ஏம்புள்ள முத்தழகி
நௌஷாத் கான் .லி
ஏம்புள்ள முத்தழகி
ஏங்க வச்சு சிரிச்சு போறவளே
ஆத்துக்குள்ள குளிக்க போறியோ?
அயிர மீனெல்லாம் சந்தோசத்தில் குதிக்குதடி !!
வண்ண வண்ண தாவணி பார்த்து
வானவில் வெட்கத்தில் சிரிக்குதடி
உன் இடுப்பு மடிப்பு பார்த்து
மயங்கி போனேண்டி
சொக்க வைக்கும் என் கரிசல் காட்டு மைனாவே -என்னை
சொந்தமாக்க நம் காதல் கதையை உன் நைனாவிடம் சொல்வாயோ ?
நீ கோலம் போடும் அழகில் தானடி
உன் வாசல் பூக்கள் மலருதடி!!
வானம் பார்த்த பூமியடி
நீ தான் என் காதலின் சாமியடி!!!