Tag: பாரதி

  • யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

    யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

    அண்ணாகண்ணன்

    யாரிசைக்க வருகுவதோ? – ஒலி யாழினின்று வருகுவதோ? என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 2022ஆம் ஆண்டு வெளியான ஹே சினாமிகா படத்தில் கோவிந்த் வசந்தா இசையில், மதன் கார்க்கி வரிகளில், பாம்பே ஜெயஸ்ரீ குரலில் வெளிவந்துள்ளது. மிக இனிய இசை, நெகிழச் செய்யும் வரிகள்.

    பாரதியாரின் எங்கிருந்து வருகுவதோ – ஒலி யாவர் செய்குவதோ? என்ற பாடலின் தாக்கம், இந்தப் பாடல் முழுவதும் வெளிப்படுகிறது.

    குன்றினின்றும் வருகுவதோ எனப் பாரதி கேட்பதை, மாமலையின் மீதிருந்தோ? என மதன் கார்க்கி கேட்கிறார். காற்றைக் கொண்டு தருகுவதோ எனப் பாரதி கேட்பதை, காற்றிலேறி வருகுவதோ? என மதன் கார்க்கி கேட்கிறார். யமுனை அலை பற்றிப் பாரதி கேட்க, கடல் அலை பற்றி மதன் கார்க்கி கேட்கிறார். ஆயினும் நாணறுந்த இன்பமெலாம் நானருந்த வருகுவதோ? என்ற மதன் கார்க்கியின் வரியை நான் மிகவும் ரசித்தேன்.

    இதன் பல்லவியில் ஒலி எங்கிருந்து வருகிறது என்று கேட்ட பிறகு, மாமலையின் மீதிருந்தோ? – வெள்ளி மாகமதன் மீதிருந்தோ? எனக் கேட்கிறார். வெள்ளி மாகம் என்பது எதைக் குறிக்கிறது? மாகம் என்பதற்கு மேலிடம், ஆகாயம், சுவர்க்கம், திக்கு, மேகம் எனச் சில பொருள்கள் அகராதியில் உள்ளன. மேகம் எனக் குறிப்பிட விரும்பினால் நேரடியாக வெள்ளி மேகமதன் மீதிருந்தா என்றே கேட்டிருக்கலாம். மாகம் என முற்றிலும் புதிய சொல் தேவையில்லை. வெள்ளி என்பதுடன் இணைத்துப் பார்த்தால், வெள்ளி ஆகாயம் என்பதே பொருளமைதியுடன் உள்ளது. இதைத்தான் மதன் கார்க்கி சொல்ல விரும்புகிறாரா?

    Share
  • பாரதியின் உலகப் பார்வை | வீ.சு.இராமலிங்கம் உரை

    பாரதியின் உலகப் பார்வை | வீ.சு.இராமலிங்கம் உரை

    மகாகவி பாரதியின் உலகப் பார்வை என்ற தலைப்பில் தஞ்சை வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம், திருச்சி வானொலியில் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாரதி வேண்டிய சுதந்திர நாள் | ஷைலஜா பாடல்

    பாரதி வேண்டிய சுதந்திர நாள் | ஷைலஜா பாடல்

    கவிதாயினி ஷைலஜா இயற்றிய ‘பாரதி வேண்டிய சுதந்திர நாள்’ என்ற பாடலைத் திருமதி நாகி, திருமதி பானு ஆகியோர், இனிய குரலெடுத்துப் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அச்சமில்லை! அச்சமில்லை!

    அச்சமில்லை! அச்சமில்லை!

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே – மகாகவி பாரதியுடன் இணைந்து எங்கள் மகன் ஹரி நாராயணனின் வீறுமிகு வீர முழக்கம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அன்புள்ள மணிமொழி

    பாரதி

                                                                                      31-03-2014

                                                                            4, அக்ரகாரத்தெரு,

                                                                          சென்னை.

    அன்புள்ள மணிமொழி,

    இன்று ஒவ்வொரு வீட்டிலும் கணவன்,மனைவி வீட்டில் சண்டை போடுவதை நினைத்து தொலைக்காட்சியில் பார்த்து நாம் எத்தனை முறை மகிழ்ந்து சிரித்திருப்போம். அப்படியெல்லாம்கூட ஈகோ வருமா! என்ன! என்றுகூட நீ கேட்டாயே?

    நான் சொன்னேன்! பணம் காசு இன்று வரும் நாளை போகும்! ஆனால் மாறாத அன்புள்ளம்கொண்ட இல்லத்தரசி வாய்ப்பதுதான் ரொம்ப கஷ்டம்.

    இப்படியெல்லாம் எத்தனைமுறை பேசியிருப்போம்.

    ஆனால் ஒரு சிறு விஷயத்திற்காக என்னிடம் ஏனம்மா இவ்வளவு கோபப்பட்டாய்??நான் செய்தது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இருவரும் வழக்கம்போல கோவிலில் உட்கார்ந்து பேசுவோமே?அதை விட்டுவிட்டு இதென்ன புதுப்பழக்கம்…….நீ மட்டும் கோவிலுக்குத் தனியாக என்னைவிட்டுச் சென்றுவிட்டாய்? எங்கு சென்றாலும் உனது தலையலங்காரம் நான்தான் செய்துவிடுவேன். எனக்கு முடி இல்லை என்றாலும் ஆண்டவன்கிட்டபோய் கேட்டுக்கறதுதானேன்னு சிரிக்கச்சிரிக்கப்பேசுவாயே! ஒருநாளாய் எனக்கு ஒருயுகமாய் இருப்பது உனக்குத் தோணலையா!

    நான் என்ன பிரமாத தப்பு செய்துட்டேன்னு என்கிட்ட கோபிச்சுக்கிட்டு போய்ட்ட….சும்மா ஒருநாள் நான் சமைச்சுக்காட்டுறேன்னு சொன்னேன்.அதுக்கே இப்பிடிப் பண்றியே……நான் செத்ததுக்குப்பிறகு செஞ்சுக்கோங்கன்னு அலுவலகசுற்றுலான்னு எதுத்த தெருக்கோயிலுக்குக் கிளம்பிட்டியே………..என்னுயிர் கண்ணம்மா என பாரதி பாட்டைப் பாடத்தோணுதும்மா……..உன்புடவை இங்கே படுக்கையில் காற்றில் அசையறப்ப நீ கூப்பிடறமாதிரி இருக்குடா…எத்தனைவருட தாம்பத்தியம்டா உனக்கும்,எனக்கும்….50 வருஷம் அடுத்த வருஷம் வந்தா…….உனக்கு உடம்புக்கு வந்தா என்னை யாருடா பாத்துப்பான்னு நீ பையன்கிட்டபேசுனதை ரகசியமா நான் கேட்டேன்.அதான் சிம்பிளா சமைச்சுப்பாத்தேன்.கடவுள்கிட்ட கேட்டேண்டா…..எப்பவும்போல ஒண்ணா ரெண்டுபேரையும் எடுத்துக்கச்சொல்லி….எல்லாத்துக்கும் அந்த பாக்கியம் கிடைக்குமாடா…..யோசிச்சுப்பாரேண்டா…..நம்ம பிள்ளைங்க தங்கந்தாண்டா……ஆனா எனக்கு நீதானே எல்லாம்…..இத்தோட கடைசி…கடவுள்கிட்ட இரண்டுபேரும் ஒண்ணா செத்துப்போய்டணும்னு வேண்டிக்கோ……..சீக்கிரமா பத்திரமா வந்துடு..பிஸ்கட்மட்டும் இருக்கு…நீ வந்து பண்ணிக்கொடு…பசி தாங்குவேன்.தெருவுல ஒரு பிச்சைக்காரிக்கு நான் செய்தவற்றையெல்லாம் கொடுத்துவிட்டேன்.கோபம் தீர்ந்ததா!

    இப்படிக்கு உனது நினைவால் வாடும் அன்புக்கணவனாகிய தோழன்,

    பின்குறிப்பு-

    இப்படியெல்லாம் பொய்சொல்லி உன்னை வரச்சொல்லி விளையாடலை. நிசமாகவே இருக்கமுடியலை. பக்கத்துல ஒளிஞ்சு கடிதம் எழுதுறத நீ பாத்ததை சன்னல் பக்கத்துல நின்னு பாத்துட்டேன்.எப்ப கோவில்ல இருந்து வந்தே. உன்னாலயும் என்னை விட்டு இருக்க முடியல. கதவைத் திறந்துட்டு வந்துடு.

                                                                         வீரா

    பெறுநர்

    மணிமொழி,

    எதிர்த்த தெரு பார்த்தசாரதிகோவில்,

    சென்னை.

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு,

       31-03-2014

                                                                        43,அக்ரகாரத்தெரு,

       பாரதி                                                                                                                                     தஞ்சை

    அன்புள்ள மணிமொழிக்கு,

    மணிமணியான கையெழுத்தில் உன் தமிழ்மொழி கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது பார்! நீயும், நானும் எழுதிய கடிதங்களை நம் ஊர்த்தோட்டத்து மாமர நிழலில் கட்டிய ஊஞ்சலில் ஆடியபடியே, படித்துச் சிரித்த நாட்கள் என் கண்ணிற்குள் நிற்கிறது.

    நீயும், நானும் கிணத்தடியருகில் விளையாடிய மாக்கல் செப்பு எனது பெயர்த்தி வைத்து விளையாடுகிறாள். காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுற்றுகிறது பார்! உனக்கும், எனக்கும் 13 வயதில் திருமணம்.

     14 வயதில் குழந்தை. நல்லவேளை! இன்னமும் சீக்கிரம் பிறக்கவில்லை. இல்லையெனில் பருவ வயதை அடையும்முன்னே திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள். நீ மாதவையா நாவல்களை முன்பொருமுறை எனக்குப் படித்துக்காட்டினாயே! ஞாபகம் இருக்கிறதா?

    என்ன கொடூரமான விதவைக்கோலம் இல்லையா!ப்ச்…இன்று நினைத்தாலும் பெண்ணின் நிலையை நினைத்து வருந்துகிறேன்.

    நீ எழுதிய வரிகளை ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் பார்த்தேன்.

    உனது வீட்டின் அருகில் இன்னமும் இத்தகைய கொடுமை நடக்கிறதா?

    குழந்தை இல்லையெனில் மருத்துவரிடம் செல்வதுதான் முறை. அதைவிட்டு சோழிகளைக்குலுக்கி சோசியம் பார்ப்பதும், ஆணைவிட்டு திருநீறு மந்திரித்து தலையில்போட்டு கைகளைத் தடவி விடுவதும்,சர்ச்சில் மண்டியிடச்சொல்வதும் படிக்கவே அருவெறுப்பாக இருக்கிறது. அந்தப்பெண் படித்திருக்கிறதா? படித்திருந்தால் எங்காவது வேலைக்குச்சென்று பிழைத்துக்கொள்ளச்சொல். யாரிடம் குறை உள்ளது என்பதைத் திருமூலர் சொல்லவில்லையா?

    கணவன்,மனைவிக்குள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மனவேறுபாட்டை உருவாக்காதா?

    உசிலம்பட்டி மக்கள் என்றுதான் மாறப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

    பெண்கள் வேலைக்குப்போவது நல்லது. ஆனால், நீ உன்னுடைய அமெரிக்கப் பயணம் குறித்து எழுதியிருந்தாய். இங்கும் பல கணவர்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் வரதட்சணை தரும் அமுதசுரபிகளாய் மணிமேகலைகள் தினமும் உலா வருகின்றனர். நோயுற்று வாழ்ந்த காலத்திலும் பணிக்குச் செல்லும் பெண்ணிற்குத் தேவையான உணவுகளைத் தயாரிப்பதில் ஆண்வர்க்கம் உதவுவதில்லை. தமது குழந்தைகளுக்காக அவர்கள் கேட்கும் ஆடம்பரப்பொருட்களுக்காகத் தன்னை மாய்த்து உருக்கி வாழும் மெழுகுவர்த்திகளாகப் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண் உதவினால் மனைவிக்குதாசன். பெண் படித்திருக்கிறாள் என்ற அகம்பாவம். கொண்டுவரும் பணம்வரும்தேதி மட்டும் அவள் அந்தநேரத்து வீட்டுவிளக்கு இளவரசி. பணி முடிந்து வரும்நேரம் சற்று லேட்டானாலும் இன்னமும் பழைய பல்லவிதான்.பொண்ணுன்னா விளக்கேத்தறதுக்கு முன்னாடி வந்தாத்தானே நன்னாருக்கும்.

    இந்தப்பெண்களும் தனது பணிக்குத் தகுந்தாற்போல உடை உடுத்துவது கிடையாது. வெளிதேசத்தில் இருப்பதுபோல அரைகுறையாய் உடை உடுத்துகின்றனர். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பானா ரோட்டில்! திரும்பிய இடமெல்லாம் டாஸ்மாக்! ஊத்திக்கிட்டவனுக்கு நிதானந் தெரியுமா?இவ நம்ம அம்மாபோல,இவ நம்ம சகோதரிபோலன்னு!

    பஸ்ஸூல அண்ணான்னு பொண்ணு சொன்னா பிராமணாத்து அண்ணாவான்னு கேக்கறதுகள் காலேஜ் படிக்கும் கழிசடைகள். இதெல்லாம் என்ன செய்யப்போகுதுகளோ!

    இதுல பொண்ணுங்க நகை வேற! கழுத்து நிறைய அம்பிகைக்கு சார்த்துறமாதிரி அள்ளிப்போட்டுக்கறது! பெண்ணுக்கு எதிரி முதல்ல நகையும், அரைகுறை ஆடையும்தான்.

    எனது பக்கத்துவீட்டில் ஒரு பெண் இருக்கிறாள். எங்கோஒரு பெரிய பணியில் இருக்கிறாள். இருக்கிற இடம் தெரியாது. வழிய வழிய தலை.ஒருக்ளிப்போ,ஆடம்பர உடையோ கிடையாது. அப்புறம்தான் ஒருநாள் டிவிலயும்,யுட்யுப்லயும் பாத்தேன்.என்னமா பேசுது அந்தப்பெண்.

    அன்னைக்கு முழுதும் அந்தப்பெண்ணைப்பத்தித்தான் எங்காத்துல ஓயாத பேச்சு.எங்காத்துக்காரர் சொல்றார்.இப்ப புரிஞ்சுதா! பொண்ணுன்னா ஆடை, அலங்காரத்துல இல்லன்னு…..எனக்கு அந்த நிமிஷமே ஃப்ளாட்டை விட்டு வெளியேறி அந்த பொண்ணை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு தோணிச்சு…..அவா வீட்டு காலிங்பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தேன். அவளே வந்தாள் நைட்டியோட…கையில பக்கோடா பிசைந்த மாவோட…என்னம்மா இது…நீ பேசுன பேச்சுல மீடியாவே கேட்டுக்கிட்டிருக்கே…நீ கேக்கலையா……….எனது கணவர் கேட்டுக்கிட்டு இருக்கார் மாமி….அவருக்கு பிடிக்குமேன்னு வெங்காய பக்கோடா செஞ்சேன்.அவருக்கு வெளில இருக்கறதெல்லாம் உடம்புக்கு ஆகாதுன்னா…..ஒரு நிமிஷம் நான் மௌனமானேன்.என்ன விஷயமாக வந்தீர்கள்?உள்ளே வாருங்கள்,பக்கோடா சாப்பிட்டுப் பாருங்கள் என்றாள்.

    உனது திறமையைப் பாராட்டி எங்காத்துக்காரர் உன்னைப் பாராட்டணும்னு சொல்லி காத்துண்டிருக்கார் குழந்தை.அவருக்கு வயது 80க்கும் மேலே ஆறது..ஒரு நிமிஷம் வர முடியுமா! என்றேன். அந்த நேரத்தில் எனக்கு வள்ளுவர் கூறிய இல்வாழ்க்கைதான் ஞாபகத்திற்கு வந்தது.

    வீடென்னவோ 400 சதுர அடிதான்.அதில் அறிவை அந்தப்பொண்ணு எப்படி வளர்த்தான்னு தெரியல! புடவைய மாத்திட்டு ஒருவழியா வீட்டிற்கு வந்து… எங்க ரெண்டுபேர்கிட்டயும் ஆசி வாங்கிட்டா! புடவை வச்சுக்கொடுத்தேன்.

    மறுத்துட்டா! கணவன்கிட்டயும்,பெத்தவங்க,கூடப்பிறந்தவங்ககிட்டயும்தான் வாங்கிக்கட்டறதுன்னு பழக்கம்னு  பழம்பஞ்சாங்கம் பேசிட்டா!

    சரி! அவள் விருப்பம்னு விட்டுட்டேன். மறுநாள் ஷாப்பிங்மால்ல பாத்துப்பேசினா! எப்படி இப்படி இருக்க முடிகிறது என்றேன். எனது குறிக்கோள் ஒன்றுதான் எனது கண்ணில் தெரியுது! பாக்கறதுக்கு என் கணவர் சைலண்டா இருக்கறாருன்னு தோணும். இப்ப இருக்கற பொண்ணுங்க மாதிரி எடுத்ததுக்கெல்லாம் டைவோர்சா பண்ணமுடியும். வேலைக்குப் போற பொண்ணுன்னாலே அப்பிடித்தான் முத்திரை குத்திடுவாங்க! வெளியிலயும் போகவிடமாட்டாங்க. அதான் சமையலறையில எங்க சாம்ராஜ்யம்தான். அப்புறம் டைவோர்சாவது! மண்ணாவது! முடிஞ்சா நான் செத்தேன்னா அவருக்குத் தனியா பண்ணிச் சாப்பிடத்தெரிஞ்சுக்கணும்னு கத்தும் கொடுத்திருக்கேன். அவா வீட்ல தெரிஞ்சா கத்துவா! இவர் அதல்லாம் சொல்ல மாட்டார். இதுதான் வாழுற வாழ்க்கையின் அடிப்படை ரகசியம். எடுத்ததுக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு அம்மாவிடம் குறை சொல்றது இரண்டு பேருக்குமே வீக். என்ன மாமி நான் சொன்னது சரிதானே! என கன்னத்தில் குழி விழச் சிரித்தாள்.ஆனாலும், அவள் உள்மனதில் என்னவோஒரு சோகத்தின் சாயல் இருப்பதை அவள் கண்கள் காட்டியது. அவள் பெயர் வாணி. பத்திரிகையில் நிறைய எழுதியிருக்கிறாள்.இப்போதான் வந்திருக்கிறாள். அவள் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதை நான் கண்டுபிடிக்கிறேனா பார்! எனது அம்மா ஒளித்து வைத்த லட்டு டப்பாவையே கண்டுபிடிச்சுடுவியேன்னு! நீ சிரிக்கும் சத்தம் இங்குவரை எனக்குக்கேட்கிறது. நான் நேற்று ஒரு கதை படித்தேன். அதில் நண்பரில் ஒருவர் தினமும் மற்றவர் வீட்டிற்குப் போய்விடுவாராம். திடீரென்று அவர் நண்பர் இறந்து விட்டார்.இருப்பினும் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் அவர் சொன்னாராம். எப்போதும்போல அந்த ஈசிசேரை எடுத்துப்போடுங்க…கடைசிவரை எனது நண்பன் இருப்பதுபோல சேரில்வந்து உட்கார்ந்து பார்த்துச்செல்கிறேன் என்றாராம்.

    அதைப்படித்தபின் எனக்கு உன் நினைவாகவே உள்ளது. நீ எப்போது வருவாய்? வருவதைக் கடிதம் எழுது. இந்தக்காலத்துக்குழந்தைகளுக்கெல்லாம் கடிதமே எழுதத்தெரியறதுல்ல…எல்லாம் மெயில், மெசேஞ்தான்.

     உனக்குப் பிடித்த தேன்குழலும்,மைசூர்பாகும் செஞ்சு வச்சுருக்கேன். சாப்பிடத்தான் அருகில் நீ இல்லை. நீ தண்ணீர் ஊற்றி வளர்த்த மாமரத்து நிழலில்எத்தனை பிஞ்சுகள் உனக்காக காத்திருக்கின்றன தெரியுமா! மணிமொழி எங்கே?எங்கே? எனப்பூக்கள் ஏங்கிக் கிடக்கின்றன. உனது ஃபோட்டோவின் அருகில் பலகாரப் பித்தளைத் தூக்குடனும்,மாம்பிஞ்சு சாப்பிட காரமா கேப்பியே உரல்ல இடிச்ச உப்பு மிக்ஸ்டு மிளகாய்த்தூளுடனும் காத்திருக்கும் உனது அருமை தோழி.

    பின்குறிப்பு-

    வழக்கம்போல எனது ஒற்றுப்பிழைகளையெல்லாம் திருத்தி வாசிக்கவும். நமது தமிழாசிரியர்(இலட்சுமணன்) ஒற்றுப்பிழை நீக்கும் வகுப்பு எடுக்கும்போது தூங்கிவிட்டேன். நீயும் கற்றுத்தரவில்லை.

     வெண்ணிலா

     பெறுநர்

    மணிமொழி,

    7, காந்தி தெரு,

    உசிலம்பட்டி.

    Share
  • தனியொருவனுக்கு உணவில்லையெனில்!

     

    பாரதி

    11 மணி வெயிலின் சூடு காலைத்தாக்க, ‘உச்‘ என்ற சப்தத்துடன் அலுத்துக்கொண்டார் காமராஜ்.

     “தாத்தா! 17டி பஸ் போயிடுச்சா?“

    “சாதா பஸ் போச்சுன்னு சொன்னாங்க! நானும் அதுக்குத்தான் நிக்கறேன்!“

     “என்ன! கொடியைத் தலைகீழாகப் பின் பண்ணியிருக்கே?“

    “அதுவா! ப்ச்! அப்பா பின் பண்ணச் சொன்னாரு. சரியா நான் பின் பண்ணலையா? நல்லவேளை! சொன்னீங்க! இல்லைன்னா என் ஃப்ரெண்ட்ஸ் சிரிச்சுருப்பாங்க!“

    “ஸ்கூல்ல கொடி ஏத்திட்டு திரும்பறியா!“

    “இல்ல தாத்தா! எங்க ஸ்கூல்ல எல்லாரையும் கூப்பிட மாட்டாங்க! “………………………..“

    “என் ஃப்ரெண்ட் இருக்கற தெருல இன்னைக்கு இண்டிபென்டன்ஸ் டே செலிப்ரேஷன். அங்க இருக்கற ஒரு அஸோஸியேஷன் மூலமா ஒரு ப்ரோக்ராம்“.

    காமராஜிக்கு தன் பையிலிருக்கும் ஸ்வீட்டை எடுத்து அந்தச் சிறுவனிடம் கொடுக்கும் ஆவல் மனசுக்குள் எழுந்தது. இருந்தாலும், பஸ் ஸ்டாப்பில் நின்று சிறுவனிடம் கொடுப்பதும் பேசுவதும் சரியாயிருக்காது என்றெண்ணி பஸ் வருகிறதா? எனப் பார்த்தார் காமராஜ். பழ வண்டிக்காரனிடம் வாங்கிய பழங்களும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைத்த மில்க் ஸ்வீட் பையும் கையைக் கனக்கச் செய்தன.

    பிளாட்ஃபார்ம் நிறைய முளைத்த தள்ளுவண்டிக்கடைகள் மனிதர்களை நடுரோட்டில் நடக்கச் செய்ததைக் கவனித்தபடி நின்றிருந்தார்.

    சரேலென இடிக்கும்படி தன் பக்கத்தில் வந்து நின்ற காரை எரிச்சலுடன் பார்த்தார் காமராஜ்.

    “என்ன பஸ்ஸுக்கா காமராஜ்! பாத்து ரொம்ப நாளாச்சே! நெறைய சேஞ்சஸ் உங்கிட்ட எனக்குத் தெரியுதே!“ குளிர்பதன வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசுக் கார் கண்ணாடியை இறக்கியபடி, கதவைத் திறந்தபடி வந்த நேருவை உற்றுப் பார்த்தார் காமராஜ்.

    “நீ சக்கரைப் பொங்கல் எடுத்துட்டுப் போறியா?“

    “எதுக்கு?“ கையை ஆதுரத்துடன் தடவியபடி, மறந்துடு.

    “மறக்கக்கூடியதா நேரு! அந்தக்கால இன்டிபெண்டன்ஸ்டே செலிப்ரேஷன்“

    “சரி! அதெல்லாம் அந்தக்காலம்! இன்னைக்கு என்ன இந்தப்பக்கம்? வீடு இங்க வாங்கிட்டு வந்துட்டாலும் காளி கோயிலுக்குப் பழமும், ஸ்வீட்டும் அப்பப்ப பண்டிகைன்னா எடுத்துண்டு போவேன். இன்னைக்குன்னு பாத்து டிரைவர் வரலை. பேரன் டிவில ஏதோ சினிமான்னு டிரைவ் பண்ண வர மாட்டேன்னு சொல்லிட்டான். ஒண்டிக்கட்டை! அவ போனதுக்கப்புறம் நான் டிரைவ் பண்றதில்லை!“

    “அதான் பஸ்ல போயிடலாம்னு வந்தேன். செருப்பு போட மறந்துட்டேன்.“

    “உன் போலீஸ் டூயூட்டிக்கு இன்னைக்கு லீவா?“

    “வேலை எங்க என்னை விடும்? நானா தான் லீவு போட்டிருக்கேன். பேத்தி பிறந்திருக்கா எனக்கு! நாலு நாளா பாக்கப் போகலை! அவ்வளவு பிசி! இன்னைக்கும் போகலைன்னா அவ்வளவு நல்லாயிருக்காதுன்னு கிளம்பினேன். வழியில பழவண்டிக்காரனைப் பார்த்தேன். இவர் அப்பா அந்தக்காலத்து சுதந்திரப் போராட்ட வீரர். ரொம்ப நாளா இவருக்கு நான் ஒரு ரெகுலர் கஸ்டமர். எனக்குன்னா ரெண்டு பழம் கூடப் போட்டுத் தருவார்.

     எங்கோ ‘ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!‘ பாட்டின் ஒலியை ரசித்தபடி இருந்த பையனை வினோதமாகப் பார்த்தார் காமராஜ்.

    “என்ன தாத்தா பாக்கறீங்க! பஸ் வர்ற வழியாத் தெரியல?“ “இந்த சாங் எங்க தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்குக்கூட ரொம்பப் பிடிக்கும்“.

    “மொபைல்ல ஃபோன் பண்ணி அப்பாவை வரச்சொல்லி வண்டில போலாம்ல. என்கூட கார்ல வேணும்னா வர்றியா?“

    என்னிடம் மொபைல் கிடையாது. நாட் அலவ்ட் ஃபார் சில்ட்ரன்னு அப்பா சொல்லிட்டார்.

    “நோ தாங்ஸ் போலீஸ் தாத்தா!. தகுதிக்கு மீறி ஆசைப்படறது தப்புன்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார்“.

    “இன்னைக்குக் கார்ல போனா நாளைக்கும் அதே சுகம் கேட்கும்னு நினைக்கறியா“ நேரு கேட்டது சிறுவன் காதுக்குச் சென்றதோ இல்லையோ! அதையும் மீறிய பலத்த அடி விழும் ஓசை கேட்டது.

    “விடு! விடு! ஏம்பா அடிக்கற?“ எனக் கேட்டார் காமராஜ்.

    “பின்ன என்ன சார்! நானும் எம் பொஞ்சாதியும் கஷ்டப்பட்டு பழத்தை அடுக்கி வைச்சுட்டு உக்காந்துருக்கோம். நைசா லபக்குன்னு ஒரு ஆப்பிள் பழத்தை எடுக்குறான்“.

    “பசிக்குதுன்னு எடுத்தேன். திருடலை! நாளைக்குக் காசு கொடுத்துடுடலாம்னு நினைச்சேன். சின்ன பழந்தானே, அண்ணே! அதுக்குள்ள….“

    “ஒறவு மொறை சொல்ற லட்சணத்தைப் பாருங்க பிச்சைக்காரப்பய!“ என்னவோ கூடப்பிறந்த பொறப்பு மாதிரி!“

    “கிழிஞ்ச சட்டை போட்டிருக்கேன்னு தானே பிச்சைக்காரப்பயன்னு சொல்ற!“

    “ஐ யம் பி.எஸ்.ஸி  மேத்ஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிராஜீவேட் தெரியுமா?“

    “எல்லாந் தெரியுண்டா?“ இங்க வளந்தவந் தானே!

    17டி பஸ் வந்து நின்றும் யாரும் ஏறவில்லை.

    “நீ கிராஜீவேட்டாயிருந்தாலும் திருடித் திங்கறது தப்பில்லையா?“

    “போலீஸ்ல பிடிச்சிக் குடுக்கணும் இவனை! பத்து ரூபாய் கொடுத்து ஒத்த பழம் வாங்க வக்கில்லை“.எனக் கூறிய காதில் மாட்டலுடன் கூடிய ஜிமிக்கி அணிந்த பழவண்டிக்காரனின் மனைவியை வெறிக்கப் பார்த்தார் நேரு.

    ரோட்டைத் தாண்டிய எதிர்ப்புறம் சாக்கடையை ஒட்டிய இடத்தில் கிழிசல் சட்டையைப் பார்த்தபடி 30 வயதுக்குரிய உடல் வளர்ச்சி எதுவுமின்றி சக்கர நாற்காலியில் துணியால் இறுகக்கட்டி வாயில் எச்சில் ஒழுகிய மனித ஜந்துவின் கண்ணில் கண்ணீர்.

     “காமராஜ்! நீ வண்டில ஏறிக்க! தம்பி நீயும் வா! “உன் பேரென்ன?“

    “கல்கி! தாத்தா“.

    இன்னைக்கு ஒரு நாளைக்கு உன் அப்பா கொள்கைய விட்டு வர்றதாலே ஒண்ணும் ஆயிடாது. காமராஜின் பழப்பை அவருக்கு இப்போது முன்னைவிடக் கனமாகத் தெரிந்தது.

    “தாத்தா! இந்தப்பழங்கள் யாருக்கு?“ என்றான் கல்கி.

    ஏதோ புரிந்தது போல்… கடவுளுக்குப்பா! என்றார் காமராஜ்.

    “நான் ஒண்ணு எடுத்துக்கட்டுமா?“

    “நான் இந்தப்பழ வண்டில வாங்கலைப்பா. நீ தாராளமா எடுத்துக்க!“

    ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, கிழிந்த சட்டை மாட்டியவனைக் கண்களால் தேடினான். அசோக் பில்லர் தூணை வெறித்தபடி அம்மன் கோயில் சுவரில் ஒண்டிக்கிடந்தவனிடம், “இந்தாண்ணா! வாங்கிக்கோ!“ எனப் பெரியவரிடம் வாங்கிய பழத்தைக் கொடுத்தான் கல்கி.

    “நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க! இது எங்க அப்பாவோட விசிட்டிங் கார்டு. இதுல எங்க வீட்டு அட்ரஸ் இருக்கு. எனக்கு மேக்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா? நான் மேக்ஸ்ல ரொம்ப வீக்!“ என்ற கல்கியை உணர்ச்சி மேலீட்டால் கட்டித் தழுவிக் கொண்டான் கிழிசல் சட்டைக்காரன்.

    “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்“ என்ற வரிகள் ஏனோ நேருவுக்கு அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது. “காமராஜ்! அந்தக் கல்கியைக் கூப்பிடு! போலாம். அந்தப் பையனுக்கு யார் அந்தப் பேர் வைச்சான்னு கேட்கணும்.

    “நீ எங்கே பழம் வாங்கினே? சொல்! அங்கேயே காரை நிறுத்தி வாங்கிடலாம்“.

    “ஆமாம்! ஆமாம்! என்பது போல் காரின் முன்பக்க பளிங்குப் பொம்மை காந்தி பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

    Share