Author: செய்தியாளர்-3

  • 1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

    -த. சீனிவாசன்

    கணியம் அறக்கட்டளை

    அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை

    • Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
    • FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட ஆர்வலர்கள் தொடர்ந்து மின்னூலாக்கத்தில் ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகின்றார்கள்.
    • ta.wikisource.org தளத்தில் விக்கிப்பீடியா குழுவினருடன் இணைந்து 2000 க்கும் மேற்பட்ட மின்னூல்கள் எழுத்துணரி (OCR) மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டு, மெய்ப்பு (Proof Reading) பார்க்கப்பட்டு வருகின்றன.

    இப்பணிகளுக்குத் தேவையான பல்வேறு மென்பொருட்கள் உருவாக்கப் பட்டு, கட்டற்ற மென்பொருட்களாக (Free Open Source Software) வெளியிடப்படுகின்றன.

    தன்னார்வலர்களே  இத்தகு முயற்சிகளுக்கு பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்து வருகின்றனர். இப்பணிகள் தமிழ் மொழி சார்ந்த இலக்குகளை அடைவதற்கு சிறந்த வெளியை ஏற்படுத்தி தந்துள்ளது. ஆர்வலர்கள் இணைந்து பணியாற்றவும் வழிவகுத்துள்ளதுடன், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.

    மாணவர் பதிப்பகம்

    சென்னையில் உள்ள மாணவர் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப் பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர்.

    அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. பாவாணர், சாமி சிதம்பரனார், நா.மு.வே நாட்டார், மயிலை.சீனி.வெங்கடசாமி, வெள்ளை வாரணர், இளங்குமரனார், திரு.வி.க, இராசமாணிக்கனார், சாமிநாத சர்மா, ஔவை துரைசாமி, முடியரசன், ந.சி. கந்தையா, மறைமலையடிகள், வ.சுப. மாணிக்கனார், அப்பாத்துரையார் ஆகியோரின் எல்லாப் படைப்புகளும்  வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் பல்வேறு பழந்தமிழ் அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கருணாமிர்த சாகரம் போன்ற இசை நூல்கள், பண்டைய தமிழ் இலக்கிய நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    நூல் பட்டியல்

    1. பாவேந்தர் பாரதிதாசன் – 167 நூல்கள்
    2. கா. அப்பாத்துரையார் – 98 நூல்கள்
    3. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் – 80 நூல்கள்
    4. சாமிநாத சர்மா நூல்திரட்டு – 76 நூல்கள்
    5. ந.சி.க. நூல் திரட்டு – 65 நூல்கள்
    6. திரு.வி.க. தமிழ்க்கொடை – 54 நூல்கள்
    7. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் – 53 நூல்கள்
    8. மறைமலை அடிகள் – 52 நூல்கள்
    9. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் – 37 நூல்கள்
    10. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் – 39 நூல்கள்
    11. மாணிக்க விழுமியங்கள் – 34 நூல்கள்
    12. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் – 32 நூல்கள்
    13. ஔவை துரைசாமி உரைவேந்தர் தமிழ்த்தொகை – 32 நூல்கள்
    14. புலவர் குழந்தை படைப்புகள் – 28 நூல்கள்
    15. சங்க இலக்கியக் களஞ்சியம் – 22 நூல்கள்
    16. கவியரசர் முடியரசன் படைப்புகள் – 22 நூல்கள்
    17. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை – 21 நூல்கள்
    18. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 20 நூல்கள்
    19. தொல்காப்பிய உரைத்தொகை – 19
    20. பதினெண் கீழ்க்கணக்கு – 18 நூல்கள்
    21. தமிழ் இலக்கணப் பேரகராதி (கோபாலையர்) – 18 நூல்கள்
    22. இராகவன் நூற்களஞ்சியம் – 16 நூல்கள்
    23. சதாசிவப் பண்டாரத்தார் – 16 நூல்கள்
    24. தொல்காப்பியம் (உரைகளுடன்) – 15 நூல்கள்
    25. செவ்விலக்கிய கருவூலங்கள் -15 நூல்கள்
    26. தேவநேயப் பாவாணர் – 13 நூல்கள்
    27. தமிழக வரலாற்று வரிசை – 12 நூல்கள்
    28. நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் – 10 நூல்கள்
    29. செம்மொழிச் செம்மல்கள் – 10 நூல்கள்
    30. பி. இராமநாதன் – 10 நூல்கள்
    31. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் – 10 நூல்கள்
    32. கருணாமிர்த சாகரம் -7 நூல்கள்
    33. ஐம்பெருங் காப்பியங்கள் – 5 நூல்கள்
    34. முதுமொழிக் களஞ்சியம் – 5 நூல்கள்
    35. சுப்புரெட்டியார் – 3 நூல்கள்
    36. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதி – 3 நூல்கள்
    37. உவமைவழி அறநெறி விளக்கம் – 3 நூல்கள்
    38. யாழ்ப்பாண அகராதி -2 நூல்கள்
    39. ந.சி. கந்தையா அகராதிகள் – 2 நூல்கள்
    40. நீதி நூல்கள் – 2 நூல்கள்
    41. குறுந்தொகை விளக்கம் (இராகவன் ஐயங்கார்) – 1 நூல்

    மொத்த பக்கங்கள் – 2 இலட்சத்துக்கு மேல்

    மொத்த நூல்கள் – 1,165

    நாட்டுடைமை நூல்களை மின்னூல்களாக வெளியிடுதல்

    தமிழ் இணையக் கல்விக் கழகம் நாட்டுடைமை நூல்களை PDF கோப்புகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை விக்கி மூலம் பங்களிப்பாளர்கள், OCR கருவி மூலம் எழுத்துகளாக மாற்றி, அதில் ஏற்பட்ட பிழைகளைக் களைந்து வருகின்றனர்.

    கடும் மனித உழைப்பையும் நேரத்தையும் கோரும் பணி இது. இப்போதுள்ள சுமார் 2000 மின்னூல்களைப் பிழைத்திருத்தம் செய்து உரை வடிவில் வெளியிட சில பத்தாண்டுகள் ஆகலாம்.

    இந்நிலையில், நாட்டுடைமை நூல்களை அச்சு நூல்களாக வெளியிடும் மாணவர் பதிப்பகம், அவற்றை உரை வடிவிலும் வைத்திருக்கக் கூடும் என்றெண்ணி, அவர்களிடம் இது பற்றி உரையாடினோம். அவர்களது பதிப்புகள் அனைத்தும் ஒருங்குறி எழுத்துருவில் வேர்ட் ஆவணங்களாகவே இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ந்தோம்.

    விக்கிமூலத்தில் proof read பணிகள் பற்றியும், கணியம் அறக்கட்டளை, FreeTamilEbooks.com வெளியீடுகள் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தோம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் அனைவருக்கும் இலவசமாகவே மின்னூல்களை தருவது அறிந்து மகிழ்ந்து வாழ்த்தினர்.

    தம்மிடம் உள்ள 1000க்கும் மேற்பட்ட மின் நூல்களின் [2 இலட்சத்துக்கு மேல் பக்கங்கள்] ஒருங்குறியில் உள்ள வேர்டு ஆவணங்களை, கணியம் அறக்கட்டளை இலவசமாக வெளியிடுவதற்கு தருவதாக உறுதி கூறினர். அவையாவும் இலவச மின்னூலாக வெளிவரும்போது தமிழின் அரும்பெரும் படைப்புகள் அனைவரது கைகளிலும் தவழும் இனிய நிலை உருவாகும்.

    மாணவர் பதிப்பகத்தாரின் பெரும்பணிகளுக்கும், 1000 க்கும் மேற்பட்ட நூல்களை pdf ஆக அல்லாமல் ஒருங்குறி வடிவில் தருவதற்கும், அதற்கான தட்டச்சு செலவின் ஒரு பகுதியையாவது தருவதாக உறுதி கூறினோம்.

    இதற்கான நன்கொடையாக ரூபாய் 5 லட்சம் அளிப்பதாக இசைந்தோம். நாம் ஒரு பக்கத்திற்கு எவ்வளவு நன்கொடையாக செய்கிறோம் என்று எண்ணினால், அது ஒரு மிகச் சிறிய தொகை [2.5 ரூபாய் /பக்கம்].

    கணியம் அறக்கட்டளையின் பணிகள் யாவும் தன்னார்வலர்களாலும், வாசகர்களின் நன்கொடைகளாலும் மட்டுமே நடப்பதை விவரித்து, இரண்டு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம்.

    அவர்களிடமிருந்து நூல்களைப் பெற்ற பின், அவற்றுக்கு அட்டைப்படம் சேர்த்து, விக்கிப்பீடியாவின் துணைத்திட்டமான விக்கிமூலம் தளத்திலும் (https://ta.wikisource.org), கூடவே கிண்டில், கைபேசி, கணினி என அனைத்து மின்னணுக் கருவிகளிலும் படிக்கும் வகையில், epub, mobi, A4 PDF, 6 inch PDF ஆகிய வடிவங்களில் FreeTamilEbooks.com இலும், வெளியிடுவோம்.

    நன்கொடை வேண்டுகோள்

    இரண்டு மாதங்களில் ரூபாய் 5 லட்சம் நன்கொடை பெறுதல் என்பது பெரும் பணி தான். ஆயினும் கணியம் அறக்கட்டளையின் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இச்செய்தியை கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறோம். பல நூறு பேரின் நன்கொடைகளும் இந்த இலக்கை எட்ட பேருதவி புரியும்.

    தமிழின் மீதும், தமிழ் நூல்கள், மின்னூல்கள் மீதும் ஆர்வம் கொண்ட உங்கள் அனைவரையும் மார்ச்சு 30, 2019 அன்றுக்குள், நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.

    வெளிப்படைத்தன்மை

    வங்கி விவரங்கள்

    Kaniyam Foundation
    Account Number : 606 1010 100 502 79
    Union Bank Of India
    West Tambaram, Chennai
    IFSC – UBIN0560618

    நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

    தொடர்புக்கு

    த. சீனிவாசன் – 9841795468
    அன்வர் – 8124782351 (வாட்சப் எண்)

    kaniyamfoundation@gmail.com

    Share
  • வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி சென்ற 14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெறுகிறது. இந்த யாகம் வருகிற 25.11.2018 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இந்த யாகத்துடன் 22.11.2018 வியாழக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகமும், 23.11.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், 24.11.2018 சனிக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமமும், 25.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன் கோடி ஜப குபேர யக்ஞம் நிறைவு பெறுகிறது.

    இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமங்கள் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த யாகங்களில் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மி அருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழக்கின்றோம். இன்று வரை 60 லக்ஷம் ஜபங்கள் தாமரை விதைகள், தாமரை புஷ்பங்கள், விசேஷ மூலிகை திரவியங்களுடன் குபேர யாகம் நடந்துள்ளது. இந்த யாகம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இன்று வரை இந்த யாகத்தில் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆர்.நந்தகோபால் IAS அவர்கள், இந்து முன்னணி திருநெல்வேலி மாவட்டசெயலாளர் திரு. எம்.பால்மாரியப்பன் அவர்கள், திரு. சோளிங்கர் பிரகாஷ் அவர்கள், ஸ்ரீராம் பட்டாசாரி, தென் இந்திய புரோகித சங்க தலைவர் வி.ஆர்.சீதாராமன் மற்றும் நிர்வாகிகள், ராணிப்பேட்டை விக்னேஷ் மோட்டார் உரிமையாளர், வாலாஜாபேட்டை W.G.முரளி, முன்னாள் தலைவர் நித்தியானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

    Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

    Email: danvantripeedam@gmail.com

    Share
  • கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில்

    நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

    – நூல் வெளியீட்டு விழாவில் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., பேச்சு –

    செங்கற்பட்டு.நவம்.13. லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில்
    குழந்தைகள் தினவிழாவையொட்டி நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில்,
    பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாக குழந்தைகளின்
    மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு
    சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசினார்.
    இவ்விழாவிற்கு செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர்
    ஞா.ஜாஷ்வா சாம் டானி தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.லட்சுமி
    அனைவரையும் வரவேற்றார்.

    கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’
    குழந்தைகளுக்கான கதை நூலினை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்
    ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., வெளியிட, லிட்டில் ஜாக்கி கல்விக்
    குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா சாம் டானி பெற்றுக் கொண்டார்.
    நூலினை வெளியிட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்
    ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசும்போது, “ இன்றைக்கு
    குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிப்பது, நல்ல மதிப்பெண் எடுப்பது
    என்கிற ஒற்றை இலக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். குழந்தைகளின்
    இலக்கு இப்படி சுருங்கிப் போனதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களுமே
    முதற்காரணம். நாங்கள் பள்ளியில் படிக்கிற காலங்களில் நீதி போதனை
    வகுப்புகளில் எங்களுக்கு கதைகள் சொல்வார்கள். அந்த கதைகளில்
    வரும் நீதி எங்களின் மனதில் ஆழமாகப் பதியும். பெற்றோர்களின்
    கவனிப்பு போதிய அளவு இல்லாத போதும், குழந்தைகள் அக்கறையோடும்
    ஒழுக்கத்தோடும் இருப்பார்கள்.

    இன்றைய காலச்சூழலில் குழந்தைகளின் கவனம் திசை
    திருப்பப்படுகிறது. குழந்தைகள் சுயமாகச் சிந்திக்கவும் செயல்படவும்
    புத்தக வாசிப்பு கை கொடுக்கும். கதைகளின் வழியாக குழந்தைகள்
    மனதில் சமூக அக்கறையையும் ஒழுக்கத்தையும் மிக எளிதாக விதைக்க
    முடியும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பெரியவர்களை
    மதிக்க வேண்டும், எந்த இடத்தில் இருந்தாலும் தனக்கான அடையாளத்தை
    வெளிப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் கொள்ள வேண்டும்.
    மு.முருகேஷ் எழுதிய குழந்தைக் கதைகளைப் படிப்பதன் மூலமாக நாளைய
    தலைவர்களாக மாறவிருக்கும் இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்தவர்களாக
    வருவார்கள் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.

    விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, செங்கை தாமஸ், பொன்.வாசுதேவன்,
    பேராசிரியர் கிள்ளிவளவன், நா.வீரமணி, ஆ.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை
    வழங்கினர்.

    நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றினார். விழாவில்,
    கதைகளுக்கான ஓவியங்களை வரைந்த லிட்டில் ஜாக்கி பள்ளியைச் சேர்ந்த
    16 மாணவ – மாணவிகளுக்குப் பாராட்டுச் செய்யப்பட்டது.
    விழாவில், ஏராளமான ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
    நிறைவாக, பள்ளி ஆசிரியர் பி.ரேணுகாதேவி நன்றி கூறினார்.

     

    படக்குறிப்பு;

    செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில் குழந்தைகள்
    தினவிழாவையொட்டி நடைபெற்ற விழாவில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தவிட்டுக்
    குருவியும் தங்கராசு மாமாவும்’ குழந்தை கதை நூலை தமிழ்நாடு கூட்டுறவு
    சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., வெளியிட,
    லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா சாம் டானி பெற்றுக்கொண்டார்.
    அருகில், (இடமிருந்து) செங்கை தாமஸ், நூலாசிரியர் மு.முருகேஷ், கவிஞர் அ.வெண்ணிலா,
    பேராசிரியர் கிள்ளிவளவன் ஆகியோர் உள்ளனர்.

    Share
  • POKKISAM INDIAN LARGEST TRADITONAL KOLAM

    சு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);.

    தமிழ் வளர்த்த மதுரை ,மீனாட்சி அம்மனை வணங்கி தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் பிறந்து ,ஆசான்கள் ஆசியுடன் படித்து தமிழ்ச்சங்க முத்தாக மாறி இளங்கலைப்பட்டம்(B.A.,)வும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும்(M.A.,)வும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மெய்ப்பொருளியல் நிறைஞர் பட்டமும் (M.phil.,) வும்,சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் (B.Ed.,) பட்டமும் பெற்று இன்று பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர்(Ph.D.,) பட்டத்திற்காக படித்துக் கொண்டிருக்கின்றேன் .நான் *இயல்,*இசை ,*நாடகம்,*நடனம்,*கோலத்துறையிலும் படிப்படியாக என் வெற்றியைப் பதித்து அன்றைய, இன்றைய நாளிதழ் களின் பதிவுகளிலும் என்னை ஊக்குவித்த பெரியோர்களால் இன்று வரை என்னை சாதனைக் களமாக மாற்றிய பெருமை ஆசான்களையே சாரும்.இன்று அடையாற்றில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருபது வருடகாலம் பணியாற்றி வருகின்றேன்.

    நம் பாரம்பரிய பொக்கிஷமான கோலத்தை,தொடர்ந்து 5 நாட்கள் 66 மணிநேரம் வண்ணக்கோலம், புள்ளி, சிக்குக் கோலம், மாக்கோலங்கள், இழைக்கோலம், உப்பு, அரிசி, தானியங்கள், பூக்கள், வெற்றிலை-பாக்கு, ஆகிய 10 வகையான கோலத்தையும், இருபதாயிரம் சதுரஅடி நிலப்பரப்பில், 55 வகை பொருட்களால் கோலத்தில் கின்னஸ் சாதனை படைக்க, என் பதிவை பதிவு செய்ய, மற்றும் இக்கின்னஸ் சாதனையை திறம் பட செயலாற்ற இப்பாரம்பரிய இக்கோலம் (POKKISAM INDIAN LARGEST TRADITONAL KOLAM 66 HOURS..37000 DOTS(Approx.) 5 Days Individual (Place:ACS MEDICAL COLLEGE AND HOSPITAL, ACS CONVENTION CENTRE . POONAMALLEE)

    Date:22.11.2018 – 26.11.2018) இரண்டாயிரம் வருடமாக வரலாற்றுப் பதிவுகளில் இல்லாத மரபு சார்ந்த நிகழ்வான அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இதுவே முதல்முறை சாதனையாக நடைபெறும் .தங்கள் மேலான ஆசிகளுடன்,தங்களால் இயன்ற உதவி களை அளித்து இந் நிகழ்வினை சிறப்பாக நடத்திக் கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    இப்படிக்கு
    என்றும்
    உண்மையுள்ள. ஶ்ரீவித்யா
    (ஆசிரியை)

    Namaskaram.I am srividhya.I wish to make an attempt In the books of Guinness world Record under category of Indian Traditional Largest kolam(Individual). The details are attached here with.Seeking your blessings and support for the Grand success.
    Thanking you.
    Regards,
    S.Srividhya.

    My details follows:-
    REMIT. USD.………….
    To:STANDARD CHARTERED BANk
    MADISON AVENUE
    NEW YORK 10010–3603,USA
    SWIFT:SCBLUS33
    FOR CREDIT To: A/C NO:
    3582053746001.
    CORPORATION BANK
    SWIFT:CORPINBB122
    FURTHER CREDIT TO Indira Nagar
    Branch, Chennai(124)
    Bene Account No.:520101249778196
    Beneficiary Name:S.SRIVIDHYA.

    சு.ஶ்ரீவித்யாM.A,BEd,M.phil,(Ph.D);.
    திருவான்மியூர்,
    சென்னை 600 041.
    கைப்பேசி-8939052902.
    மின்னஞ்சல்:srividhyanov3@gmail.com

    Share
  • ” திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்”

    சுப்ரபாரதி மணியன்

     

    ”திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.. திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் திரைப்பட ரசனையை முறைப்படுத்த பாடத்திட்டங்களும் ஒரு முக்கியப்பங்கு வகிக்க வேண்டும். தனியார் திரைப்படக்கல்லூரிகள்,திரைப்பட நிறுவனங்கள் தரும் படிப்பை மீறி அரசும் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் ” என்று திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஹைதராபாத் பிரகாஷ் ரெட்டி ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ) கூறினார்.

    தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் திருப்பூரில் புதன்கிழமை அன்று வினாயகா ஓட்டலில், ( தொடர்வண்டி நிலையம் அருகில் ) நடைபெற்றது.

    சென்னை கோதண்டராமன் ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைச்செயலாளர் ) தலைமை வகித்தார்,

    திரைப்படக்கலாச்சாரத்தை சீர்படுத்துவதில் திரைப்பட விழாக்களும் , ரசனை வகுப்புகளும் முக்கியப்பங்கு வகிப்பதை பெங்களூர் நஞ்சுண்டையா ( துணைத்தலைவர் – தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பு ) தெரிவித்தார்.

    ” சமூக அக்கறை, சமூக சீர்திருத்தம் , புதுமையானக் கருத்துக்கள் கொண்ட திரைப்படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். திரைப்பட சங்கங்கள் திரைப்படம் பார்க்கும் ரசனைக் கோணத்தை மாற்றியதில் பெரும் பங்கு வகித்தன “ . என்று எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்கூறினார் .. திருப்பூர் நியூலுக் திரைப்படச் சங்கத்தின் நிறுவனர் விடி சுப்ரமணியன் நீண்ட கால திரைப்படச்சங்கப் பணிக்காகப் பாராட்டப்பட்டார்.

    ஹைதராபாத் திரைப்படச்சங்க நிர்வாகி ரவிக்குமார் நன்றி தெரிவித்தார். ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பு, திருப்பூர் நவகனவு திரைப்பட சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின ) செய்தி : சுப்ரபாரதிமணியன்

    * பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும்

    ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )

    * மக்கள் இசைப்பாடல்கள் ( துருவன் பாலா, து.சோ.பிரபாகர், கா.ஜோதி, சாமக்கோடங்கி ரவி )

    * சிறப்பு கவி இரவு நிகழ்ச்சி

    28/10/2018 ஞாயிறு மாலை 6 மணி முதல், என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி .,புதிய பேருந்து நிலையம் , திருப்பூர்

    கவிதைகளோடும், பாடல்களோடும் , படைப்புகளோடும் வருக,.

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்

    Share
  • பயிலரங்க அறிவிப்பு மடல்

     

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் உதவிப் பேராசிரியர்களுக்கான ஏழு நாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.  விருப்பம் உள்ள உதவிப்பேராசிரியர்கள் கலந்துகொள்ளலாம்.

    Share
  • முன்னாள் தமிழக முதலமைச்சர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை

    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

    முன்னாள் தமிழக முதலமைச்சர்,

    டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி

    தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சர் ஆகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் இருந்தவர்.

    தெளிவான சிந்தனை கொண்ட மாபெரும் தலைவர், தமிழுக்கும் தமிழின மக்களுக்கும் பெருமை சேர்த்தவரும், தமிழ் மொழியை உலகறிய செய்தவர், அரசியல், சினிமா, இலக்கியம், அனைத்திலும் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற சாதனைகள் படைத்தவர். இவர் நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவ மனையில் மரணமடைந்தார். அவருடைய ஆத்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவினர்கள், கழக நிர்வாகிகள், உடன் பிறப்புகள், தொண்டர்கள், விசுவாசிகள் மன அமைதி பெறவும் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Blessings from Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal
    FOUNDER
    Sri Danvantri Arogya Peedam,
    04172-230033, 0944330203,
    ” நோயற்று வாழட்டும் உலகு “

    Share
  • தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது

    தன்வந்திரி பீடத்தில்

    தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.

    தசமகா வித்யா தேவியர்கள்:

    பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே ஸ்ரீசாக்த மார்க்கத்தின் ஆதிதேவியர்கள் ஆவார்கள். மேலும் மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களின் போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று ‘முண்டமாலா தந்திரம்’ என்ற நூல் கூறுகிறது. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

    பக்தர்கள் இத்தேவியர்களை வழிபட்டு பலனடைய வேண்டி ஒவ்வொரு தேவியருக்கும் தனித்தனியாக பீடம் அமைத்து கலச ஸ்தாபனம் செய்து மேற்கண்ட 10 தேவியர்களுக்கும் 16 வேத விற்பனர்கள் பங்கேற்று 1000 முறை ஜபம் செய்து ஹோமங்கள் நடைபெற்றது. இதில் தச மஹா தேவியர்களுக்குரிய புஷ்பங்கள், பஷங்கள், நிவேதனங்கள், திரவியங்கள் சேர்க்கப்பட்டு மஹாமேரு மற்றும் காயத்ரி தேவிக்கு 10 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நவாவர்ண பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு மஹா பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்ட்து. இதில் வாலாஜாபேட்டை லாவண்யா மருத்துவ மனை நிர்வாகி டாக்டர் தொப்பகவுண்டர், திரு. கோபிநாத் தொப்பகவுண்டர் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    இதனை தொடர்ந்து இராகு காலத்தை முன்னிட்டு, இராகு கேது ப்ரீதி ஹோமமும், சர்பசாந்தி ஹோமமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • பனுவல் வரலாற்றுப் பயணம் – 8

    அன்புள்ள வாசகர்களே,

    தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் கால குடைவரைக் கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்ரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது.

    இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும் உள்ளன. இது சங்ககாலத்த்தை சேர்ந்தது. இதையெல்லாம் கண்டு களிக்கவும் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ளவும் வரலாற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வழி காட்டிகள்:

    முனைவர்.ஆ.பத்மாவதி

    முனைவர்.மாக்சிய காந்தி

    கல்வெட்டு ஆய்வாளர்கள்.

    Call 9789-00-9666 or 044-431-00-442 for booking and more details

    நாள் : JULY 22,2018
    தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
    திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்

    பயணக் கட்டணம் : ரூ1000/-

    காலை உணவு , மதியம் உணவு, தேனீர், நினைவு பரிசு வழங்கப்படும்.

    முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

    Contact Address:

    Panuval Bookstore

    112, Thiruvalluvar Salai,

    Thiruvanmiyur. Chennai – 41.

    Ph: 044-431-00-442 | 9789009666

    Share
  • முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

    —————————————————————————————————————————–

    ஈரோடு மாவட்டப் பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்கள் புத்தகத்திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…

    —————————————————————————————————————————–

    ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் , பயிலும் மாணவர்களும் , ஈரோடு புத்தகத் திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலரிடத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் வைத்தது.

    புத்தகத் திருவிழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்கள் மற்றும் வகுப்பறைகளில் பாடப் புத்தகங்களுடன் பொதுப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்றும் , பள்ளி மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல புத்தகங்களை வாங்கி அவரவர் இல்லங்களில் சிறு நூலகங்கள் அமைக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் பேரவையின் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இதற்கான வேண்டுகோள் கடிதத்தை பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி அவர்களிடம் வழங்கினார்.

    பேரவையின் பணிக்குழு உறுப்பினர்களாக விளங்கும் முன்னாள் தலைமையாசிரியர்கள் கவுந்தப்பாடி எஸ். சண்முகம் , தளவாய்பேட்டை   பி.ஆர். செல்வராஜ் , சிவகிரி சி.ஆறுமுகம் , ஈரோடு டி. கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Share
  • தன்வந்திரி பீடத்தில் ஆண்/பெண் திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்யம் பெறவும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்

     

    (கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகம் )

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ

    முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி வருகிற 31.03.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் ஆகிய மூன்று ஹோமங்கள் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

    கந்தர்வ ராஜ ஹோமம்

    திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. மேலும் பீடத்தில் சென்ற 13 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.

    சுயம்வர கலாபார்வதி யாகம்

    திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டிசுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

    சந்தான கோபால யாகம்

    பெண்களின் பிரசவத்திற்கு பல வகையான உபாயங்கள் உள்ளன. மஹா சந்தான கோபாலானை வழிப்பட்டால் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. ஸ்ரீ சந்தான கோபால ஹோமம் செய்வதன் மூலம் சுகமாக எத்தடையுமின்றி குழந்தையை பெற்றெடுக்கலாம்.

    மேலும் அறிவு வாய்ந்த திறனுடையவர்களாக திகழ்வார். சந்தானகோபால ஹோமம் கர்ப்ப சிக்கல்கள்கட்டுப்படுத்த கிருஷ்ணர்

    ஆசிகள் பெறுவதற்கான ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹோமம் ஒரு ஆரோக்கியமான நிலையில் குழந்தை கருவுறும் முறைகள் வழங்குகிறது. இன்னும் பல நன்மைகளை பெற இந்த ஹோமத்தில் பங்குபெறலாம்.. மேலும், பெண் கருத்தடையும் பிரச்சனைகளை நீக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஒரு குழந்தை பிறக்க, நாகதோஷம் மற்றும் கர்ம பிரச்சினைகள் இருந்து மீட்க விரும்புவோர் இந்த ஹோமம் செய்யலாம். சந்தான கோபால ஹோமம் சாத்தியமில்லாத கர்ப்ப பிரச்சினைகளை சமாளிக்க ஜாதகத்தில் கிரகங்கள் எதிர்மறை விளைவுகளை அகற்ற செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக் கூடிய அபாயத்தைக் குறைக்கும். மேலும், அது சாத்தியமான அச்சுறுத்தல்கள் இருந்து ஒரு குழந்தை பாதுகாக்க உடலில் சக்தி வாய்ந்த ஆற்றலை அனுபவிக்க உதவுகிறது. நன்மை குணங்களும், ஒரு குழந்தைக்கு வரம் அளிக்கிறது. பெற்றோர் குழந்தைகள் திறமைகளை மேம்படுத்த இந்த ஹோமம் நடைபெறுகிறது.

    மேலும் இந்த ஹோமங்களில் பங்கேற்க்கும் நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசீர்வதித்து அன்னதானமும் வழங்கப்படும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

    Web: www.danvantritemple.org, www.danvantripeedam.blogspot.in

    Email: danvantripeedam@gmail.com

    Share
  • ருண – ரோக – சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்

     

    மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை ருண – ரோக – சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மாசி சுவாதி நக்ஷத்திரம் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு நவ கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும், போன்ற பல்வேறு தோஷங்களுக்காக, மேற்கண்ட யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்க்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி பகவான், ஸ்ரீ சக்கிரத்தாழ்வார் சன்னதிகளில் வைத்து பூஜித்த விசேஷ பிரசாதம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்கி ஆசீர்வதிக்க உள்ளார். ருண ரோக சத்ரு நாசினியான

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் சிறப்பு:

    வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்தவரும், மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும் ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும் மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை வணங்கி அருள்பெற மேற்கண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் யாகமும் சிறப்பு வழிபாடும் புஷ்பார்ச்சனையும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு:
    ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
    ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
    வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
    போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,
    Web : www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
    E-Mail: danvantripeedam@gmail.com

    Share