Tag: sathiyamani

  • இமயம் – ஓர்துயரம்

     

    சத்தியமணி

     

    முகில் குளிர்ந்தால் வரும் மழை யின்பம்
    முக்கி வெடித்தால் அது பெருந்துன்பம்
    இமயம் நிமிர்ந்த கம்பீரம்
    இன்று அதற்கும் ஓர்துயரம்
    சுற்றுலா சென்ற சிலக்கூட்டம்
    சுழற்றி போட்டது காட்டாறு
    பக்தியில் சென்ற சிலக்கூட்டம்
    பாதியிழந்தது கூட்டாறு
    கேதாரம் தான் ஆதாரம்
    வெள்ளத்தால் பெரும் சேதாரம்
    பொங்கி பெருகிடும் கங்கையிலே
    புண்ணியம் சேர்ப்பதும் இப்படியா
    தங்கி தரிசனம் தரும் எழிலில்
    பயங்கரம் தெரிவதும் ஒருமுறையா
    மலைநாட்டவரின் மந்தாகினி
    கொலையாட்டமும் கண்டதனால்
    பயமும் வெறுமையும் உடன்தாக்க‌
    பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டாய்
    ஆறுதல் தந்தவர் வாழ்வினுக்கு
    வல்லமையாளர்கள் வலுவமைப்போம்
    அள்ளி தருபவர் வள்ளல்யென்போம்
    உள்ளம்தந்திடின் வாழ்த்திடுவோம்

     

    Share
  • அன்னையர் தினத்தில் அன்னைக்கு கவிதை

     

    சத்தியமணி

     

    அம்மா!அம்மம்மா !

    அன்பின் சின்னமா!!

    ஆசைத்தீர ஆசிச் சொல்லும் என்னம்மா!!!

    பூவாய்ச் சிந்தம்மா

    புன்னகைத்தால் தேனம்மா

    பாக்கியத்தில் நானும் உந்தன் சேயம்மா

    என்னை ஈன்று எடுத்தாய்

    இன்பப் பேரில் அழைத்தாய்

    தமிழ்ச் சொல்லிக் கொடுத்தாய்

    தரும் பாட்டை ரசித்தாய் ()

    தத்தித் தத்தி வருகையில் தாவி எடுத்தாய்

    தள்ளாடி நடக்கையில் தாங்கிப் பிடித்தாய்

    பசியென அழுகையில் பாலும் கொடுத்தாய்

    பள்ளிகூடம் செல்லுமெனைப் பார்த்து ரசித்தாய்

    உன்னைப்போல் தெய்வதான் உண்டோசொல்

    உன்மடியின் மகிமைக்கு உண்டோ சொல் ()

     

    வேலைக்கெனச் செல்லுகையில் ஆசி அளித்தாய்

    வெற்றிகளைக் கண்டவுடன் துள்ளிகுதித்தாய்

    ஊரார்முன் எம்பெருமைப் பேசிகளித்தாய்

    ஊட்டிவிட்டு மிச்சம்தனை நீயும் கொரித்தாய்

    அன்னையுன் பணியினைப் பாராட்டுவேன்

    என்னையுன் பணியாளாய்ச்  சீராட்டுவேன் ()

    இதற்கான மெல்லிசை ராகத்தோடு தாளத்தோடு  கேட்க விரும்பின் youtube சொடுக்கவும் (அ) email sathiyamani@yahoo.com உங்கள் விருப்பத்தை அனுப்பவும் – நன்றி

    Share