Tag: ஆர். எஸ். கலா

  • பிரியாமல் வாழ்வோம்

    ஆர் எஸ் கலா

    unnamed (1)
    ====================
    உறவு என்று நாம்
    உரிமையாக வில்லை
    பந்தம் என்னும்
    சொந்தத்தில் பலமாக
    இணைந்தோம்…!!!

    சொந்தத்தை
    வளர்த்தோம்
    பிரியாமல்
    வாழ்வோம்..!!

    உணர்வாலும்
    உணர்ச்சியாலும்
    அன்பாலும்
    இன்ப துன்பத்திலும்
    உதவுவோம் பக்க பலமான
    உறவு என்று உலகுக்கு
    உணர்த்துவோம்…!!!

    தோள் கொடுப்பேம்
    இறுதி ஊர்வலத்தில்
    மட்டும் இல்லை..!!

    சோகம் கொண்டு
    துவண்டு விடும்
    வேளையிலும்..!!!

    நாடு விட்டு நாடு
    சென்றாலும்
    நாகரீக வாழ்வை
    நோக்கிச்
    சென்றாலும்.
    நாட்டுப் பற்றை
    நாம் மறக்காது
    நினைத்திருப்போம்..!!

    மழலைப் பருவ
    நட்பையும்
    தெப்பக் குளக்
    குளியலையும்
    மனதில் ஓட
    விட்டு ரசித்துப்
    பார்ப்போம்..!!

    உடல் பிரிந்து
    தொலை தூரம்
    வந்த பின்னும்
    உணர்வால்
    நட்புக்களைப்
    பிரியாமல்
    வாழ்வோம்..!!

    பிரிவு என்பது
    வாழ்வில் ஒரு
    அங்கம் அதை
    பட்டா போட்டு
    அமர விடாமல்
    விரட்டவே மனதில்
    உள்ள அன்பு என்னும்
    அதிகாரியால் மட்டுமே
    முடியும்..!!

    பிரிவு வரட்டும்
    நாம் பிரியாமல்
    வாழ்வோம்
    உடலை விட்டு
    உயிர் பிரியும் வரை….

    சொந்த பந்தங்கள்
    நட்புக்களையும்
    நினைவாலும்
    உணர்வாலும்
    உள்ளத்தாலும்
    பிரியாமலே
    வாழ்வோம் …!!!!

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    மலேசியா

    Share
  • என் செல்லமே!

    -ஆர். எஸ். கலா, மலேசியா

    கட்டித் தங்கமே நீ  என்
    செல்லக் குட்டிதான்.
    வெட்டி எடுத்தேன் விழி
                                  woman
    வாள் கொண்டுதான்.
    வட்டி கொடுப்பேன் என்

    இதழ் கொண்டுதான்.
    முத்தாரமாகப் பதிப்பேன்

    நான் முத்தம் கொண்டுதான்.

    என் கண் வியக்க ரசிப்பேன்
    உன் முகம் மட்டுந்தான்.
    தாரை வார்த்து மாமன்

    கொடுத்த பின்னே.
    இடை தொட தடை ஏதடா

    என் செல்லக்குட்டி.
    கட்டிக்கிட்ட பின்னே

    நான் உன் சக்கரைக் கட்டி.
    விரட்டி அடிக்க மாட்டேன்

    நீ என் இதயத் துடிப்பு.
    வாட்டி வதைக்கின்றதே

    உன் நினைப்பு.

     

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    -ஆர். எஸ். கலா, மலேசியா

    மக்களின் பாட்டாளி
    மக்களின் கூட்டாளி
    மகத்துவம் நிறைந்த சோக்காளி
    மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி
    மாறாத மனம் கொண்ட அறிவாளி
    கண்ணியம் தவறாத மாமனிதன்                      mgr
    கடமையிலே மகாமனிதன்!

    பூப் போன்ற மனசு
    புதையல் போன்ற உள்ளம்
    புன்னகை மாறாத  முகம்
    ஏழைகளின் குடிசைக்கு  விளக்கு ஒளி
    ஏமாற்ற எண்ணும் கொடியவனுக்குக்
    கை விலங்கு!

    ஆட்சியில் கிடைத்த காட்சி
    அழிக்க முடியாத ராச்சியம்
    கடமை கண்ணியம் கட்டுப்பட்டை
    உடையாக உடுத்திய கொடை வள்ளல்
    உழைப்பாளிகளின் அடிமைத்தனத்தை
    மீட்டார்!

    வறுமையின் பிடியில் வாடிய
    மழலைகளுக்கு
    மதிய உணவு திட்டத்தைக் கொடுத்தார்
    வாரிச் சுருட்டி எடுக்கும் அரசியலை
    வெறுத்துத்
    தன் வாழ்க்கையையே அரசியலுக்காக
    அர்ப்பணித்தார்!
    கொள்ளை அடித்தார் சொல்லாமலே
    பலஉள்ளங்களின் அன்பை!

    ஒன்றே குலம் என்று கூறி வாழ்ந்தார்
    ஒரு தாய் மக்களாக அரவணைத்தார்!
    சாதி மதம் பாராது பணம் படிப்பு பாராது
    பதவி பட்டம் ஏழை எளியோர் பாராது
    அனைவரும் மனிதரே என உரைத்தார்!
    இறந்தும் இறவா வரம் பெற்றார்
    கோடான கோடி மக்கள் மனதிலே
    ஒரு நிலையான இடம் பிடித்தார்!

    கொடை வள்ளலாக
    இதயக்கனியாக
    மக்கள் நண்பனாகப்
    புரட்சித் தலைவனாக
    ஒளி விளக்காக
    வாழ்ந்து மறைந்தார்!

    மறக்க முடியாத அச்சகத்திலே அச்சடித்தார்
    அவர் பேச்சு மொழியைக் கிளிபோல் பேசியே
    மக்கள் மறக்கவோ வெறுக்கவோ விரும்பாத
    நூலகத்திலே முதல் இடத்தையே
    அடைந்தார்!

    கலை உலகில் பல சாதனை படைத்து
    ஆட்சியில்  அதையே நிஜமாக்கி விட்டார்
    நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர்முன்
    அதில் வரும் பல காட்சிக்கு நிஜத்தில்
    உயிர் கொடுத்து விட்டார் பலர் வியக்கும்
    வண்ணம்!

    அவர் மூச்சு போனபின்னரும் பேச்சு
    மாறாமல்
    பலர் குரலிலும் வாழ்விலும் இதயக்
    கோயிலாக
    வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்
    எங்கள்
    இதயக் கனி மக்கள்  திலகம்!

     

    Share
  • அம்மாவும் சாதனைப் பெண்தான்

     

    ஆர்  எஸ் கலா
    unnamed

    ஆண்டி ஆனாலும் அரசன் ஆனாலும்

    பூமியில் அடி எடுத்து வைக்கும்

    முன்பே முதல் அடி வைத்தது அம்மாவின்

    கற்பத்தில் இருக்கும் போதே நாம்

    கொடுத்த உதை தான் நம் முதல் அடியே

    அன்னையின் அடி வயிற்றில் தான்
    ஆரம்பம்..

    இதை உணராத பிள்ளை

    இறுதி நேரம் தடி கூடக்
    கொடுக்க மனமின்றி

    பிடி
    சோறு கொடுக்க இரக்கமின்றி

    கோடித்துணி கொடுக்க அக்கறை இன்றி

    சிறு இடம் வீட்டில் ஒதுக்கப் பாசம் இன்றி

    தவிக்க விடுகின்றனர் தனிமையில்

    தள்ளியே வைக்கின்றார்கள் பத்து மாதம்

    சுமந்தவளைப் பதைக்க விடுகின்றார்கள்

    பால் ஊட்டி வளர்ததவளை விரட்டி

    விடுகின்றார்கள் நிலாக் காட்டி சோறு

    ஊட்டியவளைநிராகரித்து விடுகின்றார்கள்

    தன் தொடை மீது தலை சாய்த்து தாலாட்டுப்
    பாடியவளை

    துணைக் கரம் கொடுக்காமலே

    தூரமாகவே அனுப்பி விடுகின்றார்கள்

    அரண்மணை போல் வீடு அன்னை இல்லம்
    பேரு

    அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்

    தான் தன் தாய்க்குச் செய்வதையே

    அவன்
    பிள்ளை அவனுக்குச் செய்யும்

    என்பதையே
    மறக்கான் தாய் பட்ட வலியையும் நினைக்காமல்
    இருக்கான்

    தாமைக்குநிகராக ஒன்றும்
    இல்லை

    இறைவனும் அதன் பின்னே
    என்று உணர்ந்தால்

    ஒவ்வொரு பிள்ளையும்
    மறைந்து விடும் முதியோர் இல்லம்

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    மலேசியா

    Share
  • லிமரைக்கூ கவிதைகள்!

    -கவிக்குயில்  ஆர். எஸ். கலா, இலங்கை

    தள்ளாடும் குடிகாரன்  கால்கள்
    வறுமையின்  பிடியில்  அவன் குடும்பம்          kala
    பசியில் மனைவி மக்கள்!

    மழையில் நிரம்பியது ஆறு
    சந்தோசமாக ஓடி  நீந்தியது  மீன்
    உள்ளே மறைந்தது சேறு!

    ஓயாமல்  ஆடுது  அலை
    உதவி  இன்றிப் படகில் மீனவன்
    கடலோடு ஆடுது வலை!

    மேகத்தின்  அழுகையோ மோகம்
    பூமியிலே  நிறைந்து  விட்டது வெள்ளம்
    என்னுள்ளே  ஒரு சோகம்!

    சிவனுக்கு நெற்றிக் கண்
    அடையாளம்  போல்  மனிதனுக்குச்  சிறந்து
    நல்ல  அறிவின்  கண்!

    தாய்  தந்தை  ஆசான்
    மூன்று தெய்வங்கள்  சொல் கேட்டால்
    நாம்  அறிவில்  மகான்!

    விலங்குக்கு வீடு காடு
    இதயம் அற்ற மனிதன் கொடுத்தான்
    சிறைக் கம்பிக்  கூடு!

    கண்  கவரும்  இயற்கை
    அதை அழித்து மனிதன்  உருவாக்கி
    விட்டான் ஒரு செயற்கை!

    அச்சம் மடம் நாணம்
    பெண்ணுக்குச் சொத்தாக அந்தக் காலம்
    இப்போது அதைக்  காணோம்!

    ஏந்தியது அகப்பை அன்று
    துணிந்தாள் போருக்குச் சென்றாள் பெண்
    ஏந்தினாள் துப்பாக்கி இன்று!

     

    Share