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

    எங்கடா போறோம் என பிரபு தான் கேட்டான்.

    டிஸ்ப்ளே பத்தி நேத்து பேசனும்மில்ல. அதான் சோனி, சாம்சங் கம்பெனியில போய் என்ன ரேட் ஆகுதுன்னு விசாரிச்சிட்டு வருவோம் என்றதும் தலையாட்டினான். இரண்டு ஷோ ரூம்களை தேடிப்பிடித்து விசாரித்துவிட்டு, மாடல்களை பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போதே ஸ்ரீதர்க்கு போன் செய்து நாங்க வந்துக்கிட்டு இருக்கோம் வெளியில வந்து ஆப்போசிட்ல நில்லுங்க என்றேன். சரியாக 2.15க்கு ஸ்பென்சர் அருகே பஸ் ஸ்டாப்பில் ரேவதி, மஞ்சு, ஸ்ரீதர் நின்றிருந்தனர். கார் அவர்களை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தபோதே சார் ரஞ்சித்த காணோம் என்ற பாண்டியனின் குரலை கேட்டு அதிர்ச்சியாகி பார்த்தபோது அவர்கள் அருகில் அவன் இல்லை என்பதை என் கண் உறுதி செய்ததும் ஆயிரம் மடங்கு அதிர்ந்து போனேன்.

    தொடரும்……………..

    Share
  • அன்பே அழகானது – 4

    ராஜ்ப்ரியன்

    கார்த்திகை விளம்பர நிறுவனம் என்ற போர்டு தொங்கிய கட்டடத்துக்குள் மதன் நுழைந்ததும் அந்த அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் எழுந்து குட்மார்னிங் சார் என்றனர். மதன் அப்படியே நின்று ஒருமுறை திரும்பி வாசல் பக்கம் பார்த்தான், வணக்கம் வைத்தவர்களும் பார்த்தனர். யாரும் தன் பின்னால் இல்லை என்பதை கண்ட மதன் திரும்பி வணக்கம் வைத்தவர்களிடம் எனக்கு தான் வணக்கம் வச்சிங்களா என கேட்க எல்லாரும் சிரித்தனர்.

    என்ன புதுசா எழுந்து நின்னு வணக்கம் வைக்கறிங்க என கேட்டபடியே மதன் உள்ளே வந்தான்.

    சும்மா தான் சார் என்றாள் மஞ்சு. அருகே பாண்டியன், ரேவதி, கீதா, ஸ்ரீதர் நின்றிருந்தனர்.

    மத்தவங்களுக்கு வணக்கம் சொல்ற மாதிரி சொன்னாலே போதும். ஸ்கூல் வாத்தியார்க்கு சொல்றமாதிரி எழுந்து நின்னு சொல்றதெல்லாம் வேணாம். வெளியாளுங்களுக்கு தான் நான் எம்.டி. மத்தப்;படி இங்க வேலை பாக்கற ஏழு பேர்ல நானும் ஒருத்தன் சரியா என கேட்க.

    சரி சார் என தலையாட்டினர்கள் சிரித்தபடி.

    பிரபு எங்க ?.

    உங்க ரூம்ல சார் என்றாள் மஞ்சு.

    கதவை திறந்து உள்ளே போனதும் ஃசேரில் அமர்ந்திருந்த பிரபுவிடம் ஒரு எம்.டி வர்றன் எழுந்து நின்னு வணக்கம் வைக்கறதில்லையா?.

    செருப்ப கழட்டி தான் வைக்கனும்.

    அப்பறம் எதுக்கு மத்தவங்கள எழுந்து வணக்கம் வைக்க சொன்ன.

    சத்தியம்மா நான் சொல்லலடா.

    அப்பறம் என்ன புதுசா எழுந்து வணக்கம் வைக்கறாங்க என சந்தேகமா கேட்டதும்

    அதுவா, இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கிளையண்ட் ஆபிஸ்க்கு வந்து பார்த்துயிருக்காரு. நீயும் இல்ல, நானும் இல்லன்னதும் எனக்கு கால் பண்ணாரு. நான் வேகமா ஆபிஸ்க்கு வந்தன். எல்லாரும் உட்கார்ந்தபடி எனக்கு வணக்கம் வச்சத பாத்தவரு இது என்ன ஆபிஸா? இல்ல டீ கடையா? ஒரு மேனேஜர் வர்றார் மரியாதை இல்லாம உட்கார்ந்துக்கிட்டு வணக்கம் வச்சா என்ன அர்த்தம், நீங்க சரியில்ல, உங்க எம்.டி வரட்டும் பேசிக்கறன்னு கோபமா கர்ஜித்தாரு. அத கேட்டு எல்லோரும் மரியாதை ராமன்களா மாறிட்டாங்க.

    யார்ரா அந்த ஆபிஸர் ?.

    உங்கிட்ட பேசுவாரு அப்ப தெரிஞ்சிக்க என சிரித்தவன் அதெல்லாம் இருக்கட்டும் என்னச்சொல்றான் உன் பையன்.

    காலையில ஸ்கூல் போகும்போதே உம்முன்னு போயிருக்கான்.

    ஏன்

    ஃபைக்ல அழைச்சிப் போய் விடுன்னான், வேலையிருக்குடான்னு சொன்னன் அதான் கோபமா போயிருக்கான்.

    மதியம் லஞ்ச்.

    வாங்கிப் போய்த்தான் தரணும்.

    அதுக்கு தான் நாங்க சொல்றத கேளுடாங்கறோம்.

    டேய் சாமி காலையிலயே ஆரம்பிச்சி கடுப்பேத்தாத என்றபடியே கொஞ்சம் எல்லாரையும் உள்ளவரச்சொல்லு. பிரபு எழுந்து போய் தகவல் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் அக்கவுண்டன்ட் மஞ்சு, சீனியர் டிசைனர் பாண்டியன், டிசைனர்கள் கீதா, ரேவதி, விளம்பர பொறுப்பாளர் ஸ்ரீதர் என அனைவரும் அவன் முன் அமர்ந்திருந்தனர்.

    எப்படி நடந்துக்கிட்டு இருக்கு வேலையெல்லாம் ?.

    சார் இந்த மாசம் வர வேண்டிய பில் நிறைய பென்டிங் இருக்கு சார் என்றாள் மஞ்சு.

    ஸ்ரீதரை பார்த்ததும், காலேஜ், ஸ்கூல் அட்மிஷன் இப்பத்தான் நடக்குது பாஸ். ஏப்ரல், மே, ஜீன் மாசம் பில் எல்லாம் ஜீலைல தான் தருவோம்ன்னு சொல்லிட்டாங்க.

    அவுங்க ஜீலையில தந்தா எப்படி நாம ஆபிஸ்ச ரன் பண்றது என பிரபு கேட்க ஸ்ரீதர் மவுனமாகவே இருந்தான்.

    அடிக்கடி கரண்ட் கட் பண்றதால பேட்டரி பேக்கப் நாலு மணி நேரம் கூட வரமாட்டேன்குது இதனால ஓர்க் நிறைய பென்டிங்ல கிடக்கு. பெரிய யூ.பி.எஸ்சா போட்டா நல்லாயிருக்கும் சார் என்றான் பாண்டியன்.

    செய்துடலாம் பாண்டியா.

    வேற ஏதாவது என கேட்டும் அனைவரும் அமைதியாக இருந்தனர். சரி நான் அழைச்ச விஷயம் வேற. இப்ப நாம விளம்பரம் டிசைன் செய்து தர்றது, அத பேப்பர்களுக்கு தர்றது, பிரஸ் மீட் அரேஞ்ச் பண்றதுன்னு இருக்கோம். நாம அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நேரம் வந்துடுச்சி. நாம புதுசா டிஸ்ப்ளே விளம்பரம் செய்யலாம்ன்னு ஓரு ஐடியா.

    டிஸ்ப்ளே விளம்பரம்ன்னா என்ன சார் என ரேவதி கேட்க அனைவருக்கும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது முகத்திலேயே தெரிந்தது.

    நகரத்தோட மையத்தல, மக்கள் நடமாட்டம் அதிகமாயிருக்கற பகுதியில இருக்கற பில்டிங்கோட மாடியில பத்துக்கு பத்து அளவுல எல்.இ.டி டிஸ்ப்ளே வச்சி விளம்பரம் ஓடவிடறது. நைட், பகல்ன்னு எல்லா நேரமும் ஓடிக்கிட்டு இருக்கும். சென்னை, மதுரை, கோயம்பத்தூர் பகுதியில வச்சியிருக்காங்க. இதல டெக்ஸ்ட் மட்டும் டிஸ்ப்ளே பண்ற மாதிரியும்மிருக்கு, வீடியோவ ஓடறமாதிரியும் இருக்கு. இப்ப வீடியோ ஓடறமாதிரி வச்சா தான் நல்லாயிருக்கும். நாம யாருக்கும் விளம்பரம் தர தேவையில்ல. நம்மை தேடி விளம்பரம் வரும் எப்படி என சொல்லி நிறுத்தியதும்.

    சூப்பர் ஐடியா பாஸ் என குதுகலித்தான் ஸ்ரீதர்.

    ஐடியா நல்லாத்தான் இருக்கு வருமானம் வருமா என இழுத்தான் பிரபு.

    நல்லா சம்பாதிக்கலாம் சார் என பிரபுவுக்கு பதில் தந்தான் ஸ்ரீதர்.

    ஓன் டைம் இன்வஸ்மென்ட். சிஸ்டத்தல ப்ரோகிராம் பண்ணிட்டோம்ன்னா ஆட்டோமேட்டிக்கா விளம்பரம் போய்க்கிட்டு இருக்கும். நமக்கு செலவுன்னு பாத்தா பில்டிங் வாடகையும், ஈ.பி பில்லும் தான் நீங்க ஓ.கேன்னு சொன்னா இறங்கிடலாம் எனச்சொன்னதும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். மவுனத்தை கலைத்து என்ன பாண்டியன் ஓ.கேவா இறங்கலாமா என கேட்டதும்

    இறங்கலாம் தான் சார். ஆனா அத பாத்துக்க ஒருத்தர் போய்ட்டா இங்க வேலை அதிகமாயிடும் சார்.

    பிரச்சனையில்ல பாண்டியன் யாராவது பசங்கயிருந்தா இரண்டு பேரை பாருங்க வேலைக்கு வச்சிக்கலாம்.

    அப்ப ஓ.கே சார்.

    அப்படியே டவுன்க்குள்ள எங்கயாவுது நல்ல இடம் கிடைக்குதான்னு பாருங்க.

    சரி சார்.

    ஒ.கே எல்லாரும் போய் வேலை பாருங்க என்றதும் அனைவரும் எழுந்துச்சென்றனர். கீதா மட்டும் சைலண்டாக எழுந்து சென்றது ஆச்சர்யமாக இருந்தது.

    வெளியேற முயன்ற மஞ்சுவை அழைத்து அக்கவுண்ட்ல எவ்வளவு அமௌண்ட் இருக்கும்.

    ஒரு லட்சம் இருக்கும் சார்.

    ஓ.கே என தலையாட்டியதும் கதவை சாத்திவிட்டு சென்றாள்.

    பிரபுவை பார்த்து மேனேஜர் சார் என அழைத்ததும்

    சொல்லுடா என்றான் கோபமான குரலில்.

    என்னடா அதுக்குள்ள கோபம்.

    புதுசா ஒரு ஓர்க் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்றதில்லயா என கேட்டான் அதே கோபமான குரலில்.

    காலையில மதுரை கள்ளழகர் திருவிழா டிவியில ஓடிக்கிட்டு இருந்தது. அப்பத்தான் மதுரையில ஒரு இடத்தல டிஸ்ப்ளே விளம்பரம் ஓடறத பாத்தேன். நாமளும் பண்ணலாம்மேன்னு ஐடியா வந்ததும் சென்னையில இருக்கற ஒருத்தர்க்கு போன் பண்ணி தகவல் கேட்டேன் அவர் அவருக்கு தெரிஞ்சத சொன்னாரு. அதான் பண்ணா நல்லாயிருக்கும்மான்னு ஐடியா கேட்டேன். நீ என்னவோ வேலைய ஆரம்பிச்சிட்டு ஓடிக்கிட்டு இருக்கறமாதிரி பேசற என்றதும் கொஞ்சம் சாந்தமானவனிடம் நெட்ல அதப்பத்தின தகவல்கள தேடி எடுத்து வை. நான் போய் யூ.பி.எஸ் பத்தி விசாரிச்சிட்டு வர்றன்.

    டிசைன் வேலையும் பாக்கணும், இதயும் பாக்கணும்ன்னா என்னடா அர்த்தம்.

    சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்தல வச்சிக்கிட்டு வேலையப்பாருங்க எனச்சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

    யூ.பி.எஸ் மாடல்கள், ரேட், பேட்டரி, வாரண்டி பற்றி விசாரித்துவிட்டு, சில முக்கிய கிளையன்டுகளை பார்த்துவிட்டு அலுவலகம் வந்தபோது மதியம் மூன்றாகி இருந்தது. பசி வயிற்றை கிள்ள அப்போது தான் நினைவுக்கு வந்தான் ரஞ்சித். ஆஹா வேலை டென்ஷன்ல மறந்து போயாச்சே என நெஞ்சு பரபரக்க அலுவலகத்தில் இருந்து பள்ளியை நோக்கி வண்டியை விரட்டினேன். பள்ளி கேட் முன் வண்டியை நிறுத்தியதும் ஸ்கூல் விடற டைம் சார் வண்டிய ஓரம்மா விடுங்க என்றார் வாட்ச்மேன். அவர் சொல்லும் போதே மணியடித்தது பிள்ளைகள் ஓடிவர காத்திருந்த அவர்களது அம்மாக்களோடு ஒவ்வொரு பிள்ளைகளும் சென்றது.

    ரஞ்சித்தை கண்கள் தேடியது. நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள சார் என்ற குரல் காதருகே கேட்க திரும்பினேன். ஆட்டோ டிரைவர் மணி நின்றிருந்தவர், என்ன சார் நீங்களே வந்துயிருக்கிங்க.

    இல்ல மணிண்ணே. காலையில லேட்டானதால மதியம் லஞ்ச் வாங்கி எடுத்துக்கிட்டு வர்றன்னு சொல்லியிருந்தன், வேலை டென்சன்ல மறந்துட்டன். இப்பத்தான் ஞாபகம் வந்தது. அதான் என இழுத்ததும் என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க. எங்கிட்ட சொல்லியிருந்தா நான் வாங்கி வந்து தந்துருப்பனே என்றார்.

    பதில் சொல்ல முடியாமல் மீண்டும் பிள்ளைகள் வருவதை பார்க்க தொடங்கினேன். ஒரு பையனோடு ரஞ்சித் சிரித்து பேசிக்கொண்டு வருவது காண முடிந்தது. தூரத்தில் இருந்து என்னை பார்த்தவன் கை அசைத்தான். நானும் பதிலுக்கு கை அசைத்ததும் ஓடிவந்தான். தன்னுடன் வந்தவனை காட்டி டாடி நானும், இவனும் ஓரே க்ளாஸ். வினய்ன்னு பேரு என்றான்.

    ஹாய் அங்கிள் என்றவன் ஆட்டோ நிக்குது அங்கிள் நான் கிளம்பறன். ரஞ்சித்க்கு டாட்டா காட்டிவிட்டு சென்றான்.

    ரஞ்சித் என் முகத்தை பார்க்க நான் அவனிடம், ஸாரிடா. ஓர்க் டென்ஷன்ல மதியம் லஞ்ச்சோட வர்றன்னு சொன்னத மறந்துட்டேன். நீயாவது எனக்கு ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்மில்ல.

    என்மேல உனக்கு அக்கறையேயில்ல டாடி என்றான் மெல்லிய குரலில்.

    பக்கென்றது. என்னடா இப்படி சொல்ற.

    எதுவும் பேசாமல் தரையை பார்த்தபடி நின்றான்.

    நான் குற்றணர்ச்சியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்து அவனை தூக்கி உட்கார வைத்துக்கொண்டு ஹோட்டலை நோக்கி சென்றேன். ஹோட்டலில் போய் அமர்ந்ததும் இட்லி தாங்க என்றதும் இட்லி வந்தது சாப்பிட்டுக்கொண்டே அடுத்து என்ன வேணும் என கேட்டதும் சோலாபூரி என்றான். அவனுக்கு சோலாபூரி, நான் ஒரு ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரிம் வாங்கி ரஞ்சித்திடம் தந்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு ஆபிஸ் வந்தேன். இருவரும் சைலண்டாக வருவதை பார்த்து மஞ்சு அதியமாக பார்த்தாள். அறைக்குள் இருந்த பிரபு ரஞ்சித்தை கண்டதும் எனக்கு எங்கடா ஐஸ்கிரிம் ?.

    ஒன்னு தான் அங்கிள் வாங்கி தந்தாரு.

    பிரபு என் மெயில் ஓப்பன் பண்ணி யூ.பி.எஸ்க்கான டீட்டய்ல் இருக்கு அத பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு வா என்றதும் அவன் நீயும் வா ரஞ்சித் என்றபடி அவனையும் அழைத்துக்கொண்டு பிரிண்டர் அறைக்கு சென்றான்.

    அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் கதவை திறந்துக்கொண்டு தயங்கி தயங்கி கீதா உள்ளே வந்தாள்.

    என்ன கீதா?.

    தயக்கத்துடனே ஒரு ஹெல்ப் சார்.

    என்ன ?.

    அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கோம்.

    சொல்லவேயில்ல. என்னாச்சி ?

    கால்வலியால இரண்டு மாசம்மா கஸ்டப்பட்டாங்க. இரண்டு நாளைக்கு முன்னாடி நடக்க முடியாம போனதால சென்னைக்கு அழைச்சிம் போய் ஆஸ்பிட்டல்ல சேர்த்தோம். ஆப்ரேஷன் பண்ணனம்ன்னு சொல்லிட்டாங்க. ஆப்ரேஷன்க்கு பணம் தேவைப்படுது சார்.

    எவ்ளோ ?

    முப்பதாயிரம் சார்.

    எப்போ வேணும்.

    நாளைக்கு தந்தா நல்லாயிருக்கும் சார்.

    அப்போது பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பர்களோடு பிரபு உள்ளே வந்தவனிடம் கீதாவோட அம்மாவ ஆஸ்பிட்டல்ல அட்மிட் செய்துயிருக்காங்கலாம். ஆப்ரேஷன்க்கு முப்பதாயிரம் தேவையாம் ?.

    பிரபு கோபமாக கீதா பக்கம் திரும்பி ஏன் இப்படி பொய் சொல்ற என்றான் கோபமாக.

    தொடரும்………………

    Share
  • அன்பே அழகானது – 3

    ராஜ்ப்ரியன்

    கிச்சனை க்ளீன் செய்துக்கொண்டு இருந்தபோது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கதவை திறந்தபோது வணக்கம் சார் என்றார் 45 வயது மதிக்கதக்க ஒருவர்.

    சொல்லுங்க.

    எம் பேரு மணி சார். ஆட்டோ ஓட்டறன். உங்களை பாக்கச்சொல்லி பாண்டியன் சார் சொல்லி அனுப்பனாரு.

    அப்படியா உள்ள வாங்க.

    இருக்கட்டும் சார்.

    ஓன்னும்மில்ல பையனை புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்கன். என்னால அவனை தினமும் அழைச்சிம் போக முடியாது. அதனால தான் ஆட்டோவுல அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணி பாண்டியன்கிட்ட சொல்லி வச்சியிருந்தன்.

    உங்களப்பத்தி பாண்டியன் சார் சொன்னாரு சார். பையனை பத்திரமா அழைச்சிம் போய் அழைச்சி வருவன், நீங்க பயப்பட தேவையில்ல. பாண்டியன் சார் பொண்ணயும் நான் தான் ஸ்கூலுக்கு அழைச்சிம் போறன்.

    ஓஹோ.

    இந்த ஏரியாவுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க.

    8 மணிக்குள்ள வந்துடுவன் சார்.

    சரிங்க. காலையில வந்து அழைச்சிம் போயிடுங்க. சாயந்தரம் ஆபிஸ்சான்ட கொண்டு வந்து விட்டுடுடனும்.

    சரி சார்.

    மாசத்துக்கு எவ்ளோ?.

    500 ரூபா சார்.

    ஒகே.

    திங்கட்கிழமை ஸ்கூல் ஸ்டார்ட் பண்றாங்க.

    தெரியும் சார்.

    இருங்க பையனை காட்டறன் எனச்சொல்லிவிட்டு உள்பக்கம் திரும்பி ரஞ்சித் கொஞ்சம் வெளியில வா.

    என்னப்பா என கேட்டபடி வந்தான்.

    இவன் தான். ஆறாவது சேர்த்துயிருக்கன் பேரு ரஞ்சித்.

    யாருப்பா இவரு ?.

    இனிமே இந்த அங்கிள் தான் உன்னை தினமும் அவரோட ஆட்டோவுல ஸ்கூல் அழைச்சிம் போய் அழைச்சி வந்து விடப்போறார், அவர் பேரு மணி எனச்சொல்லிவிட்டு நீங்க போய்ட்டு வாங்கண்ணே என்றதும் கிளம்பினார்.

    அப்போ என்னை நீ ஸ்கூல் அழைச்சிம் போகமாட்டியாப்பா என வருத்தமாகவே கேட்டான்.

    நைட்டே சொன்னனேடா. உன்ன அனுப்பிட்டு காலையில வீட்ல சின்ன சின்ன வேலை பாத்துட்டு அதுக்கப்பறம் கிளம்பனா சரியா இருக்கும். உன் கூடவே கிளம்பிட்டா இருக்கற வேலை பாக்க முடியாது அதனாலத்தான். தாத்தா பாட்டி வந்ததும் நானே உன்ன அழைச்சிம் போறன் என்றபோதும் அமைதியாகவே சோபாவில் அமர்ந்திருந்தான்.

    அவனது வருத்தத்தை குறைக்க ஒன்னு செய்யறன் ஈவ்னிங் உன்ன நான் வந்து பிக்கப் பண்ணிக்கறன்.

    வேணாம் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என அவன் சொல்லும் போது என் மனம் பாரமாகத்தான் இருந்தது. அவன் அம்மா இருந்திருந்தா பிரச்சனையில்ல என்னப்பண்றத்து என பெருமூச்சு விட்டப்படி மீண்டும் கிச்சன்க்குள் புகுந்தேன்.

    மதியத்துக்கு லஞ்ச் செய்துக்கொண்டு இருந்தபோது செல்போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது. யாருன்னு பாரு ரஞ்சித்.

    தாத்தாப்பா என குரல் தந்தான். கை கழுவிவிட்டு வெளியே வரும்போது ஆன் பண்ணி பேசிக்கொண்டு இருந்தான்.

    நல்லாயிருக்கன் தாத்தா. எப்ப ஊருக்கு வர்ற தாத்தா ?.

    …………

    சீக்கிரம் வா தாத்தா.

    ………….

    என்னை அப்பா புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்காரு, புது டிரஸ் எடுத்து தந்தாரு. இன்னும் டூ டேஸ்ல ஸ்கூல் தாத்தா.

    …………..

    அப்பா இந்தா தாத்தா உங்கிட்ட பேசனுமாம் என்றபடி செல்போனை தந்தான்.

    ஹலோ என்றதும்

    எப்படிப்பா இருக்கா ?

    நல்லாயிருக்கன்.

    அவனை எதுக்கு வேற ஸ்கூல் மாத்தன ?

    அந்த ஸ்கூல் நல்லாயிருக்குன்னு சொன்னாங    ;க அதான்.

    நீங்க எப்ப ஊருக்கு வர்றிங்க ?.

    நான் சொல்றத நீ செய் அதுக்கப்பறம் ஊருக்கு வர்றன்.

    அதவிட்டுட்டு வேற ஏதாவது பேசுங்க. ஏம்ப்பா நானும் இரண்டு வருஷமா சொல்றன் நீ கேட்கமாட்டன்னா என்னப்பா அர்த்தம்.

    அம்மாக்கிட்ட போனை தாங்க.

    பெருமூச் விட்டவர் இந்தாடீ உங்கிட்ட பேசனுமாம்.

    என்னப்பா எப்படியிருக்கற ?.

    நான் நல்லாயிருக்கறன் நீங்க எப்படிம்மா இருக்கிங்க ?.

    எங்கப்பா இந்த கால் மூட்டு வலி தான் அதிகமாயிருக்கு. உட்காந்தா எழுந்திருக்க முடியல, நடக்க முடியல.

    டாக்டர்க்கிட்ட காட்ட வேண்டியதுதானே?

    போனன் தைலம் மாதிரி ஒன்னு தந்தாங்க ஒன்னும் சரியாகல.

    இங்கவாம்மா டாக்டர்கிட்ட காட்டி சரிப்பண்ணிடலாம்.

    புள்ள தனியா பேரனை வச்சிக்கிட்டு கஸ்டப்படறான் போய் கூட இருக்கலாம்ன்னு சொன்னதுக்கு என் பேச்ச மதிக்காத அவன் வீட்டுக்கு நான் வரல என்னைக்கு நான் சொல்றத கேட்கறானோ அன்னைக்கு வர்றன்கிறார் உங்கப்பா. நான் என்னத்த பண்றத்து என சலித்துக்கொண்டபடியே டேய் எம்பேரன் கண்ணுலயே நிக்கறான் கொஞ்சம் கூட்டியாந்து கண்ணுல காட்டிட்டுத்தான் போயேண்டா. அவரும் ராத்திரியில எம் பேரன் என்ன பண்றானோ, ஏது பண்றானோன்னு புலம்பறாரு.

    வேலை அதிகமாயிருக்கும்மா.

    ஒரு மணி நேரத்தல வீட்டுக்கு வந்துடலாம் இதுக்கு போய் நேரம் இல்லைங்கறயேடா.

    வர்றதுக்கு பாக்கறன். நீ உடம்ப பாத்துக்கம்மா.

    அது கிடக்கட்டும் அவன்கிட்ட போனை தா என்றதும் ரஞ்சித் இந்த பாட்டி பேசனுமாம் என்றதும் ஓடி வந்து செல்போனை வாங்கிக்கொண்டான். நான் கிச்சனை நோக்கி நடந்தேன்.

    நல்லாயிருக்கன் பாட்டி.

    பூரி சாப்பிட்டன். அப்பா சுட்டு தந்தாரு. எப்ப ஊருக்கு வர்றிங்க என பேசிக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் பொருத்து கிச்சன்க்குள் வந்து அப்பா நின்;றான்.

    என்னடா சொன்னாங்க பாட்டி.

    ஊருக்கு வரச்சொன்னாங்க என்றவன் சற்று கேப் விட்டு போகலாமாப்பா.

    உம்.

    எப்போ ?

    அடுத்த சன்டே போகலாம் என்றதும் குதுகலமாக ஓடினான்.

    தொடரும்……………

    Share
  • அன்பே அழகானது – 1

    ராஜ்ப்ரியன்

    சாந்தமும், அமைதியும் குடிகொண்ட பிரபலமான குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளி பிரின்ஸ்பல் நாற்பத்தியெட்டு வயது சிஸ்டர் சில்வியா கண் கண்ணாடியை கழட்டி வைத்தபடி சொன்னதும் எதிரே அமர்ந்திருந்த சுதா புன்னகையுடன்  நன்றி மேடம் என்றாள்.

    எங்க பள்ளியை விட பிரபலமான பள்ளிங்க இங்க இருக்கு. நீங்க நல்லா படிச்சியிருக்கிங்க. உங்க தகுதிக்கு காலேஜ்கள்ளயே நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைக்கும்மே அங்கயெல்லாம் போகாம குறைந்த சம்பளத்துக்கு இங்க டீச்சரா வேலைக்கு சேர என்ன காரணம் ?

    என்னோட சின்ன வயசுல இந்த ஸ்கூல்ல படிக்கணம்ன்னு ஆசை. அப்ப முடியல. இப்ப வேலை பாக்க வேண்டிய நிலை வந்ததும் இங்க சேரணம்ன்னு ஆசைப்பட்டன். விளம்பரத்த பாத்து அப்ளே பண்ணேன் என சுதா சொன்னபோது மெல்ல புன்னகைத்த சிஸ்டர் சில்வியா, நீங்க எய்த் டூ டென்த் ஸ்டூடன்ட்க்கு கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுங்க.

    சரிங்க மேடம்.

    தன் இருக்கையில் இருந்து எழுந்த சிஸ்டர் சுதாவிடம் வாங்க என அழைத்தார்.

    மேடம் ஒரு நிமிஷம். உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டிங்களே ?.

    தெரியாததைத்தான் கேள்வியா கேட்பாங்க. அதல என்ன தப்புயிருக்கு. கேளும்மா என்றார் சிரித்தபடியே ?.

    ஸ்கூல்ல எல்லாரும் இங்கிலிஷ்ல தான் பேசணம்ன்னு வெளியில சொன்னாங்க. நீங்களே தமிழ்ல பேசறிங்களே.

    ஆங்கிலம் கத்து தர்றோம் இல்லன்னு சொல்லல. ஆனாலும் இங்க தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்லயிருந்து வந்த கால்டுவெல் தமிழ் கத்துக்கிட்டு தமிழைப்பத்தி சிறப்பா நூல்கள் எழுதனாரு. ஆப்படியிருக்கும் போது நம்ம மொழிய நாம பேசலன்னா நல்லாயிருக்கும்மா. முதல்ல தாய்மொழிக்கு முக்கியத்துவம், அதுக்கப்பறம் தான் பிறமொழி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ங்கறதால இங்கிலிஸ்ல தான் பேசுவாங்கன்னு வெளியில இருக்கறவங்க நினைக்கறாங்க. அப்படியெல்லாம் இல்ல பசங்களுக்கு ஆங்கிலத்த கற்று தர்றோம், தாய் மொழிய உணர வைக்கறோம் என்றவர் போகலாம்மா என கேட்டார் சுதா தலையாட்டியதும் நடக்க தொடங்கினார். அலுவலக வாயிலில் நின்று டேவிட் என அழைத்தார். வந்துட்டன் மேடம் என குரல் தந்தப்படி 40 வயதான டேவிட் பவ்யமாக வந்து நின்றார். சுதா இவர் ஆபிஸ் பியூன் டேவிட் என அறிமுகப்படுத்தியவர், டேவிட் இவுங்க சுதா புது அப்பாய்மெண்ட் 8 டூ 10 கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுக்கபோறாங்க. இவுங்களுக்கான டைம்டேபிள் கம்ப்யூட்டர் ரூம்ல இருக்கும் பிரிண்ட் அவுட் வாங்கி வாங்க எனச்சொல்லிவிட்டு நடந்தார்.

    ஸ்டாப் ரூம்க்குள் நுழைந்த சிஸ்டரை கண்டு அனைவரும் எழுந்து நின்றனர். தன் பின்னால் நின்ற சுதாவை சுட்டிகாட்டி எம்.எஸ்.சி. எம்.பிஎல் முடிச்சியிருக்காங்க. நம்ம ஸ்கூல்க்கு கெமிஸ்ட்ரி டீச்சரா அப்பாய்மென்ட் பண்ணியிருக்கு. நீங்க இவுங்களுக்கு ஒத்தொழைப்பு தரனும் என்றவர் சுதா பக்கம் திரும்பி இதான் ஸ்டாப் ரூம், டைம் டேபிள் தரச்சொல்றன், போய் உட்காருங்க குட் லக் எனச்சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

    சுதா காலியாக இருந்த இடத்தில் அமர அருகில் இருந்த ஒரு ஆசிரியை ஹாய், ஐயெம் மாலதி. இங்கிலிஷ் டீச்சர் என அறிமுகமானார்.

    நீங்க என்ன ஊர் ?.

    இதே ஊர் தான் காந்தி நகர்ல இருக்கன்.

    எங்க படிச்சிங்க ?.

    திருச்சியில எம்.எஸ்.சியும், பெரியார் யுனிவர்சிட்டியில எம்.பில் பண்ணன்.

    அப்பா என்ன பண்றாரு ?

    பிஸ்னஸ் பண்றாரு.

    இதுக்கு முன்னாடி எங்கயாவது வேலை பாத்திங்களா?.

    இல்ல.

    ஏன் ?.

    சும்மா தான் எங்கயும் முயற்சி பண்ணல.

    மாலதி மேடம் அவுங்க இப்பத்தான் வந்துயிருக்காங்க. அதுக்குள்ள அவுங்கள ஏன் ராக்கிங் பண்றிங்க விடுங்க என ப்ரியா சொல்ல அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது.

    ஏன் மேடம் கலாய்க்கறிங்க. புதுசா வந்துயிருக்காங்க. அவுங்களப்பத்தி உங்களுக்கும் தெரியாது. உங்க மனசுல இருக்கற கேள்வியையும் தான் நான் கேட்கறன் தெரிஞ்சிக்கிட்டா பழகா ஈசியா இருக்கும்மில்ல அதுக்குத்தான் கேட்கறன் என்றார்.

    நீங்க கேளுங்க மேடம் என சுதா சொன்னதும்

    கல்யாணமாகிடுச்சா

    என கேட்டதும் சுதா அமைதியாகி சுதாவின் முகம் சுருங்கி கண்ணீல் நீர் கோர்த்தது. இதை பார்த்த மாலதிக்கு சுதா பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

    தொடரும்……………

    Share
  • கோபம்.

    ராஜ்பிரியன்

    பரபரப்பாக இருந்த அந்த கல்யாண மண்டபத்துக்கு முக்கிய பிரமுகர்கள் எல்லாம் வந்தபடியே இருந்தார்கள். வந்தவர்களை வாசலில் நின்று வரவேற்றுக்கொண்டு இருந்தார்கள் அலுமேலுவும், அவரது கணவர் தங்கச்சாமியும். தங்கச்சாமி பொள்ளாச்சியில் ஹோட்டல், நகைக்கடை, துணிக்கடை, 500 ஏக்கர் நிலமென வசதிக்கு குறைவில்லாதவர். சுற்றுவட்டார பகுதியில் செல்வாக்கானவர், அமைதியானவர். அவரது பெண் சுவாதிக்கு தான் திருமணம்.

    அவரது செல்வாக்குக்கு குறைவான இடத்திலேயே மாப்பிள்ளையை பார்த்திருந்தார். காரணம் அவரது மகள் அவருக்கு செல்லம். ஓரே பெண் என்பதால் சின்ன வயதில் இருந்தே ஏகப்பட்ட பாசத்தை பொழித்து வளர்த்திருந்தார். இதனால் சுவாதிக்கு எதிலும் கர்வம். தான் நினைத்தது நடக்க வேண்டும். விருப்பத்துக்கு எதிராகவோ, அவள் சொல்வதை மறுத்தாலோ சடாரென கோபம் வந்துவிடும். குடும்பத்தாரிடம் கோபம் வந்தால் இரண்டு நாளைக்கு சாப்பிடமாட்டாள். வெளியாட்களாக இருந்தால் திட்டிவிடுவாள்.

    இப்படித்தான் ஒருநாள் காலை பதினோரு மணிக்கு டிபன் சாப்பிட அமர்ந்தவளுக்கு அவளது அண்ணி கீதா, சுடாக டிபன் தரவில்லையென தட்டையெடுத்து கீதா மீது அடித்துவிட வீட்டில் ஒரே களோபரம். அவள் செய்தது தப்பு என எல்லோருக்கும் தெரியும். ஏதாவது கேட்டால் அவளுக்கு கோபம் வரும் என்பதால் யாரும் வாயை திறக்கவில்லை. இதனால் கீதா அம்மா வீட்டுக்கு போய்விட்டாள். சமாதானம் பேசிய மாமியாரிடம் அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுங்க அப்பத்தான் வருவன்.

    உங்கண்ணன் வாழ்க்கைடீ ஸாரி கேளு என அலமேலு மகளிடம் கேட்டபோது அவன் வாழ்க்கை எப்படி போனாலும் எனக்கு கவலையில்ல அவக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கமாட்டன் என உறுதியாக இருந்துவிட குமரன் தான் திண்டாடிபோனான். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அவனுக்கு ஆறுமாதமானது.

    நான்கு மாதத்துக்கு முன்பு உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கம்மா எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்ன்ன சொல்லும்மா என தங்கச்சாமி கேட்டதும், அடக்கமானவரா, அழகானவரா, படிச்சவரா, எதிர்த்து பேசாதவரா இருக்கனும் என அடுக்கினாள். இதை கேட்டுக்கொண்டுயிருந்த அலமேலு அப்படின்னா நீ சன்னியாசியா தான் போகனும் என்றார்.

    அதை கேட்டு கோபமான தங்கச்சாமி, வாய மூடுடீ என அதட்டினார்.

    அப்படி போனாலும் போவன் ஒருத்தன்கிட்ட அடிமையா இருக்கமாட்டன் என்றாள் கோபமாக.

    அவ கிடக்கறா விடும்மா. நீ சொல்றமாதிரியே பாக்கறன்ம்மா என்றார் பாசமாக அவள் தலையை தடவியபடி. கல்யாண புரோக்கரை அழைத்து வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்ல. பையன் நல்லவனா, படிச்சவனா, அழகா இருக்கனும் என்றார். புரோக்கரும் கோவையில் சின்னதாக ஒரு பேக்டரி வைத்திருக்கும் விநோதன் ஜாதகத்தை தந்து நல்லப்பையன், குடும்பத்துக்கு அடக்கமானவன், கோபப்பட்டே பார்க்க முடியாது என்றார்.

    விசாரித்தபோது புரோக்கர் சொன்னது உண்மையென அறிந்துக்கொண்டவர், அதன்பின்பே பெயர் பொருத்தங்களை பார்த்தார். “பையன் பொண்டாட்டிக்கு அடங்கனவனா இருப்பான்” எனச்சொல்ல மனம் குதுகலித்தது. உடனே புரோக்கர் மூலம் அந்த குடும்பாத்தரை சந்தித்து பேசினார். பெரிய இடம் தங்கச்சாமியை பற்றி அறிந்தவர்கள் அவரது மகள் பற்றி அறியாமல் சம்மதம் தெரிவித்தனர். சுவாதியும் விநோதனை பிடித்திருப்பதாக சொல்ல கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. தங்கச்சாமி பொள்ளாச்சியிலேயே நடத்தினார்.

    இரவு வரவேற்பு நடந்தது. சுவாதி தேர்வு செய்திருந்த ஆடையையே விநோதன் அணிந்தான். அவன் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை வரை சுவாதியின் தேர்வாகவே இருந்தது. சுவாதியின் நடவடிக்கையை நிச்சயம் நடந்தது முதல் பார்த்தும் அனுபவித்து தான் வந்தான். அவள் ஒருமுறை செல்போனில் அழைக்க பேக்டரி சத்தத்தில் எடுக்காமல் விட்டுவிட்டான். கோபத்தில் ஒருநாள் முழுக்க அவனுடன் பேசவில்லை. ரிசப்ஷன் முடிந்து சாப்பிட அமர்ந்த போது விநோதனுக்கு பிடித்த பால் பாயாசம் டம்ளரில் இருந்தது. அதை குடித்தவன் இரண்டாவதாக வாங்கலாம் என நினைத்து பரிமாறுபவரை அழைத்து பால்பாயாசம் கேட்டான்.

    அதல சக்கரை அதிகமாயிருக்கும் சாப்பிடாதிங்க என தடைபோட்டாள். அப்போது விநோதன் முகம் சுருங்கியதை அலமேலு கவனித்து நொந்துப்போனார். காலை முகூர்த்தத்துக்கு வந்தவர்களை அலுமேலு தன் கணவருடன் சேர்ந்து வரவேற்ற போது அவளுக்கு மகளின் செயல்கள் மனதில் படமாக ஓடியது.

    தாலி கட்டி முடித்ததும் மைக் முன் வந்த முக்கியஸ்தர்கள் சிலர் மணமக்களை வாழ்த்தினர். அலமேலுவை பேசச்சொல்ல, “இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழனும். என் பொண்ணு கோபப்பட்டா, மாப்பிள்ளை தான் பொறுத்துக்கனும்”, என கண்ணீருடன் சொல்லிவிட்டு இறங்கினார். அடுத்து மைக் முன் வந்த குமரன், “என் தங்கச்சிக்கு தப்பு பண்ணா கோபம் வரும். மச்சான் பொறுத்துக்கனும்” என சொல்லிவிட்டு இறங்க, அடுத்து வந்த சுவாதியின் சித்தப்பா ரங்கன், “பொண்ணு கோபப்பட்டாலும் மாப்பிள்ளை விட்டுக்கொடுத்து போகனும்.” இதை கேட்டுக்கொண்டுயிருந்த விநோதன் மைக்கை வாங்கி “எல்லாரும் பொண்ணு கோபப்பட்டா பொறுத்துக்கிட்டு போகனம்ன்னு எனக்கு அறிவுரை சொல்றிங்க. ஆனா யாரும் பொண்ணு கோபப்படகூடாதுன்னு சொல்ல மாட்டேன்கிறிங்களே. அறிவுரை சொல்றவங்க முதல்ல கோபப்படக்கூடாதுன்னு சொல்லுங்க” என்றார். இதை கேட்டுக்கொண்டுயிருந்த தங்கச்சாமியின் முகத்தில் திகிலடித்தது. சுவாதி தன் அப்பாவை பார்க்க, “பாத்துக்கலாம்மா ” என்றார் கண்களாலேயே.

    மண்டபத்தை விட்டு வீட்டுக்கு போயும் சுவாதி விநோதனுடன் சரியாக பேசவில்லை. முதலிரவு அறைக்கு அனுப்பும்போது பாத்து நடந்துக்க என கிண்டலாக சொல்லி அனுப்பினார்கள் உறவினர்கள்.

    அறைக்குள் சென்ற சுவாதி கட்டிலில் உட்கார்ந்திருந்த விநோதனை பார்த்து, “எதுக்கு மண்டபத்தல அப்படி பேசனிங்க ” என்றாள் கோபத்துடன். அவள் பக்கம் திரும்பிய விநோதன், “இப்படி உட்காரு” என கட்டிலை காட்டினான். உட்கார்ந்தவள் பக்கம் திரும்பி, “இங்கப்பாரு சுவாதி, உனக்கு அதிகமா கோபம் வரும். நீ சொல்றதத்தான் மத்தவங்க கேட்கனும் அப்படின்னு நினைக்கறத முதல்ல விடு. உன் குணத்தப்பத்தி மண்டபத்தலயிருந்து வந்ததுமே உங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க. நீ நினைக்கற மாதிரி என்னால வாழ முடியாது. உன் சுதந்திரத்த நான் கணவன்ங்கற அதிகாரத்தை வச்சி தடுக்க மாட்டன். அத நீ தப்பா பயன்படுத்தாதன்னு சொல்றன். பணத்துக்காக உன்ன நான் கல்யாணம் செய்துக்கல. முதல்ல உங்க வசதிய நினைச்சி யோசிச்சோம். புரோக்கர் தான் நல்ல குடும்பம்ன்னு சொன்னாரு. அதனால தான் சரின்னு சொன்னோம். உனக்குயிருக்கற மாதிரி மத்தவங்களுக்கும் மனசு, அவுங்களுக்குன்னு ஒரு கருத்துயிருக்கும் அதுக்கும் மதிப்பு தரனும். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டா அதுக்கு மரியாதையில்லாம போயிடும். உன் மேல வருத்தம் தான் வரும். குடும்ப வாழ்க்கைன்னா கணவன் மனைவிக்குள்ள விட்டுக்கொடுக்கறது இருக்கனும். இந்த கட்டில்லயிருந்து சின்ன சின்ன ஆசைகள் வரை ஒவ்வொருத்தரும் புரிஞ்சிக்கிட்டு, கலந்து பேசி வாழ்ந்தா எந்த பிரச்சனையும்மில்ல. கோபமும் வரப்போறதில்ல.

    நம்ம இரண்டு பேருக்குள்ள இந்த பணம் வந்து குடும்பம் நடத்தப்போறதில்ல. மனிதர்களான நாம தான் குடும்பம் நடத்தப்போறோம். அதனால ஆதிக்கம் செலுத்தறத, கோபப்பட்டறத விட்டுட்டு விட்டுக்கொடுத்து வாழ பழகிக்க. அதான் நமக்குள்ள நல்ல வாழ்க்கையை தரும். உனக்கு அட்வைஸ் பண்றத்து புடிக்காதுன்னு உங்கம்மா சொன்னாங்க. இருந்தாலும் நான் மண்டபத்தல அப்படி பேசனதால நீ என் மேல கோபமா இருக்கறது தெரியும். நான் அந்த இடத்தல உன்ன விட்டுக்கொடுத்துயிருக்ககூடாது. ஆனா ஒரு பிரச்சனையை முளையிலயே கிள்ளிடனும் இல்லன்ன பெருசாகிடும். அதனால தான் அங்க பேசனன். இப்பவும் சொல்றன். அங்க உன்ன விட்டுக்கொடுத்ததுக்கு ஸாரி ” என பேசி முடித்தான்.

    இவ்வளவு நேரம் விநோதன் பேசியதை கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டுயிருந்தாள்.

    “நானே தான் பேசிக்கிட்டுயிருக்கன் உன் கருத்து என்னன்னு சொல்லு”, என கேட்டான்.

    பதிலேதும் சொல்லாமல் தலையை திருப்பிக்கொண்டாள். நீண்ட நேரம் பதிலேதும் வராததால் அமைதியாக அப்படியே கட்டிலில் ஓரமாக படுத்துக்கொண்டான். சுவாதியின் மனம் கொதிக்க தொடங்கியது. பூக்கள் வாடத் தொடங்கியது.

    காலையில் அறையை விட்டு வெளியே வந்த சுவாதியை பார்த்ததுமே அலமேலுவுக்கு புரிந்து போனது. இரவு எதுவும் நடக்கவில்லை என்று. மகளை கிச்சன்க்கு அழைத்து சென்றவர் என்ன நடந்துச்சி என கேட்டார். அமைதியாக இருந்தவளை பார்த்து “சண்டை போட்டுக்கிட்டா,  சமாதானமா போறயிடத்தலயே சண்டைன்னா உன்னயெல்லாம் என்ன சொல்றது”, என நொந்துக்கொள்ள மவுனமாகவே தரையை பார்த்தப்படி நிற்க தாய் பாசம் அவரை கண் கலங்க வைத்தது.

    அப்போது “வாங்க மாப்பிள்ள” என்ற குரல் கேட்டு இருவரும் வெளியே பார்த்தனர். சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்தபடியே ரூமை விட்டு வெளியே வந்த விநோதனை  அழைத்து எதிரில் “உட்காருங்க”, என்றார் தங்கச்சாமி.

    கிச்சன் பக்கம் திரும்பி “அலமேலு, மாப்பிள்ளைக்கு காபி எடுத்துவா” என குரல் கொடுத்தார்.

    விநோதன் பக்கம் திரும்பி, “வீடு புடிச்சியிருக்கா மாப்பிள்ள.?”

    “நல்லாயிருக்கு மாமா.”

    “சுவாதியோட அறை சின்னதா இருக்கும். மேல பெருசா ஒரு அறையிருக்கு. அதை எடுத்துக்குங்க.”

    “எதுக்கு மாமா இருக்கறதே கம்பர்டபிளா இருக்கு.”

    “என்ன வசதி வேணும்மோ செய்துக்குங்க”, என்றதும் ஓரளவு புரிஞ்சது விநோதனுக்கு. வீட்டோட இருக்கச்சொல்றாரு. அத சுத்தி வளைச்சி பேசறாரு.

    “வீட்டோட மாப்பிள்ளையா இருக்க எனக்கு சம்மதம்மில்ல மாமா”, எனச்சொல்லும் போதே அலமேலுவும், சுவாதியும் ஹாலுக்கு வந்திருந்தனர்.

    “இல்ல அப்படி சொல்ல வரல மாப்ள”, என தயங்க,

    “நீங்க உங்க பொண்ணு மேல ரொம்ப அதிகமாவே பாசம் வச்சியிருக்கறது தெரியும் மாமா. உங்க பொண்ண நீங்க பாத்துக்கறத விட நான் என் மனைவியை ரொம்ப நல்லாவே பாத்துக்குவன்.”

    “அதுக்கில்ல மாப்ள.”

    “இதப்பத்தி நானும் என் மனைவியும் பேசி எடுக்க வேண்டிய முடிவு. நான் பேசிட்டு சொல்றன் மாமா”, என்றபடியே எழுந்து மீண்டும் அறைக்குள் சென்றான்.

    சில நொடி தன் அப்பாவை பார்த்தவள் பின் அலமேலு கையில் இருந்த காபி டம்பளரை வாங்கிய சுவாதி விநோதன் பின்னாடியே அறைக்குள் நுழைந்தவள் கதவை லாக் செய்தாள்.

    காபி டம்பளரை தந்துவிட்டு அமைதியாக பார்த்தவளிடம், “உங்கப்பா வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனம்ன்னு நினைக்கறாரு. ஒரே பொண்ணுன்னு ரொம்ப பாசம் வச்சிட்டாரு. அதனால அப்படி நினைக்கறாரு. ஆனா ஆம்பளைக்கு அழகு அவன் சம்பாதியத்தல மனைவிய நல்லா பாத்துக்கறது தான். அதான் எனக்கும் மரியாதை. உனக்கும் மரியாதை. இதான் என் கருத்து. உன் கருத்து என்னன்னு சொல்லு.”

    “உன் வீட்டுக்காரர் என்ன பண்றாருன்னு கேட்டா, இந்த தொழில் பண்றாருன்னு சொல்றதுத்தான் எனக்கு மரியாதை. எங்கப்பாவோட ஆபிஸ்ல வேலை பாக்கறாருன்னு சொல்றதுயில்ல. அது உங்களுக்கும் அசிங்கம். உங்களுக்கு ஒரு அசிங்கம்ன்னா அது எனக்கும் தான். சடங்கு முடிஞ்சதும் நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம்.”

    ஆச்சர்யமான விநோதன், “இந்த மாற்றம் நைட்டே வந்துயிருந்தா, ஒரு நைட் வேஸ்ட்டாகியிருக்காது. இப்ப நைட் வரைக்கும் காத்திருக்கனும்மா” என ஏக்கத்தோடு கேட்டபோது, “காத்திருக்க தேவையில்ல” என புன்னகைத்தபடியே அவன் உதட்டோடு தன் உதடுகளை இணைத்திருந்தாள் சுவாதி. விநோதன் குடித்த காபியின் மனம் அவளின் உதடுகளில் மணத்தது.

    Share