Tag: இலங்கை

  • சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    மதமாற்ற எதிர்ப்பு, பசுவதை தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன் இலங்கையில் சிவசேனை, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இவற்றை ஆதரிக்கும் பவுத்தர்களுடன் இணைந்து பயணிக்கிறது. திருவாசகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கையளித்துள்ளார். சிங்கள பவுத்தர்களுடன் நட்பு பேணுகிறார். சிங்களர்களும் முன்பு தமிழர்களாக இருந்தவர்களே. சிங்கள மொழியில் 70 சதம் தமிழ்ச் சொற்களே உள்ளன என்கிறார். சிங்கள மொழியை ஏன் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை என்ற சிந்தனை எழுகிறது. சமூக, சமய நல்லிணக்கம் சார்ந்த அவரது முன்னெடுப்புகள் குறித்து, சச்சிதானந்தன் அவர்களுடன் அர்த்தமுள்ள ஓர் உரையாடல் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பசுக்களைக் கொல்லாதே | சிவசேனையின் களப்பணிகள்

    பசுக்களைக் கொல்லாதே | சிவசேனையின் களப்பணிகள்

    ‘பசுவைத் தெய்வமாக மதிக்கின்றோம். இந்த மண்ணில் பசுக்களைக் கொல்லாதே. இந்த மண்ணின் மரபுகளை மதித்து இருப்பதானால் இரு, இல்லாவிட்டால் வெளியேறு’. இதுவே சச்சியின் குரல், சிவசேனையின் முழக்கம். யாழ்ப்பாணத்திலும் தமிழ் ஈழம் நெடுகிலும் நடைபெற்ற களப்பணிகள், போராட்டங்கள், எழுச்சிகள் குறித்து விவரிக்கிறார், மறவன்புலவு சச்சிதானந்தன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இலங்கை நெருக்கடிக்கு என்ன தீர்வு? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    இலங்கை நெருக்கடிக்கு என்ன தீர்வு? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    இலங்கையில் அபாய அளவுக்குக் கடன், பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு… எனக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களின் இன்னல்களோ பெருகி வருகின்றன. இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள்வது எப்படி? இதற்குத் தீர்வுதான் என்ன? மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இலங்கை வெடுக்குநாறிக் குன்றில் ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்

    இலங்கை வெடுக்குநாறிக் குன்றில் ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    சிவ சேனை

    அருள்மிகு உமையம்மை உடனாய ஆதிலிங்கேச்சரர் வெடுக்குநாறிக் குன்றில் (அது மலையன்று; அது குன்று) திருக்கோயில் சார்ந்த அருளாட்சி.

    வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே அங்கு அருளாட்சி.

    ஆதி என்றாலே பழமையானது தொன்மையானது.

    சைவத் திருக்கோயில் இருந்த இடங்களில் புத்தரும் சமணரும் வாழ்ந்த கதைகள் ஏராளம் ஏராளம்.

    திருநாவுக்கரசு நாயனார் வடதளி பழையாறைத் திருக்கோயிலில் வழிபடச் செல்கிறார். நீண்ட வரலாறு கொண்ட பழைய சிவன் கோயில். சமணர்கள் அக்கோயிலை தமதாக்கிப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

    அப்பர் பெருமானை வழிபட விட மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். சிவனை வழிபாடு செய்த பின்பே உண்பேன் என உண்ணாநோன்பு இருக்கிறார் அப்பர் பெருமான்.

    தமிழர் வரலாற்றில் உணவைத் தவிர்க்கும் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய வரலாற்று நாயகன் அப்பர் பெருமான்.

    வண்ணங் கண்டு நான்உம்மை
       வணங்கி யன்றிப் போகேனென்
    றெண்ண முடிக்கும் வாகீசர்
       இருந்தார் அமுது செய்யாதே
    அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
       கரசு தம்மைப் பணிவதற்குத்
    திண்ண மாக மன்னனுக்குக்
       கனவில் அருளிச் செய்கின்றார் தி12210296.

    அங்கு வந்த சோழ மன்னன் சமணர் பள்ளிகளையும் ஓராயிரம் சமணர்களையும் அழித்தான். திருக்கோயிலைத் திறந்தான். அப்பர் சிவனை வழிபட்டார்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, வடதளி பழையாறை நிகழ்ச்சி. 1,400 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி

    காலத்தால் தொன்மையான சைவத்துக்குப் பின்வந்த புத்தரும் சமணரும் சைவத் திருக்கோயில்களைப் பூட்டினர். அருகே சமணப் பள்ளிகளை, புத்த பல சாலைகளை அமைத்தனர்.

    அவ்வாறு சமணரும் புத்தரும் பள்ளிகள் அமைத்த இடங்களுள் ஒன்று வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்.

    சைவ மீள்எழுச்சிக் காலத்தில் ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் மீண்டும் சைவர்களின் வழிபாட்டுக்கு வந்தது.

    புத்தர் சமணர் இடையிட்டுப் பள்ளிகள் அமைந்திருந்தாலும் சைவ சமயப் பூசைகள்வழிபாடுகள் தொடர்ந்தன. இடையீடின்றி இன்றுவரை சைவர்களின் பூசைக்குரிய திருக்கோயிலாக அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் தொடர்கிறது.

    வெடுக்குநாறிக் குன்றுச் சிவன் கோயில் பூசைகள் கடந்த 2 வாரத்துக்கு முன் காவல்துறையால் நிறுத்தப்படும் வரை பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன.

    வெடுக்குநாறிக் குன்றுக்கு வழிபடச் செல்லும் சைவ அடியவர்கள் அடையும் துன்பத்தைக் கண்ட நெடுங்கேணி காவல்துறைப் பொறுப்பதிகாரி ஈராண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றவர், வழிபாட்டில் ஈடுபட்டார். அடியார்கள் குன்றில் ஏறிச் செல்வதற்கு ஏணி ஒன்றைப் பொருத்திக் கொடுத்தார்.

    இந்த ஆண்டு நெடுங்கேணிக்கு மாற்றலாகி வந்து பணிபுரியும் காவல்துறைப் பொறுப்பதிகாரி வெடுக்குநாறிக் குன்றில் சைவசமயப் பூசைகள் நடைபெறுவதைத் தடுக்க முயன்றார்.

    பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்ற நிகழ்ச்சி எனச் சைவ சமயப் பூசைகளைச் சுட்டிக்காட்டிய நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

    சைவ சமயப் பூசைகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதிகளின் கீழ் அமையாது என நீதிமன்றம் அவரது விண்ணப்பத்தை ஏற்கவில்லை.

    எனவே பூசைகள் தொடர்ந்தன. பத்து நாள் திருவிழாக்கள் நடந்தன. இறுதி நாளன்று பொங்கல் அன்னதானம் என ஆயிரக்கணக்கான சைவ மக்கள் கூடி வழிபட்டனர்.

    முதல் நாள் திருவிழா நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். பூசகருடன் இணைந்து வழிப்பட்டேன். பூசை முறைகளில் பங்கு பற்றினேன்.

    உடல் சிலிர்த்தேன். மெய் விதிர்விதிர்த்தேன். கை தலை மேல் வைத்தேன். கண்ணீர் ததும்பியது. உள்ளம் வெதும்பியது. தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருப்புராணம் என மனம் உருகிப் போற்றிகள் பாடினேன்.

    26. 9. 2020 விழா இறுதி நாள்.

    அதற்குப் பின் நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார்

    1 தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்தான இடம் வெடுக்குநாறிக் குன்று.
    2 பொங்கல் நிகழ்ச்சிக்காகத் தீ மூட்டினர், தொல்லியல் நிலைகளுக்குக் கேடு விளைவித்தனர்.
    3 உணவு சமைப்பதற்காக பகிர்வதற்காக ஐந்து கொட்டகைகளை இடைக்காலமாக அமைத்தனர். அதனால் அங்குள்ள தொல்லியல் தடயங்கள் குலைந்தன.
    4 திருவிழாவுக்காக ஆட்சி குழுவினர் துண்டு அறிக்கை வெளியிட்டனர், அடியார்களைத் திரட்டினர். தொல்லியல் தடயங்களுக்கு அடியார்களின் கூட்டம் சேதங்களை விளைத்தது.
    5 புத்து சமயத்தவரும் இந்த இடத்தில் வழிபாடு செய்தவர்கள் என்பதற்கான சான்று இருப்பதால் சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைந்தது.
    6 தொல்லியல் சட்டத்தின் 24வது அத்தியாயத்தின் 15ஆவது பிரிவிலும் 31 32 34 பிரிவவுகளிலும் மேற்காணும் 5 செயல்களும் குற்றமாக உள்ளதால் அறங்காவலர் இருவர் பூசகர் ஒருவர் ஆகிய மூவரையும் பிணையில் விட முடியாத சிறையில் அடைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி கேட்டார்.

    தொடக்க நாளன்று வழக்கின் விண்ணப்பம் முழுமையற்றதால் குற்றச் சாட்டை ஏற்க மறுத்த நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார்.

    தொல்லியல் ஆணையர் சான்றிதழான ஆவணத்தை நீதிமன்றத்தில் கொடுக்காததால் இரண்டாவது தவணையிலும் (23.10.2020) நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார். இரண்டாவது தவணைக்கு நானும் வவுனியா சென்று நீதிமன்றத்தில் பார்வையாளராக இருந்தேன்.

    மூன்றாவது தவணை நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது.

    வெடுக்குநாறிக் குன்று பூசைக்குரிய இடம் என்பதை அடுத்த தவணையில் நிலைநாட்டுவதே வழக்குரைஞர்களின் குறிக்கோள் இலக்கு. ஆட்சிக் குழுவினருக்கும் பூசகருக்கும் சைவ சமயத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் கூறி அவர்களைத் தளையிட வேண்டாம் என வழக்குரைஞர் கூறுவர்.

    Share
  • இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    பிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன்

    சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று  இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர், பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.

    இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

    கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து, போராட்டங்கள் நடத்தி, மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் பல்வேறு பிரதேச சபைகளைத் தடுத்து. முயன்று வந்தது சிவசேனை அமைப்பு.

    இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.

    இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

    ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார்.

    மலையகச் சைவத் தமிழ் மக்கள்
    மேற்கு மாகாண வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த இராசபட்சவின் பசு வதைத் தடை முயற்சியைப் பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள்.

    பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும்
    மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த இராசபட்சர் முயல்வார். இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

    Share
  • காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

    காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை, இலங்கை

    இந்திய நடுவண் அரசின் கப்பல் துறை அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய, காரைக்காலில் இருந்து காங்கேயன்துறைக்குச் சைவ வழிபாட்டு பயணிகளுக்காகக் கப்பல் விடுவதாகப் புதுச்சேரி முதலமைச்சர், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வழி புதுச்சேரிச் சட்டசபையில் அறிவித்தார்.

    புதுச்சேரி முதலமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் 145ஆவது பந்தி

    இன்று நண்பகல் இலங்கைச் சைவர்களின் சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்துச் செய்தியைக் கூறினேன், நன்றியைக் கூறினேன்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையிலும் இந்தியாவிலும் இக் கப்பல் சேவையைத் தொடங்குமாறு ஈர் அரசுகளையும் வலியுறுத்திக் கடிதங்கள் கொடுத்து வருகிறேன்

    இலங்கை அரசு, வடமாகாண மேதகு ஆளுநர் றெசினால்டு கூரே காலத்திலேயே இக் கப்பல் சேவைக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

    இலங்கைக் கடற்படைத் தளபதி பல முறை என்னை அழைத்தார். கப்பல் சேவை எப்பொழுது தொடங்குகிறது நாங்கள் உதவுகிறோம் என ஒவ்வொரு முறையும் கூறியுள்ளார்.

    அவ்வாறு அக்காலத்தில் குடியரசுத் தலைவரின் முதன்மைச் செயலாளராக இருந்த திரு. ஒஸ்டின் பெர்ணாந்து, இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்துடனும் இந்தியத் தூதருடனும் நேராகப் பேசி, இக் கப்பல் சேவையை விரைவாகத் தொடங்குங்கள் என ஆணையிட்டிருந்தார்.

    இதையடுத்து நான் சென்னைக்கும் தில்லிக்கும் பல முறைகள் சென்றேன்.

    சென்னையில் என் வேண்டுகோளை ஏற்ற தமிழக அரசின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக அரசின் ஒப்புதலைத் தில்லிக்கு வழங்கியிருந்தார்.

    அக்காலத்தில் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. இல கணேசன் அவர்கள், என்னை வெளிநாட்டு அமைச்சுக்கும் கப்பல் சேவை அமைச்சுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் ஒப்புதல் வழங்கக் காரணமாயிருந்தார்.

    அவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசகராக இருந்த திரு. எஸ் குருமூர்த்தி அவர்கள், பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல்களைப் பெற உதவினார்.

    சென்னையிலும் தில்லியிலும் உள்ள இந்து சமய அமைப்புகள், சார்பாளர்கள் யாவரும் இக்கருத்தை இந்திய அரசுக்கு எடுத்துக்கூறி வலியுறுத்தினார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர், புதுச்சேரிக்கு வந்தார். காரைக்கால் துறைமுகத்தைப் பார்வையிட்டார். கப்பல் சேவை தொடங்குவதற்கான வழிகாட்டல்களைக் கொடுத்திருந்தார்.

    இந்த வாரம் புதுச்சேரி சட்டசபையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு அமைய காரைக்காலிலிருந்து காங்கேயன்துறைக்குக் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான உயர்மட்டக் குழுவை அமைத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

    Share
  • தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்

    தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்

    கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன்

    முன்னணி மலையக மக்கள் தலைவரும் என் நண்பருமான மாண்புமிகு ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தனது 56ஆவது பிறந்த தினத்துக்கு மூன்றே மூன்று நாட்களின் முன்னம் எதிர்பாராத மரணத்தைத் தழுவிய சேதி, அதிர்ச்சி அளிக்கிறது. ஆழ்ந்த கவலையுடன் அஞ்சலி செய்கிறேன்,

    நண்பருக்குக் கண்ணீரும் அஞ்சலிகளும்

    ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களதும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களதும் கனவான மலையக மக்களுக்குச் சம்பள உயர்வு, வீடு, நிலம், கிராமிய வாழ்வு என்கிற அடிப்படை உரிமைகள் கிட்ட, மலையகத் தமிழர் கட்சிகள் அனைத்தும் ஓர் ஐக்கிய முன்னணியின்கீழ் ஒன்றுபட வேண்டும், அதுவே நாம் அமரர் ஆறுமுகம் தொண்டமானுக்கு செய்யக்கூடிய அஞ்சலியாகும்.

    1972இல் தந்தை செல்வநாயகத்துடன் சேர்ந்து தமிழர் கூட்டமைப்பை உருவாக்கிய மலையக மக்கள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களை நான் முதன்முதலில் நோர்வேயில் சந்தித்தேன். ஒஸ்லோவில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பான ஆய்வரங்கம் ஒன்றில் அமரரைச் சந்தித்த அன்றே அரசியல் கருத்து முரண்பாடுகளைத் தாண்டிய நல்லுறவு நமக்குள் உருவானது. அவர் என்மீது விமர்சன ரீதியான அன்பு வைத்திருந்தார். ஒஸ்லோவில் தனிப்பட்ட அளவளாவலின்போது மலையகக் கட்சித் தலைமைகள் மலையக மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வென்றெடுக்குமுகமாக ஐக்கிய முன்னணிக்குள் வரவேண்டும் என்கிற என் கருத்தை அக்கறையுடன் செவிமடுத்தார்.

    கடைசி தடவையாக நான் இலங்கை வந்தபோது ரேணுகா ஹோட்டல் உணவகத்தில் தற்செயலாக அமரரைச் சந்திக்க நேர்ந்தது. மகிழ்ச்சியுடன் என்னை அழைத்தார். தன் பணிகளை மறந்து என்னுடன் நெடுநேரம் அன்பாகப் பேசினார். அலுவலகம் வந்து தன்னைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். தவறிவிட்டேன். அதன்பின் நாம் சந்தித்தது குறைவு என்றாலும் நமக்குள் பரஸ்பரம் விமர்சனரீயான நட்பு வளர்ந்து வந்தது. அமரர் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நினைவை போற்றுவோம்.

    இலங்கை அரசு வாய்ச்சவடால் அஞ்சலிகளை விடுத்து, அமரர் தொண்டமானின் நீண்டகாலக் கோரிக்கையான மலையக மக்களுக்கு 1000 சம்பளம், நிலம், வீடு, கிராமம் என்கிற கனவை நனவாக்க முன்வர வேண்டும். கொரோனா சிக்கலால், அவரது ஈமைக் கிரியைகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஈழத் தமிழ்க் கலைஞர்கள் சார்பாக ஆழ்ந்த கவலையுடன் என் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

    Share
  • மறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    தலைவர், சிவசேனை, இலங்கை

    உண்ணா நோன்பிருக்கிறேன்

    போர்த்துக்கேயரின் அடிவருடிகள், ஊர்காவற்றுறையில் ஒளிந்திருந்த காக்கை வன்னியன் வாரிசுகள், யாழ்ப்பாண ஊடகங்களின் அச்சு இதழான வலம்புரி இதழ் அலுவலகத்துக்கு இன்று 20.02.2020 வியாழன் மாலை வந்தார்கள். 
    அடித்து நொறுக்க முயன்றார்கள்
    இடித்து அழிக்க முயன்றார்கள்
    விட்டிருந்தால் தீயிட்டுக் கொளுத்தி இருப்பார்கள்.

    ஊர்காவற்றுறையில் சைவத் தெருப்பெயர்களைக் கிறித்தவப் பெயர்களாக மாற்ற முனைகிறார்கள் எனச் செய்தி வெளியிட்டதற்காகத் தாக்கினார்கள்

    ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசு பெருமானின் வரிகளை மறந்து, வன்முறையில் ஈடுபடுகின்ற போர்த்துக்கேயரின் அடிவருடிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    வலம்புரி இதழ் மீது கைவைத்தால் சைவத் தமிழ் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

    வன்முறையைத் கண்டித்து
    ஊடக சுதந்திரத்தை ஆதரித்து
    சைவத் தமிழ் பண்புகளைக் காக்க
    21.2.2020 வெள்ளி காலை தொடக்கம், யாழ்ப்பாணம் கண்டி வீதி சுண்டிக்குளி  ஆயர் இல்லத்துக்கு முன்பாக அடையாள உண்ணா நோன்பிருக்கிறேன்.

    Share
  • அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்

    அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவசேனை
    இலங்கை தீவில் இனிமையான சிவபூமியில் மண்ணின் மரபுகளை காக்கக் காலவரையற்ற உண்ணா நோன்பு கைக்கொள்ளும் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியமையைப் பாராட்டுகிறேன்.
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்களின் நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றிய இலங்கை அரசைப் பாராட்டுகிறேன்.
    மேதகு குடியரசுத் தலைவரின் பணியை எளிதாக்கிக் கொப்பளிக்கும் உணர்ச்சிகளுக்கு அணை கட்டினார்கள். மேதகு ஆளுநர்களாக இருந்த திரு அலி திரு இசுபுல்லர் இருவரும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையாகத் தங்கள் பதவிகளை விட்டுக் கொடுத்ததைப் பாராட்டுகிறேன்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் எஞ்சிய கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் மக்களைத் திசைதிருப்பிச் செல்வமும் செழிப்பும் மிக்க நாடாக இலங்கையை மாற்ற இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் அன்பும் அருளும் அறனும் நிலைக்க வேண்டுகிறேன்.
    =================================================================================
    01.06.2019 அன்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் வெளியிட்ட முந்தைய அறிக்கை
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அவரைக் காப்பாற்றுக.
    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவசேனை கோரிக்கை
    இலங்கை சிவபூமி. திருமூலர் அன்றே கூறினார். புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள் புத்த விகாரைகளில் சிவனுக்கும் இடமுண்டு சைவக் கடவுளருக்கும் இடம் உண்டு.
    400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைகுள் வலிந்து புகுந்த கிருத்தவ மதம் சைவர்களையும் புத்தர்களையும் ஏளனம் செய்தது சைவக் கோயில்களும் புத்த விகாரங்களும் சாத்தானின் இருப்பிடங்கள் என வலிந்து கூறினர். பீரங்கி முனையில் துப்பாக்கி முனையில் வாள் முனையில் சைவர்களையும் புத்தர்களையும் கிறித்தவர்கள் ஆக்கினர்.
    இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரோடு புகுந்த முகமதியர்கள் தொடக்கத்தில் இந்த மண்ணின் மரபுகளை மதித்து உள் புகுந்தனர். படிப்படியாக மண்ணின் மரபுகளை இழித்துப் பேச தொடங்கினர் அண்மைக்காலங்களில் மிதித்து நடக்க முற்படுகின்றனர்.
    சிவ பூமியில் இருந்த காளி கோயிலை அகற்றினேன் அந்த இடத்தில் முகமதியர் வழிபாட்டிடம் கட்டினேன் மசூதி கட்டினேன் அதற்காக அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன் என்ற பொருள்பட இன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் இசுபுல்லர் கூறிய சொற்கள் அவர் இலங்கை அரசில் எந்தப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவர் என்பதையே எடுத்துக் காட்டின.
    முசலிப் பிரிவில் சிவபூமிக்குள்ளே அடாத்தாகக் காடுகளை வெட்டி ஆயிரத்துக்கும் அதிகமான முகமதியரைக் குடியேற்றியவர் இரிசாத்தர் பதியுதீன்.
    முல்லைத்தீவில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தி அங்கு முகமதியரைக் குடியேற்ற இரிசாத்தர் பதியுதீன் முனைந்த பொழுது வடமாகாண சபை தலையிட்டுத் தடுத்தது.
    சிவபூமியில் மாட்டிறைச்சிக்கடை கூடாது எனச் சைவர்கள் களம் இறங்கிய பொழுது உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானங்கள் இயற்றிய பொழுது உள்ளூராட்சித் தலைவர்களை மிரட்டியவர் இரிசாத்தர் பதியுதீன்.
    இசுபுல்லரும் இரிசாத்தர் பதியுதீனும் அரசுப் பதவிகளில் இருப்பதால் சைவர்களுக்கு வேண்டாததைச் செய்கிறார்கள் என்ற முறைப்பாடு வடக்கே கிழக்கே மலையகத்திலே நெடுங் காலமாக உண்டு.
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழர்கள் ஒன்றிணைந்து இசுபுல்லர் பதவி விலக வேண்டும் என ஒரு நாள் முழுவதும் கடையடைப்பு நிகழ்த்தியதை மறக்கமுடியாது.
    கண்டியில் தலதா மாளிகையில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் காலவரையற்ற உண்ணா நோன்பு இருக்கிறார்.
    சைவத் தமிழர்களாகிய நாங்கள் எதை இந்நாள்வரை கோரிக்கையாக வைத்திருந்தோமோ அதையே புத்தத் தேசியவாதியான வணக்கத்துக்குரிய தேரரும் வைத்திருக்கிறார் களத்தில் இறங்கி போராடுகிறார்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தன தேரர் பெருமானின் கோரிக்கைகளில் நியாயம் உண்டு. நீதி உண்டு.
    இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கைத்தீவின் மண்ணின் மரபுகள் பேணுவோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
    வணக்கத்துக்குரிய தேரரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுத்தால் இலங்கையைச் சிவபூமியாக கொண்டு வாழ்கின்ற சைவத் தமிழர்கள் இலங்கை அரசைப் பாராட்டுவார்கள்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் அவர்களும் அவரது அருமைத் தொண்டர்களும் புத்த தேசியத்தை முன்னெடுத்து மண்ணின் மரபைப் பேண விழைகிறார்கள்.
    இந்த வரலாற்று முயற்சியில் பத்த சிங்கள மக்களுக்கு உறுதுணையாக இந்த மண்ணின் மரபுகளைப் பாதுகாத்துப் பேணிக் காக்க விரும்புகின்ற சைவத் தமிழர்கள் இருப்பார்கள்.
    Share
  • அமைதிக்காக …அமைதியாக!!

    சத்தியமணி

    இலங்கைக்கு இன்று ? இதுபோல் எத்தனையோ அன்று ?
    வலக்கைக்குப் புரியும் இடக்கைக்குத் தெரியும் ?
    எதுவரை போகும் ? எப்போது முடியும் ?
    எத்துணை வருடங்கள்? இன்னும் காக்கவேணும் ?

    ஆலயங்களில் வெடி. ஆன்மீகத்தில் பழி.
    ஆண்டவர்மேல் கேலி. ஆறாத எகத்தாளம்.
    யாரும் கண்டிக்காது எவரையும் மன்னிக்காது
    வன்மம் வளர்கிறது….. வஞ்சகம் விளைகிறது.

    கேட்டவர்க்குக் கலக்கம். தப்பித்தவர்க்கு நடுக்கம்.
    பார்த்தவர்க்குப் பரிதாபம் ….வார்த்தவர்க்கு அனுதாபம்
    காயப்பட்டோர்க்கோ மயக்கம், இறந்தவர்க்கோ இழப்பு
    அன்புள்ளே அதிர்ச்சி……அகிம்சைக்குத் தளர்ச்சி

    வெறிகளாலும் வெறுப்புகளாலும்
    காழ்ப்புணர்வுகளாலும் கலவரங்களாலும்
    தன்னலங்களாலும் கொடூர வன்மங்களினாலும்
    மனிதன் தான் மாய்கிறான்.
    மண் தான் புண்ணாகிறது
    எத்தனை புதைகுழிகள்
    அத்தனை விழுப்புண்கள்.

    யாருக்கோ இழப்பில்லை…நமக்குத்தான்
    யாருக்கோ துக்கமில்லை…நமக்குத்தான்
    யாருக்கோ வலியில்லை..நமக்குத்தான்
    யாருக்கோ பழியில்லை..நமக்குத்தான்
    யாருக்கோ பாவமில்லை..நமக்குத்தான்
    என்று புரியுமோ அன்று தான் விடியும்
    அமைதிக்காக … அமைதியாக!!!

    Share
  • இலங்கையில் வன்முறையின் கோரத் தாண்டவம் – Ugly face of terror in Srilanka

    (இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பையும் இதற்குக் காரணமானவர்களையும் வல்லமை கனத்த இதயத்துடன் கண்டிக்கிறது. – அண்ணாகண்ணன், முதன்மை ஆசிரியர், வல்லமை)


    St.Sebastian's Church,Katuwapitiya,Negombo,Sri Lanka

    (St.Sebastian’s Church,Katuwapitiya,Negombo,Sri Lanka)

    சிவசேனை, மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆய நகரங்களில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களைச் சைவ சமயத்தோர் ஏற்கார், கண்டிப்பர், புறந்தள்ளுவர்.

    வழிபாட்டிடங்களில் அன்பும் அறனும் அருளும் பெருக்கும் நாளில், பெரிய வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்த குருத்தோலை ஞாயிறன்று 21.04.2019 அன்று எம் அன்புக்கும் பாசத்துக்கும் மதிப்புக்கும் உரிய கிறித்தவ மக்கள் மனமுருகி வழிபாட்டில் ஈடுபட்டிருக்கையில் ஒன்றும் அறியா அப்பாவிகளை நூற்றுக் கணக்கில் காயமாக்கியும் பலரின் உயிர்களைப் பறித்தும் நிகழ்த்திய தாக்குதல்களைச் சைவ மக்கள் ஒரு பொழுதும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

    நெஞ்சார்ந்த இரங்கல்கள். துயரத்தில் பங்கு கொள்கிறோம். காயமுற்றோர் விரைந்து நலமுறச் சிவபெருமான் அருள்வாராக. வழிபடுகிறோம், வேண்டுகிறோம். இரங்குகிறோம்.

    Siva Senai, Maravanpulavu K. Sachithananthan

    Violent attacks in Colombo, Negombo and Batticaloa are not acceptable to the Saivaites of Sri Lanka. We condemn these attacks outright.

    We Saiva Tamils denounce any attack in any form in places of worship. Our Christian brothers to whom we have high respect, regard and unbounded love as fellow citizens of this land. The Easter Friday followed by resurrection Sunday 21.04.2019 are days for prayer worship and meditation. To attack on such pious and holy days to harm hundreds of innocent worshippers and to take the lives of many is condemnable. Saiva Tamil world does not accept such disastrous barbarous acts. 

    We Saivites express out heart felt condolences to the bereaved families. We pray for the early recovery of those injured. We pray Lord Shiva to shower his holiest blessings towards relief at a time of your hour of deep grief.

    Share