என் பார்வையில் கண்ணதாசன்

— சரஸ்வதி இராசேந்திரன்

என் பார்வையில் கண்ணதாசன்

Kannadasanஎன் பார்வையில் கண்ணதாசன்  கருவிலேயே திருவுடைய  ஒரு பிறவிக் கவிஞன். பல கோணப்பாடகன். அவர் வெறும் கவிகளில் மட்டும் அழகொழுகப் பாடிப்போகவில்லை,  அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளையே சான்றாக்கித் தந்திருக்கிறார். பாமரனும் அறிந்து, புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக  பாடல்களை தந்தவர்.  தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு தனி இடத்தை பெற்றவர்.  இயற்கைப் பொருள்களை சுவைத்து  இயற்கையை இயல்பிற் பாடிய அவர் ஒரு இயற்கை கவிஎனலாம்   ( உதாரணம் ;  இது ஒரு பொன்மாலைப்பொழுது )    தெய்வ அருள் பெற்றுப் பாடிய தெய்வப்பாடல்கள் பல பாடியதால் அவர் ஒரு தெய்வீகக் கவி எனலாம்.

தத்துவப்பாடல்களைப்பாடியதால்  தத்துவக்கவி (உதாரணம் ; பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது )  தெள்ளத்தெளிவுற  தமிழ் பாடல்கள் பல எழுதியுள்ளதால் தமிழ்க்கவி. காதல் பாடல்கள் பல எழுதியுள்ளதால்  காதல் கவி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர் ஒரு பலகோண கவி என்று. அது மட்டுமா, உணர்ச்சியூட்டும் பாக்களும், எழுச்சியூட்டும் கட்டுரைகளும், கிளர்ச்சியூட்டும் பேச்சும்  என நல் விதைகளைத் தூவிச்சென்றவர். அவர் வெளிப்படையானவர், வெளி வேஷம் கொண்டவரில்லை, அரசியல் வாதிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இருந்தாலும் கண்டனக்காரர்களும் கூட அவருடன் கைகோர்த்து நின்றனர். நாத்திகத்திலிருந்து  ஆத்திகத்திற்கு வந்தவர், அவருடைய  அர்த்தமுள்ள இந்துமதமே இதற்கு சாட்சி. ஏசு காவியம் பாடி   இதயத்தில் நின்றவர். வாழ்க்கை பாடத்தையே  பல நேரங்களில்    பாட்டாகப்பாடியர்.

கவிஞர் கண்ணதாசனை அறியாத மக்களில்லை, பேசாத நாவில்லை, அவர் பாடலை பாடாத நாவில்லை. வையத்துள் அவர் பாடல்களால் வாழ்வாங்கு வாழ்ந்து  அமர நிலை எய்திய அமரர் கண்ணதாசனை  நாளும் வாழ்த்துவோம். எண்ணிக்கை இல்லா பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வர் ‘என்னைப்பொ றுத்தவரையில்  என் பார்வையில் கண்ணதாசன் ஒரு தெய்வப்பிறவி என்றால் மிகையில்லை.

 
 
 
 
சரஸ்வதி இராசேந்திரன் ,
51 ,வடக்கு ரத வீதி ,மன்னார்குடி  614001

sathiramannai@ gmail.com

Share

Comments

2 responses to “என் பார்வையில் கண்ணதாசன்”

  1. sathiyamani

    இது ஒரு பொன்மாலைப்பொழுது penned by  kavi vairamuthu 

  2. எனதுகட்டுரையில் பொன் மாலைபொழுது படல் ‘வைரமுத்து எழுதியது என்று
    நண்பர் ஒருவர் சுட்டி காட்டியுள்ளார் நன்றி தவறுக்கு வருந்துகிறேன்
    சரஸ்வதி ராஜேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *