மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.
பல்லவி
நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)
அனுபல்லவி
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்)
சரணம்
ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பிக்)
மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா, கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள்.
பல்லவி
சம்போ மஹாதேவ சரணம் ஸ்ரீ காள ஹஸ்தீச
அனுபல்லவி
அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
அடி முடி காணா நெடுமலை வாணா
அகில புவன பரிபால சகல வரகுண விஸாலா (சம்போ)
சரணம்
அறியேன், சின்னஞ் சிறியேன் உனக்கனந்தம் தண்டனிட்டேன்
அபராதங்கள் முழுதும் க்ஷமித்தருள்வாய் கை கும்பிட்டேன்
பரிவாய் உன் சொல் கனவில் கண்டு பிழைக்கும் வழி தொட்டேன்
பேதையாகிலும் உன் பாதம் பணியும் என் பெருகிய
பவவினை தீரும், குரு பரனே கருணைக் கண்பாரும் (சம்போ)