Tag: பாவலர் கருமலைத்தமிழாழன்

  • பெண்கள் சுதந்திரம்

     

     

    பாவலர் கருமலைத்தமிழாழன்

     

    பெண்கள்தம்   சுதந்திரமோ  பூத்த   பூவாய்ப்

    பெருமையாகத்   தெரிந்தாலும்   தாளின்   பூவே

    கண்களெனப்   பெண்களினைச்    சொல்லு   வோரே

    கறுப்பாடி   அணிவித்துக்   குருடாய்ச்   செய்வார்

    உண்மையான   இறையென்றே   போற்றிக்   கோயில்

    உள்ளிருக்கும்    சிலையாக   வீட்டுள்   வைப்பர்

    மண்மீதில்   மாதவத்தால்   பிறந்தாள்   என்றே

    மாபெருமை   தருவதுபோல்   அடிமை   செய்வார் !

     

    உடல்முழுதும்    மறைக்கின்ற்   சுடுதார்   ஆடை

    உடுத்துதற்கும்    எதிர்ப்புதனைத்   தெரிவிப்   பார்கள்

    முடக்காமல்   தெருவினிலே    அழைத்துச்   செல்ல

    முழமெட்டு    சேலையினை    உடுத்தென்   பார்கள்

    மடமச்சம்   பயிர்ப்புநாணம்    பண்பு    நான்கில்

    மண்மகளைக்    கண்பார்க்க   வேண்டு   மென்பர்

    படபடென்று    பேசுவது   பொதுவி   டத்தில்

    பண்பாட்டுக்   கிழுக்கென்றே   ஏசு   வார்கள் !

     

    உயர்கல்வி   படித்துயர்ந்த   பதவி   தன்னில்

    உட்கார்ந்த   போதும் ! நாள்    கூலி   யாக

    வயல்களிலே    நாற்றுநட்டு    களைபி   டிங்கி

    வளைந்துடலில்   வியர்வைசிந்த    உழைத்த   போதும்

    தயக்கமின்றிப்   புகுந்தவீட்டில்    அனைவ   ருக்கும்

    தாதியாக   நாள்முழுதும்    செய்த    போதும்

    சுயமாகத்   தன்விருப்பில்    செய்வ   தற்குச்

    சுதந்திரத்தை    யார்தந்தார்    பேதை   யர்க்கே !

     

     

     

    தேர்தலிலே    நின்றுவெற்றி   பெற்ற   போதும்

    தெரிவதுவோ    கணவன்தான்   அதிகா   ரந்தான்

    போர்வையாகப்    பண்பாடு   ஒழுக்கம்    தன்னைப்

    போர்த்திநேராய்ப்    பேசுதற்கும்   உரிமை   யின்றிக்

    கூற்றுகளை     சங்கநூல்கள்    காப்பி   யங்கள்

    கூறியவர்    சுதந்திரத்தைப்    பறித்த   போல

    சீர்திருத்தம்    பகுத்தறிவு    கல்வி    என்று

    சிறப்புக்கள்    வந்தபோதும்   கானல்   நீரே !

     

    Share
  • கோவை தமிழ் இலக்கியப் பாசறையின் சிறந்த மரபுக் கவிஞர் விருது

    கோவை தமிழ் இலக்கியப் பாசறை தம்முடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டின் சிறந்த மரபுக் கவிஞராகப் பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களைத் தேர்ந்தெடுத்து 26-01-2016 அன்று கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராகத் திகழ்ந்த விஞ்ஞானி திரு.பொன்ராசு அவர்கள் விருத்தக் கவிதை வித்தகர் என்ற விருது அளித்து சிறப்பு செய்தார்.

    11

    12

    13

    Share
  • பாவேந்தர் போல் நாமெழுவோம்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    வான்கதிர்தான்   சிதறித்தூள்   பூமி   யாக
        வந்தபோதே   பிறந்தமொழி   தமிழ்தான்   என்றும்
    தேன்என்றும்   பால்என்றும்   தெவிட்டி   டாத
        தெள்ளமுதாம்   எனத்தாசன்   புகழ்ந்து   ரைத்தும்    baaradhidasan
    ஊன்உணர்வில்   கலந்தென்னை     இயக்கு   கின்ற
        உயிரென்றும்   தமழ்மொழியை   உயர்த்திச்   சொல்லக்
    கூன்மொழியாய்   ஆக்கியின்று   குனியச்   செய்தே
        கூறுகின்றோம்   செம்மொழிக்குச்     சொந்த   மென்றே !

    தமிழாய்ந்த   தமிழன்தான்   தமிழ நாட்டின்
        தலைஅமைச்சாய்   வரவேண்டும்   என்று   ரைத்த
    அமிழ்தான   கவிஞனிவன்   கருத்தை ஏற்றே
        அரியணையில்   தமிழனைநாம்   அமர்த்தி   னோமா?
    நிமிர்ந்திங்கே   தமிழர்காள்   எண்ணிப்   பார்ப்பீர்!
        நிலைகுலைந்து   தமிழ்நாடு   போவ   தெல்லாம்
    தமிழ்நாட்டில்   தமிழன்தன்   ஆட்சி   யின்றித்
        தமிழல்லார்   அமர்ந்திருக்கும்   அவலத்   தாலே !

    இருட்டறையில்   உள்ளதடா   உலகம்   சாதி
        இருக்கின்ற   தென்பானும்   இருக்கின் றானே
    உருபடுமா   இந்நாடு   என்று   ரைத்தும்
        ஊர்ஊராய்ப்   பெரியார்தாம்   சுற்றி   வந்து
    கருத்தாலே  சமத்துவத்தை   ஊட்டி   விட்டும்|
        காணுகின்றோம்   இன்னுமிங்கே   சாதிக்   கொடுமை
    அரும்புலவன்   பாவேந்தன்     சொல்லை   ஏற்றே
        அகற்றிடுவோம்     சாதிகளைப்     பொதுமை   காண்போம் !

    வேடமிட்டே   ஆரியர்கள்   சூழ்ச்சி   செய்து
        வேதத்தில்   புராணத்தில்   உலவ   விட்ட
    மூடத்தின்   மூக்கறுக்கக்   கவிதை   தன்னில்
        மூட்டிவிட்டார்   விழிப்புணர்வை   பாவேந்   தர்தாம்
    ஏடகமாம்   குயிலேட்டில்   பஞ்சாங்   கத்தை
        ஏற்றிடாமல்   பகுத்தறிவை   ஏற்றி   டென்றார்
    வீடகத்தில்   இன்னும்நாம்   முட்டா   ளாக
        விதிப்படித்தான்   நடக்குமென்றே   வீழு   கின்றோம் !

    வீட்டினிலே     தமிழில்லை   தெருக்கள்   தம்மில்
        விளம்பரப்   பலகைகளில்   தமிழே   இல்லை
    காட்சிதரும்   தொலைக்காட்சி   திரைப்ப   டங்கள்
        காண்கின்ற   செய்தித்தாள்   கல்வி   தன்னில்
    தீட்டென்றே   தமிழ்மொழியைத்   துரத்தி விட்டார்
        தீந்தமிழ்தான்   அழிந்துவிட்டால்   இனமும்   மாயும்
    மீட்டெடுக்க   எழவில்லை   என்றால்   ஞாலம்
        மீதினிலே   பெயரின்றிப்   போவோம்   நாளை !

    வீட்டிற்குள்   முடக்கிவைத்த   பெண்க   ளுக்கு
        விழிப்புணர்வைத்   தருவதுவே   கல்வி   என்று
    பாட்டினிலே   பாவேந்தர்   எழுச்சி   ஊட்டிப்
        படிப்பறிவு   பெறுவதற்கே   வழிவ   குத்தார்
    நாட்டினிலே   பெண்களின்று   அமைச்ச   ராக
        நாடுவிட்டுப்   பணியாற்றும்   அறிஞ   ராக
    காட்சிதராக்   கோள்களுக்கும்   செல்வோ   ராகக்
        காண்கின்ற   பெருமையெல்லாம்   அவர்பாட் டாலே !

    பாரதிபோல்   யாப்பினையே   சீர்தி   ருத்திப்
        பாமரர்க்கும்   புரியுமாறு   கவிதை   நெய்தோன்
    ஊரதிரக்   கருத்தினிலே   புரட்சி   ஏற்றி
        உயர்குடும்பம்   உருவாகப்   பாப்பு னைந்தோன்
    சீரழிந்த   தமிழகத்தைத்   தமிழு   ணர்வை
        சீர்செய்யக்   கனல்தெறிக்கும்   பாபொ   ழிந்தோன்
    வேரழிக்க   வந்தபிற   மொழிய   ழிக்க
        வெகுண்டெழுந்த   பாவேந்தர்   போல்நா மெழுவோம் !

     

    Share
  • பெண்ணே…நீ!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    குளிர்நிலவே   எனப்புகழும்
    குயில்மொழிக்கு   மயங்காதே
    குளிரெரிக்கப்   புறப்பட்ட
    குங்குமத்தின்   தீக்கதிர்நீ !

    மானென்னும்   புகழ்மொழியால்
    மண்ணிலுயிர்   துறக்காதே
    தேனுண்ணும்   நரிகள்தம்
    தோலுரிக்கும்   பாய்புலிநீ !

    கயலென்னும்   புகழ்மொழியால்
    கலங்கிவலை   துடிக்காதே
    புயலாகி   வலையறுக்கப்
    புறப்பட்ட   திமிங்கிலம்நீ !

    கற்பென்னும்   பெருமைக்குக்
    கல்தன்னை   அணைக்காதே
    விற்பனையின்     பொருள்மாற்ற
    வெடிக்கின்ற   கந்தகம்நீ !

    படிதாண்டாப்   பத்தினியாய்ப்
    படிக்குள்ளே   கருகாதே
    படிசமைக்கும்   ஓநாயைப்
    பதைக்கவைக்கும்   தீச்சுடர்நீ !

    தாய்மைக்கு   வித்தென்னும்
    தவிப்பினிலே     புதையாதே
    பேய்மைக்கு   மண்பிளக்கும்
    பிரளயத்தின்   விருட்சம்நீ !

     

    Share
  • படிப்பதற்கே நூல்கள்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    அடுக்கடுக்காய் நூல்களினை அடுக்கி வைத்தே
    அழகுதனைப் பார்ப்பதிலே பயன்தான் உண்டோ?
    மிடுக்கான பேழைக்குள் வரிசை யாக
    மிளிர்கின்ற படிவைத்தால் அறிவா கூடும்?                 Tamizhazhan
    எடுக்காமல் எடுப்பாக வீட்டிற் குள்ளே
    எழிலுக்காய் வைப்பதிலே மதிப்பா சேரும்?
    கொடுக்காமல் புதைக்கின்ற பணத்தைப் போன்ற
    கொடுமையன்றோ படிக்காமல் வைத்தி ருத்தல்!

    வாங்கிவந்த நூல்களினைக் கருத்துக் கேற்ப
    வகைபடுத்தித் துறைபிரித்து வைக்க வேண்டும்
    பாங்காகத் தூசிதட்டிப் பூச்சி வந்து
    பக்கங்கள் அரிக்காமல் காக்க வேண்டும்
    பூங்காவில் தேன்தேடும் தேனீ போன்றுப்
    புதுநூல்கள் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்
    நீங்காத அன்புகாட்டிக் காக்கும் தாயாய்
    நிறைநெஞ்சால் நாள்தோறும் பேண வேண்டும்!

    உண்பதற்கு நேரத்தை ஒதுக்கல் போல
    உரியநேரம் படிப்பதற்கும் ஒதுக்க வேண்டும்
    பண்புகளைக் குழந்தைகட்குச் சொல்லல் போன்று
    படிக்கின்ற பழக்கத்தைப் பதிக்க வேண்டும்
    எண்ணத்தை அறிவுதனைக் கூர்மை யாக்கி
    எப்போதும் துணைநிற்கும் நூல்கள் தம்மைக்
    கண்போலக் காத்துநாளும் படிக்கும் போதே
    கால்நிற்கும் துணிவுவந்து சிறக்கும் வாழ்வே !

     

    Share