சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !
Screenshot
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா
மேன்மைகொள் சைவநீதி விளங்கிட வைப்பதற்கு
மாதராய் வந்தமைந்தார் மங்கையர் கரசியாரும்
அரசியாய் ஆனபோதும் அரனது அடியைப்பற்றி
தினமுமே தொழுதுநின்றார் தீயவை அகன்றுபோக
தீயதாம் சமணந்தன்னை சிந்தையில் கொண்டதாலே
பாண்டிய நாட்டுமன்னன் பரமனை மறந்துபோனான்
பரமனைப் பற்றிநின்ற அவனது மனைவியான
மங்கையர் கரசியாரோ பரமனைப் பணிந்துநின்றார்
சைவத்தின் போக்குவேறு சமணத்தின் போக்குவேறு
அனைவரும் இணைந்துநிற்கும் அன்பதே சைவமாகும்
ஒறுப்பது சமணமாகும் வெறுப்பது சமணமாகும்
மக்களை விட்டுவிட்டு தத்துவம் சொல்லிநிற்கும்
பெண்களைச் சைவமென்றும் பெருதுமே போற்றிநிற்க
பெண்களை சமணமென்றும் வெறுத்துமே நின்றதாலே
பொங்கியே எழுந்துநின்ற மங்கையற் கரசியாரும்
சைவத்தை மீட்டெடுக்கத் தலைமையைத் தாங்கினார்கள்
ஆடலும் வேண்டாம் பாடலும் வேண்டாம்
அழகும் வேண்டாம் அலங்காரம் வேண்டாம்
எல்லாம் மாயை எதுவும் வேண்டாம்
என்று சொன்னதே இப்புவி சமணம்
சமணம் வெறுத்ததைச் சைவம் உயர்த்தி
இறைவனை வழிபட ஏற்றது என்றது
ஆலயம் அனைத்தும் ஆடலும் பாடலும்
ஆண்டவன் பிரார்த்தனை ஆகியே நின்றது
பாண்டிய மக்கள் மனங்கள் மாறின
மன்னனின் மனமே சமணத்தில் இருந்தது
மன்னனை மாற்றிட மங்கையற் கரசியார்
தென் னாடுடைய சிவனையே வேண்டினார்
சிவனது அருளாலே தவமுதல் வந்தார்
கால்பதித்த உடனே கடுங்கோபம் கொண்டார்
எதிர்த்தார் எரித்தார் எத்தனையோ செய்தார்
அத்தனையும் அரசர்க்கு வெப்புநோயாய் ஆகியதே
சமணத் தலைமைகள் மந்திரமோ தந்திரமே
எதுவுமே அரசர்க்கு ஏற்றசுகம் அளிக்கவில்லை
மனைவியின் கருத்தை மன்னனப்போ கேட்டான்
மந்திராமாம் திருநீற்றை சம்பந்தர் கொடுத்தார்
திருநீறு மன்னனின் நோயினையும் போக்கியது
திருநீறு மன்னனின் மனதினையும் மாற்றியது
தீமையென சமணத்தை உணரவும் வைத்தது
மங்கையற் கரசியார் மனநிறைவை எய்தினார்
வளவர்கோன் பாவை வழிகாட்டி ஆகினார்
சம்பந்தர் தலைமையிலே சைவத்தை நிலைநாட்டினார்
சேக்கிழார் போற்றினார் சிவனாரின் அடியாரை
சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !
