Tag: யோசனைகள்

  • மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?

    மகளிர் உரிமைத் தொகையை என்ன செய்யலாம்?

    அண்ணாகண்ணன்

    மகளிர் உரிமைத் தொகையாக, 1.31 கோடிப் பேருக்குத் தலா 5 ஆயிரம் என்ற அளவில் ரூ.6550 கோடியைத் தமிழக அரசு விடுவித்துள்ளது. இது பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என நம்புகிறார்கள். இதே போன்று, மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ரூ.1310 கோடியை அரசு விடுவித்து வருகிறது.

    பெண்கள் அன்றாடச் செலவுகளுக்கு இதைச் செலவிடாமல், வேறு வழிகளில் செலவிட்டால் அவர்கள் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டு. இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யலாம்? எப்படிச் செலவிடலாம்? இதோ என் யோசனைகள்.

    தமிழ்நாடு மகளிர் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கி, இந்த 1.31 கோடிப் பேரும் அதில் சேர வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களுக்குள் தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    மகளிர் அனைவரின் பெயர், முகவரி, கல்வித் தகுதி, தொழில் உள்ளிட்ட விவரங்களைத் தொகுக்க வேண்டும். இவர்களைத் தொழில் அடிப்படையில், ஊர் அடிப்படையில், கல்வித் தகுதி / திறன் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் ஒருவர் வழிநடத்த வேண்டும்.

    இந்தக் குழுக்கள் மாதந்தோறும் சந்தித்துத் தங்கள் தேவைகள், சிக்கல்கள், சவால்கள் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாட வேண்டும். இந்தச் சிக்கல்களுக்கு அந்தக் குழுவிலேயே தீர்வு கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால், இதர குழுக்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஒருவேளை, தங்கள் அமைப்பிற்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், வெளியிலிருந்து ஆலோசனைகளைப் பெறலாம்.

    இந்த அமைப்பு, தொழில்முனைவுப் பிரிவு ஒன்றையும் உருவாக்க வேண்டும். அதை ஆதரிக்க, நிதி முதலீட்டுப் பிரிவையும் தொடங்க வேண்டும். தொழில்முனைவில் ஆர்வம் கொண்ட பெண்கள் அதில் சேர வேண்டும். தாங்கள் எந்தத் தொழில் தொடங்க விரும்புகிறோம், அதில் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறது, எவ்வளவு முதலீடு தேவை, எப்போது திருப்பிச் செலுத்த முடியும் என எடுத்துரைக்க வேண்டும் (Investment Pitch).

    நிதி முதலீட்டுப் பிரிவில், வாய்ப்புள்ள, ஆர்வமுள்ள பெண்கள், தங்கள் சேமிப்பையும் உரிமைத் தொகையையும் முதலீடு செய்ய வேண்டும். இவர்களின் பிரதிநிதிகள், உரிய தொழில்முனைவுத் திட்டங்களில் ஆராய்ந்து முதலீடு செய்வார்கள். இதன் மூலம், அந்தத் தொழில்களில் இவர்கள் முதலீட்டாளர்களாக, பங்குதாரர்களாக மாறுவார்கள். இது ஒரே நேரத்தில் தொழில்முனைவோர், முதலீட்டாளர் ஆகிய இருவருக்கும் பயன் அளிக்கும்.

    இதற்குத் துணையாக, வேலை தேடும் பெண்களுக்காகச் செயல் மகளிர் என்ற அமைப்பினை உருவாக்க வேண்டும். தொழில்முனைவோர் தங்களுக்குத் தேவையான பணியாளர்களை, விநியோகஸ்தர்களை இந்தச் செயல் மகளிர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

    தொழில்முனைவோர் உருவாக்கும் பொருள்களை, சேவைகளை இதர மகளிருக்குத் தள்ளுபடி விலையில் வழங்கலாம். இது விற்பனை வலையமைப்பாக உருவெடுக்கும். பொருள்களை உருவாக்குவது, விற்பது, விநியோகிப்பது, கொண்டு சேர்ப்பது ஆகிய அனைத்திலும் பெண்களை ஈடுபடுத்தலாம். இதன் மூலம் இந்த நிதி, பல்கிப் பெருகும். முதலீட்டாளர் அனைவருக்கும் லாபம் கிடைக்கும். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

    எதிர்காலத்தில் இந்தப் பெண்கள் தங்களுக்குள் கூடிப் பேசி, உள்ளாட்சித் தேர்தல் முதல் பாராளுமன்றத் தேர்தல் வரை போட்டியிடவும் செய்யலாம். தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என வலியுறுத்தலாம்.

    தங்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மாற்றுச் சக்தியாகப் பெண்கள் உருவெடுக்கலாம். அதிகாரத்தை வென்றெடுக்கலாம். தங்களுக்குத் தேவையான தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், கல்வி, அரசியல் உள்ளிட்ட அனைத்தையும் தாங்களே தீர்மானிக்கலாம். அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடிக்கலாம்.

    தமிழ்நாட்டு மகளிர், இதைக் குறித்துச் சிந்திக்க வேண்டுகிறேன்.

    Share
  • நித்திலாவின் யோசனைகள் – 5

    நித்திலாவின் யோசனைகள் – 5

    நித்திலாவின் புதிய யோசனை. உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நித்திலாவின் யோசனைகள் – 4

    நித்திலாவின் யோசனைகள் – 4

    நித்திலாவின் புதிய யோசனை இதோ. உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Nithila Annakannan Ideas – 3 – Heart-shaped Call Button

    Nithila Annakannan Ideas – 3 – Heart-shaped Call Button

    Here is a new idea from Nithila Annakannan. Released this in International Daughters day. We seek your feedback.

    (To subscribe Annakannan’s YouTube channel, please click here: http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓர் எளிய தீர்வு – 9

    ஓர் எளிய தீர்வு – 9

    ஒரு காலி டப்பாவைச் செல்பேசிக் கூடாக உருவாக்க முடியும். எப்படி என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நித்திலா அண்ணாகண்ணனின் யோசனைகள் 1

    நித்திலா அண்ணாகண்ணனின் யோசனைகள் 1

    என் மகள் நித்திலா சொன்ன புதுமையான யோசனையைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்

    அண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்

    ஒவ்வொரு புயலின்போதும் ஏற்படும் சேதங்கள் கணக்கில் அடங்கா. முக்கியமாக, மின் கட்டுமானம் முழுவதுமாகச் சிதைகிறது. மின் கம்பங்கள் முறிந்து விழுகின்றன. மின் வடங்கள் துண்டிக்கப்படுகின்றன. மக்களும் அரசும் இதர அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இந்தப் பின்னணியில், புயலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான யோசனைகளை முன்பே நான் கூறியுள்ளேன். இந்தப் பதிவில், மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம் கொடுப்பதன் மூலம் புயல் சேதத்தைக் குறைக்க, என் யோசனைகளைத் தெரிவித்துள்ளேன். இது, ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நுண்ணறிவு நகர்களாக மேம்படுத்தவும் பயன்படும்.

     

    இதுகுறித்து மின்பொறியாளர்களின் கருத்துகளை அறிய, ஆவலாக உள்ளேன். அன்பர்கள், இதனைப் பார்த்து, உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 45 – புலம்பெயர் தொழிலாளர் இடர் தீர

    அண்ணாகண்ணன் யோசனைகள் 45 – புலம்பெயர் தொழிலாளர் இடர் தீர

    நடந்தே கடப்பேன் எனது துயரை என்பது போல, ஒரு முரட்டுத் துணிச்சலுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் முடிவு சரிதானா? அவர்களுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்? இந்தச் சிக்கலுக்கு எனது தீர்வு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 44 – வீட்டிலிருந்தே உற்பத்தி, வீட்டிலிருந்தே சேவைகள்

    அண்ணாகண்ணன் யோசனைகள் 44 – வீட்டிலிருந்தே உற்பத்தி, வீட்டிலிருந்தே சேவைகள்

    ஊரடங்கால், பொது முடக்கத்தால் நாம் வீட்டில் முடங்கித்தான் கிடக்க வேண்டுமா? பணியாற்ற முடியாதா? பொருளீட்ட முடியாதா? வீட்டிலிருந்தே வேலை என்பது போல, வீட்டிலிருந்தே நம்மால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும், வீட்டிலிருந்தே சேவைகள் வழங்க முடியும். பொருளாதாரச் சுணக்கம் கண்டுள்ள இந்தியாவின் அடிப்படைச் சிக்கலுக்கு எனது தீர்வு இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    கொரோனா தொற்று பரவும் இந்த ஊரடங்கு காலத்தில், கடைகளிலும் பொது இடங்களிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ எனது யோசனை.

     

    படப் பதிவு: ஹேமமாலினி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பத்திரப் பதிவுத் துறையினர், இப்போது செய்ய வேண்டியது என்ன?

    பத்திரப் பதிவுத் துறையினர், இப்போது செய்ய வேண்டியது என்ன?

    அண்ணாகண்ணன்

    பத்திரப் பதிவுக்கான நேரத்தை மாலை 5 மணி வரை தமிழக அரசு  நீட்டித்துள்ளது. ஆனால்,  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மக்கள் எப்படி வெளியே வருவார்கள்? ஓர் இடத்தை வாங்குவது என்றால், பலமுறை சென்று பார்த்து, வில்லங்கம் இருக்கிறதா என்று சோதித்து, கடன், பாகப் பிரிவினை, உயில் எனப் பல கோணங்களிலும் சரிபார்த்துத்தானே வாங்குவார்கள்? இதற்கு வழக்கறிஞர்கள், வங்கித் துறையினர், பத்திரப் பதிவுத் துறையினர் எனப் பலரையும் சந்தித்துப் பேச வேண்டியிருக்கும். இடையில் தரகர் வேறு இருப்பார். இவர்கள் அனைவரிடமும் தொலைபேசியில் அல்லது இணையத்தில் பேசிவிட முடியுமா? பல இலட்சம் கைமாறுகிற ஒரு விற்பனைக்கு எத்தனை முறை மக்கள் சிந்திப்பார்கள் என அரசு யோசிக்கவில்லையா?

    ஏற்கனவே பேசிமுடித்து, பதிவு மட்டும் நிலுவையில் இருப்பவற்றை  முடிக்கலாம் என்றும் சொல்ல இயலாது.   ஏனெனில், அது மிகச் சிறிய எண்ணிக்கை. மேலும், தொற்று பரவி வரும் நிலையில், இத்தகைய பரிமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும். இவர் வாங்குகிற இடத்தில் அல்லது அதற்கு அருகில் தொற்று இருந்தால், அந்த இடத்தின் மதிப்புக் குறையும். வாங்கவும் அஞ்சுவார்கள். மேலும் பத்திரப் பதிவு முடிந்து, பட்டாப் பெயர் மாற்றம், பொறுப்பினைக் கைமாற்றுதல், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, நில வரி, வீட்டு வரி செலுத்துகை ஆகிய அனைத்துக்கும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அவர் வெளியே செல்ல முடியாது. மேலும், போலி ஆவணங்களைக் காட்டி, மோசடி செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவசரமாகப் பணம் தேவை, அதனால்தான் பாதி விலைக்கு விற்கிறேன் என அளந்துவிட்டால், யார் இவற்றை எல்லாம் சரிபார்ப்பது? கொரோனா காலத்திற்குப் பிறகு, நில வழிகாட்டி மதிப்பை அரசு மறுவரையறை செய்ய வேண்டியிருக்கும். எனவே பழைய வழிகாட்டி மதிப்பில், இப்போது விற்பனை செய்வதோ, அதற்குப் பத்திரம் வாங்குவதோ பொருந்தாது. அப்படிச் செய்தால், வாங்குபவருக்கே நட்டம் ஏற்படும்.

    மேலும், இது பத்திரப் பதிவுக்கான நேரமே இல்லை. மாறாக, இதற்கு முந்தைய பத்திரப் பதிவு ஆவணங்கள் அனைத்தையும் மின்னாக்கம் செய்வதில் பத்திரப் பதிவுத் துறையினர் இப்போது முழுமையாக ஈடுபட வேண்டும். மின்னாக்கப் பணிகளை வெளியாரிடம் ஒப்படைத்திருந்தால், அவற்றை வலையேற்றிச் சரிபார்க்க வேண்டும். ஆயிரம் ஆவணங்களுக்கு ஒன்றையாவது சரிபார்த்து, வெவ்வேறு சாதனங்கள், உலாவிகளின் வெவ்வேறு பதிப்புகள் வழியாகச் சரிபார்த்து, சேவையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும், பத்திரப் பதிவுத் துறையினர் அனைவருக்கும் மின்னாக்கத்திற்கும் இணையவழிச் சேவைக்கும் இதில் ஏற்பட வாய்ப்புள்ள தொழில்நுட்ப இடர்களை, சவால்களை எதிர்கொள்வதற்கும்  இது தொடர்பான மக்களின் விசாரணைகளுக்குப் பதில் அளிப்பதற்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.

    இந்த மின்னாக்கம், மின்னாளுகை மற்றும் பயிற்சிகளைப் பத்திரப் பதிவுத் துறைக்கு மட்டுமில்லாமல், இதர துறைகள் அனைத்துக்கும் விரிவுபடுத்த வேண்டும். இதை ஓய்வுக் காலமாகக் கருதாமல், பயிற்சிக் காலமாக மாற்றினால், எதிர்காலத்தில் உரிய பயன் கிட்டும்.

    Share