இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 309
சக்தி சக்திதாசன்
அன்பினிய வல்லமை வாசகர்களே!
இதோ முடியும் இந்த செப்டெம்பர் மாதத்தின். முக்கிய நிகழ்வுகளை புரட்டிப் பார்க்கிறேன்.
விளைவு இதோ உங்களை நோக்கி விரைகிறது என் மடல்.
இலைகள் உதிரும் பருவம்… அரசியல் மாற்றங்களும் உதிர்கின்றனவோ?
செப்டெம்பர் முடிவடைந்தது. அக்டோபர் தொடங்கிவிட்டது.
இலைகள் உதிரத் தொடங்கியுள்ளன. ஆனால் இவை இயற்கையின் நிகழ்வுகள் மட்டுமல்ல. இங்கிலாந்து அரசியலிலும், உலக அரசியல் மேடைகளிலும் சில கட்சிகளின் செல்வாக்கும், சில தலைவர்களின் புகழும் உதிரத் தொடங்கியுள்ளன.
கன்சர்வேடிவ் கட்சி ஒரு சரிவின் கதையாக தொடர்கிறது போலும்.
14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி, தற்போது மிக மோசமான நிலையை சந்திக்கிறது.
கட்சி எம்பிக்கள் சிலர் ரீபோர்ம் கட்சிக்குத் தாவல், பொதுமக்களின் நம்பிக்கை இழப்பு,
மற்றும் எதிர்பாராத தேர்தல் தோல்விகள் அவர்களுக்கு கொடுத்த அதிர்ச்சிக்கு மேலாக இப்போ ரீபோர்ம் கட்சி அவர்களின் ஆதரவை பறிக்கிறதோ ?
எல்லாமே ஒரு அதீத சரிவை நோக்கி அக்கட்சியை இழுத்துச் செல்கிறது.
லேபர் கட்சி, வெறும் 14 மாதங்களுக்கு முன் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், தற்போது அதே பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
ரீபோர்ம் கட்சி அதன் ஆட்டம் ?வேகமான எழுச்சி, சாத்தியமான சரிவு?
சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பொதுமக்கள் கவலையை அடிப்படையாகக் கொண்டு, ரீபோர்ம் கட்சி திடீரென எழுச்சி பெற்றது.
ஆனால், இந்த வேகமான வளர்ச்சி, நிலையான ஆதரவாக மாறுமா?
அல்லது, அரசியல் சூழ்நிலையின் மாற்றத்தில் அவர்கள் ஆதரவை இழக்குமா?
இது எதிர்பார்க்கப்படும் அடுத்த கட்டம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இங்கிலாந்து விஜயம் அரசியல் நிழல்களில் உறவாடல்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து வந்தார்.
ராஜ குடும்பத்தின் உபசரிப்பு, பிரதமர் கியர் ஸ்டாமரின் ஒட்டி உறவாடல்.
இவை அரசியல் அல்லவா?
இளவரசர் ஹரி, தந்தையுடன் உறவை புதுப்பிக்க முயற்சி எடுத்தது, அரசியல் நுணுக்கங்களின் பின்னணியில் நிகழ்ந்தது.
கட்சி மாநாடுகள் நடக்கும் காலமிது எதிர்காலத்தின் சாயல்களை நிர்ணயிக்கிறது.
ரீபோர்ம் கட்சி, கிறீன் கட்சி, லிபரல் டெமோகிராட்ஸ் கட்சி க தங்களது வருடாந்த மாநாடுகளை முடித்துள்ளன.
லேபர் கட்சியின் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.
கன்சர்வேடிவ் கட்சியின் மாநாடு இன்னும் நடக்கவிருக்கிறது.
இவை அனைத்தும், அடுத்த பொதுத் தேர்தலுக்கான அடித்தளங்களை அமைக்கின்றன.
ஆகா அவுத்து விட்டாரய்யா ஒரு கொள்கைப் பிரகடனத்தை நமது பிரதமர்.
சரியும் அவர் செல்வாக்கை தடுத்து நிறுத்துமா இந் நடவடிக்கை டிஜிட்டல் அடையாள அட்டை குடியேற்றக் கட்டுப்பாட்டுக்கான புதிய முயற்சி.
பிரதமர் கியர் ஸ்டாமர், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் டிஜிட்டல் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
இது ஒரு புதிய கட்டுப்பாட்டு முயற்சி.
இது அவரை அவர் நடமாடும் அரசியல் தளத்தில்.அடையாளப்.படுத்துமா?
பாலஸ்தீன அங்கீகாரமும் அதில் இங்கிலாந்தின் சர்வதேச நிலைப்பாடும்.
இங்கிலாந்து, பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து அறிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் 80வது அமர்வில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் “இன அழிப்பு” என அறிவிக்கப்பட்டது.
இது ஒரு அழுத்தமான அதே சமயம் முரண்பாடுகளுக்கு வழி கோலும் அறிவித்தல்.
உக்ரைன் – ரஸ்ய போரில் இதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டில் ட்ரம்ப்பின் பல்டி.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் இழந்த பகுதிகளை மீண்டும் வெல்லலாம் என அறிவித்தார்.
இது, ரஷ்ய அதிபர் பூட்டினுடன் “கா” விட்டதனாலா? எனும் கேள்வியை எழுப்புகிறது.
மனிதாபிமானமுள்ள அனைத்து மனிதர்களின் விழியோரம் உகுக்கும் கண்ணீராக தமிழ்நாட்டில் நடந்த அகோரம்.
தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அகோர நிகழ்வு,
மனிதாபிமானமுள்ளோர் மனங்களை உலுக்கியது.
இது, அரசியல் அல்ல. ஆனால், அரசியல் அமைப்புகளின் செயலிழப்பை வெளிப்படுத்தும் ஒரு சாட்சி.
இவை அனைத்தும் செப்டெம்பர் மாதம் தன்னுள் பதுக்கிக் கொண்ட நிகழ்வுகள்.
இலைகள் உதிரும் பருவத்தில், அரசியல் மாற்றங்களும் உதிரத் தொடங்கியுள்ளன என்று கூறுகின்றனவோ ?
அக்டோபர், புதிய சாயல்களை கொண்டு வருமா?, அல்லது பழைய நிழல்களை நீட்டுமா?
