Tag: சென்னை

  • சென்னை புத்தகக் காட்சி – சில அனுபவங்கள்

    சென்னை புத்தகக் காட்சி – சில அனுபவங்கள்

    அண்ணாகண்ணன்

    சென்னை புத்தகக் காட்சியில் கடந்த ஆண்டுகளில் நுழைவுச் சீட்டு எடுக்கும் இடத்திற்கு வலது புறம், பொதுவாக யாரும் நுழையும் வகையில் கழிவறை இருந்தது. இந்த ஆண்டு அதை, அரங்கிற்குள் நுழைந்து செல்வது போல் அமைத்துள்ளார்கள். ஆக, நுழைவுச் சீட்டு எடுத்த பிறகு தான் கழிவறைக்கே செல்ல முடியும். அவசரத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் அந்தக் கடைசிக்குச் சென்று நுழைவுச் சீட்டு வாங்கி, மீண்டும் இந்தக் கடைசிக்கு வந்து அரங்கிற்குள் நுழைந்து செல்ல வேண்டும். இது, மிகவும் சில்லரைத்தனமானது. அடிப்படை வசதிகளையும் தாமதப்படுத்துவது, மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும்.

    அரங்கிற்குள் நுழைந்து தண்ணீர் குடிக்கலாம் எனத் தேடினால், கோடியில் ஓர் இடத்தில் தண்ணீர் கேன் வைத்திருக்கிறார்கள். ஆவலாக அருகில் சென்றால், அதில் டம்ளர் ஏதும் இல்லை. தண்ணீர் பாட்டில் வைத்திருப்பவர்கள் அதில் பிடித்துக் குடிக்கலாம். மற்றவர்கள் எப்படிக் குடிப்பது? நான் தண்ணீர் குடிக்காமலே வெளியில் வந்தேன். நடுவில் தண்ணீர் நிறைந்த பாட்டில்களுக்கு என்றே ஒருவர் கடை போட்டிருந்தார். அவரிடம் வாங்க வேண்டிய கட்டாயத்தைப் பபாசி ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது.

    முன்னர், நுழைவாயிலில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நிறைய இருக்கும். எதில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இந்த முறை அதே போல் இருந்தாலும், ஏதோ ஒன்றில் மட்டும் நுழைவுச் சீட்டுகள் கொடுத்தார்கள். ஏன் மக்களை இப்படி அலைய விடுகிறார்கள்? எல்லாக் கவுன்ட்டரிலும் கொடுத்தால் தான் என்ன? நுழைவுச் சீட்டுப் பரிசோதகர்களாக நிற்பவர்களே நுழைவுச் சீட்டு விற்றால் என்ன? இந்தச் செயலுக்கு எதற்கு இரண்டு பேர்?

    நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்த பிறகு, ஒரு பாதையில் கடைசி வரை சென்று, அடுத்த பாதையில் திரும்பி, இந்தக் கடைசி வரை வந்தால், மூன்றாவது பாதைக்குத் திரும்ப வழியில்லை. மீண்டும் வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டி, மூன்றாவது பாதைக்குத் திரும்ப வேண்டும். இப்படி ஒவ்வோர் இரண்டு வரிசைக்கும் ஒரு முறை வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டிய பிறகே உள்ளே நுழைந்தேன். இது வாசகர்களின் நேரத்தை வீணடிக்கவில்லையா? ஏன் உள்ளேயே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைக்கவில்லை?

    ஒவ்வொரு வரிசைக்கும் ஒருவர் பெயரைச் சூட்டி, இந்தப் பாதை, அந்தப் பாதை என வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு அடையாளம் சொல்லும்போது நான் இந்தப் பாதையில் இருக்கிறேன் என்று சொன்னால், அவர்களுக்குப் புரிவதில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட பாதையின் நடுவில் நாம் இருக்கும்போது இது என்ன பாதை என்ற குழப்பம் எழுகிறது. பாதையின் பெயர்கள், தொடங்கும் இடத்தில் மட்டுமே உள்ளன. பெயர்கள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பாதைக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என இன்னும் ஓர் அடையாளம் கொடுக்கலாம். அந்த எண்ணை அந்த வரிசையின் இரண்டு பக்கத்திலும் மிகப் பெரிய அளவில் எழுதி வைக்கலாம். தொலைவில் இருந்து பார்த்தாலும் தாம் எந்த எண் கொண்ட பாதையில் இருக்கிறோம் என ஒருவர் அறிய முடியும். அடுத்தவருக்குச் சொல்லவும் முடியும்.

    அரங்கின் உள்ளே பல இடங்களில் செல்பேசி சமிக்ஞைகள் சரிவரக் கிடைப்பதில்லை. இதனால் தகவல் தொடர்பில் இடைவெளி ஏற்படுகிறது. மின்னணுப் பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது. சிக்னல் பூஸ்டர் போல் ஏதும் இதற்குச் செய்ய முடியாதா?

    மிதமான கூட்டம் இருக்கும்போதே அரங்கில் வியர்வை கசகசக்கிறது. எப்போது வெளியே போவோம் என எண்ண வைக்கிறது. உள்ளிருக்கும் காற்றை வெளியே அனுப்பி, வெளியிலிருந்து புதுக் காற்றை உள்ளே அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளதா?

    அரங்கிலிருந்து வெளியே வந்தால், கார் நிறுத்துமிடம் எங்கே எனக் கறுப்பு உடையணிந்த காவலரிடம் கேட்டேன். தவறாக வழிகாட்டினார். நீண்ட தூரம் நடந்து, பிறகு திரும்பி வந்து, உரிய இடம் சென்றேன். மீணடும் அவரிடம் திரும்பி வந்து, அவரால் நேர்ந்த இடரை விளக்கினேன். அவர் தான் தவறான தகவல் கொடுத்ததையே ஒப்புக்கொள்ளவில்லை. காவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும்.

    இந்தப் புத்தகக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தது, வாசகர்கள் ஓய்வெடுக்க நான்கு அரங்குகளை ஒதுக்கியதே. இது மிகவும் பயனுள்ளது. அதே போல், ஷீ டாய்லெட் எனப் பெரிய பேருந்துகளையே பெண்களுக்கான நடமாடும் கழிவறையாக வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதுவும் மிகவும் பயனுள்ள செயல். அரங்கின் நடைபாதையிலேயே தேநீரும் சுண்டலும் உருண்டு வருகின்றன. களைப்பின்போது இவை சற்றே ஆறுதல் அளிக்கின்றன.

    48 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சி நடக்கிறது. ஓராண்டில் நாம் பெறும் பாடங்களைக் கொண்டு அடுத்த ஆண்டில் மேம்படுத்த வேண்டும். ஆனால், இன்னும் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டியிருக்கிறது. நாம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.

    Share
  • சென்னையின் பிரமாண்டக் கால்வாய்கள்

    சென்னையின் பிரமாண்டக் கால்வாய்கள்

    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை, சிட்லப்பாக்கம் பகுதியில் நடைபெறும் பிரமாண்டக் கால்வாய் அமைக்கும் பணிகள் – ஒரு பார்வை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு | போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

    சென்னையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு | போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

    சென்னையில் இன்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. நூற்றுக்கணக்கான பேருந்துகள், ஆங்காங்கே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ஊழியர்கள் திடீர்ப் போராட்டத்தில் குதித்துள்ளனர். களத்திலிருந்து இதோ நேரடி விவரங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னை மாவட்ட வலுத்தூக்கும் போட்டி – 2023

    சென்னை மாவட்ட வலுத்தூக்கும் போட்டி – 2023

    சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. 40 முதல் 79 வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் இதில் உற்சாகமாகக் கலந்துகொண்டு வலு தூக்கித் தங்கள் வல்லமையைக் காட்டினார்கள். வீழ்வேன் என்று நினைத்தாயோ என வீறு கொண்டு எழுந்த வேங்கைகளின் புஜபல பராக்கிரமங்களைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மெரினா கடற்கரை – சில தெறிப்புகள்

    மெரினா கடற்கரை – சில தெறிப்புகள்

    உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரினாவில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இல்லை. அண்மையில் அங்கே சென்ற சுதா மாதவன், தெறிப்பான சில காட்சிகளைப் படம்பிடித்து, அவரே படங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். செலவே இல்லாமல் இயற்கையை அனுபவிக்க, கொண்டாட, வரம் போல் கிடைத்த வாய்ப்பு இது. இயல்பான இந்தக் காட்சிகளைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீராவி இஸ்திரிப் பெட்டி

    நீராவி இஸ்திரிப் பெட்டி

    கரி இஸ்திரிப் பெட்டி, மின்சார இஸ்திரிப் பெட்டி பார்த்திருப்பீர்கள். நீராவி இஸ்திரிப் பெட்டி பார்த்திருக்கிறீர்களா? இதன் பயன்கள் என்னென்ன தெரியுமா? இந்தப் பதிவைப் பாருங்கள். சிட்லப்பாக்கத்தில் உள்ள நியூ ஸ்டைல் அயர்னிங் சென்டரின் உரிமையாளர் முத்து சொல்வதைக் கேளுங்கள். இஸ்திரி கடை வைத்திருக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்நாட்டின் ரயில் நிலையங்கள்

    தமிழ்நாட்டின் ரயில் நிலையங்கள்

    கோவைக்கு வந்திருக்கிறேன். வரும் வழியில் இருக்கும் தொடர்வண்டி நிலையங்களை ஆவணப்படுத்தியுள்ளேன். சென்னை சென்ட்ரல் தொடங்கி, கோவை வரை உள்ள முக்கிய நிலையங்களைப் பதிவு செய்துள்ளேன். (அரக்கோணம், காட்பாடியைத் தவிர. இவற்றை முந்தைய பயணங்களில் நேரலையாகக் காட்டியுள்ளேன். எதிர்காலத்தில் தனியாகப் பதிவு செய்து அளிப்பேன்.)

    ஒவ்வொரு ரயில் நிலையமும் ஏராளமான நினைவுகளைக் கிளர்த்தக் கூடியவை. வெளியூருக்குச் சென்றுவிட்டு, ஊரை நினைத்து ஏங்குவோரும் பலர். இந்த ரயில் நிலையங்களைக் காணும்போது உங்களுக்குத் தோன்றும் நினைவுகளைப் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னை மெட்ரோ தூண் ஓவியங்கள்

    சென்னை மெட்ரோ தூண் ஓவியங்கள்

    சென்னை மெட்ரோ ரெயில் தடத்தின் தூண்களை அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. மெட்ரோ பாலத்தின் அடியில் பூங்காக்கள், செங்குத்துத் தோட்டங்கள் ஆகியவற்றை அடுத்து இப்போது ஓவியங்கள், கண்ணுக்கு விருந்து அளிக்கின்றன.

    Cover image credit: @ItzmeJprakash

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னைப் புறவழிச் சாலையில் தீ

    சென்னைப் புறவழிச் சாலையில் தீ

    எச்சரிக்கை, பைபாஸ் சாலை என அழைக்கப்படும் சென்னைப் புறவழிச் சாலையில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் வழியில் தீப்பற்றி எரிகிறது. வாகன ஓட்டிகள் கவனம் கவனம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னையிலிருந்து கோவைக்கு விமானப் பயணம்

    சென்னையிலிருந்து கோவைக்கு விமானப் பயணம்

    சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்து சேர்ந்தோம். ஹரி நாராயணனின் முதல் விமானப் பயணம் இது. எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.

    இதில் தமிழகத்தை ஒரு பறவைப் பார்வையில் நீங்கள் காணலாம். கீழே காணும் அனைத்தும் தமிழ் மண், மேலே காணும் யாவும் தமிழ் வான். தமிழகத்தின் வளங்கள், வயல்கள், ஆறுகள், காடுகள், ஆலைகள், மனைகள், வீடுகள், மக்கள் அடர்த்தி… என அனைத்தையும் ஒரே வீச்சில் கண்டு மகிழுங்கள்.

    Indigo image courtesy: Wikimedia.org

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • சென்னையில் இப்படி ஓர் இடமா?

    சென்னையில் இப்படி ஓர் இடமா?

    மழையால் ஒரு புதிய சுற்றுலாத் தலம் உருவாகிவிட்டது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் மழை, வெள்ள நிலவரம் – பகுதி 2

    தாம்பரத்தில் மழை, வெள்ள நிலவரம் – பகுதி 2

    சென்னை தாம்பரம் சுற்று வட்டாரத்தில் இன்றைய மழை – வெள்ள நிலவரம் எப்படி? களத்திலிருந்து இதோ நேரடிக் காட்சிகள். இரண்டாம் பகுதி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் மழை – வெள்ள நிலவரம்

    தாம்பரத்தில் மழை – வெள்ள நிலவரம்

    சென்னை தாம்பரத்தில் மழை – வெள்ள நிலவரம் எப்படி? களத்திலிருந்து இதோ நேரடிக் காட்சிகள். தாம்பரம்வாசிகளுக்கு இதைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இயற்கை அன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!!

    ஒரு அரிசோனன்

    tearddrops

    இயற்கையன்னையே!  போதுமம்மா உன் கண்ணீர்!

    தாங்கமுடியவில்லை சென்னையால்!

    நாங்கள் செய்தோம் பலதவறுகள்!

    அடைத்தோம் உன் ஊற்றுக்கண்களை!

    கட்டினோம் அதில் எங்கள் மண்கோட்டைகளை!

    கட்டினோம் மனக்கோட்டைகள் கோடிகோடி!

    உன் கண்ணீர்தான் பெருக்கெடுத்ததே எங்கள் நிலைகண்டு!

    நிறுத்தம்மா உன் கண்ணீரை!  போதுமம்மா உன்னழுகை!

    தாங்கமாட்டோம் நாங்கள் இனியுன் வேதனையை!

    திருந்துகிறோம், திருந்துகிறோமம்மா மதலைகள் நாங்கள்!

    வேண்டாமிவ் வழுகை உனக்கும்தான் இனிமேலும்,

    ஆனந்தக் கண்ணீரே போதுமம்மா எங்களுக்கு,

    அழிக்காதே எங்களைப்  பெருக்கிடுமிக் கண்ணீரால்!

    ***   ***   ***

    Share