Tag: வெள்ளம்

  • தாம்பரத்தில் வெள்ளம் வடிகிறது

    தாம்பரத்தில் வெள்ளம் வடிகிறது

    அடையாறு நதி உடைப்பு சரி செய்யப்பட்டதால், நிலைமை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து வருகிறது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • த.மு.மு.க.வின் படகுச் சேவை

    வெள்ளத்தில் ஒரு குடும்பம் சிக்கியுள்ளது என அறிந்தவுடன், ஆட்டோவில் படகினை ஏற்றிக்கொண்டு களத்துக்கு விரைகின்றது த.மு.மு.க.வின் படகு அணி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கரைமீறும் அடையாறு

    கரைமீறும் அடையாறு

    நுங்கும் நுரையுமாக, சுழிப்பும் அலையுமாக, கழிவும் கசடுமாக, சிரிப்பும் சீற்றமுமாக, துடிப்பும் துள்ளலுமாக கரைமீறிப் பாய்கிறது அடையாறு. ஒரே நேரத்தில் மேலே கனமழை, கீழே பெருவெள்ளம் என்ற காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆஹா என்று எழுந்து அதிர நடக்கும் அடையாற்றின் பேரழகு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம்

    தாம்பரத்தில் வீடுகளைச் சூழ்ந்தது வெள்ளம்

    அடையாறு நதியில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரளவு நீர், ஊருக்குள் பாய்கின்றது. தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாள் முழுவதும் தண்ணீர் வடியவில்லை. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆவேச அடையாறு! தத்தளிக்கும் தாம்பரம்!

    ஆவேச அடையாறு! தத்தளிக்கும் தாம்பரம்!

    அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு, கரை உடைப்பு, கனமழை என ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதலால் தாம்பரம் தத்தளிக்கிறது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். சாதாரணப் பயணமே சாகசப் பயணமாய் ஆகிவிட்டது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு

    அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு

    தாம்பரம் அருகில் அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் தற்காலிகமாக அடைத்துள்ளனர். ஆனாலும், அபாயம் முழுமையாக நீங்கியதாகக் கொள்ள முடியாது. இதற்கு வலிமையான கரையமைத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசர அவசியம். மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாலாற்றில் வெள்ளம்

    பாலாற்றில் வெள்ளம்

    பாலாற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்.

    படப்பதிவு: வாலாஜாபாத்திலிருந்து அண்ணாகண்ணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு – 2

    கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு – 2

    அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அதிகாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்தது. அதன்பின்னர் பகலில் அவ்வப்போது கனமழை பெய்தது. சில நேரங்களில் வெயில் அடித்தது.

    * திற்பரப்பு அருவியில் நேற்று முன் தினத்தை விடக் குறைந்த சீற்றத்துடன் வெள்ளம் பாய்ந்தோடியது. நேற்றைய முன் தினத்தை விடச் சற்று தெளிவாக அருவியில் தண்ணீர் கொட்டியது. அருவியின் மேற்பகுதி தடுப்பணையில் மறுகால் இட்டதால் படகு சவாரி நடக்கவில்லை.

    * மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றுத் தண்ணீர், அருவிக்கரை – வேர்க்கிளம்பியை இணைக்கும் சப்பாத்துப் பாலத்தை மூழ்கடித்தபடி நேற்று முன்தினம் முதலே சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை வரை தண்ணீர் வரத்து குறையவில்லை. இதனால் அருவிக்கரை ஊராட்சியில் இருந்து மறு பகுதியிலுள்ள பொன்னன் சிட்டி விளை, முதலார் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை எற்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இந்த மழை நேரத்திலும் மாத்தூர் தொட்டிப்பாலத்தைப் பார்க்க, பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தொட்டிப்பாலத்தைப் பார்த்து மகிழ்ந்து சென்றனர்.

    களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

    செய்தி & படப்பதிவு: திருவட்டாறு சிந்துகுமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு

    கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்றுவரை விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது.

    பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளம் திறந்துவிடப்பட்டுள்ளதால் மாத்தூர் தொட்டிப் பாலத்தின் அருகே அருவிக்கரைப் பகுதியில் பரளியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திற்பரப்பு அருவியின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கும் வெண்ணிறப் புகை மண்டலமாய் அருவித் தண்ணீர் கொட்டுகிறது. அருவியின் முன்பகுதி சிறுவர் குளத்தை மூழ்கடித்து, கல்மண்டபம் வழியாக தண்ணீர் ஓடுகிறது. குளிக்க அனுமதி இல்லாதாதால் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், தடுப்பு வேலி வழியாக அருவியைப் பார்த்துத் திரும்பினர். தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு சவாரியும் நடைபெறவில்லை. இதனால் படகுத் துறையில் படகுகள் அனைத்தும் ஓய்வெடுத்துக்கொண்டன.

    திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயத்தையொட்டி மழை நீர் புகுந்துள்ளது. கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களைச் சுற்றி மழை நீர் ஆறாக ஓடியிருப்பதோடு விளை நிலங்களுக்கு உள்ளும் புகுந்துள்ளது.

    களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

    செய்தி & படப்பதிவு: திருவட்டாறு சிந்துகுமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரம் வெள்ள நிலவரம்

    தாம்பரம் வெள்ள நிலவரம்

    தாம்பரத்தில் மழை நின்றபோதும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எந்த இடத்தில் எவ்வளவு தண்ணீர் நிற்கின்றது? இதோ வெள்ளத்தின் ஊடே ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அடையாறு நதியில் உடைப்பு | தாம்பரத்தை வெள்ளம் சூழ்ந்தது

    அடையாறு நதியில் உடைப்பு | தாம்பரத்தை வெள்ளம் சூழ்ந்தது

    சென்னை அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரத்திற்கு அருகில் அதன் கரையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாகத் தண்ணீர் ஓடுகிறது. பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் மழை – வெள்ள நிலவரம்

    தாம்பரத்தில் மழை – வெள்ள நிலவரம்

    சென்னை தாம்பரத்தில் மழை – வெள்ள நிலவரம் எப்படி? களத்திலிருந்து இதோ நேரடிக் காட்சிகள். தாம்பரம்வாசிகளுக்கு இதைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இயற்கை அன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!!

    ஒரு அரிசோனன்

    tearddrops

    இயற்கையன்னையே!  போதுமம்மா உன் கண்ணீர்!

    தாங்கமுடியவில்லை சென்னையால்!

    நாங்கள் செய்தோம் பலதவறுகள்!

    அடைத்தோம் உன் ஊற்றுக்கண்களை!

    கட்டினோம் அதில் எங்கள் மண்கோட்டைகளை!

    கட்டினோம் மனக்கோட்டைகள் கோடிகோடி!

    உன் கண்ணீர்தான் பெருக்கெடுத்ததே எங்கள் நிலைகண்டு!

    நிறுத்தம்மா உன் கண்ணீரை!  போதுமம்மா உன்னழுகை!

    தாங்கமாட்டோம் நாங்கள் இனியுன் வேதனையை!

    திருந்துகிறோம், திருந்துகிறோமம்மா மதலைகள் நாங்கள்!

    வேண்டாமிவ் வழுகை உனக்கும்தான் இனிமேலும்,

    ஆனந்தக் கண்ணீரே போதுமம்மா எங்களுக்கு,

    அழிக்காதே எங்களைப்  பெருக்கிடுமிக் கண்ணீரால்!

    ***   ***   ***

    Share