Blog

  • ஏவினார் கலியார் | பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    ஏவினார் கலியார் | பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை நீலமேகம் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்
    எங்ஙனே வாழுமாறு? ஐவர்
    கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
    குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
    பாவினார் இன்சொல் பன்மலர் கொண்டு
    உன் பாதமே பரவி நான் பணிந்து என்
    நாவினால் வந்துன் திருவடி அடைந்தேன்
    நைமிசாரணியத்துள் எந்தாய்

    ஊனிடைச் சுவர்வைத்து என்புதூண் நாட்டி
    உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
    தானுடைக் குரம்பைப் பிரியும்போது உன்தன்
    சரணமே சரணம் என்றிருந்தேன்
    தேனுடைக் கமலத் திருவினுக்கரசே!
    திரைகொள் மாநெடுங்கடல் கிடந்தாய்
    நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்
    நைமிசாரணியத்துள் எந்தாய்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை இராமதாச இராமானுஜ தாசர் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தஞ்சை விவசாயிகள் மாநாட்டில் அண்ணாவின் பேருரை

    தஞ்சை விவசாயிகள் மாநாட்டில் அண்ணாவின் பேருரை

    1967இல் தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய பேருரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    பெரிய திருமொழி | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை பாலாஜி இராமானுஜ தாசன் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(424)

    குறளின் கதிர்களாய்…(424)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(424)

    நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை.

    -திருக்குறள் – 469 (தெரிந்து செயல்வகை)

    புதுக் கவிதையில்…

    அவரவர் தகுதியை
    ஆராய்ந்தறிந்து
    அவரவர் தகுதிக்கேற்றவாறு
    செயல்படாதபோது,
    அரசியலார்
    நல்லனவற்றைச் செய்வதிலும்
    தவறு ஏற்பட்டுவிடும்…!

    குறும்பாவில்…

    அவரவர் இயல்பினை நன்கறிந்து
    அவர்களுக்குப் பொருந்துமாறு செய்யாவிடில் அரசியலார்
    நன்மைசெய்வதிலும் தவறு ஏற்படும்…!

    மரபுக் கவிதையில்…

    அவரவ ரியல்பை ஆய்ந்தறிந்தே
    அவர்க்கது பொருந்தும் வகையதனைத்
    தவறிடா தறிந்தே செய்திடவே
    தவறிடின் தவறு வந்திடுமே,
    எவர்க்குமே நன்மை செய்திடத்தான்
    எடுத்திடும் நல்ல செயல்களிலே
    தவறுகள் நடக்கும் வாய்ப்பினையே
    தந்திடும் நல்ல அரசினிலே…!

    லிமரைக்கூ…

    செயல்படணும் தகுதியை அறிந்தே,
    தவறின் தவறும் அரசின் நன்மைதரும்
    செயல்களும் தடைபட்டு முறிந்தே…!

    கிராமிய பாணியில்…

    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    எதயும் நல்லாத்
    தெரிஞ்சி செயல்படணும்..

    அவரவர் கொணத்த நல்லா
    ஆராஞ்சறிஞ்சி
    அதுக்குத் தக்க செயல்படணும்,
    அப்புடி இல்லண்ணா ராசாங்கத்தில
    மக்களுக்கு
    நல்லது செய்யிறதிலயும்
    தவறு நடந்திடுமே..

    அதால
    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    எதயும் நல்லாத்
    தெரிஞ்சி செயல்படணும்…!

    Share
  • திருமூலர் தத்துவம் சிந்தையில் இருத்துவோம்!

    திருமூலர் தத்துவம் சிந்தையில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அவற்றுள் எங்கள் தமிழ்மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பினை எங்கள் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதாவது பக்தியை இலக்கியமாக்கிய தனித்துவம் எனலாம். ஏனைய மொழிகள் பக்தியைத் தனியாகவே பார்த்தன. ஆனால் எங்கள் தமிழ் மொழி அதனை வாழ்வுடன் இணைத்து இலக்கியமாகக் கண்டது. இதன் காரணமாகப் பக்தியின் வழியில் சென்ற அடியார்களின் மனத்தினின்று உதித்த சிந்தனைகள் அத்தனையும் திருப்பாடல்களாய் தமிழை வளம்படுத்தி வழிகாட்டியாய் அமைகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது எனலாம். அந்த வகையில் பன்னிரு திருமுறைகள் வந்து அமைகின்றன.

    பன்னிரு திருமுறைகளைத் தந்தவர்கள் பல இடங்களைச் சேர்ந்தவர்கள். பல அனுபவங்களைப் பெற்றவர்கள். அவர்களின் அனுபங்கள் ஆண்டவனின் பாற்பட்டதாகவும் அதேவேளை உலகியல் நிலைப்பட்டதாகவும் அமைந்தே இருந்தது. ஒன்பதாம் திருமுறைவரை அமைந்த திருப்பாடல்கள் ஒரே வகையினவாய் இருப்பதைக் காணமுடிகிறது. பத்தாம் திருமுறையாக  அமைகின்ற திருமுறை யானது  ஒன்பது திருமுறைகளையும் விட வித்தியாசமானதாக அமைவதனைக் காணக் கூடியதாக இருக்கிறது. தேவாரம்திருவாசகம்திருப்பல்லாண்டு என்று திருமுறைகள் வருகின்ற நிலையில் பத்தாவதாய் வருகின்ற திருமுறை திருமந்திரம்”   என்னும் சிறப்புப் பெயரினைத் தாங்கி வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகும். சிறப்புப் பெயரினைத் தாங்கி வருகின்ற திருமந்திரத்தைப் பற்றி அறிவது அனைவருக்கும் அவசியம் அல்லவா!

    இந்தத் திருமந்திரம் தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகும். இதனைத் தத்துவ நூல் என்பதா,  சமய நூல் என்பதாமருத்துவ நூல், என்பதா அறிவியல் நூல் என்பதா அல்லது புதுமைக் கருத்துக்களை உரத்துச் சொல்லும் புரட்சி நூல் என்பதா! இப்படிப் பல நிலையில் பன்முகங் கொண்டதாக இத்திருநூல் அமைந்திருக்கிறது என்றுதான் எண்ணிட வைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ்ப் பக்தி உலகில் திருமந்திரம் தனித்து வமான ஒரு நூலாக மிளிர்ந்து நிற்கிறது என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

    இப்படிப் பல புதுமைகளைக் கொண்ட திருமந்திரத்தைத் தந்தவரின் வரலாறும் கூட புதுமையாகவே காணப்படுகிறது. இவரின் தொடக்கமே எம்பெருமான் உறைகின்ற கயிலாயமாகிறது. அங்கிருந்து ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவரின் வருகை பிறப்பாய் அமைகிறது. வந்தவருக்கு அவர் வந்த உடலே வாய்க்காது விட வேறொரு உடலிற் புகுந்து அந்த உடலுக்கு உரியயவனின் பெயருடன் இம்மண்ணில் நிற்கும் ஒரு புதுமை நிகழ்கிறது. அப்பொழுதுதான் அவருக்குத் தான் தாங்கிய உடலுக்கு உரித்தான வனின் பெயரான மூலன் என்னும் பெயர் வாய்க்கிறது. திருவருட்சக்தி அவரிடம் நிறைந்த காரணத்தால் மூலன் – திருமூலன் ஆகும் நிலை ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. அதுவும் நிரந்தர மாகவில்லை என்பதையும் அவர்பற்றிய கதை எடுத்து இயம்புகிறது.

    திருமந்திரம் எமக்களித்த அந்தத் திருவருளாளரைப் பற்றிய செய்தி பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானால் எடுத்துச் சொல்லப்படுகிறது. திருத்தொண்டர் தொகையினைப் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை “நம்பிரான்” என்று உயர் நிலைப்படுத்தியே அறிமுகம் செய்கிறார் என்பது நோக்கத்தகது. சம்பந்தப் பெருமானை “எம்பிரான்” என்றவர் திருமூலரை “நம்பிரான்” என்று சுட்டுவது மனமிருத்த வேண்டிய கருத்தாகும்.

    திருமூலர் வரலாறு எப்படி இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்பது அவசியம் அற்றதாகும். அவரால் அளிக்கப்பட்ட பொக்கிஷமான “திருமந்திரம்” என்பதே கவனித்தில் கொள்ளப்படுதல் வேண்டும். திருமந்திரம் எப்படிப் பாடப்பட்டது யாரால் பணிக்கப்பட்டது என்பதுதான் மிகவும் முக்கியமான செய்தியாகும்.

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

    இறைவன் தன்னைப் படைத்ததற்கான சரியான விடையைத் திருமூலரே தருகிறார். “தமிழ் கொண்டு தன்னைப் பாடவே இறைவன் படைத்தான் பணித்தான்” என்பதுதான் அந்த மறுமொழியாகும். இதுதான் அவரின் பிறப்பின் நோக்கமாகும். இங்கே தமிழ் என்று அழுத்திச் சொல்லப்படுவது கருத்திருத்த வேண்டியதேயாகும். திருமூலர் இறைவன் விருப்பப்படி தமிழில் நன்றாகவே பாடினார். அறம் பாடினார். பொருள் பாடினார். இன்பம் பாடினார். தத்துவம் பாடினார். யோகம் பாடினார். ஆரோக்கியம் பாடினார். ஒழுக்கம் பாடினார். நிலையாமை பாடினார். விஞ்ஞானம் மொழிந்தார். அதேவேளை அரிய மெஞ்ஞா னமும் மொழிந்தார். எதைப் பாடினாலும் இறைவனை அகமிருத்தியே அத்தனையும் தந்துநின்றார் என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். சைவசித்தாந்தம், யோக சாத்திரமுறை, விஞ்ஞானமுறை என்று திருமந்திரம் இருந்தாலும் அடிநாதமாய் அமைந்திருந்திருந்தது – பரம்பொருளை உணர் ந்து கொள்ளுதலே என்பதை மறந்துவிடக் கூடாது.

    திருமந்திரம் ஒன்பது தந்திரங்களையும்  மூவாயிரம் பாடல்களையும் கொண்டது. ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடி மூவாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்பது வரலாறு. இதில் நாம் நுழைந்து விவாதம் செய்ய வேண்டியதில்லை. திருமூலரைச் சித்தர் என்றே அழைப்பது வழக்கம். சித்தர்கள் வாழ்வானது விசித்திரமானது. அறியமுடியா பல அதிசயங்கள் கொண்டது என்பதுதான் பொதுவான ஒரு கருத்து நிலையாகும். அவரின் பிறப்போ அல்லது அவரின் மறைவோ பற்றிய சர்ச்சைகளை விட்டு விட்டு அவரின் சிந்தனைக் கருவூலமான திருமந்திரத்தையும் அதன் மூலம் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைத்திட்ட திறத்தையுமே நாமனைவரும் எம்மகத்தில் அமர்திட வேண்டும். அதுதான் மிகவும் பொருத்த மானதுமாகும்.

    மூவாயிரம் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த வைரங்கள். அவற்றில் அறிவார்ந்த பல கருத்துகள் பொதிந் திருக்கின்றன என்பதை அனைவருமே ஒத்துக் கொள்ளுவார்கள். அறிவார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த திருமூலர் கையாண்ட மொழி நடையினை வியந்துமே பார்க்க வேண்டி இருக்கிறது. இலகுவான சொல்லாக இருக்கும். படிக்கும் பொழுது ஒரு கருத்தை எமக்குள் ஏற்படுத்தும். ஆனால் உள்நுழைந்து பார்க்கும் பொழுதுதான் திருமூலர் தெரிவார். அவர் எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திடக் கையாண்ட சித்தும் தெரிய வரும். அந்த அளவுக்கு ஆழம் நிறைந்திருக்கும். அதேவேளை கவிதை அழகும் செறிந்திருக்கும். அதற்குள் பக்தியும்தத்துவமும்புதைந்தும் இருக்கும். இப்படியான சிறப்பினை வேறெதிலுமே காணமுடியாது. ஆனபடியால்த்தான் அது திருமந்திரம் என்னும் பெயரினைத் தாங்கிடும் பெருமைக்கு ஆளானது எனலாம்.

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை அனைவருமே தேடுகின்றோம். அந்த அருட்சோதியை வேண்டிப் பல இடங்களைத் தேடியும் ஓடுகின்றோம். மனம் அங்கலாய்த்தபடியே இருக்கிறது. அருட்பெருஞ்சோதியை அறிய முடியாமல் இருப்பார்க்கு திருமூலர் புதுமையாய் ஒரு கருத்தைச் சொல்லி புதுப் பாதையையும் காட்டுகின்றார். இது யாருமே சிந்திக்கா சிந்தனையாகும்.

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந் திருப்பாரே

    சித்தம்  போக்கு சிவன் போக்கு என்று சொல்லுவதை நாமெல்லாம் கேட்டிருக்கின்றோம். இதன் அர்த்தம் சிவபெருமானின் போக்கானது அன்பு நிலையேயாகும். இதனைக் கருத்திருத்தியே திருமூலரும் சிவனை “அன்பாய்” காணுகின்றார். ஆகவேதான் சிவன் வேறல்ல – அன்பு வேறல்ல. இரண்டுமே ஒன்று தான் என்று உரக்கக் கூறுகிறார். ஆண்டவனை அன்பாய்க் காணுவதே மிகவும் உகந்த நிலை என்பதுதான் திருமூலர் எண்ணமாகும். பரம்பொருளை அன்புடன் இணைத்து அப்பரம்பொருளுக்கு அன்புதான் பெயர். அந்த அந்த அன்புதான் சிவன் என்று காட்டும் பாங்கில் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விளங்காதவருக்கும் விளங்கப் பண்ணிடும் உத்தியாய் இருக்கிறதல்லவா?

    உடம்பினைப்பற்றி அதனுள் இருக்கும் உள்ளத்தினைப் பற்றியெல்லாம் பலரும் பலவாறு பார்த்திருக்கிறார்கள். ஆனால் திருமூலர் பார்வையோ யாவரையும் விட வித்தியாசமானதாய் அமைந்திருக்கிறது. உடம்பு இழுக்கா என்றால் இல்லையே என்கிறார். அதற்குத் தக்க காரணமும் தருகிறார். அங்குகூட பரம்பொருளையே உட்புகுத்தியும் நிற்கிறார்.

    உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

    உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
    உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

    உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
    மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
    பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
    கள்ள மனமுடைக் கல்வி இலோரே

    தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
    வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
    தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
    ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.

    உடம்பினைப் பற்றிய பார்வையும், அதனூடாக வெளிப்பட்ட புதுமையான சிந்தனையும், திருமூலர் உலகினுக்கு உணர்த்திய பெருந் தத்துவமாய் இருக்கிறது அல்லவா! இந்தப் பாடல்களை அறிவால் அணுகுவதைவிட உணர்வால் உள்ளிருத்துவதே உகந்ததாகும்.

    யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
    யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
    யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
    யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே

    இந்தப் பாடலை நாமனைவரும் தெரிந்தே வைத்திருக்கிறோம். பாடலைப் பாடமாக்குவதோ அல்லது பாடலின் பொருளைக் கூறுவதோ இங்கு முக்கியம் அல்ல. இப்பாடல் ஊடாக திருமூலர் சமூகத்துக்கு எதனை உணர்த்திட விரும்புகிறார் என்பதே மிக மிக முக்கியமானதாகும். பரம்பொருளைப் பூசிப்பதற்கு ஒரு பச்சிலையே போதும் என்கிறார். பரம்பொருளைப் பூசித்தால் மட்டும் போதுமா என்று கேட்டு விட்டு – பசுவுக்குப் புல்லுக்கொடு. உண்ணும் போது யாராவது வந்தால் ஒரு கைப்பிடி உணவு கொடு. இப்படி யெல்லாம் உனக்குச் செய்வது கஷ்டமாக இருந்தால் நல்லதாக ஒரு வார்த்தையினையாவது மற்றவரைப் பார்த்துச் சொல்லிவிடு. என்று குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதுபோல எமக்கெல்லாம் எடுத்துரைக்கின்றார். பரம்பொருளை நாடுவதும், பூசிப்பதும் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்து வத்தை பசுவுக்கு வாயுறை கொடுப்பதற்கும், உண்ணும்போது ஒரு கைப்பிடி கொடுப்பதற்கும், இன்னுரை மற்றவர்க்கு வழங்குவதற்கும் திருமூலர் கொடுத்து நிற்கிறார் என்பதுதான் அகம் அமர்த்திட வேண்டிய கருத்தாகும். மகேசன் சேவையுடன் சமூகச் சிந்தனையும் மிகவும் அவசியமானதுதான் என்பதையே திருமூலர் எண்ணிச் சொல்லுகிறார் என்பதே கருத்திருத்த வேண்டிய கரு எனலாம். இந்தப் பாடலின் மூலம் நல்ல அறமும் உணர்த்தப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். அறங்களை இலகுவாக்கி அதனையாவது இருக்கும் காலத்தில் செய்யுங்கள் என்று நல்ல குருவாய் நல்லதொரு உபதேசத்தை வழங்கியவர் – மனித வாழ்வினையும், அதன் நிலையாமையினையும் படம்பிடித்துக் காட் டுகிறார். திருமூலரைத் தவிர எவராலுமே இப்படி விளக்கிடவும் முடியாது. உணர்த்திடவும் முடியாது என்பதுதான் உண்மை.

    அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
    இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே    

    ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
    சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே

    வந்தார். நன்றாகவே அதுவும் சுவையாகவே உண்டார். அழகான மனைவியுடன் இன்பமாய் இருந்தார். இட துபக்கம் சிறிது வலிக்கிறது என்றார்.நோவினால் படுத்தார். படுத்தவர் படுத்தே விட்டார். எழவே இல்லை! ஒரு நாடகம் போல காட்டி மனித மரணத்தினை திருமூலர் சமூகத்துக்கு உணர்த்தி நிற்கிறார். இங்கே நிலையாமையும் இருக்கிறது. மருத்துவமும் இருக்கிறது. இடப்பக்கம் நொந்தால் இருதய நோய். அதனால் உயிராபத்து வரும். இதனை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் திருமூலர் என்னும் சித்தர் பெருமான் சொல்லி இருப்பது எம்மையெல்லாம் அவர் பக்கம் திருப்பிப் பார்த்திட வைத்திடும் நிலைதானே!

    படுத்தவர் எழவேயில்லை. படுத்தவர் பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர். வசதிகள் வாய்ப்புகள் நிறைந்தவர். ஆள் பலம் படைத்தவர். அரசியலில் உயர்நிலையில் இருப்பவர். அனைவரையும் ஆட்டிவைத்தே வாழ்ந்தவர். அவரிப்போ எழமுடியாமல் வீழ்ந்துவிட்டார். ஊரிருப்பவர்கள் எல்லோரும் வந்தார்கள். ஒலிக்கி அழுதார்கள். சற்று நேரங்கழித்து – அந்தஸ்த்திலிருந்தவரின் பெயரினைச் சொல்லாது எப்பதான் இந்தப் பிணத்தை எடுக்கப் போகிறார்களோ என்று சொல்லி நிற்கின்றார்கள். நிலைமை உடனேயே மாறி விட்டது என்கிறார் திருமூலர். அதுமட்டுமா? ஆடவைத்து நின்றவரின் ஆட்டம் அடங்கிய பின் பிணம் என்னும் பெயருடன் சூரையங் காட்டுக்குக் கொண்டு சென்று தீயிட்டு எரித்து, அங்குள்ள நீர் நிலையில் மூழ்கி எழுந்து – அந்தஸ்த்தில் இருந்தவரையே நினைப்பிலிருந்து அகற்றியே விட்டார்கள். இதுவும் ஒரு படமாக காட்டப்படுகிறது அல்லவா! இதுதான் வாழ்கை! இதுதான் வாழ்கையின் நிதர்சனமான நிலை! 

    உலகிலே இருக்கின்ற அனைவருக்கும் இப்படி ஒரு தத்துவத்தை மிகவும் பக்குவமாய் அதேவேளை உறைக்கும்படியும் உரைத்தவர் திருமூலர் ஒருவரே என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய உண்மையாகும். 

    திருமுறைகளை ஆலயங்களில் பாடும் பொழுது திருமந்திரம் அங்கு இடம்பெறுவதைக் காணவே முடிவதில்லை. திருமந்திரம் என்பது ஒரு சாத்திர நூல். அது தோத்திர நூல் அல்ல. அது நிலையாமையினை உணர்த்தும் நூல். தத்துவங்களை உள்ளடக்கிய நூல்.சாதாரண மானவர்களுக் கெல்லாம் விளங்காத நூல். சித்தரின் நூல்.முத்தியினை முன்னிறுத்தும் நூல். விளங்குவது கடினம். என்றெல்லாம் பல கருத்துகள் இருப்பதனால் திருமூலரையோ அல்லது திருமந்திரத்தையோ நாடுவதும் தேடுவதும் குறை வாகவே இருக்கிறது. கோவில்களில் கூட புராணங்கள் பற்றியே விரிவுரைகள் பெரும்பாலும் இடம் பேறும். திருமந்திரம் என்றாலே அது ஒரு மந்தி நூல் என்று எண்ணுவதே வழக்கமாகிவிட்டது. ஆம்… அது மந்திர நூல்தான். நிறை மொழியான பலகருத்துக்கள் அதில் இருப்பதால் அது மந்திர நூல் அதாவது உயர்வானசிறப்பானமதிப்பான மந்திர நூல் ஆகையால்த்தான் திரு என்னும் அடை மொழி இணைக்கப்பட்டு “திருமந்திரம்” ஆகி திரும்பிப் பார்த்திட வைத்திருக்கிறது.

    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப
    ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
    கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
    பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
    அழிந்தன கண்டும் அறம்அறி யாரே

    Share
  • திரையில் மலர்ந்த தீந்தமிழ் பற்றிய ஒரு பார்வை

    திரையில் மலர்ந்த தீந்தமிழ் பற்றிய ஒரு பார்வை

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    இலக்கியமும்.  இலக்கணமும் இங்கிதமாய் கொண்டமொழி எங்கள் இன்தமிழ் மொழி.அந்த மொழி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழைப் பெற்று நிற்கின்ற மொழி.வரலாறு படைத்த மொழி.பேச்சு மொழியா யும் எழுத்து மொழியாயும் ஏற்றமுற்று இருக்கும் மொழி.சங்கம் வளர்த்த  மொழி. சன்மார்க்கம் சொன்ன மொழி.அறத்தை உரைத்த மொழி அன்பைப் பொழிந்த மொழி.என்றுமே இளமையாய் இருக்கும் மொழி. அதுதான் தீந்தமிழ் மொழி. சிறப்பான மொழி. மண்ணில் நல்லவண்ணம் வாழவைக்கும் மொழி.அந்த மொழி பட்டி தொட்டியெங்கும் பரவிட வைப்பதற்கு வாய்த்த ஒரு ஊடகம்தான் வெள்ளித்திரைவெள்ளி த்திரையில் எங்கள் தமிழ் எழிலுடன் கொஞ்சி உலாவந்த பாங்கினை பார்ப்பது பரவசமாய் அமையும் அல்லவா பார்ப்போமா ! நீங்கள் ஆயத்தமா வாருங்கள் பார்ப்போம் ! திரையில் மலர்ந்த தீந்தமிழை !

    திரையில் காட்சிகளைப் பார்ப்பதும் காட்சிக்கு ஏற்ற வசனங்களைக் கேட்பதும் அந்தக் காட்சிகளுக்கு ஏற்றதான பாடல்களை இசையுடன் கேட்பதும் எல்லோருக்குமே பிடித்தமாய் இருக்குமல்லவாஇந்த விருப் பம்தான் திரைத்துறையை வளரும் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது எனலாம்.

    நாடகங்களில் வசனம் வந்தது,பாட்டும் வந்தது. ஆரம்பகாலங்களில் வந்த திரைப்படங்கள் நாடகப் பாணி யிலே வந்தனகாரணம் ஆரம்ப நிலை எனலாம். ஆனால் காலம் மாற கருத்துகளும் மாற காட்சிகளும் மாறின.மாறிய மாற்றங்களுக்கெல்லாம் திரையும் இடங் கொடுக்கவேண்டியது அவசியமாய் அமைந்தது.

    1931 ஆம் ஆண்டு அக்டோபர் 31 என்னும் நாள் திரைத்துறையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க நாளாகும். அன்றுதான் “ “காளிதாஸ்” என்னும் பெயரில் பேசும் திரைப்படம் வெளி வருகிறது. பேசும் படந்தான் தமிழைத் திரையில் உலவவிட்டது எனலாம். அந்தவகையில் திரையில் தமிழைப் பேசவைத்த பெருமை முதல்வந்த காளிதாசுக்கும் அதன் குழுவினருக்குமே உரித்தான தெனலாம்.

    மேடையில் பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளே நாடகங்களாக நடிக்கப்பட்டன. ஆரம்ப காலங் களில் வெளிவந்த திரைப்படங்களும் நாடகப் பாணியில் புராண இதிகாசக் கதைகளையே திரையில் காட்டி நின்றன. அங்கு மேடை நாடகங்களில் கையாளப்பட்ட தமிழே ஆரம்ப திரைத்தமிழாய் மலர்ந்ததது என்பதை மனமிருத்தல் வேண்டும். அது அக்காலப் போக்கு எனலாம். அப்படியான நேரத்தில் வசனங்க ளிலும் பாடல்களிலும் சமஸ்கிருதம் கலந்து தமிழ் திரையில் வந்தது. அதனை அப்போதைய திரைத் தமிழாகவே கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் மாற்றம் வராமல் இல்லை. அந்த மாற்றம்தான் நல்ல இலக்கியத் தமிழைஅழகான தமிழைஉணர்ச்சி கொப்பழிக்கும் தமிழைஉயிரோ ட்டமான தமிழை திரையில் கொண்டுவந்த கொடுத்த மாற்றம் எனலாம்.

    இந்தமாற்றத்துக்கு வித்தாக பல வசனகர்த்தாக்களும்பாடல் ஆசிரியர்களும்  வந்தமைந்தார்கள் என்பது தான் முக்கியமாகும். இலக்கியத் தமிழை இளங்கோவனும் சாரியும் திரையில் மலரச் செய்தார்கள். உத்தம புத்தரனில் சாரியின் தமிழ் திரையில் தீந்தமிழாய் மலர்ந்ததுகண்ணகியில் இளங்கோவன் தமிழ் தித்தி த்தது. அடுத்து அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி வந்தது. அண்ணாவின் தமிழ் எதுகை மோனையாய் தீந்தமிழை திரைக்கு எடுத்து வந்தது. அடுக்குமொழி அண்ணாத்துரை என்றுதான் அவர் அழைக்கப்பட்டார். “சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு ! அந்த விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்ப தில்லை!” இந்தவசனத்தை மறந்தவர்களும் இல்லை! மறக்கத் தான் முடியுமா? அவரின் இளவலாய் வந் தார் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் மலர்ந்த கலைஞர் அவர்கள் .கலைஞர் தீட்டிய வசனங்கள் இன்றளவும் பலரின் மனங்களில் சிம்மாசனமிட்டு இருக்கிறது எனலாம். கலைஞரின் வசனங்களை மனப்பாடம் செய்து பலரும் ஒப்புவித்து காட்டிப் பெருமைப்படுவதும் உண்டு. அந்த அளவுக்கு திரையில் தீந்தமிழை மலர்ந்திட வைக்கும் மாயம் கலைஞர் தமிழுக்கு இருந்திருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.

    திரைத்தமிழில் திருப்பமாய் பராசக்தியின் வசனங்கள் அமைந்தன.

    நானே பாதிக்கப்பட்டேன் “நேரடியாகப் பாதிக்கப்பட்டேன் ! சுயநலம் என்பீர்கள் ! என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது ! ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் ! அதைப்போல ,

    …… பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை … என் பாதையில் !

    படமெடுத்து ஆடும் பாம்புகளே நெழிந்திருக்கின்றன ! தென்றலைத் தீண்டியதும் இல்லை … நான் … ஆனால்

    தீயைத்தாண்டியிருக்கிறேன் !

    தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான்

    பிறக்க ஒரு நாடு ….. பிழைக்க ஒரு நாடு ! தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா !

    காணவந்த தங்கையைக் கண்டேன் ! கண்ணற்ற ஓவியமாக ! கைம்பெண்ணாக ! தங்கையின் பெயரோ கல்யாணி ! மங்களகரமான பெயர் ….

    ஆனால் …. கழுத்திலே மாங்கல்யம் இல்லை ! செழித்துவளர்ந்த குடும்பம் !

    சிரழிந்துவிட்டது ! கையிலே பிள்ளை ! கண்களிலே கண்ணீர் !

    ………. யார் குற்றம் விதியின் குற்றமா அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறுவளர்க்கும் வீணர்களின் குற்றமா இப்படி உணர்ச்சிப்பிளம்பாய் கலைஞரின் தீந்தமிழ் திரையில் வந்து மலர்ந்துபோய் இருந்தது. மறக்க முடியா வசனங்கள் அல்லாவா ?

    இதேபோல் மனோகரா வந்தபொழுதும் கலைஞரின் தீந்தமிழ் திரையினை நிறைத்து நின்றது. கலைஞரின் பூம்புகார் வசனங்களும் திரையில் தமிழைக் கொட்டியது எனலாம். கலைஞர் காலம் திரையில் தமிழ் ஒலித்த காலம் எனலாம்.

    கலைஞரின் மறக்கமுடியா தமிழை மனோகரா கொட்டியது.

    ” கட்டளையா இது ….. ? கரைகாண முடியாத ஆசை… மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து …. கண்ணே ..முத்தே ..தமிழ்ப்பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி .. தந்தால் ஆனகட்டிலிலே…. சந்தனத் தொட்டிலிலெ …வீரனே ..! என் விழி நிறைந்தவனே ..! தீரர் வழிவந்தவனே….. என்றெல்லாம் யாரைச் சீராட்டிப் பாராட்டி னீர்களோ … அவனை அந்த மனோகரனை …சபிநடுவே நிறுத்தி… சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்களது தணியாத ஆசைக்கும் பெயர் கட்டளையா தந்தையே !

    ” கோமளவல்லி … கோமேதகச்சிலை ..கூவும் குயில்… குதிக்கும் மான் … என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை …கொடிய நாக்கை … என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு .. அதை எதிர்த்தால் உம்மையும்… உமக்குப் பக்கத் துணை வந்தால் அந்தப் பட்டளத்தையும் பிணமாக்கி விட்டு …” என்று கனல்பறக்கும் தீந்தமிழை கலைஞர் திரையில் கொட்டி நிற்பார். அதனை சிவாஜிகணேசன் உயிராக்கி தமிழ் உள்ளமெலாம் உறைய வைப்பார்.

    யார் கள்வன் என் கணவன் கள்வனா? அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர்நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி! இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை! இது கோவலன் தேவியின் சிலம்பு நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு? ( பூம்புகார் )

    கலைஞருடன் கைகோர்த்து கலையுலகில் வலம்வந்தவர் கவியரசர் கண்ணதாசன். நகரத்தாரிடமிருந்து முத்தையாவாக வந்தவர் கண்ணதாசனாய் கவி மன்னனாய் நாடறிய ஏடறிய உயர்ந்தார். அவரின் கைவண்ணத்தில் திரையில் வசனமாயும் பாடல்களாயும் தீந்தமிழ் செழித்து நின்றது 

    நான் சாதாரண குடியில் பிறந்தவன்பலமில்லாத மாடுஉழ முடியாத கலப்பைஅதிகாரம் இல்லாத பதவிஇவைகளை நாங்கள் விரும்புவதேயில்லை”.

    மக்களின் நிலையறியாதவன் நானா?, நீங்களா?. நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கி றவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கின்றவன்.

    என் உருவம் மாறி இருக்கிறது. என் உள்ளம் மாறவில்லை.” “அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள்.” “தவறுபணக்காரர்கள் இருப்பார்கள்ஏழைகள் இருக்க மாட்டார்கள்.” “என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டுநம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.

    மக்கள் திலகத்தின் நாடோடிமன்னனில் கவியரசரின் தமிழ் அருவியைப் பருகாதார் இருக்கவே முடியாது ! மக்கள் திலகம் வாழ்க்கையில் இவ்வசனங்கள் உரமாய் வரமாய் வந்தமைந்தது எனலாம்.

    மக்கள் திலகத்தின் மதுரை வீரனில் திரையில் கவியரசரின் தீந்தமிழ் பொழிகிறது கேளுங்கள் !

    தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்துமஞ்சள் அழிந்துகூந்தல் அவிழ்ந்துகுங்குமம் கலைந்துபச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

    அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

    வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்றுவெட்டி வீழ்த்திக் கொண்டான் கையைபொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்த தும்சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

    மன்னிப்பு!

    வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ

    பள்ளிக்கூடமே போகாத ஒருவர் தீந்தமிழை திரையில் கொண்டுவருகிறார். கேட்டுத்தான் பாருங்களேன் !

    கலைவாணி ! கருணாகரி ! கல்விக்கரசி … சொல்லின் செல்வி ! கற்றவர் போற்றும் கலாதேவி ! வித்தை படித்தவர் வணங்கும் வேதவல்லி ! காவிய நாயகர்கள் பாராட்டும் கலை உலகில் நாயகியே ! நற் சான்றோர்க்கு அருள் புரியும் நாமகளே ! வெள்ளைத் தாமைரைப் பூவில் அமர்ந்து வீனை மீட்டிப் பண்பாடி விவேகத்தை வழங்கும் அருள்வடிவே வணக்கம் !

    திருவே ! திருவின் உருவே ! திருவை அளிக்கும் உலகிற்கு திருமகளே ! தினம் துதிக்கும் தொண்டர்க்கு திரவியத்தை அள்ளி வழங்கும் திருவருளே ! தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து…. திக்கெட்டும் செல்வச் சிறப்போடு செழிக்க வைக்கும் திருப்பெரும் வடிவே ! திருப்பாற்கடலில் தோன்றிய திவ்வியப் பொருளே … நின் திருமலரடி தொழுகின்றேன் ..வணக்கம்

    இப்படித் தீந்தமைழை திரையில் காட்டியவர் வேறு யாருமல்ல… நவராத்திரியை, திருவருட்செல்வரை, திருவிளையாடலை, குலமகள் ராதையை எமக்களித்த ஏ,பி. நாகராஜன் அவர்கள்.

    “அங்கம் புழுதிபட அறுவாளில் நெய் பூசி …பங்கப்பட இரண்டு கால் பரப்பி … சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ … என் கவிதையை ஆராய்ந்து சொல்லத்தக்கவன்”

    “சங்கறுப்பது எங்கள் குலம் …சங்கரனார்க்கு கேது குலம் … சங்கை அரிந்துண்டு வாழ்வோம் …அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை ” தீந்தமிழ் சொட்டுகிறதல்லவா திரையில் !திரு விளையாடலில் வரும் இத்தமிழைப் பாடமாக்கிப் பாருங்கள் !

    “உன்னை ஒழிப்பத்ற்கென்றே உலகில் தோன்றியவன் ! வேலோடு வந்திருப்பவன் ! உன்னால் வேதனைப்படும் அமர்களை விடுவிக்கப் போகிறவன் ! வேலன் .. ! வேதற்கிற்கு சீலன் ! பார்வைக்குப் பாலன் ! பகைவர்க்குக் காலன் ! கந்தனென்பார்  கடம்பனென்பார் ! கார்த்திகேயனென்பார் ! சண்முகனென்பார் ! ஆறுமுகனென்பார் ! உன்னையும் வதைத்தபின்.. சூரனையும் வதைத்த சூரனென்பார் ! சொல்லுக்கும் பொருளுக்கும் முத்தமிழுக்கும்… தமிழ் இனிமைக்கும்… ஆயகலை அறுபத்து நான்கிற்கும்.. முன்னைப் பழமைக்கும் .. பின்னைப் புதுமைக்கும் … தலைவன் அவன் ! அவனே வேலவன் ! அவனனுப்பிய தூதுவன் வீரபாகுத் தேவன் ! கேட்கக் கேட்க தமிழ் இன்பம் பெருகுதல்லவா ?

    பாடசாலை நாட்களில் பாடமாக்கி பேச்சுப் போட்டி ஒத்திகைக்கு நாங்கள் ஒப்புவித்த தீந்தமிழ்தான் இது …. இத்தமிழை உணர்ச்சி பொங்கிடப் பேசினால் தமிழ் ஆசிரியர் தலைகால் தெரியாமல் மகிழ்ச்சியில் மிதப்பார். கேட்டுத்தான் பாருங்களேன் .

    “நீல வானிலே செந்நிறப் பிளம்பு ! அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன் ! சுட்டெரிக்கும் செஞ்சுடர் அது ! அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட இந்த வட்டநிறமான இரத்தநிறப் பொட்டு ! பரமனுக்கு முக்கண் ! அது … தேவையில்லை .. ஒரு வீரனுக்கு.. இந்த வெற்றி வடு ஒன்றே போதும் ! வாளை ஓட்ட அவர்கள் மீது வேலைப் பாய்ச்ச ! இதனால் விளைவது என்ன வெண்ரு கேள் ! வெண் மணல் நிலமெல்லாம் … செக்கர் வானம் போல் .. செம்பவள மலைபோல் . செப்புத் தகடடித்த செப்பநிட்ட தரைபோல் … மாணிக்க கரைகட்டி மடை திறந்த நெருப்பாற்றை இடையில் ஓடவிட்ட அழகுபோல் …எதிரியின் இரத்தம் குபுகுபுவென பொங்கி யெழுந்து .. எங்கும் நிறைந்த பொருளாய் .. நம் ஏற்றமிகு செயலாய் .. களத்தில் நிறையப் போவதுதான் ..!

    “திறைவரிவட்டி. வானம் பொழிகிறதுபூமி விளைகிறதுஉனக்கேன் கொடுப்பது வட்டி எங்களோடு வயலுக்கு வந்தாயாஏற்றமிறைத்தாயாநீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயாநாற்று நட்டாயாகளை பறித்தாயாகழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலையம் சுமந்தாயாஅங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயாஅல்லது நீ மாமனாமச்சானாமானங்கெட்ட வனே! எதற்குக் கேட்கிறாய் திறையாரைக் கேட்கிறாய் வரிபோரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழ வர் கூட்டம்பரங்கியரின் உடலையும் போரடித்துதலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ! ”  சக்தி கிருஷ்ணசுவாமியின் திரையில் வந்த தீந்தமிழ் எப்படி இருக்கிறது ? ஒரு முறை நீங்களும் பேசித்தான் பாருங்களேன் !

    இடைக்காலத்தில் இடம் பெற்ற ஒரு திரைத்தீந்தமிழ்

    ஆண்களுடைய கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகித்தான் தீர வேண்டும் என விதி இருந்தால் அந்த விதியை ஒழுங்குபடுத்த வேண்டாமா? 1

    மண்புழுக்களாக இருக்கும் பெண்களை பாதிக்கக் கூடிய மனுதர்மம்மனுநீதிமனு சாஸ்திரம் இவைகளை திருத்தி எழுத வேண்டாமா?

    அன்று தன் தந்தை செய்த அதே தவறை இன்று அவருடைய மகன் செய்கிறான். இது வம்ச பரம்பரை! வாழையடி வாழை! வீண் பழிக்கு ஆளான இந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்குங்கள்! வஞ்சகம் அறியாத அவள் வயிற்றில் வளரும் அந்தப் பூந்தளிரைக் காப்பாற்றிஅதன் தந்தை இதோ இந்த ராஜாதான் என்று நீதி வழங்குங்கள்!  நீதி வழங்குங்கள்! ( விதி– ஆரூர்தாஸ் )

    இலக்கிய பாங்கான வசனங்கள், இலட்சியப் பாங்கான வசனங்கள், அரசியல் பூசிய வசனங்கள், ஆன்மீ கம் தழுவிய வசனங்கள் , என்றெல்லாம் வனங்களை தீந்தமிழால் நிறைத்து திரைவாயிலாக வெளிக் கொணர்ந்தவர்கள் என்னும் வகையில் பல ஆளுமைகள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால் தீந்தமிழைத் திரையில் வசனமாய் தந்த காலம் சற்று தளர்வினை நாடிவிட்டதுபோல் தெரிகிறது. காரணம் காலத்தின் கோலமது ! இன்று திரையில் தமிழ் வருகிறது ! ஆனால் அது பேச்சுத்தமிழாய் வட்டாரத் தமி ழாய் வலம்வந்து அன்னியத்தையும் அரவணைத்து நிற்கிறது எனலாம்.

    வசனத்தின் வழியில் திரையில் தீந்தமிழ் தவழ்ந்ததுபோல் பாட ல்களின் வாயிலாகவும் திரையில் தமிழ் இசையுடன் கலந்து உள் ளங்களை நிறைத்தது. அது இன்னும் தொடர்கிறது என்று தான். சொல்ல வேண் டும்.

    பாபநாசம் சிவன் தொடக்கம் இக்கால பா.விஜய் வரை தீந்தமிழ் செப்பி நிற்கும் திரையிசைப் பாடல்க ளைத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் பங்களிப்பும் நல்ல தமிழை, இலக்கியத் தமிழை திரையில் இசை யின் மூலம் கொடுத்து யாவர்மனத்திலும் தமிழைப் பதியச் செய்ய வேண்டும் என்பதுதான் என்பதில் எள்ளளவும் ஐய்யம் இல்லை. திரையில் தமிழ் தந்த கவிஞர்களை அறிமுகம் செய்து அவர்களின் பங்களி ப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுவ தென்றால் அதற்கு பல மணி நேரங்கள், பல நாட்கள் எடுக்கும் என்பதால்  அந்தச் சமுத்திரத்தினுள் இருந்து சில முத்துக்களை பொறுக்கலாம் என்று எண்ணுகிறேன்.

    மருதகாசியின் தென்றலைத் தொட்டுப் பார்ப்போம் — இன்றும் மனதில் பதிந்து பாடினால் பரவசம் தரும் தீந்தமிழ் அல்லவா ?

    உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
    அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே

    – சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

    – ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை

    – மணப்பாரை மாடு கட்டி

    தஞ்சையின் மைந்தன் தஞ்சை ராமையாதாஸின் தீந்தமிழும் நெஞ்சில் நிற்கிறது

    – பிருந்தாவனமும் நந்தக்குமாரனும்

    – மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ  

    எந்த முத்தை எடுப்பது ? எந்தமுத்தைப் பார்ப்பது என்பதுதான் சிக்கலான நிலை. என்றாலும் முயல்கிறேன்.

    அச்சம் என்பது மடைமையடா ! மயக்கமா கலக்கமா ! எனத் தொடங்கியவர்

    கண்ணதாசன் என்னும் பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் மூழ்கினால் வெளியில் வரவே முடியாது. அத்தனை உயர் முத்துக்களும் அங்கேதான். மூழ்கி எடுத்த முத்துக்கள் உங்களுக்கு –

    அந்தாதியாய். வாழ நினைத்தால் வாழலாம்வழியா இல்லை பூமியில்‘ எனத் தொடங்கி பலே பாண்டியா‘ படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருக்கும் பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள் அந்தாதி நலம் பொருந்தியவை:

    பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்!

    மூன்று முடிச்சு‘ படத்தில்

    வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்

    நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்

    கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

    மலர்க்கணைகள் பாய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்

    பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

    தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்

    புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்.. என்ற முத்திரைப் பாடல் முழுக்க அந்தாதியில் அமைந்த அற்புதமான பாடல்.

    பல அணிகளைக் கவியரசர் கையாண்டிருப்பார். அவையெல்லாம் முத்துக்கள்.

    உவமை அணி :.’குடும்பத் தலைவன்‘ திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்:

    திருமணமாம்திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்!
    ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!…
    அவள் கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்!
    ஒரு கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்!

    மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக் காட்டுவார் கண்ணதாசன்:

    சேர நாட்டு யானைத் தந்தம்போல் இருப்பாளாம்! – நல்லசீரகச் சம்பா அரிசி போலசிரித் திருப்பாளாம்!…செம்பருத்திப் பூவைப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்!செம்புச் சிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்! – நல்லசேலம் ஜில்லா மாம்பழம் போல்கனிந் திருப்பாளாம்!

    தற்குறிப்பேற்ற அணி

    தாயைக் காத்த தனயன்‘ படத்திற்காகக் கண்ணதாசன் படைத்திருக்கும் பாடலின் தொடக்க வரிகள்..

    மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார்!‘ என்றன!

    முந்தானை காற்றில் ஆடி வா வா!‘ என்றது!

    இமை இரண்டும் மூடித் திறப்பது இயல்பு. இது காதலனைப் பார்பார்‘ என்பது போல் இருக்கின்றதாம். இதே போல் முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக நிகழ்வதுதான். இது வா வா‘ என்று காதலியை நோக்கி அழைப்பது போல் உள்ளது எனக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி.ம்நெமும்த்துக்கள்ஞ்சிரண்டின் நினைவலைகள்

    நி முத்துக்கள் குவிகின்றன…….

    மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
    கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே” என்னும்
    வரிகளும்கம்பர் இயற்றிய
    நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
    தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்”
    பாடலில் பயின்று வரும் வரிகள் -திரையில்

    (படம்: மாலையிட்ட மங்கை).
    காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
    பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
    காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
    காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது”

    இனிவேறொரு பாடலைப் பார்ப்போம்:
    இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
    பொருந்த வளைபறித்துப் போனான்–பெருந்தவளை
    பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
    மாத்தத்தன் வீதியினில் வந்து”. தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.

    கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்
    சின்னவளை முகம் சிவந்தவளை நான்
    சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
    என்னவளைக் காதல் சொன்னவளை
    நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு” என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு இயற்றியுள்ளார். னைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெலாம் கனவலைகள்

    இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல் மிகப் புகழ்பெற்றது:

    கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
    குடிக்கத்தான்  கற்பித் தானா?
    இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
    கொடுத்துத்தான்  இரட்சித் தானா?
    அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
    நோவத்தான்  ஐயோ! எங்கும்
    பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
    புவியில்தான்  பண்ணி  னானே.”
    இந்தப் பாடலால் கவரப்பட்ட

    கவிஞர் கண்ணதாசன்
    பாவமன்னிப்பு என்ற படத்தில் ” அத்தான்என்னத்தான்,

    அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி” என்ற திரைப்படப் பாடலை இயற்றினார்.

    இனிதிருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல் எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:

    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்”.(குறள்:1094). இப்பாடலின் கருத்தை

    வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்

    “நேற்றுவரை நீயாரோ நான்  யாரோ?
    இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
    காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
    கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
    உன்னைநான் பார்க்கும் போது
    மண்ணை நீ பார்க்கின்றாயே;
    விண்ணை நான் பார்க்கும் போது
    என்னை நீ பார்க்கின்றாயே.” என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப் பட்டிருக்கும்.னவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகளமலர்க்கணைகள் பாkEய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்

    கேள்விகளும் பதிலுமாய் சில முத்துக்கள்

    கண்ணிலே நீர் எதற்கு?
    காலமெல்லாம் அழுவதற்கு

    நெஞ்சிலே நினைவெதெற்கு?
    வஞ்சகரை மறப்பதற்கு

    இன்பமெனும் மொழி எதற்கு?
    செல்வத்தில் மிதப்பதற்கு

    துன்பமெனும் சொல்லெதெற்கு?
    உள்ளமென்ப துள்ளவர்க்கு

    கையிலே வளைவெதெற்கு?
    காதலியை அணைப்பதற்கு

    காலிலே நடையெதெற்கு?
    காதலித்துப் பிரிவதற்கு

    பாசமென்ற சொல்லெதெற்கு?
    பார்த்திருந்து துடிப்பதற்கு

    ஆசை கொண்ட வாழ்வெதெற்கு?
    அன்றாடம் சாவதற்கு

    பூவிலே தேனெதெற்கு?
    வண்டு வந்து சுவைப்பதற்கு

    வண்டுக்குச் சிறகெதெற்கு?
    உண்ட பின்பு பறப்பதற்கு

    கொடியசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

    பாடல் வந்ததும் தாளம் வந்ததா
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா
    பாவம் வந்தது ராகம் வந்ததா
    ராகம் வந்ததும் பாவம் வந்ததா
    கண் திறந்ததும் காட்சி வந்ததா
    காட்சி வந்ததும் கண் திறந்ததா
    பருவம் வந்ததும் ஆசை வந்ததா
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா

    கவியரசர் திரையிசைத் தீந்தமிழ் தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும்.காலங்கருதி அந்த ஆழிக்குள் இருந்து மேலெழுகின்றேன்.

    கவியரசர் பாட்டா வாலி பாட்டா என்று அடையாளம் காணா வகையில் கவித்துவத்தை திரையில் தீந்தமிழால் பதித்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அவரின் முத்துக்குவியல்களும் அழவில. தொட்டுப்பார்த்த முத்துக்களைத தந்திருக்கிறேன் …..kaகவியரசணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும்தலையணைகள்

    அத்தைமடி மெத்தையடி ,
    ஆடி விளையாடம்மா,
    ஆடும்வரை ஆடிவிட்டு..,
    அல்லிவிழி மூடம்மா..,
    அத்தைமடி மெத்தையடி……. ,காமுகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்

    மூன்றாம்பிறையில் தொட்டில்கட்டி..,
    முல்லை மல்லிகை மெத்தையிட்டு..,
    தேன்குயில்கூட்டம் பண்பாடும்..,
    மான்குட்டிகேட்டு கண்மூடும்..,
    இந்த மான்குட்டிகேட்டு கண்மூடும் ,பு

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான்
    மலர்ந்தேன்
    சுட்டால் பொன்
    சிவக்கும்
    சுடாமல் கண்
    சிவந்தேன்துக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..

    பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
    இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
    சுவை அறிந்தேன்

    பால் மனம் பால் இந்த மதிப்பால்
    தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
    சுகம் தெரிந்தேன்

    உந்தன் பிறப்பால் உள்ள வனப்பால்
    வந்த மலைப்பால் கவி புனைந்தேன் (2)

    அன்பின் விழிப்பால் வந்த விருப்பால் (2)
    சொன்ன வியப்பால் மனம் குளிர்ந்தேன்

    விழி சிவப்பால் வாய் வெளுப்பால் (2)
    இடை இளைப்பால் நிலை புரிந்தேன்

    இந்த தவிப்பால் மன கொதிப்பால் (2)
    கண்ட களைப்பால் நடை தளர்ந்தேன்

    முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால் (2)
    மொழி இனிப்பால் என்னை இழந்தேன்

    இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
    இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
    தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்

    வைரமுத்து – திரையில் கால்பரப்பி இன்றும் தொடர்கிறார். இவரின் தீந்தமிழ் திரையினை வளமூட்டி , உரமூட்டி நிற்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.கவியரசர் வாலிக்குப் பின் திரையினைத் தமிழால் ஆளும் பேராளுமைதான் வைரமுத்து! தமிழ்த் திரைப்பாடல்களில் மிக நீளமான பாடலாக இவர் எழுதிய சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல் கருதப்படுகிறது.

    தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக்கேட்டேன்
    நிலவில் நனையும் சோலைக் கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
    நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
    தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
    துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
    பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

    திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர். பொன்மாலைஅந்திமழைதாவணி விசிறிகள்தீயின் தாகம்ஆனந்த தாகம், , அமுதகானம்பன்னீர் மேகம்ஒளிமகள்இளஞ்சிரிப்புபூக்களின் மாநாடு, , பொன் வானம், , சேலைப் பூக்கள்ஆசை நதிபூவுக்குள் பூகம்பம்இதயம் கருகும் ஒரு வாசனை,

    அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும் பாம்புபாம்பு‘ என்பது அடுக்குத் தொடர்; ‘பாம்பு‘ எனப் பிரித்தாலும் இது பொருள் தரும். சலசல‘ என்பது இரட்டைக் கிளவி; ‘சல‘ என்று பிரித்தால் இது பொருள் தராது. இதுதான் அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு.

    இதனைக் கவிஞர் வைரமுத்து ஜீன்ஸ்‘ படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்படுத்தியுள்ளார்:

    சலசல சலசல இரட்டைக்கிளவிதகதக தகதக இரட்டைக்கிளவிஉண்டல்லோ… தமிழில் உண்டல்லோ?பிரித்து வைத்தல் நியாயம் இல்லைபிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லைஒன்றல்லோ… ரெண்டும் ஒன்றல்லோ?’

    வைரமுத்து திரையில் கொட்டிய தீந்தமிழ் இன்னும் தொடர்கிறது.அத்தமிழைப் பேசுவதாக இருந்தால் அதற்குத் தனியாக ஒரு நிகழ்ச்சியே வேண்டும்.

    திரையில் தீந்தமிழினைத் தந்த ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள்.இன்னும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். நேரம் கருதி , காலம் கருதி பலவற்றை சொல்ல முடியா நிலையில் இருக்கிறேன்.என்றாலும் சொல்லாமல் இருக்கவோ தொடாமால் இருக்கவோ முடியாதிருக்கிறது. ஆசையால் சில …..

    ஐய அணி‘ என்பது அதிசய அணியின் ஒரு வகை. தெய்வப் பெண்ணோமயிலோகனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோஎன் நெஞ்சம் மயங்குகின்றதே!‘ என்னும் பொருளைத் தரும் திருக்குறள் காமத்துப் பாலின் முதல் குறட்பாஐய அணியில் அமைந்தது.

    மாஞ்சோலைக் கிளிதானோமான்தானோ?
    வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ? –
    இவள்ஆவாரம் பூதானோநடை தேர்தானோ?
    சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?’

    எனக் கிழக்கே போகும் ரயில்‘ படத்திற்காக கவிஞர் முத்துலிங்கம் பாடி இருக்கும் பாடல் ஐய அணிக்கு நல்ல உதாரணம்.

    முரண் அணி :ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொல்லும்பொருளும் வருவது முரண் அணி.

    இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்
    இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்

    என ஒருதலை ராகம்‘ படத்திற்காக டி.ராஜேந்தர் எழுதிய பாடலில் முரண் அணி இடம் பெற்றது. தாய் குழந்தைக்காகப் பாடுவது தாலாட்டுகவிஞரோ இது குழந்தை பாடும் தாலாட்டு‘ என்கிறார். பூபாளம் காலையில் பாடப்பெறுவதுகவிஞரோ, ‘இது இரவு நேர பூபாளம்‘ என்கிறார். இதே போல இது மேற்கில் தோன்றும் உதயம்‘ என்றும், ‘நதியில்லாத ஓடம்‘ என்றும் பாடுவது அழகிய முரண்கள் ஆகும்.

    இன்னும் என் தாகம் அடங்கவில்லை. நிறைவாக கே.டி.சந்தானம் என்னும் ஆளுமையின் தீந்தமிழைக் கேட்டுப்பாருங்கள்.

    வெண்நிலவைக் குடைபிடித்து
    வீசுதென்றல் தேர் ஏறி
    மென் குயில்தான் இசை முழங்க
    மீன் வரைந்த கொடியசைய
    கண்கவரும் பேரழகி
    கனகமணிப் பொற்பாவை
    அன்ன நடை ரதியுடனே
    அழகுமகன் வில்லேந்தி
    கண் முல்லைதாமரை,மா
    தனி நீலம்அசோகமென
    வண்ணமலர்க் கணை தொடுத்தான்
    வையமெல்லாம் வாழ்கவென்றே!

    அனங்கன் அங்கஜன் அன்பன்
    வசந்தன் மன்மதன் என்றும்
    வணங்கும் என் உயிர் மன்னவா
    மண் உயிர் பிம்பம் வழங்கும்
    உன் புகழ் சொல்லவா

    கதம்பம் செண்பகம் தங்கும்
    கருங்கூந்தல் கவின் பொங்கும்
    கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
    அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே

    ஆடலும் பாடலும் அன்பின்
    ஊடலும் கூடலும் இன்பம்
    தேடலும் உன் செயல் அல்லவா
    நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

    அழகு தமிழே பழகும் இசையே
    அமுத நிலையே உனது செயலால்
    அந்தரங்கச் சிந்து பாடுவார்
    சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

    மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
    அடைந்துள்ளம் குளிர் தங்கம்
    கலந்தன்பின் நலம் காணுவோம்
    குணம்கொள் பெண் அணங்கே
    உன் மனம் கொண்டே மனம் தந்தேன்
    இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

    Share
  • மழை வீழும் நேரம் | இசைக்கவி ரமணன் பாடல்

    மழை வீழும் நேரம் | இசைக்கவி ரமணன் பாடல்

    இசைக்கவி ரமணன் இயற்றி இசையமைத்துப் பாடிய மழை வீழும் நேரம் என்ற இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான்

    திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான்

    திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் பாடல்கள் சிறப்புடையவை. ‘பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!’ என்றும் ‘நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!’ என்றும் மெய்யுருகப் பாடியுள்ளார். இவற்றை, செஞ்சியில் வாழும் பாலாஜி இராமானுஜ தாசன் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆட்சிமொழிப் பயிலரங்கம் | அண்ணாகண்ணன் உரை

    ஆட்சிமொழிப் பயிலரங்கம் | அண்ணாகண்ணன் உரை

    தமிழ் வளர்ச்சித் துறையின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பவளவிழா அரங்கில் 18.10.2022 அன்று நடந்தது. இதில் ‘மொழிப் பயிற்சி’ என்ற பொருண்மையில், முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

    படப்பதிவு – பரந்தாமன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாவின் ஆங்கில நேர்காணல்

    அண்ணாவின் ஆங்கில நேர்காணல்

    அமெரிக்க, ஜப்பான் பயணங்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய அறிஞர் அண்ணா, அகில இந்திய வானொலி நிலையத்திற்கு ஆங்கிலத்தில் அளித்த நேர்காணல் இது. அந்த நாடுகளில் தாம் சந்தித்த மனிதர்கள், இடங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து இதில் பேசியுள்ளார்.

    The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Interview in English to All India Radio on his visit to United States of America & Japan.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) தமிழ்த் திரையிசைப்பாடல்களில் அந்தாதி  – ஓர் ஆய்வுப் பார்வை

    (Peer Reviewed) தமிழ்த் திரையிசைப்பாடல்களில் அந்தாதி – ஓர் ஆய்வுப் பார்வை

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்                                                                                                                         
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    முன்னுரை

    மரபு என்பது மாறாதது. மாற்றம் என்பதும் மாறாதது. அப்படியானால் மரபு மாறுமா? அல்லது மாறுவது மரபாகுமா? என்றால் உறுதியாக இல்லை. மரபு மாறாதது என்பது மட்டுமன்று; மாறுவது மரபாகாது. மாற்றமடைவது மரபின் பூக்களே! அடிமரமாகிய மரபு என்றைக்கும் மாறாது. அப்படி மாறினால் அது மரபாகாது. மாறினால் என்னாகும்? பிறிது பிறிதாகும். கட்டமைப்பு சிதறிவிடும். என்னதான் தமிழில் புதுக்கவிதை,  ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமரைக், பழமென்ரியு எனக் கவிதைப்பூக்கள் புதுமையாகப் பூத்தாலும் அவற்றைத் தாங்குவது மரபின் வேர்களே! அல்லது மரபாகிய வேரே! இந்தப் பின்புலத்தில் மரபார்ந்த யாப்புக் கூறுகளில் ஒன்றாகிய அந்தாதியில் அமைந்த திரையிசைப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    கட்டுரைக் கட்டுமானம்

    ‘அந்தாதி’ என்னும் மரபியல் சார்ந்த யாப்பு நெறி, மெட்டுக்களுக்கு எழுதப்படும் திரையிசைப் பாடல்களில் அமைந்துள்ள பாங்கினை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் வந்த ஒருசில பாடல்களையே தனக்குத் தரவுகளாகக் கொள்கிறது. விதிவருமுறையில் அமைந்த இக்கட்டுரை, விளக்கவியல் திறனாய்வு நெறிப்படி கட்டமைக்கப்படுகிறது. மரபும் புதுமையும் இணைந்து இழையும் இத்தகைய பாடல்கள் ஆழமான மேலாய்வுக்குரியது என்னும் நோக்கத்தை முன்னிறுத்துகிறது. திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையுணர்வின் அடர்த்தி இன்னும் கூடுதலாக அமைவதோடு, மரபின் நிழலை அடையாளம் காணும் முயற்சியும் கூடும் என்பனவற்றைப் பயனாகக் கொள்கிறது.

    அந்தாதியின் இலக்கிய நிலை

    அந்தாதித் தொடைத் துளிகளைக் கொண்ட பாடல்களிலிருந்து அந்தாதி என்பது தனியொரு இலக்கியமாக உருவெடுத்தது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் என்பது ஆய்வறிஞர் கருத்தாகும். காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதியே அந்தாதி இலக்கியத்தின் தலையிலக்கியமாகும். காரைக்கால் அம்மையாருக்குப் பின் சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்தடிகள், பரணதேவ நாயனார், நம்பியாண்டார் நம்பி முதலியோர் அந்தாதி இலக்கியத்தை வளர்த்த சான்றோர்கள் ஆவர். ஆனால் இதற்கு முன் தோன்றிய திருமந்திரத்தின் நான்காம் மந்திரம் முழுமையும் அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்டது. தேவாரப் பகுதிகளும் திருவாசகத்தின் திருச்சதகமும் அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்டவையே. அந்தாதி தனி இலக்கியமாக உருப்பெற்ற காலத்திற்குப் பின்னும் அதன் தொடையழகில் கவிஞர்கள் மயங்கியது உண்மை என்பது இதனால் புலனாகிறது.

    அந்தாதி இலக்கியக் கூறுகளுக்கும் அந்தாதி இலக்கியத்திற்குமான ஒரு நுண்ணிய வேறுபாடு உண்டு. அந்தாதிக் கூறுகள் பாட்டின் இடையில் வருவன. ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்குமான இயைபு. ஆனால் அந்தாதி இலக்கியம் மாறுபட்டது. அந்தாதி இலக்கியத்தின் முதற்சீரும் ஈற்றுச்சீரும் ஒன்றாகவே அமைய வேண்டும். பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி என்னும் நூல் ‘உதிக்கின்ற’ எனத் தொடங்கி ‘உதிக்கின்றவே’ என நிறைவடைவது காணலாம். ‘மெய்தான்’’ எனத் தொடங்கி ‘மெய்யனே’ என்று முடிவது திருச்சதகம். ‘பூவான்’ எனத் தொடங்கிப் ‘பூவே என்று முடிவது சிவப்பிரகாசர் எழுதிய ‘நான்மணிமாலை’. கவிக்கோ துரை.வசந்தராசன் எழுதியுள்ள ‘வேல் வேல்! வேல்!’ என்னும் குறளந்தாதி வேலில் தொடங்கி வேலிலேயே நிறைவடைகிறது.

    அந்தாதித் தொடையில் பாரதி எழுதிய இலக்கியங்களான பாரதமாதா நவரத்தினமாலை, திருத்தசாங்கம், விநாயகர் நான்மணி மாலை முதலியன முதற்சீரும் ஈற்றுச்சீரும் பொருந்துமாறு அமையவில்லை.

    சிற்றிலக்கியங்களுக்கு வரையறை கிடையாது எனினும் அந்தாதி இலக்கியம் அவற்றுள் ஒன்றாகவே கருதப்படுகிறது. வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, ஒலியந்தாதி, கலியந்தாதி, சிலேடையந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி எனப் பலவாறு அமைவதுண்டு.

    ‘அந்தாதி’ என்னும் பெயர் தாங்கித்தான் அந்தாதி இலக்கியம் அமைய வேண்டுமென்பதில்லை. இரட்டை மணிமாலை, மும்மணி மாலை, ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, அலங்காரப் பஞ்சகம் முதலான பல்வேறு சிற்றிலக்கியங்களும் அந்தாதித் தொடையிலேயே அமைந்தவை என்பது நோக்கத்தக்கது. அந்தாதி ரசிப்பதற்குரியது. இந்த ரசனை சங்கக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது.

    மண்திணிந்த நிலனும்
    நிலனேந்திய விசும்பும்
    விசும்பு தைவரு வளியும்
    வளித் தலைஇய தீயும்
    தீ முரணிய நிலனும் என்றாங்கு
    ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

    என்னும் புறநானூற்று வரிகளில் அடியின் முடிவு தொடக்கமாகி அமைந்துள்ள பாங்கினை அறியலாம்.

    மால்வரை ஒழுகிய வாழை
    வாழை பூவெனப் பொலிந்த ஓதி

    என்னும் சிறுபாணாற்றுப்படையிலும், அந்தாதித் தொடை அழகுற அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்து பாடியவரான காப்பியாற்றுக் காப்பியனார் அப்பத்து முழுமையும் அந்தாதித் தொடையில் அமைத்துப் பாடியுள்ளார். புறப்பாடல் மட்டுமன்றி அகப்பாடல்களிலும் அந்தாதி அமைந்த காலம் உண்டு.

    மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்ட கொல்
    வண்டின் மான்குணம் மகிழ்நன் கொண்டான் கொல்?”

    என்னும் ஐங்குறுநூற்றிலும்,

    குன்றகத்ததுவே கொழுமிளைச் சீறூர்
    சீறூரோளே நாறுமயிர்க் கொடிச்சி
    கொடிச்சி கையகத்ததுவே

    என்னும் நற்றிணையிலும் அந்தாதித் தொடைகள் ஆங்காங்கே அழகுகாட்டி அமைந்திருக்கின்றன.

    திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னி செங்கோல் அதுவோச்சி
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயற்கண்ணாய்
    மங்கை மாதர் பெருங்கற்பென்று
    அறிந்தேன் வாழி காவேரி

    என்னும் சிலப்பதிகார வரிகளில் இரண்டு அடிகளே அந்தாதியாக வந்திருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கது.

    படைப்பிலக்கியத்தை விஞ்சும் திரையிசைப்பாடல்கள்

    பெரும்பாலும் மெட்டுக்கு எழுதப்படுபவையே திரையிசைப்பாடல்கள். உண்மையில் கவித்துவத்திற்கான உரைகல்லும் திரையிசைப்பாடல்களுக்குமான உரைகல்லும் வெவ்வேறானவை. கவிதை நூல்களுக்கும் மேடைக்கவியரங்கத்திற்குமான வேறுபாடாகக் கொள்ள முடியும். கவிதை நூல்கள் காலங்கடந்து நிற்பன. நிற்பதற்கு உரியன. நிற்க வேண்டியன. எல்லா கவிதை நூல்களுக்கும் இது பொருந்தாது. பாரதிதாசன் எழுதிய எல்லாக் கவிதை நூல்களும் வெற்றியடையவில்லை என்பது இங்குக் கருதத்தக்கது. திரையிசைப்பாடல்களின் வெற்றி பெரும்பாலும் அமைக்கப்படும் இசையைச் சார்ந்துள்ளது என்பது உண்மையேயாயினும் அவற்றுள்ளும் எழுதப்படும் வரிகளுக்காகக் கொண்டாடப்படுவன பல உண்டு. அவை குறைந்த விழுக்காடாயினும் சிறந்த வரிகளாக நின்று சிந்தையைக் கொள்ளை கொள்ளுகின்றன என்பதில் ஐயமில்லை. ஒருசில நேர்வுகளில் பண்பட்ட இலக்கியக் கூறுகளையும் விஞ்சி நிற்கக் கூடிய கற்பனை வளம் வடிவ அழகு, உணர்ச்சியோட்டம் முதலானவற்றைத் திரையிசைப்பாடல்களில் காண முடியும். ‘மங்கையர் திலகம்’ என்ற ஒரு திரைப்படம். அதில் மருதகாசி எழுதிய ஒரு தாலாட்டுப் பாடலில் வரும் கற்பனை தமிழ்க்கவிதைகளின் அத்தனைக் கற்பனைகளையும் விஞ்சி நிற்பதாக உள்ளது. தாய் தாலாட்டுகிறாள். வாடைக்காற்று குழந்தைக்கு ஆகாது. வாடைக்காற்றை நோக்கித் தாய் பாடுகிறாள்.

    நடுங்கச் செய்யும் வாடைக்காற்றே!
    நியாயமல்ல உந்தன் செய்கை!
    தடைசெய்வேன் தாழைப் போட்டு!
    முடிந்தால் உன் திறமை காட்டு!’

    ‘சன்னலின் கதவை மூடிவிட்டால் உன்னால் என்ன செய்ய முடியும்? என் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்க முடியுமா உன்னால்? உன் வேகத்தால் சன்னலைத் துளைத்துக் கொண்டு வர முடியுமா? முடியாதே!’ என்று அந்தப் பாசத்தாய் வாடைக்குச் சவால் விடுகிறாளாம். நந்திக் கலம்பகம், கம்பராமாயணம் போன்ற செவ்விலக்கியங்களில் மட்டுமே காண்பதற்குரிய அரிய அழகிய கற்பனையை ஒரு திரையிசைப்பாடலில் காணமுடிகிறதல்லவா?

    திரையிசைப்பாடல்களில் அந்தாதித் தொடை

    பல்வேறு உத்திகளில் இசையைத் தழுவி அமைக்கப்படுவன திரையிசைப்பாடல்கள். அத்தகைய திரையிசைப்பாடல்களில் அந்தாதித் தொடை பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் வெற்றியும் பெற்றிருக்கிறது.

    ஆத்மநாதனும் அந்தாதியும்

    எம்.கே.ஆத்மநாதன் ‘‘நாலுவேலி நிலம்’ என்ற படத்தில் அந்தாதித் தொடையில் நாட்டுப்புறச் சாயலில் ஒரு பாட்டை எழுதியிருக்கிறார்.

    ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
    நல்ல பாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே
    நல்ல பாம்பு வேடங்கொண்டு நடுசாமம் வந்தாயானால் 
    ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்
    ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தில் பறந்தாயானால்
    செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்!
    செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
    பூமியைக் கீறியல்லோ புல்லாய் நான் மொளைச்சிடுவேன்!
    பூமியைக் கீறியல்லோ புல்லாய் நீ முளைத்தாய் ஆனால்
    காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை
    காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன்
    ஆலா மரத்தடியில் அரளிச் செடி நானாவேன்!
    அத்தியிலே மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்!
    நத்திவரும் அத்தானுக்கு முத்துச்சரம் நானாவேன்!’’

    அந்தாதி படிப்பதற்கும் பாடுவதற்கும் எளிது. ஆனால் படைப்பதற்கு அரிது. காரணம் அந்தம் ஆதியாக இணைக்கப்படும் அசை, சீர், அடி முதலியவை சொற்பொருள் இணைப்பாக இருக்க வேண்டும். கவிதை வல்லாளர்கள் அமைப்பார்கள். மற்றவர்கள் கதைப்பார்கள். யாப்பின் உறுப்புக்களுள் தொடை என்பதும் ஒன்று. கட்டுதற்குப் பயன்படும் உறுப்புக்கள் வேறு. கட்டிய பின் பார்த்து ரசிக்கின்ற பாங்கு வேறு. பின்னது நோக்குவாரின் பார்வையில் உள்ளது. அதனால்தான் அந்தாதி என்பது யாப்பின் கூறுகளுள் ஒன்றாகக் கொள்ளாமல் தொடைவிகற்பங்களுள் ஒன்றாகக் கொண்டார்கள். ஆத்மநாதனின் பாடலில் காதலர்கள் தங்களுக்குள் கண்ட கனவைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அந்தக் கனவுப் பரிமாற்றம் ஊடலின் பரிணாமமாக ஒளிர்கிறது. அதுவும் அந்தாதியில் அமைகிறதுபோது ‘காதலி முதலானால் காதலன் முடிவாகிறான் காதலன் முதலானால் காதலி முடிவாகிறாள்’ என்னும் அரிய தத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது.

    கண்ணதாசனும் அந்தாதியும்

    ‘கவலையில்லாத மனிதன்’ என்று கவிஞர் கண்ணதாசனே எழுதித் தயாரித்த படம். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ எனத் தொடங்கும் பாடலில் அந்தாதியைக் கையாண்டிருக்கிறார்.

    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்! வந்தாரே
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்!
    கண்பட்டமோகமோ? கைபட்ட வேகமோ?
    புண்பட்ட நெஞ்சிலும் புதுமைகள் தோன்றுமோ?
    எண்ணங்கள் மாறியும் மாறாத சொந்தமோ?
    பெண்மையின் நீதியில் பண்பட்ட பந்தமோ?

    வெண்முல்லைச் சோலையில் பொன்வண்டு பாடுமோ?
    பொன்வண்டு பாடினால் பூந்தென்றல் வீசுமோ?
    பூந்தென்றல் வீசினால் பருவங்கள் பேசுமோ?
    பருவங்கள் பேசினால் பலனின்றிப் போகுமோ?
    மண்பெற்ற பிள்ளைகள் எண்ணற்ற கோடியே!
    எண்ணற்ற கோடியில் பெண்மக்கள் பாதியே!
    பெண்மக்கள் காதலை ஆண்மக்கள் நாடியே
    மணமாலை சூடிடும் மணமேடை தேடியே!
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தாரே
    பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தார்!”

    ஒரு அடியின் ஈற்றுச் சீரையே அடுத்த அடியின் முதற்சீராக வைத்து  எழுதிய கண்ணதாசன் ஒரு கண்ணியின் ஈற்றுச்சீரை அடுத்த கண்ணியின் முதற்சீராக வைத்துப் புனைந்த பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

    ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்!
    கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்!
    ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்!
    ஓசையின்றிப் பேசுவது ஆசை என்னும் வேதம்!
    வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்!
    மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்!
    நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்!
    ராகந்தன்னை மூடிவைத்த வீணை அவள் சின்னம்
    சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலைக் கோலம்;!
    என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்!
    காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்!
    கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில கூடும்!”

    என்ற பாடல் எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழக இளைஞர்களின் உதடுகளை நனைத்த பாடல். இன்னொரு பாடல் இதயத்தையே நனைத்தது. அந்தப் பாடலும் அந்தாதித் தொடையால் அமைந்ததுதான்.

    வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்!
    நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்!
    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்!
    கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்!
    மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்!
    பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்!
    தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்!
    புதுக்கலைகள் பெறுவதற்குள் பூமாலை மணவினைகள்!
    மணவினைகள் யாருடனோ? மாயவனின் விதிவழியோ!
    விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்!”

    வசந்தத்தில் தொடங்கி வசந்தத்தில் முடித்திருக்கும் கண்ணதாசனின் அரிய திரையிசைப்பாடல் இது. இந்தப் பாடலும் ஒரு அடியின் ஈற்றுச்சீரைத் தொடரடியின் முதற்சீராக வைத்து எழுதிய அரிய பாடல். இவ்வாறு அமைத்து எழுதுவதில் இவர் முன்னோடியாக இருக்கக்கூடும்.

    வாலியும் அந்தாதியும்

    கண்ணதாசனும் வாலியும் திரையிசைப் பாடலாசிரியர்கள் என்றே அறியப்பட்டுள்ளனர். ஆனால் தமிழிலக்கியக் கவிதை வரலாற்றில் கண்ணதாசனின் இடத்தைத் திரைப்படப்பாடலாசிரியர் என்னும் வரையறைக்குள் அடக்கிவிட இயலாது. இதற்கு அவருடைய கவிதைத் தொகுதிகளே சான்று. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் பெருமக்களில் கண்ணதாசன் இரண்டு பொருண்மைகளுக்காக நினைக்கப்படலாம். ஒன்று, தனிமனித அனுபவத்தையே மிகச்சிறந்த கவிதைகளாக்கியது. இரண்டு, இழுத்த இழுப்புக்கு மொழியைக் கையாளும் இலாவகம். திரைப்பட உலகில் கலைஞர் மற்றும் கண்ணதாசன் ஆகியோரைப் போல மரபியல் வீச்சும் ஆழமும் கொண்ட பிறரைக் காண்பது அரிது. வாலி முழுமையான திரையிசைப் பாடலாசிரியர். கண்ணதாசனைவிட மெட்டுக்குப் பொருத்தமாக எழுதுவதில் வாலி விஞ்சி நிற்பார். ஆனால் கண்ணதாசனின் திரையிசைப்பாடல்களில் அடைந்த இலக்கிய வெற்றியை வாலி இறுதிவரை தொடவே முடியவில்லை. பலராலும் பாராட்டப்படும் பாண்டவர் பூமி, அவதார புருஷன் முதலிய படைப்புக்களின் இலக்கியத் தரமும் சிந்தனைக்குரியது. மேடைக் கவியரங்கத்தில் வாலியின் வெற்றி அளவிட முடியாதது. அது அவருடைய சொற்சேர்க்கைகளாலும் சிலேடைகளாலும் பெற்றவை. இவற்றை ஓர் அறிமுகமாகக் கொள்ளலாமே தவிர ஒப்பீடாகக் கொள்ளக் கூடாது. அது பெரியதொரு ஆய்வுக்குரியது. வாலி முதன் முதலாக எழுதிய ‘கற்பகம்’ என்னும் திரைப்படத்திலேயே அந்தாதித் தொடையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    பக்கத்து வீட்டுப் பருவமச்சான் பார்வையிலே படம் புடிச்சான்!
    பார்வையிலே படம்புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்!
    மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்!
    மருக்கொழுந்து வாசத்திலே மாந்தோப்பில் வழி மறிச்சான்!
    மாந்தோப்பில் வழிமறிச்சு மயக்கத்தையே வரவழைச்சான்!

    தைமாதம் தாலிகட்ட மார்கழியில் கைய புடிச்சான்!
    வைகையிலே வெள்ளமில்லை விடியும் வரை கதைபடிச்சான்!
    விடியும் வரை கதை படிச்சு முடியாமல் முடிச்சு வச்சான்!

    ஊரெல்லாம் உறங்காது உள்ளமட்டும் அடங்கிவிடும்
    ஓசையெல்லாம் அடங்கிவிடும் ஆசை மட்டும் அடங்காது!
    ஆசை மட்டும் அடங்காமல் அவனை மட்டும் நெனச்சிருப்பேன்

    இந்தப் பாடல் படத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவரின் மகள் பாடுவதாக வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மகளுக்குக் காதல் வரக்கூடாத ஒன்று என்பதன்று. அந்த வெளிப்பாடு இப்படித்தான் அமைய வேண்டுமா என்பது பொருளுள்ள வினாவே! ஒரு அறிக்கை போல அமைந்த இந்தப் பாடலில் தொடையழகு என்று தனித்து இல்லை. ஆனால் அந்தாதி அங்கங்கே தலைகாட்டுகிறது. ஓர் அடியின் ஈற்று இரண்டு சீர்களை அடுத்த அடியின் தொடக்கமாக வைத்துப் புனையப்பட்ட பாடல் இது.

    வாலியின் புதிய முயற்சி

    அந்தாதிக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுக்க முயன்றவர் வாலி. ஓரடியின் அல்லது ஒரு பாட்டின் இறுதிச்சீர், அசை என்பவற்றுள் ஒன்று அடுத்த அடியின் தொடக்கமாக அமைவதுதான் அந்தாதி. ‘அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி’ என்பது காரிகை. வாலியோ பொருளோடு கூடிய தொடரையே அந்தாதியாக்கிப் பாடுகிறார். அந்தத் தொடர் முந்தைய வரியின் ஈற்றாகவன்றி, நடுவே அமைந்திருக்கிறது.

    என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்துப் போனவன் போனான்டி
    தன்னைக் கொடுத்து என்னையடைய வந்தாலும் வருவாண்டி

    என்ற ஒரு கண்ணியில் முதற்கண்ணியின் நடுவில் இருக்கிற ‘தன்னைக் கொடுத்து’ என்ற தொடரை அப்படியே எடுத்து அடுத்த வரியின் தொடக்கமாக அமைத்துக் காட்டுகிறார். இதே நெறியில் பின்வரும் கண்ணிகளையும் எழுதியிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

    இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்துப் போனவன் போனான்டி
    ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவான்டி

    நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துப் போனவன் போனான்டி
    நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவான்டி

    ஆசை மனசுக்கு வாசலை வைத்துப் போனவன் போனான்டி
    வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவான்டி

    அந்நாள் வரை வந்த அந்தாதியில் இது ஒரு மாறுபட்ட நிலை!. போற்றத்தக்க நிலை!. வடிவத்தில் மாற்றம் என்பதும் இதுதான். மரபில் மாற்றம் என்பதும் இதுதான்.!

    நிறைவுரை

    கவிதையை எப்படி வேண்டுமானாலும் சுவைக்கலாம். பெண்ணைக் கனியென்பது இலக்கிய மரபு. எல்லாப் பக்கமும் கனி இனிக்கும் என்பது நடப்பியல் உண்மை. ‘செவி நுகர் கனிகள்’ என்பது கம்பன் வாக்கு. கற்பனை, உணர்ச்சி, கருத்து, வடிவம் என்னும் கவிதைக் கூறுகளுள் அந்தாதி என்பது வடிவத்தோடு தொடர்புடையது. எழுத்து, அசை, சீர், தளை என்பன கவிதையின் அகக்கட்டுமானக் கூறுகள் என்றால் புறத்துப் பொலிவைக் காட்டுவன தொடை விகற்பங்கள். கட்டிடத்தின் அகமும் புறமும் போல! அவ்விகற்பங்களுள் அந்தாதி கவிதையை ஈர்க்கும் காரணிகளில் தலையாயது. சிறந்தது. இந்தக் காரணி தமிழின் தங்ககாலமான சங்கக் காலம் முதல் கணினி காலமாகிய தற்காலம் வரைத் திரையிசைப்பாடல்கள் உட்பட எழுதப்படும் கவிதைகளில் மாறாமல் நின்று நிலவுகிறது என்பதை இக்கட்டுரை ஓரளவு விளக்கியிருக்கலாம்.

    உதவிய நூல்கள்

    1. சங்க இலக்கியங்கள் — மர்ரே பதிப்பு
    2. சிலப்பதிகாரம் – கழகப் பதிப்பு
    3. பல்வேறு திரையிசைப் பாடல்கள்
    4. யாப்பருங்கலக்காரிகை – கழகப்பதிப்பு
    5. தமிழிலக்கிய வரலாறு – கா.சு.பிள்ளை

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘திரையிசைப் பாடல்களில் அந்தாதி – ஒரு ஆய்வுப் பார்வை’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பார்கள். இந்தக் கட்டுரை ‘பழைய மொந்தையில் புதிய கள்’ளாக இனிக்கிறது.
    2. மரபு சார்ந்தே சிந்தித்துப் பழகிய பேராசிரியர்களின் இத்தகைய கட்டுரைகள் புதுமையின் அடர்த்தியைக் கூட்டும் என்பதில் ஐயமில்லை.
    3. அந்தாதியைத் தொடைவிகற்பத்துள் ஒன்றாக முன்னோர்கள் காட்டியிருப்பது அதன் அழகு நோக்கி என்னும் கட்டுரையாளர் கருத்து அருமை!
    4. அந்தாதி இலக்கியத்தின் இடைப்பகுதி மட்டுமன்று தொடக்கமும் முடிவும் கூட ஒரே சொல்லால் நிறைவு பெற வேண்டும் என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுக்களைத் தருவது பாராட்டுக்குரியது.
    5. ‘திரையிசைப்பாடல்களில் அந்தாதியின் வரலாறு’ என்ற தனித்த ஆய்வுக்கு இக்கட்டுரை வழிகோலக் கூடும்.
    6. கவிஞர் திரு ஆத்மநாதனில் தொடங்கி வாலிவரை தரவுகளைக் தேடிக் கொடுத்திருக்கும் ஆய்வாளரின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.
    7. விரிவும் ஆழமும் கொண்ட அந்தாதி பற்றிய முற்பகுதி விளக்கவுரை  கட்டுரையாளரின் சங்க இலக்கியப் புலமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
    8. என்னதான் புதுமை என்றாலும் மரபின் வேர்களிலிருந்துதான் பூக்க முடியும் என்பதை உறுதி செய்யும் தெளிவான கட்டுரையாக இது மதிக்கப்படலாம்.


    Share
  • நான் இந்து மதத்தின் துப்புரவாளன் | அறிஞர் அண்ணா உரை

    நான் இந்து மதத்தின் துப்புரவாளன் | அறிஞர் அண்ணா உரை

    1967இல் காரைக்குடியில் உள்ள இந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணா பங்கேற்றார். ‘அண்ணாதுரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது’ எனத் தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் பேசினார். அதற்குப் பதில் அளித்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உங்கள் குழந்தைக்கான 6 பணப் பாடங்கள்

    உங்கள் குழந்தைக்கான 6 பணப் பாடங்கள்

    உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய, பணம் தொடர்பான ஆறு பாடங்கள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் குறிப்புகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share