போகரின் முதன்மைச் சீடர், புலிப்பாணி. பழநி தண்டாயுதபாணி சுவாமி சிலையை நவபாஷாணத்தைக் கொண்டு போகர் உருவாக்கிய போது, உடனிருந்து உதவியவர். புலிப்பாணி, மருத்துவத்திலும் ஜோதிடத்திலும் வல்லவராக விளங்கியவர். ஜோதிட நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். இவரது வழியில் புலிப்பாணி ஜோதிடம் எனச் சிலர் கணித்து வருகின்றனர்.

அண்மையில் பழநிக்குச் சென்றபோது புலிப்பாணி சித்தர் ஜீவசமாதியைத் தரிசித்தோம். நாம் சென்ற நேரத்தில் பூஜையும் நடைபெற்றது எதிர்பாராதது.

இந்த ஜீவ சமாதியில் தொட்டிச்சி அம்மன் சந்நிதி உள்ளது. இந்தத் தொட்டிச்சி அம்மன் உருவச் சிலை, பழநி தண்டாயுதபாணியைப் போன்றே உருவ அமைப்புடன் புலிப்பாணியால் வடிக்கப்பெற்றது என அங்கே உள்ள பூசகர் தெரிவித்தார். அந்த அரிய காட்சிகளை இங்கே பாருங்கள். படமெடுக்க நமக்கு அனுமதி வழங்கிய ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனத்திற்கு நன்றி.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *