Tag: நிதி

  • மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?

    மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?

    அண்ணாகண்ணன்

    மகளிர் உரிமைத் தொகையாக, 1.31 கோடிப் பேருக்குத் தலா 5 ஆயிரம் என்ற அளவில் ரூ.6550 கோடியைத் தமிழக அரசு விடுவித்துள்ளது. இது பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என நம்புகிறார்கள். இதே போன்று, மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ரூ.1310 கோடியை அரசு விடுவித்து வருகிறது.

    பெண்கள் அன்றாடச் செலவுகளுக்கு இதைச் செலவிடாமல், வேறு வழிகளில் செலவிட்டால் அவர்கள் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டு. இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யலாம்? எப்படிச் செலவிடலாம்? இதோ என் யோசனைகள்.

    தமிழ்நாடு மகளிர் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கி, இந்த 1.31 கோடிப் பேரும் அதில் சேர வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    மகளிர் அனைவரின் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில் உள்ளிட்ட விவரங்களைத் தொகுக்க வேண்டும். இவர்களைத் தொழில் அடிப்படையில், ஊர் அடிப்படையில், கல்வித் தகுதி / திறன் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் ஒருவர் வழிநடத்த வேண்டும்.

    இந்தக் குழுக்கள் மாதந்தோறும் சந்தித்துத் தங்கள் தேவைகள், சிக்கல்கள், சவால்கள் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாட வேண்டும். இந்தச் சிக்கல்களுக்கு அந்தக் குழுவிலேயே தீர்வு கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால், இதர குழுக்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஒருவேளை, தங்கள் அமைப்பிற்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், வெளியிலிருந்து ஆலோசனைகளைப் பெறலாம்.

    இந்த அமைப்பு, தொழில்முனைவுப் பிரிவு ஒன்றையும் உருவாக்க வேண்டும். அதை ஆதரிக்க, நிதி முதலீட்டுப் பிரிவையும் தொடங்க வேண்டும். தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட பெண்கள் அதில் சேர வேண்டும். தாங்கள் எந்தத் தொழில் தொடங்க விரும்புகிறோம், அதில் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறது, எவ்வளவு முதலீடு தேவை, எப்போது திருப்பிச் செலுத்த முடியும் என எடுத்துரைக்க வேண்டும் (Investment Pitch).

    நிதி முதலீட்டுப் பிரிவில், வாய்ப்புள்ள, ஆர்வமுள்ள பெண்கள், தங்கள் சேமிப்பையும் உரிமைத் தொகையையும் முதலீடு செய்ய வேண்டும். இவர்களின் பிரதிநிதிகள், உரிய தொழில்முனைவுத் திட்டங்களில் ஆராய்ந்து முதலீடு செய்வார்கள். இதன் மூலம், அந்தத் தொழில்களில் இவர்கள் முதலீட்டாளர்களாக, பங்குதாரர்களாக மாறுவார்கள். இது ஒரே நேரத்தில் தொழில்முனைவோர், முதலீட்டாளர் ஆகிய இருவருக்கும் பயன் அளிக்கும்.

    இதற்குத் துணையாக, வேலை தேடும் பெண்களுக்காகச் செயல் மகளிர் என்ற அமைப்பினை உருவாக்க வேண்டும். தொழில்முனைவோர் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை, விநியோகஸ்தர்களை இந்தச் செயல் மகளிர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

    தொழில்முனைவோர் உருவாக்கும் பொருள்களை, சேவைகளை இதர மகளிருக்குத் தள்ளுபடி விலையில் வழங்கலாம். இது விற்பனை வலையமைப்பாக உருவெடுக்கும். பொருள்களை உருவாக்குவது, விற்பது, விநியோகிப்பது, கொண்டு சேர்ப்பது ஆகிய அனைத்திலும் பெண்களை ஈடுபடுத்தலாம். இதன் மூலம் இந்த நிதி, பல்கிப் பெருகும். முதலீட்டாளர் அனைவருக்கும் லாபம் கிடைக்கும். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

    எதிர்காலத்தில் இந்தப் பெண்கள் தங்களுக்குள் கூடிப் பேசி, உள்ளாட்சித் தேர்தல் முதல் பாராளுமன்றத் தேர்தல் வரை போட்டியிடவும் செய்யலாம். தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என வலியுறுத்தலாம்.

    தங்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மாற்றுச் சக்தியாகப் பெண்கள் உருவெடுக்கலாம். அதிகாரத்தை வென்றெடுக்கலாம். தங்களுக்குத் தேவையான தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கல்வி, அரசியல் உள்ளிட்ட அனைத்தையும் தாங்களே தீர்மானிக்கலாம். அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடிக்கலாம்.

    தமிழ்நாட்டு மகளிர், இதைக் குறித்துச் சிந்திக்க வேண்டுகிறேன்.

    Share
  • 2023 நிதிநிலை எப்படி இருக்கும்?

    2023 நிதிநிலை எப்படி இருக்கும்?

    2023 நிதிநிலை எப்படி இருக்கும்? எந்த எந்தத் துறைகள் முன்னேற்றம் காணும்? முதலீட்டாளர்களுக்கு இந்த ஆண்டு எத்தகைய லாபத்தைத் தரும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உங்கள் குழந்தைக்கான 6 பணப் பாடங்கள்

    உங்கள் குழந்தைக்கான 6 பணப் பாடங்கள்

    உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய, பணம் தொடர்பான ஆறு பாடங்கள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் குறிப்புகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா?

    குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா?

    குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா? வங்கிப் பரிவர்த்தனைகளில் சிறுவர்கள் நேரடியாக ஈடுபடலாமா? அவர்கள் நிதியறிவு பெறத் தொடங்குவது எப்படி? எந்த வயதில்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு

    பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு

    சகலகலாவல்லியாகச் சகல துறைகளிலும் வாகை சூடுவோர் பெண்கள். நிதி விஷயங்களிலும் அவர்கள் போதிய கவனம் செலுத்தினால், பெரும் வல்லமை பெற முடியும். பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு குறித்து, அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிருங்கள். மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ரஷ்யா – உக்ரேன் போர்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

    ரஷ்யா – உக்ரேன் போர்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

    உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஒரு நேர்காணல். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா?

    தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா? யாருக்கு இது ஏற்றது? எப்படி முதலீடு செய்யலாம்? எவ்வளவு லாபம் கிடைக்கும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

    சரியான முதலீடுகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள, சந்தையில் நிபுணத்துவம் வாய்ந்த நிதி மேலாளரும் நிதி ஆலோசகரும் தேவை. ஆனால், இந்த நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பங்குகளை வாங்கலாமா? விற்கலாமா?

    பங்குகளை வாங்கலாமா? விற்கலாமா?

    சந்தை உச்சத்தில் இருக்கும் இன்றைய நிலையில், பங்குகளை வாங்கலாமா? விற்கலாமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.

    உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிலையான வைப்புநிதி – எதில்? எப்படி? | ராமகிருஷ்ணன் நாயக்

    நிலையான வைப்புநிதி – எதில்? எப்படி? | ராமகிருஷ்ணன் நாயக்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ராமகிருஷ்ணன் நாயக், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர். 26 ஆண்டுகளாக நிதித் துறையில் பணியாற்றி வருகிறார். தட்சின் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் இயக்குநர். நிலையான வைப்புநிதி குறித்த பல்வேறு ஐயங்களுக்கு இந்தப் பதிவில் பதில் அளித்திருக்கிறார். சிறு முதலீட்டாளர்கள் அவசியம் பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். நிதி, முதலீடு, சேமிப்பு, காப்பீடு தொடர்பான உங்கள் கேள்விகளை, பின்னூட்டம் வழியே எங்களுக்கு அனுப்புங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓய்வு பெற்றவர்கள் எதில் முதலீடு செய்யலாம்? | ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் – 2

    ஓய்வு பெற்றவர்கள் எதில் முதலீடு செய்யலாம்? | ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் – 2

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    வேறு எவரைக் காட்டிலும், முதியவர்கள், ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியதாரர்கள், எதிர்காலத்தைக் குறித்துப் பெரிதாகத் திட்டமிடாதவர்கள் ஆகியோரின் நிலை, மேலும் சிக்கலாகியிருக்கிறது. வட்டி விகிதம் குறைந்ததால், அதை மலைபோல் நம்பியிருந்தவர்கள், கையைப் பிசைந்து நிற்கிறார்கள். விரைவில் ஓய்வு பெறப் போகிறவர்களுக்கும் இந்தக் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யலாம்? இதோ வழிகாட்டுகிறார், ஸ்ரீராம் நாராயணன். பார்த்துப் பயன் பெறுங்கள். நண்பர்களுக்கும் பெரியவர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share