பழநி மலைக் குரங்குகள்

பழநி மலை உச்சியில் ஏராளமான குரங்குகளைக் கண்டோம். அவை, பக்தர்களின் தண்ணீர்ப் புட்டியையும் குளிர்பானப் புட்டியையும் பறிக்கின்றன. பக்தர் தரும் உணவைப் பெற, குறுக்கும் நெடுக்கும் நடக்கின்றன. இங்கும் அங்கும் தாவுகின்றன. பக்தர்களின் மிக அருகில் இயல்பாக நடக்கின்றன. கூட்டத்தில் புகுந்து செல்கின்றன. புத்திசாலிக் குரங்குகள், புட்டியின் மூடியைத் திறந்து தண்ணீரைக் குடிக்க, எந்த உத்தியைப் பயன்படுத்துகின்றன என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)