Tag: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

  • மழை

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி இலங்கை 

    வற்றிக் கிடக்கும் வறண்ட பூமியைத்
    தொட்டுத் தழுவும்
    உனது தூய கரங்களுக்குத்தான் எத்தனை குளிர்ச்சி!

    இரவென்ன…பகலென்ன…                            rain for kavithai
    வானம் கருக் கொண்டால்
    பூமி மகிழ்கிறது! 

    நீ 
    இல்லாத நாட்களில்
    பொல்லாத புழுக்கம்! 
    இருக்கின்ற நாட்களில் 
    இப் புவியே வழுக்கும்!

    நீ வருகை தருங் காலத்தில்
    வெள்ளம் பாய்ந்தோடும்!
    உனது
    விபரீதப் போக்கினால் 
    கண்ணீர் வெள்ளமும் பாய்ந்தோடும்!

    நதிக் கரைகளில்  அலையடிக்கும்! 
    கடற்கரைகளில் 
    வெண்நுரைப் பூக்கள் 
    விரிகின்ற  மாரிக் காலம்!
    உன்னைச் சுமந்த மேகங்களின்  
    ஊர்கோலம்!

    கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்
    இந்த
    மண்ணுக்கே மகிழ்ச்சி  வரும்!!

    மீனோட…
    நாரைகள் தவமிருக்கும்! 
    ஏரோடாத கழனிகளில் 
    ஏரோட…எங்கும் 
    பைங் கூழ் விளைந்திருக்கும்!

    வறுமைத் தளையறுக்கும் 
    வல்லமை உன்னுடையது!
    நீ இல்லையேல் 
    எந்த  மண்தான் பொன்னுடையது?

    கொட்டும் இடிமின்னல் காற்று
    ”கூஹ் கூஹ்”வென்று 
    குரலை ஒலியெழுப்ப
    முட்டும் மரக் கிளைகள் 
    மோதிச்  சல சலக்க…
    கார் கால மேகங்கள் 
    தாவிச் செல்லும் 
    பல்லாக்கிலே
    நீ விற்றிருந்து 
    விஜயஞ் செய்கின்றாய்!
      
    சகாராக்களைச் 
    சல்லாப புரியாக மாற்றும் 
    சக்தி உன்னுடையது!

     நீ கொடைவள்ளல்!
    அள்ளிக் கொடுக்கும் போதுதான்…  
    இடையூறு அதிகம்!

     

    Share
  • பிரார்த்தனை துளிகள் ..!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்விp-images

    பிறந்து வாழுகின்ற உயிர்களின் எதிர் பார்ப்புகள்
    இறந்து போகின்ற உள்ளங்களின் வேதனைகள்
    வேடிக்கைப் பார்க்கின்ற இரக்கமில்லா ஜீவங்கள் ..!

    உயிரற்ற சடலத்தை சுமப்பதற்கு
    நான்கு தோள்கள் கரம் கொடுக்க
    மறுமை வாழ்வை நிலையுருத்தி நிற்கும் மரணம் ..

    பிறப்பும் இறப்பும் இணைந்துவாழும் வாழ்க்கை .
    நிலையற்ற நினைவுகளைஉறிஞ்சியெடுக்கின்ற மனசு
    எல்லாம் மறைகின்றன இரவு பகல் மாற்றங்களில்

    இஸ்மாயில் நபியின் தாகத்தை தீர்க்க ,
    ஊற்றெடுத்த சம்ஷம் நீரினை குடிக்க
    போட்டி போடுகின்ற நல்லடியார்கள் மத்தியில்

    வாழ, எல்லையற்ற சோதனைகள் தொடர
    பல நல்ல இதயங்கள் நொந்து மறைந்தனர்
    அப்பாவி உள்ளங்கள் மானம் காத்து..

    எத்தியோப்பிய மண்ணில்
    எலும்புக் கூடுகளாய் வாழும் உறவுகளுக்கு
    இதயம் பிழிந்தோடும் பிரார்த்தனைத் துளிகள் ..!

    படத்துக்கு நன்றி

    http://nashuarescuemission.org/prayer-warriors/

     

    Share
  • காலத்தின் கோலம் !

    கலைமகள் ஹிதாயா ரிஸ்விo-images

    பிறப்பு -இறப்பு

    ஒருமுறை

    ஓராயிரம் போராட்டங்கள்…!

    காலத்திடம்
    வயதினை ஒப்படைத்துக்
    பழுத்துச் செல்கின்றன முடிகள் ..!

    ஒவ்வொரு வெள்ளை முடிகளுக்குள்ளும் நகர்கின்றது
    நிகழ் காலத்தின் ஆயுள்

    சொந்தமாக்கிக்  கொண்டோம்

    வாழ்வு

    மின்னலாய் மறைகின்றது ..1

    காலத்தின் கோலம் !

    அவரவர் வயசு அடிப்படையில்
    அவரவர் வாழ்வின் மறைவு ..!

    http://flickrhivemind.net/Tags/kolkata,travel/Interesting

    Share
  • பிராத்தனை துளிகள் ..!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்விp-images

    பிறந்து வாழுகின்ற உயிர்களின் எதிர் பார்ப்புக்கள்
    இறந்து போகின்ற உள்ளங்களின் வேதனைகள்
    வேடிக்கைப் பார்க்கின்ற இரக்கமில்லா ஜீவங்கள் ..!

    உயிரற்ற சடலத்தை சுமப்பதற்கு
    நான்கு தோள்கள் கரம் கொடுக்க
    மறுமை வாழ்வை நிலையுருத்தி நிற்கும் மரணம் ..

    பிறப்பும் இறப்பும் இணைந்துவாழும் வாழ்க்கை .
    நிலையற்ற நினைவுகளைஉறிஞ்சியெடுக்கின்ற மனசு
    எல்லாம் மறைகின்றன இரவு பகல் மாற்றங்களில்

    இஸ்மாயில் நபியின் தாகத்தை தீர்க்க ,
    ஊற்றெடுத்த சம்ஷம் நீரினை குடிக்க
    போட்டி போடுகின்ற நல்லடியார்கள் மத்தியில்

    வாழ, எல்லையற்ற சோதனைகள் தொடர
    பல நல்ல இதயங்கள் நொந்து மறைந்தனர்
    அப்பாவி உள்ளங்கள் மானம் காத்து..

    எத்தியோப்பிய மண்ணில்
    எலும்புக் கூடுகளாய் வாழும் உறவுகளுக்கு
    இதயம் பிழிந்தோடும் பிராத்தனை துளிகள் ..!

     

    Share
  • பெண்ணுக்கு உரிமை

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

     

    பெண்ணுக்கு உரிமையை மறுத்து விட்டு
    பேசிய உலகத்தில் இன்று நாங்கள்
    கண்ணுக்கு நிகராக அவரை இன்று
    காதலித்துப் போற்றுகின்றோம் அவர்கள் வாழ்க!
    விண்ணுக்குக் கூடவே பெண்கள் கீர்த்தி
    விமானத்தில் பறந்தங்கு சென்ற தாவே
    மண்ணுக்கு புதுத்தெம்பு வந்து சேரும்
    மாதர் குலம் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள்ளும்.

    பூட்டிய கதவுகளை உடைத்துக் கொண்டு
    புரட்சி மங்கையர்கள் எழுந்து விட்டார்
    தீட்டுவார் புதுக்கவிதை அதிலே கொஞ்சம்
    தீவிரமும் வீரமும் நிறைந்திருக்கும்
    வீட்டுக்குள் படுப்பவரும் எழுந்து கொண்டு
    விடிவுக்காய் குரல்கொடுக்க வந்து விட்டாள்
    நாட்டிலே தமிழ்ப் பஞ்சம் குறைந்து போகும்
    நான்கு புறத் திசை இருந்தும் தமிழ் முழங்கும்.

    எழுத்துக்கள் எப்பொழுதும் எங்கள் உள்ள
    எழுச்சிக்கு துணையாக நிற்க வேண்டும்!
    அழுபவர்கள் குரல்களை அடக்கி விட்டு
    ஆர்ப்பரித்து அவர் எழும்பச் செய்ய வேண்டும்!
    விழுந்து கிடப்பவரை மெல்ல மெல்ல
    வீரமுள்ள வீரர்களை மாற்ற வேண்டும்.
    பழுது பட்டும் போகாமல் தமிழை என்றும்
    பக்குவமாய் நாம் காத்து வளர்க்க வேண்டும்

    Share