Category: Politics

  • புதிய அரசிற்கு நம்பிக்கையின் பாராட்டு விழா!

    இன்று ஈரோட்டில், புதிதாக அரசு அமைத்துள்ள, த.வெ.க கட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு விஜய் பாலாஜி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு கே.கே. ஆனந்த மோகன் அவர்களுக்கும், ஈரோட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு அமைப்புகளின் மூலம் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
    இருவரும் மிக யதார்த்தமாக, இயல்பான உரை வழங்கியது மக்களிடையே மிகப்பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றது. மக்கள் முன்னிலையில் தாங்கள் எக்காரணம் கொண்டும் எந்த வகையிலும் 1 உரூபாய் கூட கையூட்டு பெறாமல், நேர்மையான முறையில் மக்கள் பணி ஆற்றப்போவதாக உறுதி மொழி அளித்தார்கள். தங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் தங்களுடைய ஆட்சி நிரந்தரமாக இன்னும் பல காலங்களுக்கு தங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆசிகளுடன் இந்திய அளவில் தொடர உறுதி கொண்டுள்ளதாகவும் பேசி அசத்தியுள்ளனர். இது உண்மையாக நடந்தால் மகிழ்ச்சிதான் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கைதட்டி வரவேற்றனர். ஈரோட்டில் கைத்தறித்துறையிலும், துணிகள் தயாரிப்பு, சாயக்கழிவுகள் என்று பலப்பல பிரச்சனைகள் தீர்வு காணப்பட வேண்டியுள்ளன . மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். ஈரோடு மாவட்டத் தமிழியக்கத்தின் சார்பாக, மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும், வல்லமை இணைய இதழ் சார்பாகவும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாகவும் நம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டோம். நலமே விளைக என்ற நம்பிக்கையுடன் நகர்கிறோம் ……

    Share
  • பராசக்தி – திரை விமர்சனம்

    பராசக்தி – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    பராசக்தியின் அடிப்படைத் தோல்வி, அதன் கதையிலிருந்து தொடங்குகிறது. மொழிப் போராட்டத்தில் 70 பேர் துடிதுடித்து மாண்டுள்ளனர். தங்கள் உடலுக்குத் தீவைத்துக்கொண்டு பலர் கருகிச் சாய்ந்துள்ளனர். இத்தனை உணர்ச்சிமிகு வரலாற்றுப் பின்புலத்தை எடுத்துக்கொண்டு, சப்பையான இறுதிக் காட்சியை வைத்தது, இயக்குநரின் திறமையின்மையைக் காட்டுகிறது.

    இந்தித் திணிப்பு என்பதற்கு உரிய காட்சிகள் குறைவாகவே உள்ளன. அதிலும் சமூகத்தில் அனைத்து நிலையினரையும் பாதிக்கும் வகையில் அது இருந்தது என முன்வைக்கவில்லை. அஞ்சல் நிலையத்தில் படிவங்கள் இந்தியில் மட்டுமே இருந்தன எனக் காட்டப்படுகிறது. பணம் அனுப்ப வந்த பெண்கள், தங்களுக்கு அதை நிரப்பத் தெரியாது என்று கூறுகின்றனர். சரி இதை நீங்களே நிரப்புங்கள் என அஞ்சல் அலுவலர்களிடம் கூறுகின்றனர். அவர்கள், எங்களுக்கும் இந்தி தெரியாது என்று கூறுகின்றனர். அஞ்சல் அலுவலர்களுக்கே இந்தி தெரியாத போது, அவர்களால் எப்படி இந்திப் படிவங்களைக் கையாள முடியும்? படத்தில் இது மிகப் பெரிய ஓட்டை. நடைமுறையில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

    புறனானூற்றுப் படையினர், தமிழின் ஆதி வடிவமான பிராமி மொழியில் செய்திகள் பரிமாறுவதாகக் காட்டுகிறார்கள். இதை நாயகன் தன் நெஞ்சில் பச்சை குத்தியும் இருக்கிறார். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழியினர் பிராமி மொழியை எவ்வாறு கற்றுக்கொண்டனர், இதைக் கற்பித்தவர் யார் எனப் படத்தில் காட்டவில்லை. இது அவ்வளவு எளிதான செயல் இல்லை. புதிதாக இந்தி மொழியைக் கற்க முடியாது என்று எதிர்க்கின்றனர். ஆனால், பிராமி மொழியில் கற்றுச் சங்கேத மொழியில் எழுதவும் பச்சை குத்தவும் கற்கின்றனர். இதிலும் இந்தி மொழியைக் கற்க அமைப்புகள் இருக்கின்றன. ஆசிரியர்களும் இருக்கின்றனர். ஆனால், பிராமி மொழியைக் கற்க உரியவர்கள் இல்லை. எப்படிப்பட்ட முரண் இது?

    நாயகன் இந்தி மொழியைக் கற்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த ஊரில் நாயகியைத் தவிர, இந்தி ஆசிரியர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவரும் நான் யாத்திரை செல்கிறேன் எனக் கிளம்புகிறார். இந்தித் திணிப்பு எனக் காட்டப்படும் படத்தில் தான் இந்த நிலை. பிறகு எங்கிருந்து திணிப்பு வருகிறது எனில், அரசின் கொள்கை அறிவிப்பு அளவில்தான் அது உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் நம் வாழ்க்கை அவ்வளவுதான், நம் மொழி அவ்வளவுதான் என்ற கற்பனை அச்சமே மாணவர்களைப் போராடத் தூண்டுகிறது. அதாவது, திணிப்புக்கு முன்னதாகவே அதை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள்.

    ரெயில்வே துறை நேர்காணல், தில்லியில் நடக்கிறது. ரெயில்வே பயணச் சீட்டுப் பரிசோதகர் வேலைக்கு உனக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்தி மாநிலங்களில் பணியமர்த்தப்பட்டால் அது தேவைதான். ஆனால், இதே போல் தென் மாநிலங்களில் பணியமர்த்தப்படும் வடமாநிலப் பயணச் சீட்டுப் பரிசோதகர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்தித் திணிப்பு என்ற அளவில் இந்தக் காட்சி முடிந்துவிடுகிறது.

    தமிழக முதலமைச்சராகக் காட்டப்படும் பக்தவத்சலம், மதுரையில் இந்தி மொழி வாரத்தைத் தொடங்கி வைக்கிறார். ஆனால், அவரோ, தமிழக அமைச்சர்களோ இந்தியில் ஒரு வார்த்தையும் பேசவில்லை. படத்தில் காட்டப்படும் கள யதார்த்தத்தின்படி சமூகத்தில் எந்தப் பெரிய தாக்கத்தையும் இந்தி செலுத்தவில்லை. இந்தித் திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடியதைக் கூட இந்தத் திரைப்படத்தில் தெளிவாகக் காட்டவில்லை.

    இந்தித் திணிப்பு என வாய் ஓயாமல் பேசினாலும் அவற்றைத் தெளிவாகத் திரையில் காட்டவில்லை. தில்லியில் எல்லாப் பேருந்துகளிலும் தமிழில் எழுதியது போன்ற நடக்காத போராட்டங்களைக் காட்டியிருக்கிறார்கள். இறுதிக் காட்சி, மிக மிக மொக்கையாக அமைந்திருக்கிறது. எழுச்சி ஊட்டியிருக்க வேண்டிய ஒரு திரைப்படம், இயக்குநரின் அலட்சியத்தால் பிசுபிசுத்துவிட்டது. இதைப் படக்குழுவினரும் தயாரிப்பாளரும் கூடச் சரியாகக் கவனிக்கவில்லை.

    ஆனால், கற்பனை அச்சத்தைக் காட்டியே காலத்தை ஓட்டலாம், வாக்குகளை அறுவடை செய்யலாம் என்ற அரசியல் சாதுர்யத்தைப் படம் எடுத்துக் காட்டுகிறது.

    மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குச் சார்பாக இயக்குநர் வளைத்துள்ளார். இந்தப் போராட்டம் குறித்து, அண்ணாவின் கருத்துகள் மட்டும் ஆங்காங்கே காட்டப்படுகின்றன. இதர கட்சியினர், தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் குரல் காட்டப்படவில்லை. இது, திட்டமிட்டு மாணவர்களைத் திமுக சார்பாளர்களாகக் காட்டுகின்றது.

    படத்தின் ஒரே நல்ல கூறு, இந்தித் திணிப்புப் போரை ஒடுக்கும் அதிகாரியாகத் தமிழர் ஒருவரைக் காட்டியதே. இவரை வட இந்தியராகக் காட்டியிருந்தால், வட இந்தியருக்கு எதிரான உணர்வு இங்கே பெருகியிருக்கும்.

    படம் என்பது வெறும் தொழில்நுட்பம், ஒப்பனை, அரங்கப் பொருள்கள் மட்டுமில்லை. அதற்கு வலுவான கதையும் பாத்திரங்களும் தேவை. எல்லாப் படங்களையும் எல்லோரும் எடுத்துவிட முடியாது என்பதைச் சுதா கொங்கரா உணர வேண்டும்.

    Share
  • ஆயிரம் ரூபாய் யாருக்கு? | நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு

    ஆயிரம் ரூபாய் யாருக்கு? | நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு

    மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது? திமுக பேச்சாளர் நெல்லிக்குப்பம் எஸ்.புகழேந்தி தாம்பரத்தில் பேச்சு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | ரூபி ஆர்.மனோகரன் கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | ரூபி ஆர்.மனோகரன் கண்டன உரை

    மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் நிகழ்த்திய கண்டன உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | வன்னி அரசு கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | வன்னி அரசு கண்டன உரை

    மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு நிகழ்த்திய கண்டன உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | தாம்பரம் யாக்கூப் கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | தாம்பரம் யாக்கூப் கண்டன உரை

    மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் நிகழ்த்திய கண்டன உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கண்டன உரை

    மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நிகழ்த்திய கண்டன உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலைஞர் கருணாநிதியின் நகைச்சுவை

    கலைஞர் கருணாநிதியின் நகைச்சுவை

    கலைஞரின் நகைச்சுவை எத்தகையது? குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தின் 30ஆம் ஆண்டு விழாவில், மாசிலாமணி விவரிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சுகி சிவம், பகுத்தறிவு ஆன்மீகவாதி | வி.கே.டி.பாலன் பேச்சு

    சுகி சிவம், பகுத்தறிவு ஆன்மீகவாதி | வி.கே.டி.பாலன் பேச்சு

    சுகி சிவம், பகுத்தறிவு ஆன்மீகவாதி எனக் கலைமாமணி வி.கே.டி.பாலன் பேசினார். உங்கள் எதிரிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும் பேசினார். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சுகி சிவம் பற்றி வி.கே.டி.பாலன் ஆற்றிய உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அன்னை தெரேசா போல் வாழ்கிறார் சோனியா காந்தி | ரூபி ஆர்.மனோகரன் பேச்சு

    அன்னை தெரேசா போல் வாழ்கிறார் சோனியா காந்தி. தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் பேச்சு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு

    அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு

    அதானி நிறுவனங்களுக்கு ஷெல் நிறுவனங்கள் மூலம் 20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஈடுபட, அதானிக்குப் பாரத ஸ்டேட் வங்கி எட்டாயிரம் கோடி கடன் கொடுத்தது எப்படி? ஜிவிகே ரெட்டியிடமிருந்து மும்பை விமான நிலையம், அதானி கைக்கு மாறியது எப்படி? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார், ஆனந்த் சீனிவாசன். தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் அவரது பேச்சு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செயின் அறுப்பவன் பூணூல் அறுக்கிறான் | எஸ்.வி சேகர் பேச்சு

    செயின் அறுப்பவன் பூணூல் அறுக்கிறான் | எஸ்.வி சேகர் பேச்சு

    பிராமண எதிர்ப்பினை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உலக பிராமணர்கள் நலச் சங்கத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு

    படப்பதிவு – அமலன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண் போராளிகள் – திருமுருகன் காந்தி உரை

    பெண் போராளிகள் – திருமுருகன் காந்தி உரை

    மே 17 இயக்கத்தின் சார்பில் மகளிர் நாள் பொதுக்கூட்டம், 01.04.2023 அன்று சென்னை, தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், ‘பெண் போராளிகள் குறித்தும் பெண்கள் செய்ய வேண்டியவை குறித்தும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணா உரை | ராஜாஜியின் நிஷ்காம கர்மம்

    அறிஞர் அண்ணா உரை | ராஜாஜியின் நிஷ்காம கர்மம்

    1962ஆம் ஆண்டு, காஞ்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராஜாஜி குறித்து அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணா உரை | அரங்கசாமி நினைவு மன்றம்

    அறிஞர் அண்ணா உரை | அரங்கசாமி நினைவு மன்றம்

    காஞ்சிபுரம் அரங்கசாமி நினைவு மன்ற விழாவில் (தி.மு.க. கிளை தொடக்க விழா) அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share