Tag: ஆர்.எஸ். மணி

  • “Sadhus of Badrinath”

    R.S.Mani

    reverse drawing on “Claybord Black”

    Sadhus of Bhadrinath- scratch -board drawing 1
    This method of drawing is called “scratch-board” technique.

    R.S.ManiIn the earlier days, a card board would be coated with black ink. By scratching on it, one could bring out the images.

    In a normal drawing, we bring darkness to light on a white paper, to create an image. On a scratch-board we bring the light to darkness on the black surface. With this technique we can create powerful lighting effects.

    Nowadays a product called Claybord is available. This is much more durable than the traditional scratch-board. You can read a short description of Claybord Black in the following Wikipedia link:

    http://en.wikipedia.org/wiki/Claybord

    I love to work on white Claybord for watercolors and acrylics. The result would be different from working on paper or canvas.

    Using a photograph I took in Badrinath as reference, I made the attached drawing on a Claybord Black. This is one of my favourite art works.

    — R.S.Mani

    (Cambridge, Ontario, Canada)

    Share
  • என்று கதவு திறக்கும்?

     

    என்று கதவு திறக்கும்?

    (சொடுக்கினால் செவிக்கும் விருந்து!)

     

    ஆர்.எஸ்.மணி

     

    Loves to create- The Record 1998-

     

     

    ஏன் இன்னும் இந்தக் கதவு திறக்கவில்லை?

    என் பயணம்தான் இன்று முடிந்துவிட்டதே!

     

    அன்று குழந்தையாய்த் தவழ்ந்தேன்

    இன்று கிழவனாய் நிற்கின்றேன்

     

    நடந்து வந்த பாதையிலேதான்

    எத்தனை எத்தனைத் திருப்பங்கள்!

    கண்டு ரசித்த காட்சிகளில்

    எத்தனை வண்ண ஜாலங்கள்!

     

    வாழ்க்கையெனும் தோட்டத்தில்

    சேர்த்து வைத்த செல்வத்தில்

    நானே பறித்த பூக்களுண்டு – பிறர்

    தானாய் கொடுத்த மலருமுண்டு

     

    கணக்கிலடங்கா பூக்களெல்லாம்

    வாடி கீழே விழுந்தபின்னே

    மிஞ்சி இன்னும் இருப்பதோ

    என் ஆசைத்தீயின் ஆறாத காயங்கள்

     

    இன்னும் ஏன் இந்தக் கதவு திறக்கவில்லை?

    என் பயணம்தான் அன்றே முடிந்துவிட்டதே!

     

    நான் சேர்த்த சொத்தையெல்லாம்

    என் தோளில் சுமந்து வந்தேன்

    ஒரு பையிலே கனத்திடும் பாவம்

    இன்னொன்றில் புண்ணிய பூஜ்ஜியம்

     

    எவ்வளவு நீரை நான் குடித்தபோதும்

    எந்தன் தாகம் தணியவேயில்லை

    உடம்பு எல்லாம் தேய்ந்த பின்னும்

    உள்ளம் ஏனோ ஓயவேயில்லை

     

    உறவு என்று சொல்லிக் கொள்ள

    ஒருவரும் இங்கே காணவில்லை

    என்னைச் சுற்றி வருவதெல்லாம் – என்

    சென்றகால நினைவுப் பேய்கள்!

     

    இன்னுமா இந்தக் கதவு திறக்கவில்லை?

    என் பயணம்தான் என்றோ முடிந்துவிட்டதே!

     

    —ஆர்.எஸ்.மணி

    (கேம்ப்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)

    இந்தப் பாடலைக் கேட்டு மகிழ, இங்கே சொடுக்குங்கள்:

    Share