Tag: ஆர்.எஸ். மணி

  • உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை

    உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை

    இது, கனடா ஆர்.எஸ்.மணி, 2007 மார்ச் 18 அன்று எனக்கு அனுப்பிய கவிதை. அவருடைய “Idle Tears” தொகுப்பிலிருந்து அவரே மொழிபெயர்த்த கவிதை. இந்த ஓவியத்தை வரைந்தவரும் அவரே. இந்தக் கவிதைக்கு இசையமைத்தவரும் அவரே. எனக்கு மிகவும் பிடித்த கவிதை.  – அண்ணாகண்ணன்.

    இந்தக் கவிதையை ஆர்.எஸ்.மணி குரலில் இங்கே கேட்கலாம்

     

    உன் அழகுத் தோட்டத்தில்
    ஒரு மூலையின் ஓரத்தில்
    மலராய் நான் பூத்திடுவேன்.

    உன்னுடைய மென்பாதம்
    வேறெங்கோ நடந்தாலும் – என் மனமோ
    உன்னையே சுற்றிவரும்.

    பரந்த உன் வீதியிலே – உன்
    கால்பட்ட மண்தரையில்
    பாடகனாய்த் திரிந்திடுவேன்.

    முற்றத்தில் நீஅமர்ந்து
    மலர்களைத் தொடுத்தாலும் – என் இசையோ
    உனைத் தொட்டு முத்தமிடும்.

    உன் அழகு மாளிகையில்
    ஒரு மூலைப் பிறையினிலே
    சிறுவிளக்காய் நானிருப்பேன்

    கருத்த உன் விழிகளென்னைக்
    காணாமல் இருந்தாலும் – நான் அங்கே
    காலமெல்லாம் எரிந்திருப்பேன்.

    Share
  • தேடுமிடம் – அமரர் ஆர்.எஸ். மணியின் கவிதை

    தேடுமிடம் – அமரர் ஆர்.எஸ். மணியின் கவிதை

    2006ஆம் ஆண்டு, கனடா நாட்டில் வாழ்ந்த, பல்கலை வித்தகர் ஆர்.எஸ். மணி, தமிழ் சிஃபி தளத்துக்காக, தேடுமிடம் என்ற தனது கவிதையை வாசித்து எனக்கு அனுப்பிவைத்தார். அதை ஆவணப்படுத்தும் முயற்சியாக, யூடியூபில் இட்டுள்ளேன். மயக்கும் அவரது குரலை இங்கே நீங்கள் கேட்கலாம்.

     

    thEdumidam

     

    Share
  • வாழ்வே இதுதான்!

     

     

    பாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா)

    மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு

    —————————————————————————————

     

    வாழ்வே இதுதான்: சுழலும் உலகம்

    இரவும் பகலும் வருமே மாறியே                      (வாழ்வே)

            காலை ஒளியும் மாலை இருளும் (2)

            உறவும் முறிவும் வருமே மாறியே              (வாழ்வே)

     

     

            சுற்றம் என்ன சூழல் என்ன

                    நிலையானதாகுமோ (2)

            சொந்தம் என்ன பந்தம் என்ன

                    செல்லாமலே நில்லுமோ?

                            ஒரு நாள் இன்பம் ஒரு நாள் துன்பம்

                            மாறாதே இக் கோலம்              (வாழ்வே)

     

     

            கன்னி என்ன காதல் என்ன

                    வண்ணமெல்லாம் மாறுமே             (கன்னி)

            பாசம் என்ன நேசம் என்ன

                    வந்து பின்னே போகுமே

                            ஒரு நாள் இங்கே ஒரு நாள் அங்கே

                            எங்கே எந்தன் வீடும்                (வாழ்வே)

     

    —————————————————————————-

    mani

    In 1996 I did a water-colour painting of a tribal woman.
    It was displayed in an art exhibition.
    A doctor from Germany, who was visiting Canada, 
    bought the painting from me.
    Fortunately I have a photograph of the painting.
     
     

     

    Our life is in constant flux. No one can stop the changes taking place in the body. And old age is inevitable. But there is light at the end of the tunnel!

    R.S.Mani

    Share
  • ஆதிவாசி

    R.S. Mani

    Painting title: ஆதிவாசி

    f79c9ee5-3722-4cfa-9238-d74e1d9d154a

    Size: 20” high x 16” wide

    Medium: Watercolor on museum quality Smooth Clayboard panel coated with a smooth absorbent clay ground comparable to the clay gesso grounds used during the Renaissance.The surface is additive and subtractive. We can remove paints to add contrast, texture, tonal value and fine details. Perfect for any artwork that requires an extremely smooth surface.

    Share
  • புல்மேல் விழுந்த பனித் துளியே!

    பவள சங்கரி

     

    அன்பு நண்பர்களே,

    என் பாடல் உயிர் பெற்றிருப்பதைக் கேளுங்கள்… அன்பு நண்பர் திரு ஆர். எஸ். மணி (கனடா) அவர்கள் இசையும், குரலும் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார்.. (GAZAL)

     

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    என்னை எழுப்பிய வெண்பனியே
    ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய்

    கல்லை உருக்கிய கவிமழையே
    கனவில் நிறைந்த கற்கண்டே
    உயிரில் கலந்த இன்னிசை போல்
    உனக்குள் தானே உறைந்திருந்தேன்

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    பனியில் கதிரொளி வீழ்ந்தால் நீராகும்
    விதியின் புத்தொளி வீழ்ந்தால் சுகமாகும்

    வலியைக் கடந்தால் சுகம் இருக்கும்
    மழையில் நனைந்தால் குளிரெடுக்கும்

    கானம் இசைத்தால் உள்ளம் திறக்கும்
    உள்ளம் திறந்தால் உயிர் நிலைக்கும்

    உயிரும் உணர்வும் உலராமல் இருந்தால்
    மலரும் மணமாய் பரவசமாய் இருக்கும்

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    குருவிகளிரண்டும் மூக்கால் உரசுகையில்
    குழலோசையாய் அது இசைத்திடுமோ
    பனியும் காற்றும் உரசுகையில்
    மெல்லிய கீதம் இசைத்திடுமோ

    மலையும் நதியும் உரசுகையில்
    எந்த மொழியில் குலவிடுமோ
    நினைவெல்லாம் பார்வையானால்
    மொழியெலாம் ஊமை ஆகிடுமோ

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    என்னை எழுப்பிய வெண்பனியே
    ஏன் மறந்தாய் இவ்வளவு நாளாய்
    என்னை உருக்கிய கவிமழையே
    எங்கே போனாய் இத்தனை காலமாய்

    உயிரில் கலந்த இன்னிசை போல்
    உனக்குள் தானே உறைந்திருந்தேன்

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    —————————————————————-

    Share
  • The Lonely Fisherman – Water colour

     

    ஓவியம் : ஆர்.எஸ். மணி

     

    The lonely fisherman- Watercolor (1)

     

    தனிமையில் தேடல்

    தூரத்தே தொடுவானம் – அதைத்
    தொடும்நாள் வருவதெங்கே
    நீயெங்கோ இருக்கின்றாய்
    இருந்தாலும் வெகு அருகே!

    தனிப் படகில் என் பயணம்:
    முடியாத தொடர்ப் பயணம்
    அன்பின் வலைவீசி
    உன்னை நான் தேடுகிறேன்.
    அதிலே நீ விழுந்து
    தவித்தாலும் பொறுக்காது
    விழாமல் இருந்தாலும்
    என் மனது கேட்காது.

    —ஆர்.எஸ்.மணி
    நவம்பர் 10,2013 (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

     

     

     

    Share
  • இனியவள்

    “இனியவள்” என்னும் இந்தப் பாடலை எழுதியிருக்கும் வல்லமையாளர் ஷைலஜா, சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, அருமையான கவிதாயினியும்கூட!

    சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையத்தில் ஒரு போட்டிக்காக இந்தப் பாடலை எழுதிய அவர், அதற்கு இசையமைக்க என்னிடம் கேட்டுக் கொண்டார். போட்டி முடிவுநாள் வந்துவிட்டதால், அன்றே அமர்ந்து இசையமைத்துப் பாடிக் கொடுத்தேன். அன்று தொண்டை சரியாக இல்லாததால் குரல் அவ்வளவாக எடுக்கவில்லை. ஆனால் மறுபடியும் பாடிப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள்!

    அன்புடன்,
    ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    யூட்யூப் தொடர்பு:
    http://youtu.be/NSGWL0u2UjY

    இனியவள்

    பாடல்: ஷைலஜா

    இசை, குரல்: ஆர்.எஸ்.மணி (கனடா)

    ——————————————————————

     

    தேன்சிந்தும் பூமுடித்து

    தேவதைப்போல் வந்தவளே

    வான்கொட்டும் மழைபோலே

    வார்த்தைகளில் நனைப்பவளே

    ஏனென்று கேட்காமல்

    என்னோடு வந்துவிடு

    நான்மட்டும் படிப்பதற்கு

    நயனத்தில் கதையெழுது

     

    கணைதொடுக்கும் கண்ணாலே

    காதல்போர் புரிபவளே

    துணையாக நான்வந்தால்

    துவண்டுநடை பயில்பவளே

    இணையுனக்கு யாருமில்லா

    ஈடில்லாப் பேரழகே

    அணையுடைத்துப் பெருகுமுன்னே

    ஆசைதனைத் தீர்த்திடவா

     

    தீட்டுகின்ற ஓவியமாய்

    தித்தித்து இருப்பவளே

    பாட்டுக்குள் கற்பனையாய்

    படிந்தே கிடப்பவளே

    கூட்டுக்குள் குடியேறி

    குயிலெனவே இசைத்திடுவாய்

    வாட்டும் என்தனிமைக்கு

    விருந்தாக வாகண்ணே

                                       (தேன்சிந்தும்)

     

    —————————————————————————-

    Share
  • Siva and Parvati

    Siva and Parvati
    Watercolor 14″H x 21″W
    By R.S.Mani

    sculpture-Siva Parvathi - watercolor

    This watercolor painting is based on a photograph I took when I visited Belur and Halebid.
    The painting appears to be monochromatic. Yet there are some other subtle colors.
    The technique:
    I used Masking Fluid extensively.

    I had four bottles containing the Masking Fluid.

    The first bottle contained full strength of the Masking Fluid.
    The second bottle contained 75% of the Masking Fluid mixed with 25% of water.
    The third bottle contained 50% of the Masking Fluid mixed with 50% of water.
    The fourth bottle contained 25% of the Masking Fluid mixed with 75% of water.
    After sketching the picture carefully, I applied the full strength Masking Fluid in places I wanted the paper to remain white. Then applied light colors on the entire surface of the paper.
    Now I chose the areas where I wanted light grey areas of the paper and applied the mixture from the second bottle containing 75% of the Masking Fluid. Then I applied medium value colors.
    Now choosing the areas where I wanted medium grey areas to remain on paper, I applied the mixture from the third bottle containing 50% of the Masking Fluid. . Then I applied darker colors.
    Now choosing the areas where I wanted dark grey areas to remain on paper, I applied the mixture from the third bottle containing 25% of the Masking Fluid. . Then I applied very dark colors.
    Now the entire surface of the paper looked almost black. Using an eraser, I rubbed the entire surface. The picture with varying values of colors emerged as shown!
    The process is time consuming. But it is worth the trouble considering the result.

    anbudan,
    R.S.Mani
    (Cambridge, Ontario, Canada)

    Share
  • Georgian Bay, Ontario, Canada

    R.S. Mani

    Watercolor 10.5″H x 14″W

    Georgian Bay - watercolor

    Georgian Bay is a large bay of Lake Huron, located entirely within Ontario, Canada.

    Years ago, I spent my vacation in the Bay area. The watercolor painting shown here was done at site.

    For those interested in learning watercolor painting, I would like to tell about “The Masking Fluid”.

    When you want to leave the paper white in places (instead of using white paint), draw the shapes with the masking fluid on the paper and paint on top of it. Later, using an eraser, you can remove the dried up fluid and expose the paper as the white shape. In this painting, I created the shapes of the white seagulls in the sky by this technique.

    The reason for introducing the topic of the Masking Fluid here is this:

    I started experimenting with it and took its usage to extreme. The result was unique textures which cannot be achieved by any other method. I shall post a sample of that kind of work next week in Vallamai.

    anbudan,
    R.S.Mani
    (Cambridge, Ontario, Canada)

    Share
  • துதி கோவிந்தனை!

     

    இலந்தை ராமசாமி  அவர்கள் சிறந்த தமிழ்ப்  புலவர்.  அருமையான கவிஞர். அவருடைய “பஜகோவிந்தம் தமிழாக்கம் படிக்க படிக்க இனிக்கும். அதிலிருந்து நான்கு பத்திகளுக்கு நான் இசை அமைத்துப் பாடியிருக்கிறேன்.  கேட்டு மகிழுங்கள்!

    அன்புடன்,

    ஆர்.எஸ்.மணி

    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ,  கனடா)

     

    “ துதி கோவிந்தனை!”

    (தமிழில் “பஜகோவிந்தம்”)

     

    கவிதை: இலந்தை ராமசாமி

    இசையமைத்துப் பாடியவர்: ஆர்.எஸ்.மணி

    ————————————————————————–

     

    Youtube link:

    http://www.youtube.com/watch?v=XnwYVibKkCc

    துதி கோவிந்தனை! துதி கோவிந்தனை!

    துதி கோவிந்தனை! – அட மூடா!

    எதிர்நின்று யமன் அழைத்திடும் போது

    இலக்கணக் கல்வி  காப்பாற்றாது!     (துதி கோவிந்தனை)

     

    மூடனே விடுவாய் பணம் கொள்ளும் தாகம்

    மூலம் மனத்தில் உணர்தல்  விவேகம்

    பாடு பட்டுழைத்து  கிடைப்பதை உண்டு

    பாங்குடன் வாழ்க நீ நிம்மதி கொண்டு  (துதி கோவிந்தனை)

     

    தாமரை இலைமேல் தண்ணீர்  திவலை

    சஞ்சலம் வாழ்க்கை என்றும்  கவலை

    சேமக் குறைவு, நோய் நொடி கலகம்

    சிந்தை மயக்கம், இதுதான்  உலகம்!  (துதி கோவிந்தனை)

     

    யார் உன் மனைவி? யார் உன் பிள்ளை?

    ஆஹா வாழ்க்கை, விசித்திரக்  கொள்ளை!

    யார் உன் முன்னோர்? ஊரும் எங்கே?

    அறிவாய் தம்பி, உண்மை  இங்கே!  (துதி கோவிந்தனை)

     

     

    —————————————————————————————————————

    Share
  • “Wine for Two”

    “Wine for Two”

    A painting by R.S.Mani

    20”H x 16”W

    Wine for Two

    Medium:
    Winsor & Newton Griffin (Alkyd)

    Fast Drying Oil Color Paint.

    I prefer Alkyd to traditional oil paints for the following reasons:

    I am allergic to turpentine which is used in traditional oil painting.
    Alkyd offers the excellent advantage of faster drying times compared to traditional oil colors, meaning that the traditional oil techniques of both impasto and glazing can be done in considerably less time and a painting can be completed in a single session.
    Ideal for working indoor or outdoors.
    Greater transparency means increased depth and clarity for glazes.

    To paint this picture, I set up the wine bottle and the glasses in the basement with proper lighting. I worked for nearly one week to capture all the details I observed.

    Anbudan,

    R.S.Mani

    (Cambridge, Ontario, Canada)

    Share
  • தமிழ் படும் பாடு

    ஆர். எஸ். மணி

    நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது கிழக்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Grid Zawadski என்னும் பெண் என்னுடைய ‘பேனா தோழி’ யாக இருந்தாள். அவளுக்கு கடிதம் மூலம் தமிழ் சொல்லித்தர முயன்றபோது, தமிழின் ஒலிகளைப் பற்றி விளக்க முயன்றேன். அதன் விதிகளை விளக்கிச் சொல்ல எனக்கு யாரும் இல்லாததால் நானே எழுத்துக்களையும் வார்த்தைகளையும் உச்சரித்துப் பார்த்து, பார்த்து விதிகளை எழுதினேன். ஆறு வல்லினங்களும் ஆறு மெல்லினங்களை மணந்து இல்லற வாழ்க்கை நடத்துவதைக் கண்டேன். அவைகளுக்கு ஒன்றுக்கும் மேலே உச்சரிப்பு இருப்பதையும், அவை ஒரு விதியின்படி நடப்பதால், ஆங்கிலம் போலில்லாமல், இன்னொருவர் சொல்லிக் கேட்காமலேயே வார்த்தைகளை உச்சரிக்க முடியும் என்பதையும் பார்த்தேன். மனைவியுடன் வரும் கணவன் இனிமையாக நடந்துகொள்வதைப் போல, தான் மணந்த மெல்லினத்தை அடுத்துவரும் வல்லினங்கள் மென்மையாவதையும், தமிழின் இனிமையே ‘ழ’வில் இருப்பதையும், அதை மொழியின் பெயரிலேயே வைத்திருக்கும் ‘அழகை’ வியந்தேன்.

    சமீப காலத்தில் தமிழின் உச்சரிப்பைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தெலுங்கு பாடகர்கள் தமிழ் திரைப்படத்தில் பாடத்தொடங்கியதிலிருந்து, ‘சொல்லு’ என்பது ‘ஸொல்லு’ என்றும் ‘சம்மதமா’ என்பது ‘ஸம்மதமா’ என்றும் பரவலாக உச்சரிக்கப்படுவதும், ழ/ள, ல/ள, ன/ண வித்தியாசமில்லாமல் பேசுவதும் வேதனை தருகிறது.

    சில வருடங்களுக்கு முன்னே, “தமிழ்ப் பேச்சு, என் மூச்சு” என்று ஓர் இயக்கம் தொடங்கலாமா என்றுகூட நினைத்தேன். இப்போது யாரோ அப்படி ஒன்று துவங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

    இப்பொழுது போகும் திசையில் சென்றால் தமிழ் எப்படி மாறும் என்பதை கற்பனை செய்து ஒரு சிறு கட்டுரையைப் சில வருடங்களுக்கு முன்னால் எழுதினேன். நகைச்சுவைப் போர்வையில் இருந்தாலும் மன வேதனையில் பிறந்த எழுத்துகள் இவை. அதை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

    “How Hamilton became a barber”

    or “வாழ்க வழமுடன்”

    I have always been concerned about the future of Tamil. Not in the field

    of literature – because there are quite a number of extremely capable

    scholars taking care of it – but rather Tamil’s future in the field of

    Phonetics. Although not apparent now, the problems lie in wait.

    In fact, I have already seen a glimpse of these problems, and if we do not

    immediately take the necessary steps, we will no longer recognize our

    language as it is heard or written now.

    Let me first recount a true-life story which has a lot in common with

    my concern mentioned above.

    Those of you, who lived in Madras a few decades ago, may know the story

    of the strange transformation of Hamilton into a barber. For those who

    do not, the story goes as follows:

    Hamilton was a prominent Englishman who lived in India during the

    British Raj. He was so well known that ‘Hamilton Bridge’ was named in his

    honor.

    Over the many years since the dedication, local Tamils repeated the

    name of ‘Hamilton bridge’ enough number of times to distort it

    to “அம்பட்டன் ப்ரிட்ஜ்” (Ambattan bridge). This in no way is meant

    to blame the Tamils for the metamorphosis. After all, both ‘Hamilton’

    and ‘bridge’ are foreign words to Tamil language. If the British

    could have the audacity to change திருவனந்தபுரம் to

    Trivandrum or வாராணசி to Benaras, we Tamils have every right to take

    liberties with the pronunciation of Hamilton.

    In any event, as time passed on, the city grew and with it, Madras’s

    public transport system. In fact, Ambattan bridge became one of the

    destinations for bus routes. When the transport authorities decided to name the

    bus stop, they knew enough English to translate “அம்பட்டன்” as “barber”.

    Remember that they were not acquainted with Sir (or Lord) Hamilton. As time

    had removed him from the scene, Hamilton was not present to object to the

    change of his profession either. And so, the name board on the

    front and rear of the bus read as “அம்பட்டன் வாராவதி”.

    Years later, someone in the transportation department decided to

    translate the name back into Engish. The name was promptly changed to

    “Barber’s Bridge”.

    More years passed, and a curious researcher wanted to know about

    the famous barber in whose memory the bridge had been named. It was then

    that the name Hamilton re-surfaced. Now all is well and Hamilton has been

    reinstated to his rightful place, and the barber is gone.

    Now let us turn our attention to the problem on hand.

    If you glance at the heading to this article, you will read two Tamil

    words: வாழ்க வழமுடன். ‘வாழ்க’ is fine. What is ‘வழமுடன்’? As

    we are all familiar with this famous greeting/blessing, we know that it should

    read ‘வளமுடன்’. Then why is it written differently? I initially

    thought it was a misprint. However, upon reflection, I realized the reason behind

    the grand “blessing.”

    The person who wrote the pamphlet always pronounced the letter ‘ழ’ as ‘ள’. If he were to say the words “பழுத்த பழம் பள்ளத்தில் விழுந்தது”,

    He will say, “பளுத்த பளம் பள்ளத்தில் விளுந்தது”.

    If he sits down to write the sentence, some of the ‘ள’s in his spoken words

    would be written as ‘ழ’s and some as ‘ள’s. If one is not careful, things could

    get mixed up. That was what happened in the case of “வாழ்க வழமுடன்”.

    When the word ‘Hamilton’ turned into ‘barber’, it followed this path:

    ‘Hamilton’ (English) to ‘ambattan’ (Tamil) to ‘barber’ (English).

    The changes occurred because of the corrupted pronunciation.

    There was an exchange between two different languages.

    In case of the transformation of ‘வளமுடன்’ to `வழமுடன்’, it was

    done within Tamil language itself. The reason is again, corrupted pronunciation.

    There are other persons that do not make any distinction between

    ‘ள’ and ‘ல’. I knew a man who ran a school for children in Madras.

    My children studied there for a few years. Every year, during the

    annual school day celebration, he would get up and begin his address

    invariably with the words:

    ” எங்கல் பல்லியில் படிக்கும் பில்லைகலே!”

    And it is also not uncommon to hear people getting mixed up with the

    letters ‘ண’ and ‘ன’.

    The other day, I started picturing a person having trouble with all

    these sounds. When I went to bed that night, I had an unusual dream in

    which a proud looking Tamil gentleman led me through a long corridor.

    At the end of the passage stood a large crystal ball. The gentleman

    asked me to gaze intensely into the ball, and I slowly realized that I could

    see the words: கி.பி. 2153.

    As I continued to gaze at the crystal ball, the following Tamil words appeared:

    கள் தோண்றி நின்ற காழத்திலேயே புகலோங்கி செலித்த

    நம்மொளி வால்க! வழர்க!!

    The gentleman said that if I continued to gaze at the crystal, it would

    allow me to time travel another century more into the future. There,

    I was told, I would have the rare opportunity to witness a much more

    refined form of Tamil writing. Before I could respond, I woke up from my dream.

    I am glad that it was only a dream!

    ——————————————————————————–

    Note: The above article was written in a lighter vein to emphasize

    the importance of correct pronunciation to preserve the beauty and

    integrity of our mother tongue. If it has hurt anyone even slightly, please

    forgive me.

    அன்புடன்,
    ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    Share
  • தொட்டுப் போகும்

    —ஆர்.எஸ்.மணி

    நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம்.

    எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.

    அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான்.

    அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் தொகுத்து ஒரு கவிதையாகப் புனைந்திருக்கிறார். என்னைத் தொட்ட அந்தக் கவிதையை இசையில் அமைத்து இங்கு இட்டிருக்கிறேன்.

    —ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    காணொளி: http://youtu.be/JgArHotZTPE

    திரு.அண்ணாகண்ணனுடைய கவிதை:

     

    “தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்”

    குரல் மின்னிடும் இசை உன்னதம்
    உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
    கரு வண்டினம் வலம் வந்திடும்
    அரு மலர்வனம் அதன் நறுமணம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    அருள் தூறிடும் அமுதூறிடும்
    பொருள் மீறிடும் புதையல் தடம்
    தலையாட்டிடும் மழலை மனம்
    தாலாட்டெனும் தனி மந்திரம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    சிலை சித்திரம் நடை நாடகம்
    ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
    உரு மாறிடும் நிழல் ஓவியம்
    கலை மேவிடும் மலை மாருதம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    கரை யாவையும் கரைத்தே எழும்
    சிறை யாவையும் மறுத்தே எழும்
    குறை யாவையும் அறுத்தே எழும்
    நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
    சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
    மனம் ஆடிடும் குடை ராட்டினம்
    களி காதலின் துளிப் பாற்கடல்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    ——————————————————————————-

    Share
  • மூப்பு

    ஆர்.எஸ். மணி

    (வீடியோ கவிதை)

    இந்தக் கவிதை வீடியோவிற்காக எழுதப்பட்டது. குளிர்காலம் முடிகிற நாட்கள். மரங்கள் மொட்டையாய். நின்று கொண்டிருந்தன. என் வீட்டருகிலும், எங்கள் தோட்டத்திலும் இருந்த சில மரங்களையும், செடிகளையும் வீடியோ எடுத்து, தொகுத்து, அதற்கேற்றவாறு இந்தக் கவிதையை எழுதிப் பதிவு செய்தேன்.கவிதை படிக்கும்போது “இளமை” என்னும் சொல்லை “இளைமை” என்று தவறாக உச்சரித்து விட்டேன். மறுபடி பதிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.

    அன்புடன்,
    ஆர்.எஸ்.மணி
    ( கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா )

    மூப்பு

    இளமை என்னும் பருவம் ஏனோ
    எப்போதும் நிலைப்பதில்லை
    இளமையாய் இருந்தபோது – அதை
    நாமும் ஏனோ நினைப்பதில்லை
    மூப்பு வந்து முதுகை அழுத்த
    மூச்சிரைத்து மார்பும் வலிக்க
    முட்டாள் மனது ஏக்கத்தோடு
    வானைப் பார்த்து கலங்குகிறது

    மங்கி மறையும் மாலை ஒளியில்
    நெஞ்சும் நடந்த காட்சியெல்லாம்
    திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து
    காலை வேளைக்குக் காத்து நிற்கிறது

    இருள் சூழ இன்னும் எத்தனைக் கணங்களோ?
    இமைகள் மூட இன்னும் எத்தனை நாட்களோ?
    பசுமை நிறைந்த காலமும் போய் – இன்று
    மொட்டை மரமாய் நான் நிற்கின்றேன்

    எண்ணங்களுக்கோ குறைவேயில்லை – அவை
    எல்லா திசைகளிலும் தாவுகின்றன
    நேற்று, இன்று, நாளை என்று – மனம்
    எல்லா காலத்தையும் நாடுகின்றது
    எங்கெங்கோ சென்றுவிட்டு
    கிடைத்ததையே மீண்டும் தேடுகின்றது

    மலர்கள் பூத்துக் குலுங்கிய நாளும்
    வண்டாய்ப் பறந்த நேரமும் எங்கே?
    அன்புக்காக ஏங்கும் நெஞ்சில்
    முட்களே வந்து குத்துகின்றன
    சென்ற நாட்களும் திரும்புவதில்லை
    உடைந்த இதயம் சேர்வதுமில்லை

    உடலும் உலர்ந்து ஓய்ந்துவிட்டது – இன்று
    உயிரும் பசையின்றி காய்ந்துவிட்டது
    மீண்டும் பசுமை எட்டாக் கனவோ
    என்றே உள்ளம் வாடும்போது
    “உண்டு வாழ்க்கை” என்று யாரோ
    காதில் சொல்வது கேட்கிறது – அது
    மொட்டாய் முளைத்து வெளியே வந்து
    மெல்ல சிரித்து என்னைப் பார்க்கிறது

    இன்று போனால் போகட்டும் நெஞ்சே
    நாளை என்பது வரத்தான் செய்யும்
    இந்த உடல் இன்று மக்கி விழுந்தால்
    நாளை இன்னொரு உடலுடன் பிறப்பேன்
    மறுபடி உலகில் தவழ்ந்து ஒருநாள் – நான்
    இளமையை மீண்டும் தீண்டி மகிழ்வேன்

     

    —ஆர்.எஸ்.மணி

    Share
  • வாழ்வே இதுதான்

     

    ஆர்.எஸ்.மணி

     

    vaazhvE idhudhaan- new

    (தேனிசையைக் கேட்டு மகிழ!)

     

    வாழ்வே இதுதான்: சுழலும்  உலகம்.

    இரவும், பகலும், வருமே மாறியே   (வாழ்வே இதுதான்)

    காலை ஒளியும், மாலை இருளும்,

    உறவும், முறிவும், வருமே மாறியே   (வாழ்வே இதுதான்)

     

    சுற்றம் என்ன, சூழல் என்ன,

    நிலையானதாகுமோ?

    சொந்தம் என்ன, பந்தம் என்ன

    செல்லாமலே நில்லுமோ?

    ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,

    மாறாதே இக்கோலம்.      (வாழ்வே இதுதான்)

     

    கன்னி என்ன, காதல் என்ன,

    வண்ணம் எல்லாம் மாறுமே!

    பாசம் என்ன, நேசம் என்ன,

    வந்து பின்னே போகுமே!

    ஒருநாள் இங்கே, ஒருநாள் அங்கே

    எங்கே எந்தன் வீடும்!    (வாழ்வே இதுதான்)

     

     

    —ஆர்.எஸ்.மணி

    (கேம்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)

    கிஷோர் குமாரின் “ஏ ஜீவன் ஹை” என்னும் ஹிந்தி பாட்டின் மெட்டில் எழுதி,

    என் குரலில் பதிவு செய்யப்  பட்டது..

    Share