பழநி முருகன் கோவில் – படியேறிச் சென்று தரிசித்த அனுபவம்

Raja Alangaram Lord Palani Murugan
பழநிக்குச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால விருப்பம். இறையுதிர்காடு தொடர்கதையை விகடனில் படித்த பிறகு அந்த விருப்பம், இன்னும் அதிகரித்தது. போகர், நவபாஷாணத்தால் முருகன் சிலையை வடித்ததை, முருகனின் அற்புத சக்திகளை இந்திரா சௌந்தர்ராஜன் அழகுற அதில் எழுதியிருப்பார். இறையருளால் சில நாள்கள் முன், பழநிக்குச் சென்றோம். மலை உச்சிக்குப் படியேறிச் சென்றோம். எங்கள் மகன் ஹரி நாராயணனும் (மூன்று வயது) பிஞ்சுப் பாதங்களால் படியேறி வந்தான். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)