‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பது திருமூலர் வாக்கு. அவர் வழியில் உடம்பைச் சிக்கென வளர்த்திருக்கும் இளைய தலைமுறை இதோ. 55 கிலோ எடைப்பிரிவுக்கான ஆணழகன் போட்டி.
40 வயதைக் கடந்தவர்களும் ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்ட முடியும்.
சாதனைக்கு வயது ஒரு தடையில்லை. 50 வயதைக் கடந்தவர்களும் ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்ட முடியும். கோப்பைகள் வெல்ல முடியும் என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள்.
சாதிக்க, உடல்நிலை ஒரு தடையில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியில் தங்கள் ஆற்றலைக் காட்டும் அடலேறுகளைப் பாருங்கள்.
ஆணழகன் போட்டி, சென்னையில் 2023 ஜூலை 9 அன்று நடைபெற்றது. இளையோர் (ஜூனியர்) பிரிவில் ஆஹா என ஆர்ப்பரித்து நின்ற அடலேறுகள், வீறு நடை இட்ட வேங்கைகள், கட்டுடல் காளையர்கள், நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நெஞ்சை அள்ளும் காட்சி இதோ. இளைய பாரதத்தினாய் வா வா வா! எதிரிலா வலத்தினாய் வா வா வா!
‘தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே’ எனக் கம்ப ராமாயணத்தில் ராமனைப் பாடுகிறார், கம்பர். இதோ இந்த இளம் சிங்கங்களின் வசீகர மேனியைக் காண்பவர்களும் பார்வையை விலக்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். செதுக்கிய சிலை போன்ற இவர்களின் கட்டுடலைக் காண்பவர்களும் சிலையாகி நிற்பார்கள். இதோ புதிய இந்தியா, பார்த்து மகிழுங்கள்.