புதிய அரசிற்கு நம்பிக்கையின் பாராட்டு விழா!

0

இன்று ஈரோட்டில், புதிதாக அரசு அமைத்துள்ள, த.வெ.க கட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு விஜய் பாலாஜி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு கே.கே. ஆனந்த மோகன் அவர்களுக்கும், ஈரோட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு அமைப்புகளின் மூலம் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
இருவரும் மிக யதார்த்தமாக, இயல்பான உரை வழங்கியது மக்களிடையே மிகப்பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றது. மக்கள் முன்னிலையில் தாங்கள் எக்காரணம் கொண்டும் எந்த வகையிலும் 1 உரூபாய் கூட கையூட்டு பெறாமல், நேர்மையான முறையில் மக்கள் பணி ஆற்றப்போவதாக உறுதி மொழி அளித்தார்கள். தங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் தங்களுடைய ஆட்சி நிரந்தரமாக இன்னும் பல காலங்களுக்கு தங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆசிகளுடன் இந்திய அளவில் தொடர உறுதி கொண்டுள்ளதாகவும் பேசி அசத்தியுள்ளனர். இது உண்மையாக நடந்தால் மகிழ்ச்சிதான் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கைதட்டி வரவேற்றனர். ஈரோட்டில் கைத்தறித்துறையிலும், துணிகள் தயாரிப்பு, சாயக்கழிவுகள் என்று பலப்பல பிரச்சனைகள் தீர்வு காணப்பட வேண்டியுள்ளன . மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். ஈரோடு மாவட்டத் தமிழியக்கத்தின் சார்பாக, மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும், வல்லமை இணைய இதழ் சார்பாகவும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாகவும் நம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டோம். நலமே விளைக என்ற நம்பிக்கையுடன் நகர்கிறோம் ……

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.