Author: செய்தியாளர்-3

  • Tamizh Archakar Course – மாணவர் சேர்க்கை அறிவிப்பு

    செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும்,

    தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு
    (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR)

    விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    7-ஆம் ஆண்டு (2017-2018) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 2017-ல் வகுப்புகள் தொடக்கம்

    aaa
    பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்
    தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி. ஆண், பெண் இருபாலாரும் சேரலாம். வயது வரம்பில்லை.
    விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15-06-2017
    பட்டயப் படிப்பு இருபருவங்கட்கும் சேர்த்து கட்டணம் ரூ.3500/- மட்டுமே
    விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form

    ஏற்கெனவே 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டயம் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும், கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள். கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு! இப்பயிற்சியைப் பயன்கொள்ள விரையுங்கள்!

    திருச்சி பகுதி மாணவர்களுக்கென இந்த ஆண்டு எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் SKYPE மூலம் வகுப்புகள் தொடங்கப் படுகின்றன. திருச்சி மையத்தில் மாணவர்கள் படிக்க முன் வந்தால் மேற்படி விண்ணப்பத்தில்”T.A DIPLOMA / TRICHY“ என்று குறிப்பிடவும்.

    தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
    9/1, மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர்,
    ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600032.
    தொலைபேசி: 9444079926 / 9500045865 (மா.கருப்புசாமி) / 9445103775 (பா.கந்தசாமி)
    www.dheivamurasu.org

    Copyright © 2017 Dheivamurasu, All rights reserved.
    தமிழ் ஆர்வலர்கள்

    Our mailing address is:
    Dheivamurasu
    Ekkaduthangal
    Chennai 600032
    India

    Add us to your address book

    Want to change how you receive these emails?
    You can update your preferences or unsubscribe from this list

    Email Marketing Powered by MailChimp

    Share
  • தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தியை விழா

    ad1

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி,தொழிலாளர் தினம்,மற்றும் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

    ad1
    ஸ்ரீ ராமானுஜரின் 1000 வது ஜென்ம தினத்தை முன்னிட்டும், உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டி தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், வளர் பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டும், குருஅருள் கிடைக்கவும் குடும்பம் தழைக்கவும் நோயின்றி மக்கள் நலமுடன் வாழவும் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ முருகப்பெருமான் அருளால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பத்தல் மகிழ்ச்சி ஏற்படவும் குடும்ப வாரிசு எற்படவும் வம்ச விருத்தி அடையவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம் நடைபெற்று சந்தான கோபால யாகம் நடைபெற்றது. அவ்வமையம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய் சாற்றி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பம் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க சிறப்பு கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது. மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு பூஜைகளை ஸ்ரீ ராமானுஜரின் 1000 வதுஜெயந்தி விழாவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது..பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்

    Share
  • Sathyanarayana Pooja Invitation

     

    Namasthe,
    You are invited with your family.
    ad
    ad2
    ad2
    ad3
    Share
  • தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம்

    19.04.2017ல், தன்வந்திரி பீடத்தில்
    தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெற உள்ளது

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 19.04.2017 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெறுகிறது.

    இந்த யாகத்தில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையவும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    1.வர வேண்டிய பணம் வந்து சேரவும். 2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் சூழ்நிலை அமைய வேண்டி. எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடவும். 3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும். 4. சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும். 5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லவும். 6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகவும். 7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.8.நமது கடுமையான கர்மவினைகள் தீரவும். 9.தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும். 10.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் , 11.வழக்கு வியாஜ்ஜியங்களில்வெற்றி பெறவும், 12.வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும்.13..வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், 14 செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் வருகிற 19.04.2017 புதன்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 மணி வரை ஸ்ரீ காலபைரவர ஹோமம் , சொர்ண பைரவர் ஹோமம் மற்றும் ம்ருத்ஞ்ய ஹோமம் நடைபெற்று பைரவர்களுக்கும் மகிஷாசுரமர்த்தினிக்கும் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது .தொடர்ந்து செவ்வரளி பூக்களால் அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது .இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • ஆண்கள் திருமணத்தடை நீங்க ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கந்தர்வராஜ ஹோமம் நடைபெற்றது..

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று (19.03.2017) காலை 10.00 மணிக்கு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் நடைபெற்றது

    amu

    இந்த யாகத்தில் குலதெய்வ தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கலந்து கொண்டவர்கள். பிரார்த்தனை செய்தனர்

    amu1

    முன்னதாக கோபூஜை, கலச பூஜை, மஹா கணபதி பூஜை, நவகிரக பூஜை பார்வதி பரமேஸ்வர்ர் பூஜையுடன் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசர் மற்றும் தன்வந்திரி பகவானுக்கும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது, இந்த ஹோமத்தில் கலந்த கொண்ட ஆண்களுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது

    .இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • தஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீடு!

    மு.இளங்கோவன்

    தஞ்சாவூர் இராசப்பா நகரில் அமைந்துள்ள ஐசுவர்யம் மகாலில் 18.12.2016 ஞாயிறு மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் வாழும் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதிய வெட்டிக்காடு, அவர் மனைவி கீதா இரவிச்சந்திரன் எழுதிய கீதா கஃபே நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    a2

    நிகழ்ச்சிக்குத் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவ மனையின் மருத்துவர் வி. தனபாலன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் எழுத்தாளர் அப்துல்லா வரவேற்புரை வழங்கினார். வெட்டிக்காடு என்ற நூலினை எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி வெளியிட, முதற்படியினை ஜெயம் சோமு பெற்றுக் கொண்டார். கீதா கஃபே நூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட, பத்மாவதி தனபாலன், முனைவர் பழனி. அரங்கசாமி பெற்றுக் கொண்டனர். கீதா கஃபே நூலினை எழுத்தாளர் ஈரோடு கதிர் சிறப்பாக அறிமுகம் செய்தார். முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேலு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் திருவாட்டி கீதா இரவிச்சந்திரன் அவர்களின் ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

         நூலாசிரியர்கள் இரவிச்சந்திரன், கீதா இரவிச்சந்திரன் ஏற்புரை வழங்கினர். சுரேகா சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.     எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், உறவினர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    a1

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெட்டிக்காடு நூலினை அறிமுகம் செய்து மு.இளங்கோவன் பேசியதாவது:

    இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகம் முழுவதும் சுயபுனைவு இலக்கியங்கள் வரவேற்பைப் பெற்றன. தமிழில் கி. ராஜநாராயணன், பேராசிரியர் த. பழமலை, ஆகாசம்பட்டு சேஷாசலம், தங்கர்பச்சான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சுயபுனைவு இலக்கியங்களைச் சிறப்பாக எழுதியுள்ளனர். இந்த வரிசையில் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு என்ற ஊரில் பிறந்து வளர்ந்த இரவிச்சந்திரன் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை வெட்டிக்காடு நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார். இந்த ஊரின் இயற்கைச்சூழல், பள்ளிப்படிப்பு, ஆசிரியர்கள், விவசாயம், திருவிழாக்கள், பொழுதுபோக்குகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். கிராமப்புறத்து மக்களின் பண்பாடுகள் இந்த நூலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் கிராமங்களால் அமைந்தது. எனவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றை முழுமையாக அறிய கிராமப்புறத்து வரலாற்றை அறிய வேண்டும். மேல்தட்டு வரலாற்றைதான் இதுவரை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அடித்தட்டு மக்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று பேசினார்.

    Share
  • மந்திர ப்ரதிஷ்டை நிறைவும், தைலாபிஷேக ஆரம்பமும்

    தன்வந்திரி பீடத்தில் 14ம் ஆண்டு மகா மந்திர ப்ரதிஷ்டை நிறைவு பெற்றது

    dsc_0565

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 28ம் தேதி பக்தர்கள் ப்ரார்த்தனையுடன் தங்கள் கைப்பட எழுதிய தன்வந்திரி மகா மந்திரங்களை அவ்வப்போது ப்ரதிஷ்டை செய்யப்படும் விக்ரஹத்தின் கீழ் வைத்து மஹா மந்திரங்கள் எழுதியவர்களின் நலனுக்காக சிறப்பு பூஜையும், யாகமும் நடைபெற்று வந்தது.

    இந்த ஆண்டு விரைவில் ப்ரதிண்டை செய்யப்படவுள்ள மந்திர ஸ்தூபியின் கீழ் வைத்து 14வது ஆண்டு மஹா மந்திர ப்ரதிஷ்டை வைபவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.

    தன்வந்திரி பீடத்தில் 13ம் ஆண்டு தைலாபிஷேகம் துவங்கியது…

    dsc_0438

    ஒவ்வொரு வருடமும் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை தைலாபிஷேகம் எனும் வைபவம் உலக மக்களின் உடற்பிணி உளப்பிணி நீங்க நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மூலவருக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடா சைவ ஷேத்திர பீடாதிபதி ஸ்வாமி சிவ ஸ்வாமி அவர்கள் தைலாபிஷகத்தை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.

    தைலாபிஷேகத்தின் பலன்

    இந்த வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு சனி தசை, சனி புக்தி, ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்யம் பெற வழிவகை கிடைக்கும். மேலும் நவக்கிரஹங்களால் ஏற்படும் தடைகள் நீங்கி நன்மைகள் பெற வாய்ப்புகள் கிட்டும். மருத்துவ ரீதியான தோஷங்களும் நீங்க செய்யும். மேலும் பல நன்மைகள் கீழ்கண்டவாறு அமையும்.

    dsc_0433

    நினைக்கின்ற காரியம் நிறைவேறும், குடும்பம் நலம் பெறும், ஆயுள், புத்திர விருத்தி ஏற்படும், வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும், எட்டுவித செல்வம் கிடைக்கும், நோய்கள் நீங்கும், பாபங்கள் நீங்கும், உடல் நலம் பெறும், வாழ்வு இன்பமயமாகும், பயிர்கள் செழிக்கும், ராஜபோக வாழ்வு கிட்டும், வசீகரம் ஆகிய பலன் தரும், மற்றும் பயம் நீக்கவும் செய்கிறது, சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும். ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் கிடைக்க வழி செய்கிறது. செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதில் மக்னீசியம் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தைலாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருள்பெற வேண்டுகிறோம். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

    Share
  • களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (KALARI HERITAGE&CHARITABLE TRUST)

    மு. ஹரிகிருஷ்ணன

    அன்புடையீர் வணக்கம்

    கூத்து நமது மரபுக்கலை .ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல தனித்ததோர் பண்பாட்டு அடையாளமும் கூட .மீள்வதற்கு அரிய வறுமையில் உழன்று வாழ நேர்ந்தாலும் நிலை பிறழாது நிகழ்த்துதல் வழி ஒப்பற்ற கலைகளை பற்றி உயிர் கொடுத்து வளர்த்து வருகிறார்கள் நம் சகோதரர்கள் .

    இவ்வரசியல் பூதலத்தில் தொல்கலைஞர்கள் வாழ்வாதாரம் உயரும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவது உரிய அங்கீகாரம் வழங்குவது அவர்களை இனங்கண்டு பாராட்டுவது ஊக்குவிப்பது சமதையான வாய்ப்பளிப்பது மேலும் இவற்றின் மூலம் கலைகளை மீட்டெடுப்பதுடன் அதன் தொன்மம் மாறாது பாரம்பரியம் வழுவாது எதிர்கால சந்ததிகளிடம் அவற்றை கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது .

    மேற்சென்ன களப்பணிகளில் கடந்த 10 ஆண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நிகழ்த்து கலைஞர்களை எழுத்துக்கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக மக்கள் கலையிலக்கிய விழாவை எதிர் வரும்2017 ஜனவரி மாதம் முதல் நாள் சேலம் மாவட்டம் , மேட்டூர் வட்டம் , ஏர்வாடி கிராமத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது . ஆகவே தாங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்

    இப்படிக்கு,

    மு. ஹரிகிருஷ்ணன்,
    ஆசிரியர் -மணல்வீடு.

    (நிகழ்வு நிரல் மாற்றத்திற்கு உட்பட்டது )

    களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
    (KALARI HERITAGE&CHARITABLE TRUST )

    நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா
    இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453
    நாள் -01-01-2017

    அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி

    களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை

    அமர்வு-2- பிற்பகல் 3-30 மணி

    மணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் எழுத்தாளர்
    கு .அழகிரிசாமி இலக்கிய விருது

    பெறுபவர் -எழுத்தாளர் -ஷோபா சக்தி

    படைப்பும் படைப்பாளரும் -லக்ஷுமி மணிவண்ணன்

    மணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் எழுத்தாளர்
    ராஜம் கிருஷ்ணன் இலக்கிய விருது

    பெறுபவர் -எழுத்தாளர் -பெருந்தேவி

    படைப்பும் படைப்பாளரும் -க .பஞ்சாங்கம்

    அமர்வு-3 பிற்பகல் 4 மணி

    நூல் வெளியீடு

    அங்குசம் – கவிதைப் பிரதி- தவசிக்கருப்புசாமி

    இசையோடு வாழ்பவன் -கவிதைப் பிரதி-சு ,வெங்குட்டுவன்

    எறவானம் -கவிதைப் பிரதி-வினையன்

    அமர்வு -4-மாலை 5 மணிக்கு – கலைஞர் பெருமக்களுக்கு விருது -பரிசு-பாராட்டு -கௌரவிப்பு

    கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்

    இளவல் -சீனிவாசன் – கூத்துக்கலைஞர் -கோழிக்காட்டானூர்

    அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது

    முனுசாமி -மிருதங்கக்கலைஞர் -பள்ளிப்பட்டி

    தேவநாதன் -மிருதங்கக்கலைஞர்-சீராகாப்பாடி

    அமரர் குரும்பனூர் காளி வாத்தியார் நினைவு விருது
    .
    தங்கவேல் -கூத்துக்கலைஞர் -துத்திபாளையம்

    செல்லமுத்து – கூத்துக்கலைஞர்- மோர்பாளையம்

    கணேசன் – கூத்துக்கலைஞர்-மாணிக்கம்பட்டி

    அர்ச்சுனன் -கூத்துக்கலைஞர் -தானாபதியூர்

    வீரப்பன் -கூத்துக்கலைஞர் -சிகரல அள்ளி

    அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது

    செல்லப்பன் -கூத்துக்கலைஞர் –அம்மாபேட்டை

    நிகழ்வில்

    நவீன ஓவியம் -படைப்புலகு-நிகழ் கலை மற்றும் நாடக ஆளுமைகள்

    நிகழ்வு தொகுப்பு
    நறுமுகை -வெய்யில்
    நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
    ——————————————————————————–
    அமர்வு-5-மாலை -7-00மணி
    பரதன் பாதுகா பட்டாபிஷேகம் -தோல்பதுமைக் கூத்து
    வழங்குபவர்-கணேசன் -அம்மாபேட்டை
    உதவி-ரமேஷ்-அம்மாபேட்டை
    மிருதங்கம்-நடராஜன்-அம்மாபேட்டை
    முகவீணை -குமார்-மணியாரன் கொட்டாய்
    ஹார்மோனியம் – தருமன்-அம்மாபேட்டை
    ———————————————————————————
    8 மணிக்கு-இரவு உணவு

    அமர்வு-6 இரவு-9-00 மணி
    பாரதத்தில் பதிமூன்றாம் நாள் யுத்தம் -கூத்து
    தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை

    சிறப்பு செய்வோர்

    பெருமைக்குரிய வாத்தியார்கள் -மதிப்பிற்குரிய படைப்பாளர்கள்

    நிகழ்விடம்

    சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது

    தொடர்புக்கு
    இர.தனபால்
    அறங்காவலர்
    9677520060
    9894605371

    நிகழ்ச்சி ஏற்பாடு
    களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
    (KALARI HERITAGE&CHARITABLE TRUST)

    Share
  • வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவம்பர் 13 ம் தேதி ஸம்வத்ஸர அபிஷேக விசேஷம் ஹோம சப்தாஹம் இனிதே ஆரம்பமானது.

    aro2

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், 28ம் தேதி (13.11.2016) முதல் கார்த்திகை மாதம் 4ம் தேதி (19.11.2016) வரையிலும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஸமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இங்கு பிரதிஷ்டை செய்துள்ள இதர 73 விதமான பரிவார தேவதைகளுக்கும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி “ஸம்வத்ஸராபிஷேகம்” சப்தாஹமாக நடைபெற உள்ளது.

    aroaro1

    இதில் முதல் நாளான இன்று 13.11.2016 கோ பூஜை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கப்பட்டு யாகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

    மேலும் இந்நிகழ்ச்சியின் போது ‘Danvantri Arogya Peedam – A National Temple’ எனும் ஆங்கில நூலானது வெளியிடப்பட்டது. மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன் அவர்கள் வெளியிட உயர்திரு. K.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர், வேலூர். டாக்டர். சதீஷ், சென்னை, திரு.K.ராதாகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர், சிவில் சப்ளையிஸ், சென்னை. திரு.முருகையா IAS, மாநில ஆணையாளர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை. டாக்டர். கோதண்டராமன், பஞ்சவடி, திரு.P.V.V.மூர்த்தி, ஹிந்து நிருபர், வேலூர், டாக்டர். கோபால்-கனகலட்சுமி, பெங்களூர், டாக்டர் விஸ்வஜா, சென்னை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    aro3இவ்வைபவங்களில் சுற்றுப்புற நகர பொதுமக்கள், அருளாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தன்வந்திரி பக்தர்கள் பங்கேற்று குருவருளுடன் திருவருள் பெற அழைக்கின்றோம். மேற்கண்ட ஏழு நாட்களும் சிறப்பு அன்னதானத்துடன், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் துவக்கம்

    நவம்பர் 13 முதல் 19 வரை
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் துவக்கம்

    arokya

    வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை கிராமம், கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட தினங்களில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் நடைபெற உள்ளது.

    aro

    கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, திருமதி. நிர்மலா முரளிதரன் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் ஆச்சார்ய பெருமக்களின் ஆலோசனையின்படி ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி ஸமேத தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை ஸமேத மரகதேஸ்வரருக்கும் இதர 73 விதமான பரிவார தெய்வங்களுக்கும், 468 சித்தர்களுக்கும் சென்ற ஆண்டு 29.11.2015 அன்று மஹா ஸம்ப்ரோக்‌ஷணம் நடைபெற்றது. இதன் ஸம்ப்ரோக்‌ஷணம் நிறைவு விழா ஐப்பசி 28ம் தேதி (13.11.2016) முதல் கார்த்திகை 4ம் தேதி (19.11.2016) வரை காணாபத்யம், கெளமாரம், செளரம், ஸ்ரீ சாக்தம் மற்றும் வைணவம் அகிய ஆறு மதங்களில் உள்ள தெய்வங்களுக்கும், மஹான்களுக்கும் ஸம்வத்ஸராபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்வைபவத்தில் அனைவரும் பங்கேற்று குருவருளுடன் திருவருள்பெற அன்புடன் அழைக்கின்றோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    நிகழ்ச்சி நிரல்:

    13.11.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை மங்கள இசை, கோ பூஜை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தேவதா அனுக்ஞை, கிராம தேவதா பூஜை, முனீஸ்வர பூஜை, நவகன்னி பூஜை, வாஸ்து ஹோமம், மஹா பூர்ணாஹுதி, கலச புறப்பாடு, ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குதல்.

    14.11.2016 திங்கட்கிழமை காணபத்யம் சார்ந்த ஹோமங்கள்
    15.11.2016 செவ்வாய் கிழமை கெளமரம் சார்ந்த ஹோமங்கள்
    16.11.2016 புதன் கிழமை செளரம் சார்ந்த ஹோமங்கள்
    17.11.2016 வியாழக்கிழமை சைவம் சார்ந்த ஹோமங்கள்
    18.11.2016 வெள்ளிக் கிழமை ஸ்ரீ சாக்தம் சார்ந்த ஹோமங்கள்
    19.11.2016 சனிக் கிழமை வைணவம் சார்ந்த ஹோமங்கள்

    தொடர்புக்கு:
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
    கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
    வாலாஜாபேட்டை – 632513
    Ph : 04172-230033/9488209877/9488213701
    e-mail: info@danvantritemple.org
    homam@danvantritemple.org
    danvantripeedam@gmail.com

    Share
  • தன்வந்திரி பீடத்தில் லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமத்துடன் காலச்சக்கர பூஜை

    தன்வந்திரி பீடத்தில் 04.11.2016 அன்று மண் வளம், மழை வளம், மக்கள் நலம் வேண்டி லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமத்துடன் காலச்சக்கர பூஜை நடைபெற உள்ளது

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 04/11/2016 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் கோபூஜை, யாகசாலை பூஜையுடன் 15க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு நவக்கிரஹங்களில் உள்ள ஒவ்வொரு கிரஹங்களுக்கும் 10,000 ஜபம் வீதம், 9 தசாபுத்திகளுக்கு 10,000 ஜபம் வீதமும் “ஒரு லட்ச நவக்கிரஹ மூல மந்திர ஜபம் செய்து 10,000 ஆவர்த்திகள்” என்ற முறையில் மாபெரும் லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமம் நடைபெற உள்ளது.

    இந்த யாகத்தின் பலன்.

    மண் வளம், மழை வளம், மக்கள் நலம் வேண்டி நடைபெறுகிற இந்த, ஹோமத்தில் பங்கேற்கும் பக்தர்கள் நவக்கிரஹக தோஷங்கள் நீங்கி வாழ்வில் எதிர்வரும் தொல்லைகள் நீங்கி நன்மை பெறலாம். திருமணத்தடை விலகவும், சர்ப்ப தோஷம், நாக தோஷம், அகலவும், பித்ருக்களை திருப்திப் படுத்தவும், பஞ்ச பட்சி தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும், நிலம், வீடு, மனை, பாக்கியம் பெறவும், தொழில் தடை நீங்கி மேன்மைபெறவும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மழை பெய்து விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பெறவும், ஆலயங்கள் அபிவிருத்தி பெறவும், ஆலயங்களில் நடைபெறும் திருப்பணிகள் விரைவாக செய்து முடிக்கவும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த யாகம் நடைபெறுகிறது. யாகத்தின் நிறைவாக காலச் சக்கரமாக பீடத்தில் அமைந்துள்ள, நவக்கிரஹ, ராசி, நட்சத்திர விருட்சங்களுக்கு விருட்ச பூஜை நடைபெற உள்ளது.

    ஜெனனி ஜென்ம சௌக்கியானாம்
    வர்த்தினி குல சம்பதாம்
    பதவி பூர்வ புண்ணியானாம்
    லிக்கியதே ஜென்ம பத்திரிகா..

    என்பதற்கு இணங்க நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரஹங்கள் தான் என்பது நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள். என்பது உண்மை.

    இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான் நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரஹங்களை வணங்கி பூஜிக்க வேண்டும் என்பது ஜோதிடர்களின் வார்த்தையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்ரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு.

    உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது. அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது.

    காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை எடுத்துச் சொல்வது.

    பிரார்த்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல்களில் பலிதம் ஏற்பட சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார இறைவனை பிரார்த்திப்பதாகும்.

    நம் இந்து சாஸ்திரப்படி , இறைவனுக்கு எதையேனும் நாம் அளிக்க விரும்பினால், அதை அக்னி மூலம் தான் அளிக்க முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் மிக சிரத்தையுடன் நாம் மேற்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம். நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அளிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

    அக்னிக்கு அளிக்கப்படும் பொருட்கள் பஸ்பம் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உரிய முறையில் காலத்தே நம்மை வந்து பிரதி பலன்களை அளிக்கும். நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம் என்பதால், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான ஹோமங்களை உலக நலன் கருதி செய்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இந்த யாகத்தில், அந்தந்த கிரஹத்துகுரிய தானியங்கள், சமித்துக்கள், பழங்கள், புஷ்பங்கள், பட்சணங்கள், நிவேதனங்கள் கொண்டும் தேன், நெய், விஷேச மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • வட மாகாண சிறந்த நூற்தேர்வு – விருது 2015

    பசுந்திரா சசி 

    புலம் பெயர் எழுத்தாளர் ‘ செட்டிகுளம் – பசுந்திரா சசி ‘ அவர்களின் ” கட்டடக்காடு “ நாவலுக்கு ‘ வட மாகாண சிறந்த நூற்தேர்வு – விருது 2015.

    akc

    கடந்த வாரம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான வடமாகாண கலை இலக்கியப்பெருவிழா நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் கடைசிநாளான 24-10-2015 அன்று எழுத்தாளர்கள் கலைஞர்களை பாராட்டி விருதுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டது.

    akk2

    இந்நிகழ்வில் சிறந்த நாவலுக்கான விருது “கட்டடக்காடு” என்னும் புதினத்திற்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் சார்பாக அவரின் தந்தை சி.பசுபதி அவர்கள் விருதை பெற்றுக்கொண்டார் .

    இந்நாவலானது பிரித்தானியா நொட்டிங்கம் பகுதியில் வசித்துவரும் பசுபதி சசிகரன் அவர்கள் – பசுந்திரா சசி – என்னும் புனைபெயரில் எழுதி கடந்த வருடம் லண்டன் லூசியம் அம்மன் ஆலய மண்டபத்தில் வெளியீட்டறிமுகம் செய்து வைத்திருந்தார். தாயகத்தில் வெளியீட்டு விழா வவுனியாவிலும் பின் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அறிமுக விழாவும் செய்யப்பட்டதோடு . கனடாவிலும் அறிமுக விழா செய்து வைக்கப்பட்டது.

    கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சி. சிவசரவணபவன் அவர்களால் அணிந்துரை எழுதி எழுத்துலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவ் இளம் ஆசிரியரின் முதல் ஆக்கமான இந்நாவல் இலங்கை அரச விருதுக்காக இறுதி சுற்றில் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நாவல்களில் இடம் பெற்றதோடு இவ் ஆண்டு சிறந்த தமிழ் நாவலுக்கான ‘ இலங்கை கொடகே தேசிய சாகித்திய விருது-2015 ‘ ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டது.

    நாவல் பற்றி முது பெரும் எழுத்தாளர்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள் .

    akk1

    ” இந்நாவலின் எழுத்து வன்மை என்னை பிரமிக்க வைத்தது . இதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் , தகவல்கள் மிகவும் பயனுள்ளவை . அகழ்வாராய்ச்சி , காட்டு விலங்கு, ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள்- எழுதுவதற்கு கடும் உழைப்பை கொடுத்துள்ளமையை – காட்டுகின்றது . இந் நாவலாசிரியருக்கு அமோகமான எதிர்காலம் உண்டு ” என்றார்.
    எழுத்தாளர் அ. முத்தலிங்கம் ( கனடா) அவர்கள் குறிப்பிடுகிறார்.

    தினக்குரல் ஞாயிறு இதழ் 26-07-15 “ ஆதியின் மூலத்தை அசைக்கும் பறவை” என விழித்து இருந்தது.

    எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் வீரகேசரி வாரமலரில் ” கட்டடக்காடு- இலங்கை தமிழ் நாவல் வரிசையில் புதுமையான படைப்பு ” என குறிப்பிட்டிருந்தார்.

    akk3மேலும் வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் ‘ கிராமிய பண்பாட்டை முன் நிறுத்தும் படைப்பு ‘ என்றும். முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் ‘ இளையோரால் பின்பற்றவும் சான்றோரால் அங்கீகரிக்கப்படவேண்டியதுமான எழுத்துக்கு சொந்தக்காரர் இவ் ஆசிரியர் ‘ என குறிப்பிடுகிறார் .

    பசுந்திரா சசி –அவர்களின் பிற ஆக்கங்களான வீரகேசரி வாரமலரில் தொடர்கதையாக பிரசுரமாகிய “மடு” என்னும் நாவல் ( விரைவில் நூலுரு பெற உள்ளது.) மற்றும் 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள இவ் நாவலாசிரியர் மனம் நெகிழ்ந்து – புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் ஊட அகம் விற்பதிலே கவனம் செலுத்தும் அதே வேளை தமிழை வளர்ப்பதிலும் ஊக்கம் செலுத்த வேண்டும் – என வேண்டி நிற்கிறார்.

    மேற்படி வேண்டுதல் நிறைவேற நாமும் துணைநிற்போம்.

    மேலும் இவ் இலக்கிய பெரு விழாவில் விருது பெற்ற சக கவிதை , கதை ஆசிரியர்களாக .

    மரபுக்கவிதை – அறுவடை- குருசுமுத்து இராயப்பு.

    புதுக்கவிதை – சொல்லில் உறைந்து போதல் – முல்லை முஸ்ரிபா
    சிறுகதை – நிலவு நீரிலும் தெரியும் – முருகேசு ரவீந்திரன் ஆகியோருக்கும் .

    மேலும் அபுனைவு ( புனைவல்லாத ) படைப்பாசிரியர்களுக்கு விருகளும் , ஆயகலையில் தம்மை அர்ப்பணித்து மிளிர்ந்தவர்களுக்கு – முதலமைச்சர் விருதுகளும் – வழங்கப்பட்டன.

    தமிழுக்காக உழைத்து விருது பெற்ற நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
    திருமதி உதயகுமாரி விவேகானந்தராஜா .

    பிரித்தானியா .
    26/10/2015.

    ————————————————————————————

    மேலதிக தொடர்புகளுக்கு.
    email. pasusaci@gmail.com

    Share