மந்திர ப்ரதிஷ்டை நிறைவும், தைலாபிஷேக ஆரம்பமும்

0

தன்வந்திரி பீடத்தில் 14ம் ஆண்டு மகா மந்திர ப்ரதிஷ்டை நிறைவு பெற்றது

dsc_0565

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 28ம் தேதி பக்தர்கள் ப்ரார்த்தனையுடன் தங்கள் கைப்பட எழுதிய தன்வந்திரி மகா மந்திரங்களை அவ்வப்போது ப்ரதிஷ்டை செய்யப்படும் விக்ரஹத்தின் கீழ் வைத்து மஹா மந்திரங்கள் எழுதியவர்களின் நலனுக்காக சிறப்பு பூஜையும், யாகமும் நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டு விரைவில் ப்ரதிண்டை செய்யப்படவுள்ள மந்திர ஸ்தூபியின் கீழ் வைத்து 14வது ஆண்டு மஹா மந்திர ப்ரதிஷ்டை வைபவம் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.

தன்வந்திரி பீடத்தில் 13ம் ஆண்டு தைலாபிஷேகம் துவங்கியது…

dsc_0438

ஒவ்வொரு வருடமும் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை தைலாபிஷேகம் எனும் வைபவம் உலக மக்களின் உடற்பிணி உளப்பிணி நீங்க நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மூலவருக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடா சைவ ஷேத்திர பீடாதிபதி ஸ்வாமி சிவ ஸ்வாமி அவர்கள் தைலாபிஷகத்தை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.

தைலாபிஷேகத்தின் பலன்

இந்த வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு சனி தசை, சனி புக்தி, ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்யம் பெற வழிவகை கிடைக்கும். மேலும் நவக்கிரஹங்களால் ஏற்படும் தடைகள் நீங்கி நன்மைகள் பெற வாய்ப்புகள் கிட்டும். மருத்துவ ரீதியான தோஷங்களும் நீங்க செய்யும். மேலும் பல நன்மைகள் கீழ்கண்டவாறு அமையும்.

dsc_0433

நினைக்கின்ற காரியம் நிறைவேறும், குடும்பம் நலம் பெறும், ஆயுள், புத்திர விருத்தி ஏற்படும், வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும், எட்டுவித செல்வம் கிடைக்கும், நோய்கள் நீங்கும், பாபங்கள் நீங்கும், உடல் நலம் பெறும், வாழ்வு இன்பமயமாகும், பயிர்கள் செழிக்கும், ராஜபோக வாழ்வு கிட்டும், வசீகரம் ஆகிய பலன் தரும், மற்றும் பயம் நீக்கவும் செய்கிறது, சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும். ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் கிடைக்க வழி செய்கிறது. செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதில் மக்னீசியம் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தைலாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருள்பெற வேண்டுகிறோம். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *