அடையாறு நதியில் உடைப்பு | தாம்பரத்தை வெள்ளம் சூழ்ந்தது
![Adyar river damage](https://www.vallamai.com/wp-content/uploads/2020/12/Adyar-river-damage.jpg)
சென்னை அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரத்திற்கு அருகில் அதன் கரையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதை அடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாகத் தண்ணீர் ஓடுகிறது. பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)