பழநி மலையில் கண்ட காட்சி. பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க!
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பழநி மலையில் கண்ட காட்சி. பக்தர்களே இப்படிச் செய்யாதீங்க!
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

குழந்தையின் பால்புட்டிக் காம்பை வைத்துக்கொண்டு இந்தக் குரங்கு செய்வதைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பழநி மலையில் கண்ட குரங்கும் குட்டியும்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பழநி மலை உச்சியில் ஏராளமான குரங்குகளைக் கண்டோம். அவை, பக்தர்களின் தண்ணீர்ப் புட்டியையும் குளிர்பானப் புட்டியையும் பறிக்கின்றன. பக்தர் தரும் உணவைப் பெற, குறுக்கும் நெடுக்கும் நடக்கின்றன. இங்கும் அங்கும் தாவுகின்றன. பக்தர்களின் மிக அருகில் இயல்பாக நடக்கின்றன. கூட்டத்தில் புகுந்து செல்கின்றன. புத்திசாலிக் குரங்குகள், புட்டியின் மூடியைத் திறந்து தண்ணீரைக் குடிக்க, எந்த உத்தியைப் பயன்படுத்துகின்றன என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பழநிக்குச் சென்றபோது, பழநி முருகனுக்காகத் தீர்த்தக்காவடி எடுத்து, பாத யாத்திரையாக வரும் பக்தர்களை முதல் முறையாகக் கண்டேன். கலசத்தில் இருப்பதை நான் தண்ணீர் என்றபோது, தீர்த்தம்னு சொல்லணும் எனத் திருத்தினார்கள். தீர்த்தக்காவடிகளுடன் இதோ ஓர் உரையாடல்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

போகரின் முதன்மைச் சீடர், புலிப்பாணி. பழநி தண்டாயுதபாணி சுவாமி சிலையை நவபாஷாணத்தைக் கொண்டு போகர் உருவாக்கிய போது, உடனிருந்து உதவியவர். புலிப்பாணி, மருத்துவத்திலும் ஜோதிடத்திலும் வல்லவராக விளங்கியவர். ஜோதிட நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். இவரது வழியில் புலிப்பாணி ஜோதிடம் எனச் சிலர் கணித்து வருகின்றனர்.
அண்மையில் பழநிக்குச் சென்றபோது புலிப்பாணி சித்தர் ஜீவசமாதியைத் தரிசித்தோம். நாம் சென்ற நேரத்தில் பூஜையும் நடைபெற்றது எதிர்பாராதது.
இந்த ஜீவ சமாதியில் தொட்டிச்சி அம்மன் சந்நிதி உள்ளது. இந்தத் தொட்டிச்சி அம்மன் உருவச் சிலை, பழநி தண்டாயுதபாணியைப் போன்றே உருவ அமைப்புடன் புலிப்பாணியால் வடிக்கப்பெற்றது என அங்கே உள்ள பூசகர் தெரிவித்தார். அந்த அரிய காட்சிகளை இங்கே பாருங்கள். படமெடுக்க நமக்கு அனுமதி வழங்கிய ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனத்திற்கு நன்றி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

போகர், நவபாஷாணத்தால் பழநி தண்டாயுதபாணி சிலையை உருவாக்கியவர். சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற பலவற்றில் பேரறிவும் ஞானமும் கொண்டிருந்தார். சீனாவில் போகர், போயாங் வேய் (Boyang Wei) என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் போகர் 7000 உள்பட, தமிழில் 64 நூல்களை எழுதியுள்ளார். பழநி மலை உச்சியில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகத்தில் இவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்கே அண்மையில் சென்று இவரையும் இவர் வழிபட்ட மரகதலிங்கத்தையும் வழிபட்டோம். இதோ சில காட்சிகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இதை நடனம் ஆடாமல், கை கால் அசையாமல் பார்த்துவிடுங்கள், பார்க்கலாம்.
பழநி தீர்த்தக்காவடி பக்தர்களின் அதிரடி அதிரி புதிரி குத்தாட்டம்!
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பழநிக்குச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால விருப்பம். இறையுதிர்காடு தொடர்கதையை விகடனில் படித்த பிறகு அந்த விருப்பம், இன்னும் அதிகரித்தது. போகர், நவபாஷாணத்தால் முருகன் சிலையை வடித்ததை, முருகனின் அற்புத சக்திகளை இந்திரா சௌந்தர்ராஜன் அழகுற அதில் எழுதியிருப்பார். இறையருளால் சில நாள்கள் முன், பழநிக்குச் சென்றோம். மலை உச்சிக்குப் படியேறிச் சென்றோம். எங்கள் மகன் ஹரி நாராயணனும் (மூன்று வயது) பிஞ்சுப் பாதங்களால் படியேறி வந்தான். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)