Tag: வல்லமை நிர்வாகக்குழு

  • ஆனந்தமான ஆறாம் ஆண்டு!

    அன்பு நண்பர்களே!

    vallamai

    வணக்கம். ஒன்றாக இணைந்து பணியாற்றி அறுபது முழுமதி கண்டோம். புதிதாகப் பல கிளைகள் கண்டோம். கனிகள் பிறந்தன. சுவைத்தோர் ஆயிரம். சுவைபடச் செய்த அனைவருக்கும் இந்நாளில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். துஞ்சாமல், பல்வேறு நிலையிலும் எங்களோடு உடனிருந்து இவ்வளர்ச்சிக்கு உரமிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி கூறும் நேரமிது. உறுதுணையாக உடனிருந்து உதவிக்கரம் நீட்டும் தோழர், தோழியரே , வல்லமை என்னும் மலரின் மணம் வீசும் இதழ்களான, எழுத்தாளர்களே, உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தைகளால் வல்லமையை வளமையாக்கியிருக்கிறீர்கள். தேன் சிந்தும் மலரில் நுகர்கின்ற வண்டாய் வரும் வாசகர்களே உங்களுடைய அபரிமிதமான வருகையே எங்களை உற்சாகமூட்டுகிறது. இந்த வண்டுகளின் ரீங்காரமே நம் வல்லமையை மென்மேலும் சிறப்பாக்குகிறது. இந்நேரத்தில் இந்த இதழ் மேலும் சிறப்புப் பெற வழிகாட்டுதல் புரிந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து இணைந்திருப்போம். இன்தமிழ் இனிமையை இன்பமாய் சுவைப்போம். வாரீர்!!

    வல்லமை நிர்வாகக் குழு

    Share
  • பழமைபேசியின் தந்தை இயற்கை எய்தினார்!!

    நம் பழமைபேசியின் தந்தையார் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகள். அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

    பழமைபேசியை தொடர்பு கொள்ள ; 04222688726

    வல்லமை ஆசிரியர் குழுவினர்

    apaza

    Share
  • புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு

    பவள சங்கரி

    வாசிப்பினை நேசிப்போம்!
    வாசிப்பினை சுவாசிப்போம்!

    நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

    எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்து மதிப்புரை வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாகவே இப்போட்டி நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துகொண்டு இப்போட்டியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.  தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    இந்தப் போட்டிக்கு நாம் எதிர்பார்த்த அளவு மதிப்புரைகள் வரவில்லை என்பதால் ஆண்டு முழுவதும் இந்தப் போட்டியை நடத்துவது கடினம்; எனவே, இதனை மறுசீரமைக்கிறோம்.

    பரிசுத் தொகைகளையும் சற்றே உயர்த்தியுள்ளோம். வருடம் முழுவதும் என்று அறிவித்திருந்ததை ஒரே போட்டியாக மாற்றியமைத்திருக்கிறோம். சென்னையில் ஜனவரி 10ம் தேதி தொடங்கி, ஜனவரி 22 (2014) வரை நடக்கவிருக்கிற புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, இப்போட்டிக்கான இறுதி நாளை ஜனவரி 30 என்று அறிவிக்கிறோம். (2014) ஜனவரி 30ம் தேதி வரை வருகிற படைப்புகள் அனைத்தும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அன்பர்களின் உற்சாகமான பங்கேற்பை வரவேற்கிறோம்.

    முதல் பரிசு ரூ.1000
    இரண்டாம் பரிசு ரூ.750
    மூன்றாம் பரிசு ரூ.500

    மேலும் 3 பேருக்குச் சிறப்புப் பரிசாகத் தலா ரூ.200

    போட்டிக்கான விதி முறைகள்:

    ஒருவர் எத்தனை மதிப்புரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    போட்டிக்கு அனுப்பும் மதிப்புரைகள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.

    மதிப்புரைக்குத் தேர்ந்தெடுத்த நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, நூல் வெளியான ஆண்டு, பக்க எண்ணிக்கை, விலை, பதிப்பக முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். நூலின் அட்டைப்படத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்புதல் நலம்.

    மதிப்புரைகளுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.

    பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.

    மூல நூல் எந்த மொழியில் இருந்தாலும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம். மதிப்புரையும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

    மதிப்புரைகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.

    திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!

    உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • வல்லமைக்குத் தொழில்நுட்ப உதவியாளர் தேவை

    அன்பு நண்பர்களே,

    வல்லமையின் தள நிர்வாகி ஆமாச்சுவின் வழிகாட்டுதலில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பு & தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள, உதவியாளர் தேவை. கல்லூரியில் இளங்கலை அறிவியல், இளங்கலை தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயிலும் மாணவர்கள், இதற்குப் பொருந்தக்கூடும். ஆர்வமும் திறனும் உள்ள இதர அன்பர்களும் முன்வரலாம். வாரத்துக்குச் சில மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும்.

    இதற்கு ஊதியம் கிடையாது. தன்னார்வப் பணியே. ஆயினும், கல்லூரி மாணவர்கள், தங்கள் மேற்கொள்ளும் (புராஜக்ட்) திட்டமாக, வல்லமைப் பணியை ஏற்கலாம். அவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர், தங்களைப் பற்றிய விவரங்களை amachu@amachu.me என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம்!

    நன்றி

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • ஆசிரியர் குழுவில் ஒரு புதிய முகம் அறிமுகம்!

    அன்பு நண்பர்களே,

    DSCF4667

    வணக்கம். நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இன்று பர்வத வர்தினி நம்மோடு இணைகிறார். இவர் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.கால இயந்திரம் ’, என்ற ஒரு தொடரின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்தவர். பல அரிய படைப்புகளை நம் வல்லமைக்கு வழங்கியுள்ள இவர், ஒரு பட்டயக் கணக்கர் (Chartered Accountant). இவரது ​சொந்த ஊர் ​சென்​னை. படித்து முடித்ததும் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்​தைகளுடன் குவைத்தில் வசித்து வருகி​றார். சில காலம் குவைத்தில் பணிபுரிந்தாலும், தற்சமயம் முழு ​நேர இல்லத்தரசியாக இருக்கிறார். நாவல்கள், குறிப்பாக சரித்திர நாவல்கள் படிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர். பர்வத வர்தினியை வாழ்த்தி வரவேற்போம். வருக.. வருக வர்தினி!

     வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு (2013)

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • வல்லமை வாழ்த்தி வழியனுப்புகிறது!

    திரு இசைக்கவி ரமணன் அவர்களின் அமெரிக்கா/கனடா நாட்டு இலக்கியப் பயணம் சிறப்புற வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    Invitation Aug 6

    வணக்கம்!

    நாளை இரவு அமெரிக்கா/கனடா நோக்கிச் செல்கின்றேன். அதற்கு முன்பாக, மாலையில் ஒரு சிறிய சிறப்பான நிகழ்ச்சி. கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் பாட்டு, உங்களோடு. அப்படியே துர்கா சப்த ஸ்லோகி, மனோன்மணி மாலை ஆகிய குறுந்தகடுகள்,(தர்மா ராமனுடன் உரையாடல்கள்) A Drop from the Gita என்னும் மின் நூல் இவற்றை வெளியிடுகிறேன். இவற்றைத் தயாரித்து அளிப்பவர்கள் சென்னை ஸ்வாதி ஸொல்யூஷன்ஸ் நிறுவனத்தினர்.

    வாருங்களேன்! வந்து என்னை வழியனுப்பி வைத்தமாதிரியும் இருக்கும்!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இருவருக்கு ‘கரிகாலன் விருது’ 03/02/2013

    ‘கரிகாலன் விருது’ பெற்றுள்ள் பிரபல சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலாதேவி அரவிந்தன் மற்றும் திரு மா. இளங்கண்ணன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    03/02/2013

    சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும் திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின்நுவல்” சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின் “குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நன்றி :

    http://tamilmurasu.com.sg/news/national

     

    Share