Tag: நௌஷாத் கான் .லி

  • காதோடுதான் நான் பேசுவேன்!

    நௌஷாத் கான் .லி

     

    காதோடுதான் நான் பேசுவேன்

    கவிதையாகத்தான் நான் பேசுவேன்

    காதலோடு தான் எப்போதும் உன்னோடு நானிருப்பேன் 

    உன்னை கொஞ்சி கொஞ்சி

    குழந்தையாய் மாற்றவா??

    இல்லை கெஞ்சி கெஞ்சி

    காதலனாயாக்கவா??

    உன் மூச்சு காற்றில்

    சொக்க வைத்திடு ?

    உன் கைதொட்டு உன் தோள் மேல் சாய்த்திடு

    காதல் மொழி பேசு

    கண்ணோடு கண் பார்

    கையோடு கை சேர்

    காதல் வானில் சிறகடித்து பறக்க

    நித்தம் யுத்தமாய்

    காதல் முத்தமிடு !!!

    Share
  • தாலாட்ட ஆசை

    நௌஷாத் கான்.லி

     

    நான் பெற்றெடுக்காத
    முதல் குழந்தையே
    என் மாமன் பெத்த மாணிக்கமே
    கவலை மறந்து என் தோளில் சாயடி
    நிச்சயம் உனக்கு நல்ல தோழனாக நானிருப்பேன்
    இச்சை இன்றி உன்னை நித்தம் காதல் செய்யும்
    மச்சான் கூப்பிடுறேன்
    அருகே வா ..உயிரே வா …
    என் மடி மீது உறங்கி குழந்தையாய் மாறடி
    உனக்கான தாலாட்டை பாடுறேன் அன்னையாய் !!!

     

    Share
  • அடையாளம் !!

    நௌஷாத் கான் .லி

     

    நரை முதுமையின் அழையா விருந்தாளியா ?

    நரை இறப்பின் முன் எச்சரிக்கையா ?

    மாற்றி யோசித்து பழகி கொள் மனிதா

    நரை அனுபவத்தின் அடையாளம் !!!

     

    Share
  • நட்பென்றால் நாம் என்போம்

     

     

    கருவறையில் ஏனோ

    ஒன்றாய் பிறக்க வில்லை -இருந்தும்

    இதுநாள் வரை உன் நிழல் இல்லாமல் தனியாய் இருந்ததில்லை

    கடலை மிட்டாய் -எள்ளு மிட்டாய்

    நீ கடித்து பார்த்த பிறகே ருசி பார்த்தேனடா

    எனக்கு கல் பட்டு அடிப்பட்ட போதும் -வலி

    என்னவோ உனக்குதாண்டா !!

    நீ சொந்தமும் இல்லை

    என் இரத்த உறவும் இல்லை

    என் சித்தத்தில் எப்படி கலந்தாயடா ?!

    இறைவன் அமைத்து தந்த பந்தமோ நம் நட்பு !!

    இயக்குனர் மணிரத்னம்

    திரையில் எடுக்காத இன்னொரு தளபதி திரைப்படம்

    நம் வாழ்க்கை !!

    காதலின் அடையாளமாக தாஜ்மஹால் இருக்கலாம்

    நட்பின் அடையாளமாக நாம் தானடா

    இந்த மண்ணில் கடைசி வரை இருப்போம்

    கடவுளே வந்து உயிர் பறிக்க நினைத்தாலும்

    நட்பில் கர்ணனாக நாம் இருப்போமடா !!!

     

    Share
  • ஏம்புள்ள முத்தழகி

    நௌஷாத் கான் .லி  

     

    ஏம்புள்ள முத்தழகி

    ஏங்க வச்சு சிரிச்சு போறவளே

    ஆத்துக்குள்ள குளிக்க போறியோ?

    அயிர மீனெல்லாம் சந்தோசத்தில் குதிக்குதடி !!

    வண்ண வண்ண தாவணி பார்த்து

    வானவில் வெட்கத்தில் சிரிக்குதடி

    உன் இடுப்பு மடிப்பு பார்த்து

    மயங்கி போனேண்டி

    சொக்க வைக்கும் என் கரிசல் காட்டு மைனாவே -என்னை

    சொந்தமாக்க நம் காதல் கதையை உன் நைனாவிடம் சொல்வாயோ ?

    நீ  கோலம் போடும் அழகில் தானடி

    உன் வாசல் பூக்கள் மலருதடி!!

    வானம் பார்த்த பூமியடி

    நீ தான் என் காதலின் சாமியடி!!!

     

    Share