Author: செய்தியாளர்-2

  • ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா.

    21.10.2017, சனிக்கிழமை, காலை 09.30 மணி வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம், இலங்கை

    final rapper 1

    final rapper2

    கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என பல்வகைத் தளங்களில் உலாவருகின்றன.

    இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்மொழிக்கு இன்னொரு புதிய வரவாக ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூல் கிடைக்கின்றது. பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த‌ ஆயிரத்திற்கும் அதிகமான கவிஞர்களின் கவிதைகளினை ஒரே நூலில் காணும் வாய்ப்பினை வழங்கும் நூலே ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலாகும்.

    2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நூலுக்கான கவிதைகள் பெறுவது தொடர்பான செய்திகள் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் வெளிப்படுத்தப்பட்டன. உலக அளவில் ஆகக்குறைந்தது 25 நாடுகளின் கவிஞர்களையாயினும் இணைப்பதே இப்பணியின் முதல் இலக்கு எனினும் பணி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே பாரிய வரவேற்பு உலகெங்கிலும் இருந்து கிடைத்தது. ஒவ்வொரு தேசங்களில் இருந்தும் கவிதைகளினை பெறும்பொருட்டு அந்தந்த தேசங்களுக்கு ‘செயலாற்றுநர்’ எனும் பணியில் பலர் ஈடுபட்டனர். இலங்கை, இந்தியா போன்ற தேசங்களுக்கு மாவட்ட ரீதியாகவும், மாநில ரீதியாகவும் செயலாற்றுநர்கள் இயங்கினர். செயலாற்றுநர்களின் தீவிரமான முயற்சியினால் விரைவாகவே கவிஞர்கள் நூலுடன் இணைந்துகொள்ளத் தொடங்கினர். குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியா தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் கவிஞர்களும் இப்பெருநூலில் இடம்பெறுகின்றனர். இலங்கையின் அனைத்துப் பிரதேச கவிஞர்களும் பெருநூலுக்கு கவிதை அளித்துள்ளனர்.

    ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலில் 32 நாடுகளின் 1098 கவிஞர்கள் இடம்பெறுகின்றனர். நூலின் மொத்தப் பக்கங்கள் 1861 ஆகும். இப்பக்கங்கள் ஏ4 தாள் அளவு கொண்டவை. நூலொன்றின் மொத்த நிறை 04.415 கிலோகிராம் ஆகும். நூலினை வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடுகின்றது.

    இலங்கையின் மூத்த கவிஞர்கள் என சொல்லத்தக்கவர்கள் பலரும் பெருநூலினை அலங்கரிக்கின்றனர். சேரன், சோ.பத்மநாதன், எம்.ஏ.நுகுமான், அனார் என இப்பட்டியல் நீள்கின்றது. இந்திய அளவில் மூத்த, இளைய, சினிமாசார் கவிஞர்கள் என பலரும் நூலில் உள்வாங்கப்பட்டனர். அப்துல் ரகுமான், வைரமுத்து, கலைஞர் கருணாநிதி, கமல்ஹாசன், அறிவுமதி, பா.விஜய், தாமரை என யாவரும் இப்பெருநூலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நூலின் பின் அட்டைக்குறிப்பினை தமிழுலகு அறிந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வரைந்திருக்கின்றார்.

    நூலில் 12 வயதுடைய பிள்ளைக்கவி முதல் தொன்னூறு வயது கடந்த கவிஞர்கள் வரையும் இடம்பெற்றுகின்றனர். இந்தியா தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தவிர புதுடில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் கவிஞர்களும் நூலில் இடம்பெறுகின்றமை சிறப்பு.

    புலம்பெயர் தேசத்தின் மூத்த, இளைய கவிஞர்களும் நூலில் பங்கேற்கின்றமை நூலுக்கு இன்னும் மெருகூட்டுகின்றது. உதாரணமாக சுவிட்சர்லாந்து தேசத்தின் 45 கவிஞர்கள் நூலிற்கு கவிதை அளித்துள்ளனர். இப்படியாக புலம்பெயர் தேசத்தினரின் ஒத்துழைப்பு நூலுக்கு பலம் சேர்க்கின்றது.

    ஆசியாவின் பிற நாடுகளின் கவிஞர்களையும் பெருநூலில் காணலாம். மலேசியக் கவிஞர்கள் 15 பேர்கள், சிங்கப்பூர்க் கவிஞர்கள் 11 பேர்களும் நூலில் இடம்பெறுகின்றனர்.

    ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலின் சிந்தனை இவ்விதமாகவே தோன்றியது. 2015ஆம் ஆண்டில் ஈழத்தின் வன்னியில் காட்டுக்குள் வைத்து ‘ஆஷா நாயும் அவளும்’ சிறுகதை நூலினை யோ.புரட்சி அவர்கள் வெளியீடு செய்த பின்னர், அவ்வனத்திலிருந்து நடந்த சிறு கலந்துரையாடலின்போது ஏற்பட்ட சிந்தனையே ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூல். யோ.புரட்சி அவர்கள் இப்பெருநூலின் செயலியக்குநர் ஆவார். கனடா யமுனா நித்தியானந்தன் நூலில் பதிப்புரிமையாளராக உள்ளார். சர்வதேச தொடர்பாற்றுநராக பரீட்சன் இயங்கினார். ஆலோசனை, மற்றும் தேசங்கள், மாவட்டங்களுக்கான செயலாற்றுநர்களும் பணிகளோடு இணைந்து நூலினை வளமாக்கினர்.

    இப்பெருநூலுக்கு கவிதை தந்த சில கவிஞர்கள் நூலினைக்காணுமுன்னெ மரணித்தமை துயரானது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நூலுக்கான கவிதை மற்றும் உரையினை தனது மரணத்திற்கு முன்னேயே தந்துவிட்டார். அத்துடன் ஆலோசகராகவும் இயங்கினார். அவர் நூலின் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாகவே மரணித்துவிட்டார். இந்தியா தமிழ்நாட்டின் பொதுச்செயலாற்றுநராக நூலுக்காக பணியாற்றி அநேகரின் கவிதைகளினை சேகரித்துத்தந்த மனோபாரதி அவர்கள் செப்டெம்பர் மாதம் மரணித்து விட்டார். கவிஞர்கள் இன்குலாப், நா.காமராசன், கல்வயல் வே.குமாரசுவாமி, அண்ணாமலை, எஸ்,ஏ.மத்தியூ, நா.ஜெயபாலன், அண்ணாமலை, நா.முத்துக்குமார், க.கிருஸ்ணராஜன் என மரணித்தோரின் பட்டியலும் உண்டு.

    இப்பெருநூலில் இலகுவாக கவிஞர்களை தேடும் பொருட்டு அகரவரிசைப்படியான பொருளடக்கம் உண்டு. உதாரணமாக சிநேகன் என்பவரின் கவிதை தேடுவதெனில் பொருளடக்கத்தில் ‘சி’ எழுத்தில் அவரது தேச அடையாளப்படுத்தலுடன் பக்கம் இடப்பட்டிருக்கும். குறித்த பக்கத்தில் முகவரி, குறிப்பு, என்பவற்றுடன் கவிதை இடம்பெற்றிருக்கும்.

    ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலானது அழகிய‌ பாதுகாப்புப்பெட்டி ஒன்றில் இடப்பட்டுள்ளது.

    ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’
    பங்கேற்கும் கவிஞர்களது 32 நாடுகளின் விரிப்பு

    01. அமெரிக்கா
    02. அவுஸ்திரேலியா
    03. அயர்லாந்து
    04. பஹ்ரைன்
    05. பர்மா(மியன்மார்)
    06. கனடா
    07. சீனா
    08. டென்மார்க்
    09. துபாய்
    10. ஈரான்
    11. இங்கிலாந்து
    12. பிரான்ஸ்
    13. ஜேர்மனி
    14. ஹொங்காங்
    15. இந்தியா
    16. இந்தோனேசியா
    17. இத்தாலி
    18. குவைத்
    19. மலேசியா
    20. நெதர்லாந்து
    21. நியூசிலாந்து
    22. நோர்வே
    23. போர்த்துக்கல்
    24. கட்டார்
    25. ரஷ்யா
    26. சிங்கப்பூர்
    27. சவூதி அரேபியா
    28. இலங்கை
    29. சுவிட்சர்லாந்து
    30. தாய்லாந்து
    31. தைவான்
    32. தென் ஆபிரிக்கா

    (இந்தியா, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் மற்றும் இந்திய பிற மாநிலங்கள், இலங்கையின் அனைத்து பிரதேசங்கள் என்பவற்றின் கவிஞர்களும் பெருநூலில் உள்ளடங்குகின்றனர்.)

    பெருநூலின் வெளியீட்டு விழாவானது கீழ்வரும் திகதியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
    காலம்: 21.10.2017, சனிக்கிழமை.
    இடம்: வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம், இலங்கை.
    நேரம்: காலை 09.30 மணி. (காலை 09.30 மணிக்கு ஆயத்தமாதல்)

    நிகழ்விற்கு தமிழுலகு அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் தலைமை வகிப்பார். அத்துடன் பத்து பேராசிரியர்கள் நூல் வெளியீட்டிற்கு முன்னிலை வகிக்கவுள்ளனர்.
    நூலின் நோக்குரையினை அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தரும் பன்முகப் படைப்பாளி, முன்னாள் இந்து கலாச்சார விரிவுரையாளர் எம்.ஜெயராமசர்மா நிகழ்த்துவார்.

    இலங்கை, இந்தியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என பல தேசங்களின் படைப்பாளர்களும் நூல் வெளியீட்டில் பங்கேற்கவுள்ளனர்.

    வெளியீட்டிற்கு முன்னதாக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய கலாச்சார பவனியும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

    செயலியக்குநர்: யோ.புரட்சி
    பதிப்புரிமை: யமுனா நித்தியானந்தன், கனடா.

    வெளியீடு:செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம்.
    பொதுத்தொடர்பு: (0094) 775892351
    tamilkavithaikal1000@gmail.com

    எழுத்து: ரசிகா

    Share
  • SHODASA MAHALAKSHMI POOJA 22.09.2017

    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 26 வகயான புஷ்பங்களை கொண்டு ஷோடச மஹாலக்ஷ்மி பூஜை

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நவராத்ரியை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை 22.09.2017 காலை 8.00 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சன்னதி முன்பு உலக மக்கள் மஹாலக்ஷ்மியின் அருளுடன் ஐஸ்வர்யம், ஆனந்தம், ஆரோக்யம் பெற கீழ்கண்ட 26 வகையான புஷ்பங்களுடன் ஸ்ரீ ஷோடச மஹாலக்ஷ்மி பூஜை நடைபெறவுள்ளது.

    1. அல்லிப்பூ – செல்வம் பெருகும்

    2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்

    3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்

    4. மல்லிகை – குடும்ப அமைதி

    5. காசாம்பூ – நன்மைகள்

    6. அரளிப்பூ – கடன்கள் நீங்கும்

    7. அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை

    8. ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும்

    9. கொடிரோஜா – குடும்ப ஒற்றுமை

    10. ரோஜா பூ – நினைத்தது நடக்கும்

    11. மருக்கொழுந்து – குலதெய்வம் அருள்

    12. சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்

    13. செம்பருத்தி பூ – நோயற்ற வாழ்வு

    14. நந்தியாவட்டை – குழந்தை குறை நீங்கும்

    15. சங்குப்பூ – தரித்ரம் நீங்க

    16. மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்

    17. தாமரைப்பூ – செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்

    18. நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்

    19. முல்லை பூ – தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்

    20. நித்திய கல்யாணி பூ *முன்னேற்றம் பெருகும்

    21. பவளமல்லி – தைவீக அருள் பெற

    22. மரிக்கொழுந்து – செல்வம் பெற

    23. வில்வம் – மஹாலக்ஷ்மி அரிள் பெற

    24. துளசி – நோய்கள் அகல

    25. தாழம்பூ – அம்பாள் அருள் பெற

    26. அருகம்புல் – வினைகள் அகல.

    இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    மேலும் தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
    வாலாஜாபேட்டை-632513
    தொலைபேசி : 04172-230033 / 09443330203
    www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
    Email : danvantripeedam@gmail.com

    Share
  • சிலப்பதிகாரப் பெருவிழா

    விழா ஏற்பாடு: அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம். மற்றும் கலசலிங்கம்- ஆனந்தம் சேவா சங்கம்

    நாள் : 20-09-2017 புதன்கிழமை மாலை 4. 30 மணி

    நிகழ்விடம்: நாரதகான சபா பேரரங்கம், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை18

    நிகழ்வுகள்: சிலம்பொலியார் 90 ஆவது பிறந்த நாள் விழா, வைணவத் தமிழ்ப் பொழிவு மற்றும் 90 மாணவர்களுக்குச் சிலம்பொலிச் செல்வன்/ சிலம்பொலிச் செல்வி விருது வழங்கல் விழா.

    நிகழ்ச்சி நிரல்:
    —————
    மாலை 4.30 -6.00

    இசை: ஶ்ரீமதி கல்யாணி

    நாட்டியம்: ஶ்ரீமதி வாணி காயத்ரி

    மொழி வாழ்த்து: கலைமாமணி T.K.S. கலைவாணன்

    மாலை 6.01– 8.30 வரை

    வரவேற்புரை: கவிஞர் இளவரச அமிழ்தன்

    தொடக்க உரை: முனைவர் க.ஶ்ரீதரன்
    வேந்தர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்
    தலைமை மற்றும்
    விருது வழங்குபவர்- தமிழ்த்திரு. கே.வைத்தியநாதன்
    ஆசிரியர், தினமணி

    சிறப்புரை. – நயவுரை நம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்,
    நிறுவனர்- ஆழ்வார்கள் ஆய்வு மையம்

    வாழ்த்துரை. கவிவேந்தர் மு.மேத்தா

    வைணவத் தமிழ்ப் பொழிவு : சிலம்பொலியார்

    நன்றியுரை. கவிஞர் செ.வ.இராமானுசன்

    விருதாளர்கள்:
    ஆய்வரங்க விருது: திரு. முரசொலி சிங்காரம் ,
    நிறுவனர், கோல்டன் சிட்டி அரிமா
    சங்கம்
    கல்வி வள்ளல் கலசலிங்கம் விருது : திரு. தடா. பெரியசாமி
    நந்தனார் சேவாஸ்ரமம் டிரஸ்ட், தொழுதூர்

    சிலம்பொலிச் செல்வன்/ செல்வி விருது: 90 மாணவமணிகள்.

    நிகழ்ச்சித் தொகுப்பு: இலக்கிய வீதி திருமதி வாசுகி பத்ரி நாராயணன்

    அன்புடையீர்,
    அமிழ்தத் தமிழ் பருகிட அன்புடன் அழைக்கின்றோம்.

    கவிஞர் இளவரச அமிழ்தன்
    நிறுவனர் மற்றும் அமைப்பாளர்,
    அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்

    முனைவர் மணிமேகலை புஷ்பராஜ்
    செயலாளர், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை
    செயலாளர், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை

    Share
  • ஈரோடு – கேஏஎஸ் நகரில் வாசகர் வட்டத் தொடக்கவிழா…

    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.

    *********************************************************************************************************************

    ஈரோடு – கேஏஎஸ் நகரில் வாசகர் வட்டத் தொடக்கவிழா…

    *********************************************************************************************************************

    5

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மாநிலமெங்கும் வாசகர் வட்டங்கள் தொடங்கப்படுகின்றன.

    1_Small

    இதன் ஒரு பகுதியாக ஈரோடு, பூந்துறை ரோடு 46 புதூர் கேஏஎஸ் நகர் பகுதியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா 03.09.2017 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இவ்வாசகர் வட்டத்தின் தலைவர் திரு கே.கே.ஏ. ஹாஜி சையது அகமது அலி அவர்கள் தலைமையேற்றார். இவர் கே.ஏ.எஸ் நகர் என்ற புதிய நகரையே உருவாக்கிய 82 வயதுப் பெரியவராவார். இவர் ‘ நகரத்தந்தை ’ என்றே இந்நகர் மக்களால் அழைக்கப்படுகிறார். இவர் இப்பகுதியில் இவரது சொந்தப் பொறுப்பில் ஒரு தனியார் நூலகத்தைத் தொடங்கி அதில் ஏராளமான நூல்களை ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கி மக்கள் பயன்பாட்டிற்காக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2_Small

    மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு த. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாசகர் வட்டத்தைத் தொடக்கிவைத்து உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் வாசிப்புப் பழக்கத்தின் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். தமிழகத்தில் எங்கெல்லாம் தொடர்பும் வாய்ப்பும் உள்ளதோ அங்கெல்லாம் இதுபோன்ற வாசகர் வட்டங்கள் தொடங்க பேரவை முழுமூச்சாகச் செயல்பட்டு வருவதாக தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார் பேரவைத் தலைவர்.

    3_Small

    முன்னதாக வாசகர் வட்டச் செயலாளர் அரிமா எஸ். கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் திரு என். தமிழ்செல்வன் நன்றி கூறினார். காசிபாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் திரு கே. துரைராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

    4_Small

    இப்பகுதியில் வசிக்கும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் மட்டுமல்லாது ஈரோடு நகரின் மிகமுக்கியப் பிரமுகர்கள் பலரும் பார்வையாளர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றது இக்கூட்டத்திற்குச் சிறப்புச் சேர்த்த அம்சமாகும்.

    படக்குறிப்பு :

    1. மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் வாசகர் வட்டத்தைத் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றுதல்…
    1. திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்கள்…
    1. குடும்பங்களுடன் பங்கேற்றோர்…
    1. ஆர்வமிக்க வாசகர் வட்டத் தலைவர் திரு கே.கே.ஏ ஹாஜி சையது அகமது அலி அவர்களுக்கு செயலாளர் திரு எஸ். கார்த்திகேயன் சால்வை அணிவித்தல்…
    Share
  • வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

    IMG_20170815_091243

    தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா இன்று 15.8.2017 ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

    IMG_20170815_110002

    காலை 8.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பாரத மாதா சன்னதியில் கோ பூஜை, கணபதி பூஜை, பூ சூக்த ஹோமம் நடைபெற்று பாரத மாதாவிற்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

    IMG_20170815_092407

    9.00 மணியளவில் சுதந்திர தின கொடியேற்று விழாவும் நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சென்னை டாக்டர் திருமதி கோகிலா செல்வராஜ், இராணிபேட்டை ஆடிட்டர் ஜி.தேவராஜன், ஆம்பூர் டாக்டர் ப்ரித்வீராஜ் மற்றும் தன்வந்திரி பீட நிர்வாகிகள் சேவார்த்திகள் கிராம பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆடி கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஹோமம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா

    Bharatha Matha (1)

    தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா 15.8.2017 நடைபெற உள்ளது

    தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா 15.8.2017 காலை 8.00 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.

    அரும்பாடுபட்டு நம் முன்னோர்கள் நமக்காக பெற்று தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமையாகும். அந்த வகையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பாரதத் தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும், தனது அன்னையின் வாக்கின்படி வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் நோய் தீர்க்கும் பீடமாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதா 73 பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளது மட்டுமல்லாது இதுவரை எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழை பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற குழந்தைகளாக பாதுகாத்திடும் அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்து உலக நலன் கருதி வழிபட்டு வருகிறார் என்பது ஸ்வாமிகளின் கூடுதல் சிறப்பாகும்.

    நாளை 15.8.2017 காலை 8.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.. மேலும் இந்த வைபவத்தில் அனைத்து பொதுமக்களும் வந்திருந்து பங்கேற்று பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளையும் பெறவேணுமாய் தன்வந்திரி குடும்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சுதந்திர தின விழா நடைபெற உள்ளது என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் .
    தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!! .

    தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
    Email : danvantripeedam@gmail.com

    Web : www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in

    Share
  • தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா

    ​​தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

    IMG_20170804_100748
    கல்வி கடவுள்’ என்ற சிறப்பை பெற்றவரான ஸ்ரீ ஹயக்ரீவருக்கு இன்று 07.08.2017 ஆவணி திருவோணம் – ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன் சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரையுடன், லக்ஷ்மி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார்.

    IMG_20170807_105622

    இவர் பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில் இடம் பெற்றவருமாவார், சரஸ்வதிக்கே குருவுமானவர், இதிகாச புராணங்களில் இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும் காட்சி கொடுத்தவர்

    ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும், ஆனந்த வாழ்க்கையும் பெறுவார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவருக்கு மாணவ செல்வங்கள் வருகிற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், மருத்துவர்கள், ஜோதிடர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், இதர ஆன்மிக பெருமக்களுக்கு கல்வி, கேள்வி ஞானமும், வாக்கு பலிதமும் ஏற்பட ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹயக்ரீவர் ஹோமமும் மஹா அபிஷேகமும் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.பங்கேற்ற மாணவ மாணவிகளுக்க பூஜையில் வைக்கப்பட்ட எழுது பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு அன்ன படையலும் இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
    வாலாஜாபேட்டை – 632513.
    Ph: 04172- 230033, 9443330203
    Web: www.danvantritemple.org Email: danvantripeedam@gmail.com
    Bank Details :Name : Sri Muralidhara Swamigal , Bank Name : State Bank of India,
    Account Number : 10917462439, Branch : Walajapet, Bank Code:0775,
    IFSC: SBIN0000775

    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழா (2017)

     

    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.

    INVITATION

    MSP-BOOK-2017-WRAPPER

    Share
  • வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் நாளை முதல் சகஸ்ரசண்டி மகாயாகம்

    23.07.2017 முதல் 30.07.2017 வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

    சர்வதேச தரச்சான்றிதழுடன் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே ஔஷதகிரி என்றும் குபேர பட்டிணம் என்றும் ஆரோக்ய பீடம் என்றும் அழைக்கப்படும் தன்வந்திரி பீடம் அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களை கொண்டு 9 அடி மூலவர் தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லட்சுமி தாயார், ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, 18 கைகளுடன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, போன்ற 73 தெய்வங்களுடன் மகான்களும் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக கொண்டு மிகவும் இரம்மியமாக இயற்கை சூழலுடன் மூலிகை வாசத் ஸ்தலமாக அமைந்து உள்ளது.
    ஷண்மத பீடமாக திகழ்கின்ற தன்வந்திரி பீடத்தில் தினசரி யாகத்துடன் அன்னதானம், மருத்துவ சேவை கோ பராமரிப்பு நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பல்வேறு வகையான பிரம்மாண்ட யாகங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 365 நாட்கள் 365 விதமான யாகங்கள், சதசண்டீ யாகம், 365 நாட்கள் சண்டியாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்தியங்கிரா யாகம், லட்சம் நெல்லிக் கனிகளில் கனகதாரா யாகம், 10 லட்சம் ஏலக்காய்களை கொண்டு லட்சுமி ஐயக்ரீவர் யாகம், லட்சத்து முப்பத்திரண்டாயிரம் லட்டுகளை கொண்டு குபேர லட்சுமி யாகம், ஒரு லட்சம் மோதகங்களை கொண்டு வாஞ்சா கல்ப கணபதி யாகம், ஒரு லட்சம் தாமரை பூக்களை கொண்டு மஹா லட்சுமி யாகம், முப்பது லட்சம் தாமரை விதைகளைக் கொண்டு அஷ்ட லட்சுமி யாகம் 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம்,108 கணபதி யாகம், 468 சித்தர்கள் யாகம் 21 ஆயிரம் ஜாங்கிரியை கொண்டும் 11 ஆயிரம் வாழைப்பழத்தை கொண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம், 21 ஆயிரம் மாதுளை பழத்தை கொண்டு ஸ்ரீ மஹா காளி யாகம், 21 ஆயிரம் வில்வ காய்களுடன் ஸ்ரீ மஹா லட்சுமி யாகம் , ஒரு லட்ச ஜபத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், 24 மணி நேரமும் 27 யாகங்கள், லட்ச த்தி எட்டாயிரம் ஜபங்களுடன் நவகிரக ஹோமம்,நவ துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், 2014 பூசணிக்காயை கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதி ருத்ரம், மஹா ருத்ரம், ஏகாதச ருத்ரம், 55 நாட்கள் 135 யாகங்கள் போன்ற பல்வேறு விதமான மஹாயாகங்கள் உலக நலன் கருதி நடைபெற்றுள்ளது. ஸ்ரீ தன்வந்திரி, சுதர்சன ஹோமம், ஸ்ரீ கார்தவீர்யார்ஜீனா ஹோமம், மஹா மிருத்யஞ்ச ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகம், சந்தான கோபால யாகம், சத்ரு சம்ஹார ஹோமம், சூலினி துர்கா ஹோமம், தேய்பிறை அஷ்டமி யாகம், அமாவாசை யாகம், பௌர்ணமி யாகம், போன்ற கார்ய சித்தி ஹோமங்களும் மாதம் தோறும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நடைபெற்று வருகிறது..

    இத்தகைய சிறப்புகளுடன் யக்ஞபூமியாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மனநோய், உடல் நோய் ,தீர்க்கும் வகையில் அம்மனுக்குரிய ஆடி மாதத்தை முன்னிட்டும் இராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டும் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் என்ற வகையில் ஆயிரம் சண்டி மகா யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது.

    தன்வந்திரி பீடத்தில் நாளை 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் )ஸ்ரீ ஜகன்மாதாவின் அருளால் உலக நன்மைக்காக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நிகழும் ஆடி மாத அமாவாசையில் இருந்து வளர்பிறை அஷ்டமி வரை எட்டு நாட்கள் அஷ்ட ஐஸ்வர்யம் பெறுவதற்கு சஹஸ்ர சண்டி யாகம் முப்பத்து முக்கோடி தேவதா ஆஹ்வான பூஜை ஹோமங்கள் அனைத்து ஜீவராசிகளின் ‌க்ஷேமத்தை குறிக்கோளாக கொண்டு 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை காலை மற்றும் மாலை இரண்டு வேளயும் (தேவி வாக்கின்படி _சுருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) சொல்படி எல்லாவிதமான நன்மைகளும் தேவியின் வாக்கின்படி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நடைபெறும் இந்த யாகத்தில் எல்லோரும் கலந்துகொண்டு சண்டிகா தேவியின் அருளை பெறும்படி கேட்டுகொள்கிறோம்.இந்த யாகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், குரு மஹான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

    ப்ரம்மஸ்ரீ. M.ராமகிருஷ்ண சர்மா, ஸ்ரீவித்யா உபாசகர், ஸ்ரீபுரம், வேலூர், அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த யாகத்தில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனே, இராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீவித்யா உபாசகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

    23.07.2017 ஞாயிறு காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம் புண்ணியாகவாசனம், ரக்‌ஷா பந்தனம், நாந்திச்ரார்த்தம், வாஞ்சாகல்ப கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹா லக்ஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், சுதர்சன யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

    23.07.2017 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சதுஷ்ஷஷ்டி யோகினி பைரவர் பலி பூஜைகள், 7.00 மணிக்கு பஞ்ச சூக்த பாராயணம், மங்களார்த்தி,சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    24.07.2017 திங்கள் கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, ருத்ர ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், வசோத்த்வாரா ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, மரகதேஸ்வரருக்கு அபிஷேகம், பிரசாத விநியோகம்.

    24.07.2017 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு லலிதா சகஸ்ர நாம பாராயணம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்), மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    25.07.2017 செவ்வாய்க்கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் மற்றும் அர்ச்சனை, பூர்ணாஹுதி, இடும்பன் பூஜை, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

    25.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு துர்காஷ்டகம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்) மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    26.07.2017 புதன் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, யாகசாலை ப்ரவேசம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், ரித்விக் வரணம், கலச பிரதிஷ்டை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், திதிநித்யா மூல மந்த்ர விசேஷ ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர்பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    26.07.2017 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவி மஹாத்மியம் சப்தசதி பாராயணம், ஸஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    27.07.2017 வியாழக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ வராஹி மூலமந்த்ர விசேஷ ஹோமம், ராகு கேது பெயர்ச்சி ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை, பூர்ணாஹுதி, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    27.07.2017 வியாழக் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவிமஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம் பிரசாத விநியோகம்.

    28.07.2017 வெள்ளி கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ சோடஷ மஹால‌ஷ்மி யாகம், ஸ்ரீசூக்த ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை கன்னியா பூஜை, வடுகபைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    28.07.2017 வெள்ளி கிழமை மாலை 6.00 மணிக்கு, தேவி மஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் குபேர ல‌க்ஷ்மி யாகம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    29.07.2017 சனிக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், நவ துர்கா ஹோமம், சந்தான பரமேஸ்வரி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, வடுகபைரவர் பூஜை, கன்னியாபூஜை, வசுவத்தார ஹோமம், மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
    29.07.2017 சனிக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, சதுர்வேத உபசாரம், மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.
    30.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், தசமஹாவித்யா ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுக பைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    30.07.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சண்டி ஹோமம் பாவன உபநிஷத் உபசாரம், மஹா பூர்ணாஹுதி, வசோத்த்வாரா ஹோமம், மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், கலச புறப்பாடு, மஹா அபிஷேகம், விசேஷ ஆராதனை, ரித்விக் சம்பாவணை, அக்‌ஷத ஆசீர்வாதம், மஹா பிரசாதம் வழங்குதல்.

    தன்வந்திரி பீடம் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும்
    இதுபற்றி ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி யாகம் மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரிய பேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம் ஆண்டு நடந்துள்ளது. அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன் சகலஐஸ்வரியம் பெற்று இறையருளுடன் ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எட்டு நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது என்றார்.

    தொடர்புக்கு,

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
    வாலாஜாபேட்டை – 632513.
    வேலூர் மாவட்டம்.
    Ph : 04172-230033 / 230274
    Cell : 9443330203
    Web: www.danvantritemple.org
    eMail : danvantripeedam@gmail.com

    Share
  • ஸ்ரீசக்கர பூஜை – வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடம்

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

    09.07.2017 ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று

    கோடான கோடி பலன்களை தரும் ஸ்ரீசக்கர பூஜை

     

    பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு

    பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி

    பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.

     

    கோடான கோடி பலன்களை தரும் ஸ்ரீசக்கர பூஜை

     

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இந்திய நாட்டில் வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ,காயத்ரி, மஹாமேரு, ஸ்ரீசக்ரம், அன்னபூரணி, பிரத்யங்கிரா தேவி,  மஹிஷாசுர மர்தினி, வாசவி கன்யகா பரமேஸ்வரி மற்றும் பாரத மாதா ஆகியவர்கள் ஒரே ஸ்தலத்தில் சாந்த சொரூபமாக காட்சியளித்து அமர்ந்து ஆட்சி செய்து வருகிறார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும்  விசேஷமாகும். இவர்கள் வீற்றிருக்கும் இடம் ஆரோக்ய ஐஸ்வர்ய பீடம் என்று  அழைக்கப்படுகிறது. இந்த பீடத்தில் பல மகான்கள் தவமிருந்து  அம்பிகைகளின் அருள் பெற்றுள்ளனர். இந்த பீடத்தில் பல இடங்களில் பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். அம்பிகைகளுக்கு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கும் அபிஷேகம் மற்றும்  குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.

    இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம்  என்றால் பிரகாரம்  அல்லது  சுற்று என்று  பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா,  பிராப்தி ஆகிய  9  சித்தி  தேவதைகள் உள்ளனர். வரும் பவுர்ணமி  குரு பூர்ணிமா  தினத்தன்று  இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளது. 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது  சங்கு  தீர்த்தமும்  இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பிகைகளுக்கு  ஆராதனைகள்  நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள் தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.அது மட்டுமல்ல…. ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தைப் பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலிதான். எனவே ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று நடக்கும் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும் நவாவரண பூஜையை தவறவிடாதீர்கள்.

    Share
  • தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

    unnamed (8)

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது

    இந்த யாகத்தில் தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் பிரார்த்தனை செய்யபட்டது.

    இந்த யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டது.

    மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் நடைபெற்று தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவிதனர்.

    Share
  • வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ராகு & கேது பெயர்ச்சி யாகம் !

    வருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது

    ‘நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்’ என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.

    ‘நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்’ என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.

    வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும், டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.

    அவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகு & கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

    நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும்,சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

    ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

    பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே!ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

    குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு & கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு & கேது பெயர்ச்சி என்கிறோம். வருகிற 27.07.2017 வியாழன் அன்று சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு இடப்பெயர்சி செய்கிறார்

    அடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள். வாலாஜாவில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பு ஹோமங்களுடன் நன்றாகவே நடந்து வருகின்றன.

    இந்த முறையும். பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.‘ராகு & கேது பெயர்ச்சி’ விமரிசையாக வருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறஉள்ளது. அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.

    மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு & கேது பெயர்ச்சி அன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. சங்கல்ப காணிக்கையாக ஒரு ராசிக்கு ரூபாய். 500/-மட்டும் செலுத்தி பங்கேற்று பலன் பெற ப்ரார்த்திக்கின்றோம்.

    யாகத்தின் பலன்கள்.

    திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு:
    ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
    ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை,
    வாலாஜாபேட்டை . 632 513.
    வேலூர் மாவட்டம்.
    போன்: 04172 – 230033,
    மொபைல்: 94433 30203

    Share
  • Thirukallyanam of Gho Lakshmi & Rishabha Raja

     

    Sri Muralidara Swamigal

     

    Namasthe,
    You are invited for the Thirukallyanam of Gho Lakshmi & Rishabha Raja and also for the Sahasra Chandi Yagam.
    unnamed (1)
    unnamed
    unnamed (2)
    unnamed (3)
    Share
  • தன்வந்திரி பீடத்தில் இரண்டு நாட்கள் யாகத் திருவிழா

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மன அமைதி வேண்டியும் உலக நலன் வேண்டியும் நாளை 17.06.2017 சனிக் கிழமை மற்றும் 18.16.2017 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் யாகத் திருவிழா கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெறுகிறது.

    இந்த யாகங்கள் தடைபடும் திருமணங்கள் நிறைவேறவும், தொழில் வியாபாரம்,வளர்ச்சி பெறவும் உத்தியோகம் கிடைக்கவும் நவகிரக தோஷம் அகலவும், கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகலவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், நிலவளம், நீர்வளம் விவசாயம் பெறுகவும், வாரிசு உண்டாகவும், பகை அகலவும், கல்வி கேள்விகளில் மேன்மையடையவும், மாணவ மாணவியருக்கு நல்ல பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கவும், நோய் அகலவும், பல வகையான தோஷங்கள் சாபங்கள் அகலவும் ,துஷ்ட சக்திகள் அணுகாமல் இருக்க போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாளை காலை 10.00 மணியளவில் நவகிரஹ தோஷங்கள் அகல நவகிரஹ ஹோமம், சந்தான கோபால யாகம் ,ஸ்ரீ கால பைரவர் யாகம், சொர்ண ஆகர்ஷண பைரவர் யாகம், மஹா ம்ருத்யஞ்ச யாகம், சூலினி துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், ஆயுள்ஹோமம், நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 18.06.2017 ஞாயிற்று கிழமை காலை ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹேமம் உடல் நோய், மன நோய் நீங்க மஹா தன்வந்திரி ஹோமமும் ஐஸ்வர்யம் பெற ஸ்ரீ மகாலட்சுமி யாகம் நடைபெறுகிறது. மேலும் தன்வந்திரி பகவான் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, சிறப்பு திருமஞ்சனமும் கந்தர்வ ராஜ ஹோமத்தில் பங்கேற்கும் ஆண்களுக்கு கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share