கலைமகள் துதி: திருவடி சரணம் கலைகளின் தாயே!

0
image0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

கற்பன யாவும் கற்றிட வேண்டும்
கசடுகள் அகலக் கற்றிட வேண்டும்
கண்ணியம் நிறையக் கற்றிட வேண்டும்
கையணைத் திடுவாய் கலைமகள்த் தாயே

கற்றிடும் தலைமுறை பெருகிட வேண்டும்
கற்றிடும் வகையில் நின்றிட வேண்டும்
கற்றிடும் அனைவரும் கடவுளை எண்ணி
கருமங்கள் ஆற்றிட வைத்திடு தாயே

கல்வியைக் காசாய் ஆக்கிறார் தாயே
கற்றுக் கொடுப்பார் கயவர்கள் ஆகிறார்
கல்விக் கூடங்கள் கண்ணியம் காத்திட
கலைமகள் தாயே கருணையைக் காட்டு

வற்றிடாக் கல்வியை வழங்கிடு தாயே
மனமதில் மாசினைப் போக்கிடு தாயே
தினமுமே உன்னைத் தொழுகிறோம் தாயே
திருவடி சரணம் கலைகள்த்  தாயே

வெள்ளைக் கமலம் இருப்பிடம் கொண்டாய்
விரும்பி ஏட்டினைக் கையினிற் பிடித்தாய்
உள்ளம் விரும்பிட படைப்பவன் நாவில்
வெள்ளை உடையுடன் அமர்ந்தாய் சரணம்

கலைகளின் தாயே சரணம் சரணம்
நிலை குலையாமல் காத்திடு அம்மா
உலகிடை உயர்ந்தோர் போற்றிட அறிவை
தந்திடு சரஸ்வதித் தாயே சரணம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.