தன்வந்திரி பீடத்தில் இரண்டு நாட்கள் யாகத் திருவிழா

0

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மன அமைதி வேண்டியும் உலக நலன் வேண்டியும் நாளை 17.06.2017 சனிக் கிழமை மற்றும் 18.16.2017 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் யாகத் திருவிழா கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெறுகிறது.

இந்த யாகங்கள் தடைபடும் திருமணங்கள் நிறைவேறவும், தொழில் வியாபாரம்,வளர்ச்சி பெறவும் உத்தியோகம் கிடைக்கவும் நவகிரக தோஷம் அகலவும், கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகலவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், நிலவளம், நீர்வளம் விவசாயம் பெறுகவும், வாரிசு உண்டாகவும், பகை அகலவும், கல்வி கேள்விகளில் மேன்மையடையவும், மாணவ மாணவியருக்கு நல்ல பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கவும், நோய் அகலவும், பல வகையான தோஷங்கள் சாபங்கள் அகலவும் ,துஷ்ட சக்திகள் அணுகாமல் இருக்க போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாளை காலை 10.00 மணியளவில் நவகிரஹ தோஷங்கள் அகல நவகிரஹ ஹோமம், சந்தான கோபால யாகம் ,ஸ்ரீ கால பைரவர் யாகம், சொர்ண ஆகர்ஷண பைரவர் யாகம், மஹா ம்ருத்யஞ்ச யாகம், சூலினி துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், ஆயுள்ஹோமம், நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 18.06.2017 ஞாயிற்று கிழமை காலை ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹேமம் உடல் நோய், மன நோய் நீங்க மஹா தன்வந்திரி ஹோமமும் ஐஸ்வர்யம் பெற ஸ்ரீ மகாலட்சுமி யாகம் நடைபெறுகிறது. மேலும் தன்வந்திரி பகவான் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, சிறப்பு திருமஞ்சனமும் கந்தர்வ ராஜ ஹோமத்தில் பங்கேற்கும் ஆண்களுக்கு கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *