கல்லில் வடித்த கவி, காலத்தை வென்ற கலை, நூற்றாண்டுகளைக் கடந்த நூதனம், அந்தரத்தில் அசையும் அதிசயம், கடும்பாறையைக் கொடியென வளைத்த வல்லமை, உலகோர் வியக்கும் உன்னதம், தரணி போற்றும் தமிழர் கைத்திறம், காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் ஒளிவீசும் ஒய்யாரக் கற்சங்கிலி இதோ.

108 திவ்ய தேசங்களுள் முப்பதோராவது திவ்ய தேசம், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம், அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் பள்ளிகொண்டிருக்கும் அற்புதத் தலம், எப்படிச் செய்தனரோ என நாம் வியக்கும் கல் சங்கிலியைக் கொண்ட கச்சி மாநகரத்துக் கலாமண்டபம்… எனப் பல பெருமைகள் கொண்ட அருள்மிகு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளே ஓர் உலா.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *