Tag: பங்குனி உத்திரம்

  • வடிவேலவா கந்தா | நாகி நாராயணன் பாடல்

    வடிவேலவா கந்தா | நாகி நாராயணன் பாடல்

    முருகனுக்கு உகந்த பங்குனி உத்திரத் திருநாளில், ‘அலைபாயுதே கண்ணா’ மெட்டில் ‘வடிவேலவா கந்தா’ என்ற பாடலை இயற்றிப் பாடியுள்ளார் நாகி நாராயணன். திறமைக்கு வயது ஒரு தடையில்லை. 68 வயதிலும் இவர் கணீர் எனப் பாடுவதைக் கேளுங்கள். ஊக்கம் இருந்தால் உங்களால் முடியும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஐயப்ப சுவாமிக்குப் பால்குடம் அபிஷேகம்

    ஐயப்ப சுவாமிக்குப் பால்குடம் அபிஷேகம்

    பங்குனி உத்திர நாள்தான், ஸ்ரீ ஐயப்ப சுவாமி அவதரித்த தினம். இந்த அவதார நாளில் சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்குப் பக்தர்கள் திரளாகப் பால்குடம் எடுத்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த எழுச்சிமிகு விழாவிலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

    ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

    காஞ்சி மாவட்டம், மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மஹாரண்யத்தில் ஸ்ரீ கல்யாண சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பிலவ வருடப் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண மகோத்ஸவத்தில் மாலை மாற்றும் வைபவம் இதோ. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சித் தேரோட்டம், ஒரு நிமிடத்தில்

    காஞ்சித் தேரோட்டம், ஒரு நிமிடத்தில்

    கோலாகலமாக நடைபெற்ற காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் தேரோட்டம், இதோ ஒரு நிமிடச் சுருக்கக் காட்சி. கச்சி ஏகம்பன் உலாவைக் கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர்

    வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர்

    ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர், காஞ்சி மாநகர வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வரும் ஒய்யாரக் காட்சி. பங்குனி உத்திரத் திருவிழாவின் 6ஆம் நாள் உற்சவம். இதில் வாத்தியக் கலைஞர்களின் விறுவிறு மேளதாளம், பார்ப்போரை நிமிரச் செய்யும். நிமிர்ந்தோரை அசையச் செய்யும். அசைந்தோரை ஆடச் செய்யும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாண வேடிக்கையில் ஒரு புதுமை

    வாண வேடிக்கையில் ஒரு புதுமை

    காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வாண வேடிக்கை இதோ. நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை நினைவூட்டும் வகையில் ஐந்து வாணங்கள் விண்ணில் பாய்ந்து மத்தாப்பாய்ச் சொரிவது இனிய புதுமை. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருத்தேர் விழா

    ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருத்தேர் விழா

    காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. 24 அடி உயர தேர் பிரம்மாண்டத் தேரில் அம்பாள் ஏலவார்குழலியும் ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆடல், பாடலுடன், அதிர வைக்கும் வாத்திய இசையுடன் காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    Image courtesy: Wikimedia.org

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share