போகர் ஜீவ சமாதி | பழநி

போகர், நவபாஷாணத்தால் பழநி தண்டாயுதபாணி சிலையை உருவாக்கியவர். சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற பலவற்றில் பேரறிவும் ஞானமும் கொண்டிருந்தார். சீனாவில் போகர், போயாங் வேய் (Boyang Wei) என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் போகர் 7000 உள்பட, தமிழில் 64 நூல்களை எழுதியுள்ளார். பழநி மலை உச்சியில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகத்தில் இவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது. இங்கே அண்மையில் சென்று இவரையும் இவர் வழிபட்ட மரகதலிங்கத்தையும் வழிபட்டோம். இதோ சில காட்சிகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)