-ஆர். எஸ். கலா, மலேசியா

மக்களின் பாட்டாளி
மக்களின் கூட்டாளி
மகத்துவம் நிறைந்த சோக்காளி
மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி
மாறாத மனம் கொண்ட அறிவாளி
கண்ணியம் தவறாத மாமனிதன்                      mgr
கடமையிலே மகாமனிதன்!

பூப் போன்ற மனசு
புதையல் போன்ற உள்ளம்
புன்னகை மாறாத  முகம்
ஏழைகளின் குடிசைக்கு  விளக்கு ஒளி
ஏமாற்ற எண்ணும் கொடியவனுக்குக்
கை விலங்கு!

ஆட்சியில் கிடைத்த காட்சி
அழிக்க முடியாத ராச்சியம்
கடமை கண்ணியம் கட்டுப்பட்டை
உடையாக உடுத்திய கொடை வள்ளல்
உழைப்பாளிகளின் அடிமைத்தனத்தை
மீட்டார்!

வறுமையின் பிடியில் வாடிய
மழலைகளுக்கு
மதிய உணவு திட்டத்தைக் கொடுத்தார்
வாரிச் சுருட்டி எடுக்கும் அரசியலை
வெறுத்துத்
தன் வாழ்க்கையையே அரசியலுக்காக
அர்ப்பணித்தார்!
கொள்ளை அடித்தார் சொல்லாமலே
பலஉள்ளங்களின் அன்பை!

ஒன்றே குலம் என்று கூறி வாழ்ந்தார்
ஒரு தாய் மக்களாக அரவணைத்தார்!
சாதி மதம் பாராது பணம் படிப்பு பாராது
பதவி பட்டம் ஏழை எளியோர் பாராது
அனைவரும் மனிதரே என உரைத்தார்!
இறந்தும் இறவா வரம் பெற்றார்
கோடான கோடி மக்கள் மனதிலே
ஒரு நிலையான இடம் பிடித்தார்!

கொடை வள்ளலாக
இதயக்கனியாக
மக்கள் நண்பனாகப்
புரட்சித் தலைவனாக
ஒளி விளக்காக
வாழ்ந்து மறைந்தார்!

மறக்க முடியாத அச்சகத்திலே அச்சடித்தார்
அவர் பேச்சு மொழியைக் கிளிபோல் பேசியே
மக்கள் மறக்கவோ வெறுக்கவோ விரும்பாத
நூலகத்திலே முதல் இடத்தையே
அடைந்தார்!

கலை உலகில் பல சாதனை படைத்து
ஆட்சியில்  அதையே நிஜமாக்கி விட்டார்
நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர்முன்
அதில் வரும் பல காட்சிக்கு நிஜத்தில்
உயிர் கொடுத்து விட்டார் பலர் வியக்கும்
வண்ணம்!

அவர் மூச்சு போனபின்னரும் பேச்சு
மாறாமல்
பலர் குரலிலும் வாழ்விலும் இதயக்
கோயிலாக
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்
எங்கள்
இதயக் கனி மக்கள்  திலகம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.