Tag: இந்தியா

  • பாகிஸ்தான் மத்தியஸ்தம்: இந்தியாவின் தோல்வியா?

    பாகிஸ்தான் மத்தியஸ்தம்: இந்தியாவின் தோல்வியா?

    அண்ணாகண்ணன்

    அமெரிக்கா – இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் செய்தது, வியப்புக்கு உரியது; பாராட்டுக்கும் உரியதே. ஆனால், இதை இந்தியாவின் தோல்வி என்று சிலர் எழுதியதைப் பார்க்கிறேன். பாகிஸ்தானின் ஆக்கப்பூர்வமான, பொறுப்பான செயலைக் கண்டு இந்தியாவும் மகிழ்வே அடையும். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை மட்டுமே இந்தியா எதிர்க்கிறது. இதர முனைகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளே.

    இந்தியா எதிலாவது வெற்றி பெற்றால், அது பாகிஸ்தானின் தோல்வியாகக் கருதப்படுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சம வலிமை பெற்ற நாடுகளும் இல்லை. எனவே எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை.

    கிரிக்கெட்டிலும் இதர விளையாட்டுகளிலும் இதே போல், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் பரம வைரிகள் என்று வர்ணிக்கிறார்கள். விளையாட்டில் நாம் அவ்வாறு கருத வேண்டியதில்லை. கருதவும் கூடாது.

    பாகிஸ்தானைப் போல் இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்திருக்கக் கூடாது என்று சிலர் கேட்கலாம். இதே கேள்வியைச் சீனம், ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல நாடுகளையும் நோக்கிக் கேட்கலாம். இதில் சீனமும் ரஷ்யாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஹார்மஸ் நீரிணையைத் திறக்கும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை முறியடித்தன. இரானுக்கு அருகில் இருக்கும் வளைகுடா நாடுகளைப் பார்த்தும் கேட்கலாம். அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பதே இப்போதைக்குப் பாகிஸ்தானின் வலிமை. அமெரிக்கா சொல்வதைத்தான் பாக் செய்யும். இந்த மத்தியஸ்தம் கூட, அமெரிக்காவின் மறைமுக முன்னெடுப்பாக இருக்கலாம்.

    எனவே, இப்படி எல்லாம் ஏன் நடக்கவில்லை என்று பேசுவதை விட, நடந்ததைக் குறித்துப் பேசுவதே பொருத்தமானது. பாகிஸ்தான் பொறுப்புடன் நடப்பதை நாம் வரவேற்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். இது அரிதாகத்தான் நடக்கிறது.

    Share
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா

    தீதும் நன்றும் பிறர்தர வாரா

    அண்ணாகண்ணன்

    அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பலரும் சுமார் 50 லட்சம் செலவு செய்து, பல்வேறு அபாயகரமான வழிகளில் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்கள். கடன் வாங்கியும் பலர் அங்கே சென்றிருக்கிறார்கள். இவ்வளவு தொகை புரட்ட முடிந்த இவர்கள், இந்தியாவிலேயே எவ்வளவோ தொழில்கள் செய்திருக்கலாம். பானி பூரி, இட்லி கடை, பரோட்டா கடை, பிரியாணி கடை என்று சாலையோரங்களில் கடை போட்டு, மிகக் குறைவான முதலீட்டில் தொழில் செய்து இங்கே கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள். பேராசைப் பட்டு, குறுக்கு வழியில் சென்றால் என்ன நடக்கும் என்று இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். தீதும் நன்றும் பிறர்தர வாரா. நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு. அதற்குரிய விளைவுகளை ஏற்கத்தான் வேண்டும்.

    அமெரிக்கா இவர்களை நல்ல முறையில் திருப்பி அனுப்பவில்லை. மனிதாபிமானம் குறித்து எகிப்துக்கும் ஜோர்டானுக்கும் கூறும் அமெரிக்கா, அதே அடிப்படையில் தானும் நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இந்த மரியாதை தான் அளிக்க முடியும் என அவர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை, இவர்களுக்கு மட்டுமில்லை. இது போன்று அமெரிக்காவுக்குள் நுழைந்து, அமெரிக்க அரசை ஏமாற்றி வாழ்ந்துவிட முடியும் என நம்பி எதிர்காலத்தில் வரக்கூடியவர்களுக்கும் இதுவே பதில். இனியாவது இத்தகையோர் பாடம் கற்பார்களா என்பதே கேள்வி.

    இப்போது இந்திய அரசு, ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டும். வெவ்வேறு முதலீடுகளில் செய்யக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்து விரிவான விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். ஏற்கெனவே இதற்கென ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறை, சில பயிற்சிகளையும் அளிக்கிறது. இது தொடர்பான விளம்பரங்கள், நாளிதழ்களில் அடிக்கடி வருகின்றன. ஆனால், இதை மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் செய்ய வேண்டும். பயிற்சி அளிப்பதோடு, நம்பிக்கை அளிக்க வேண்டும். ஏற்கெனவே இவ்வாறு தொழில் செய்து முன்னேறியவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்து, விரிவாக அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். புதிய தொழில்முனைவோருக்காகத் தனிச் செயலி, இணையத்தளம், யூடியூப் அலைவரிசை, தொலைக்காட்சி ஆகியவற்றைத் தொடங்க வேண்டும். நல்ல திறமைசாலிகளை, சிறந்த பொருள்களை அரசே விளம்பரப்படுத்தலாம். இந்தப் பொருள் தேவையா? இந்தச் சேவை தேவையா? இவர்களை அணுகுங்கள் என வாடிக்கையாளருடன் இணைக்கலாம்.

    இந்தியச் சந்தையைக் குறிவைத்து, அயல்நாட்டு நிறுவனங்கன் பலவும் இங்கே வருகின்றன. ஆனால், இந்தியர்களோ வெளிநாட்டைத் தேடிச் செல்கிறார்கள். எனில், இந்தியாவின் மதிப்பை இந்தியர்கள் பலர் இன்னும் உணரவில்லை. அவர்கள் அதை உணரும்போது, இந்தச் சிக்கல் தீரும். இந்தியாவும் இதனால் வளம் பெறும்.

    #us #usa #america #india #indians #illegalimmigration

    Share
  • முற்றுகிறது மோதல் – கனடாவில் இந்தியர் நிலை என்ன?

    முற்றுகிறது மோதல் – கனடாவில் இந்தியர் நிலை என்ன?

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தியா – கனடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கிறது எனக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியப் பாராளுமன்றத்தில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தியத் தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் கனடா நாட்டுத் தூதரக அதிகாரியைத் திருப்பி அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக, கனடாவுக்கான விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

    இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? கனடாவில் இந்தியவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா? கனடாவுக்கு வர விரும்புவோர், வழக்கம் போல் விண்ணப்பிக்கலாமா? கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுமா?

    இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுமா?

    இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுபடி ஆகுமா? இவற்றைக் கொண்டு கனடாவில் வேலை செய்ய முடியுமா? மூவாயிரம் ரூபாயில் இந்தியாவிலிருந்தே கனடாவில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி? கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கனடாவில் சுயதொழில் தொடங்குவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா?

    கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா?

    கனடாவில் வெறுப்புக் குற்றச் செயல்களும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. எனவே இந்தியர்கள் கனடாவில் பயணிக்கும் போதும் படிக்கும் போதும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி என்ன? கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? கனடாவின் கள நிலவரம் என்ன? கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் உடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விழித்தெழுந்த இந்தியா

    விழித்தெழுந்த இந்தியா

    அண்ணாகண்ணன் இயற்றிய ‘விழித்தெழுந்த இந்தியா’ என்ற புதிய பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், நார்வே நாட்டில் வாழும் திருமதி வாசுகி ஜெயபாலன். இசை ஆசிரியராகப் பணியாற்றும் இவர், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களின் மனைவி. இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share