Tag: பாபநாசம் சிவன்

  • நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி

    நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி’ என்ற புகழ்பெற்ற பாடலை, தம் வீட்டுக் கொலுவில் திருமதி ரஞ்சனி சதீஷ் பாடுகிறார். நீலாயதாட்சியிடம் நேரில் பேசுவது போன்ற இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீ கணேஷா சரணம்

    பாபநாசம் சிவனின் ‘ஸ்ரீ கணேஷா சரணம்

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு – 4

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘ஸ்ரீ கணேஷா சரணம்’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். நான்மறை போற்றும் பிரணவ ரூபனை வணங்கி, அருள்பெற வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூலாதார மூர்த்தி | பாபநாசம் சிவன்

    மூலாதார மூர்த்தி | பாபநாசம் சிவன்

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு – 3

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘மூலாதார மூர்த்தி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். துன்பம் துடைத்துப் பேரின்பம் தரும் வரதனை வணங்கிப் போற்றுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண்டவன் அன்பே சக்தி தரும் | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

    ஆண்டவன் அன்பே சக்தி தரும் | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘ஆண்டவன் அன்பே சக்தி தரும்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். ஆண்டவன் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருப்பதால், எல்லா மதங்களை, மார்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்டுச் சக்தி பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘சிவகாமசுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள்’ என்ற பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். அன்னையின் அருள் பெறுங்கள்.

    பல்லவி

    சிவகாம சுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள் (சிவகாம)

    அனுபல்லவி

    பவ ரோகம் அற வேறு மருந்தேது பழ வினைகள் தொடராமல் உனை பஜிக்க (சிவகாம)

    சரணம்

    கேளாயோ என் முறைகள் உயர் சாம கீத வினோதினி போதுமுன் சோதனை
    தாளேனே அகதி நானே ராமதாசன் பணியும் அபிராமி வாமி (சிவகாம)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நம்பிக் கெட்டவர் எவர் ஐயா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.

    பல்லவி

    நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
    நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)

    அனுபல்லவி

    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்)

    சரணம்

    ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
    ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பிக்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share