இயற்கை அன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!!
ஒரு அரிசோனன்
இயற்கையன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!
தாங்கமுடியவில்லை சென்னையால்!
நாங்கள் செய்தோம் பலதவறுகள்!
அடைத்தோம் உன் ஊற்றுக்கண்களை!
கட்டினோம் அதில் எங்கள் மண்கோட்டைகளை!
கட்டினோம் மனக்கோட்டைகள் கோடிகோடி!
உன் கண்ணீர்தான் பெருக்கெடுத்ததே எங்கள் நிலைகண்டு!
நிறுத்தம்மா உன் கண்ணீரை! போதுமம்மா உன்னழுகை!
தாங்கமாட்டோம் நாங்கள் இனியுன் வேதனையை!
திருந்துகிறோம், திருந்துகிறோமம்மா மதலைகள் நாங்கள்!
வேண்டாமிவ் வழுகை உனக்கும்தான் இனிமேலும்,
ஆனந்தக் கண்ணீரே போதுமம்மா எங்களுக்கு,
அழிக்காதே எங்களைப் பெருக்கிடுமிக் கண்ணீரால்!
*** *** ***

