Blog

  • டாக்டர் மேனகா வழங்கிய சி.பி.ஆர். சிரிப்பு

    டாக்டர் மேனகா வழங்கிய சி.பி.ஆர். சிரிப்பு

    மாரடைப்பு ஏற்பட்டு, பேச்சு மூச்சில்லாமல் விழுந்து கிடப்பவர்களுக்கு சி.பி.ஆர். (Cardiopulmonary resuscitation – CPR) எனப்படும் அவசர சிகிச்சை வழங்கப்படுகிறது. இதைச் சிரிப்பு யோகாவுடன் இணைந்து கற்றுத் தருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் மேனகா. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் டாக்டர் மேனகா வழங்கிய சி.பி.ஆர். சிரிப்பு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொப்பையைக் குறைக்க எளிய வழி

    தொப்பையைக் குறைக்க எளிய வழி

    உடல் பருமன் உள்ளவர்கள், இளைப்பதற்குப் படும் பாடுகள் மிகுதி. தொப்பையைக் குறைக்க எளிய வழியை நகைச்சுவையோடு விளக்குகிறார், லோகேஷ். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இவர் பேசியும் சிரித்தும் நடித்தும் காட்டிய அமர்க்கள அமர்வு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகிழ்ச்சி ராஜேந்திரன் வழங்கும் வர்மச் சிரிப்பு

    மகிழ்ச்சி ராஜேந்திரன் வழங்கும் வர்மச் சிரிப்பு

    நம் உடலில் வர்மப் புள்ளிகள் உண்டு. சிரிப்புடன் கூடிய பயிற்சிகளின் வழியாக இந்த வர்மப் புள்ளிகளைத் தூண்ட முடியும். சித்தர்கள் வாக்கின்படி மிளகு கற்பம் எடுத்தால், உடல் சாகா வரம் பெறும். நம்மால் 300 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த மகிழ்ச்சியார் என அழைக்கப்பெறும் மகிழ்ச்சி ராஜேந்திரன். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் அவர் வழங்கிய செயல் விளக்கம் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 14ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    14ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 13 ஆண்டுகளை நிறைவுசெய்து 14ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் வல்லமை, 19,413 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,920 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. தொடர்ந்து பங்களிக்கும் படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    2023 ஏப்ரல் 28 அன்று செல்வராஜ் ராமன் என்பார், வல்லமைத் தளத்தில் விடுத்துள்ள பின்னூட்டம் இதோ:

    The contents contained in “vallamai” are of immense value to aspiring students and venturing capitalists. The literary section and the stories being published give much needed impetus to passionate writers and thinkers to spread their “know how” to tamil fraternity. Kudos to “vallamai “

    நமது பணி, பலருக்கும் பயன் தருவதாக அமைவதில் மகிழ்ச்சி.

    முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம்.

    ஒரு முக்கியமான திருத்தத்தை இந்த ஆண்டு செய்துள்ளோம். பண்டிகை, திருநாள், பிறந்தநாள், நினைவுநாள் போன்ற தினங்களில் கவிதை ஆக்கங்கள் வருவதுண்டு. இவை செய்யுள் வடிவிலோ அழகியல் கூறுகளுடனோ இருக்கும். ஆனால், கவிதை அம்சத்தை விட, அந்தக் கருப்பொருளின் செய்தி அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும். இவற்றை இதுநாள் வரை கவிதைப் பகுதியில் வெளியிட்டு வந்தோம். இப்போது ‘நாளாம் நாளாம்’ என்ற தனிப் பிரிவில் வெளியிடத் தொடங்கியுள்ளோம். இது கவிதை என்ற செவ்வியல் வடிவத்திற்கும் இதர நினைவூட்டல் படைப்புகளுக்கும் வேறுபாட்டை உணர்த்தும். மேலும், இவற்றைத் தனித் தனியாக அணுகுவதற்கும் வழிவகை செய்யும்.

    கடந்த ஆண்டு வல்லமையின் செலவினங்களுக்காக நன்கொடை கோரினேன். நண்பர்கள் ஜெயபாரதன், முனைவர் நா.கணேசன், பேராசிரியர் கண்மணி, பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ஆகியோர் கனிவுடன் அனுப்பிய நன்கொடைகளால் தளம் சீராக இயங்கி வருகிறது.

    வல்லமைக்கு வரும் படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன் பேருதவி புரிந்து வருகிறார். தள நிர்வாகப் பணியை எல்.கார்த்திக் தொடர்ந்து ஆற்றி வருகிறார். இருவருக்கும் நனி நன்றி.

    வல்லமை மின்னிதழை மேம்படுத்த, உங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிருங்கள்.

    Share
  • Its BJP Time for a Refresher course

    Its BJP Time for a Refresher course

     Baskar Seshadri

    Any charisma of a person has its Limitations and there is no Image that will sustain for indefinite time.

    The Results of Karnataka had proven the same and in the case of Yogi the results in local body elections are not that great in Uttar Pradesh. Even in the case of MGR we had seen his downfall once though, he was able to manage the ladder of Success in no time.

    BJP Party on the whole think that they can steer any election anytime with a magic name. This is a rusted Philosophy.

    If only BJP Leaves the religion placard and Hindutva always it cannot be a wholistic party winning all over again and again since People had started feeling averse to many of their ideologies and run on policies all these eight years.

    BJP Thinks that they can make a throwback of money and dented freebie systems which they once said as a danger to a country.

    Now BJP men say these freebies were announced without the knowledge of Namo? Then what was Amit and Nadda doing all these Days? The party has to be function at Ground level and be reasonable in all their approach towards the govt and Their schemes.

    Tamilnadu people are not ready like many people who think the next govt is ready on a platter to Annamalai. It’s not a cake walk or bed or roses.

    Hundreds of Flowers and Garlands and Helicopter Landing cannot bring victories overnite.

    Let Amits and Anaamalais Realise this. Act and win the confidence of the people as all as inclusive without using religion card and Divisive Politics.

    Please be aware we had govts even before BJP in India and Narasimha Rao ‘s performance had not seen a match till this day. People with national fervour and spirit are in everyone’s Blood here and dont try to create a feeling that it’s a wholesale owned by BJP

    Share
  • வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    எம். எஸ். லட்சுமணன், காரைக்குடி

    வங்கி வாடிக்கையாளர் விழிப்புணர்வு பதிவு 

    நண்பர்களே சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரி சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏடிஎம் பிரிவிற்கு சென்றிருந்தேன்.

    ஏடிஎம் வழியாக பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்து, OTP கொடுத்து என அனைத்தையும் கொடுத்த பிறகும் பணம் வெளியாகவில்லை.

    PLEASE CONTACT YOUR BRANCH என்று அதனில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. . மேலும் எனது இணையத்தின் வழியாக (NET BANKING)  வங்கி கணக்கை ஆப்ரேட் செய்ய முயற்சி செய்தபோது, FREEZE ACCOUNT FREEZE என்று வந்தது.

    இதனைத்தொடர்ந்து வங்கியின் மேலாளர் அவர்களை சென்று சந்தித்தேன். தங்களுடைய ஆவணங்கள் எதுவுமே எங்களுடைய வங்கியில் இல்லை. எனவே உங்களது அக்கவுண்ட்டை நாங்கள் FREEZE செய்துள்ளோம். அதுவும் CENTRALIZE ஆக  இதுபோன்று  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளாக நான் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். எனக்கு எந்தவிதமான கடனும் அந்த வங்கியில் இல்லை. அப்படி இருக்கும் பொழுது எனது வங்கிக் கணக்கை பிரீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

    பலமுறை நான் அவர்களுக்கு ஆவணங்களை நேரில் சென்று கொடுத்துள்ளேன். ஆனால் அவர்களோ சர்வசாதாரணமாக இதுபோன்று ஒரு அதிர்ச்சியான தகவலை என்னிடம் தெரிவித்தார்கள்.

    நான் முக்கியமான ஒரு மருத்துவ செலவுக்காக மருத்துவமனையில் இருந்து தான் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து கொடுப்பதற்காக சென்று இருந்தேன். ஆனால் இணையத்தின் வழியாகவும் எனது வங்கிக் கணக்கை இயக்க முடியவில்லை. ஏடிஎம்மில் இருந்தும் பணம்  எடுக்க முடியும் முடியவில்லை.

    முக்கியமான மருத்துவ செலவுக்கு கூட எனது அக்கவுண்டில் இருந்து எனது பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை நேரில் சந்தித்து கேட்டேன். மேலாளர் அவர்களோ  மிக அலட்சியமாக ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளை நாங்கள் இது போல் ஃப்ரீஸ் செய்து உள்ளோம்.என்று கூறினார்.

    தங்களது ஆவணங்கள் எதுவுமே எங்களது வங்கியில் இல்லை. எனவே ஆவணத்தை கொடுங்கள். freeze செய்ததை  எடுத்து விடுகிறோம் என்று தெரிவித்தார் ஆவணம் பலமுறை அந்த வங்கிக்கு நான் நேரில் சென்று கொடுத்துள்ளேன்.

    அந்த ஆவணங்களை என்ன செய்தார்கள் என்பதே தெரியவில்லை.ஆவணங்கள் இல்லாமல்  இருக்க வாய்ப்பில்லை. ஆவணங்கள் இல்லை என்றால் மெயில் வழியாக, மொபைல் வழியாக  எனக்கு ஒரு தகவல் தெரிவித்து , குறிப்பிட்ட நாட்கள் கொடுக்க  கேட்டிருக்கவேண்டும்.

    ஏனென்றால் எனக்கு இணையத்தின் வழியாக அங்கே கணக்கு ஆப்பரேட் செய்யப்படுகிறது. எனவே எனது மெயில் அவர்களிடம் உள்ளது. மேலும் எனது மொபைல் நம்பரும் அவர்களிடம் உள்ளது.

    மொபைல் நம்பரில் ஒரு மெசேஜ் கொடுத்து அல்லது மெயிலில் ஒரு மெசேஜ் கொடுத்து எத்தனை நாளுக்குள் நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்திருக்கலாம்.

    ஆனால் அவர்களோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் அக்கவுண்ட் FREEZE  செய்து விட்டார்கள்.  இதை நான் ஒரு முக்கியமான வெளியூர் பயணத்தில் இருக்கும்போது ,   குறிப்பாக மும்பை, டெல்லி என்று வேறு மாநிலங்களில் பயணிக்கும் பொழுது , எனது வங்கி கணக்கில் போதிய அளவு பணம் இருந்தும் ,நானே  பணம் எடுக்க முடியவில்லை என்றால் எனது நிலைமை என்னவென்று  யோசியுங்கள்.

    முக்கியமான மருத்துவ செலவிற்கு அன்று என்னால் பணம் எடுத்து செலவுக்கு கொடுக்க இயலவில்லை.  நான் மேலாளரை சந்தித்து மேலாளரிடம் உங்களுக்கு என்ன ஆவணம் வேண்டுமோ அதனை ஈமெயில் வழியாகவும், மெசேஜ் வழியாகவும் எனக்கு தெரிவியுங்கள். நான் அவற்றை எடுத்து வந்து தந்து விடுகின்றேன்.என்று கூறினேன்.

    ஆனால் இப்பொழுது எனது கணக்கை எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் ஃப்ரீஸ் செய்ததை வன்மையாக ஆட்சேபித்து  பதிவு செய்கின்றேன் என்று அவரிடம் கூறினேன்.

    எனவே  எனது கணக்கை தற்பொழுது freeze இல்  இருந்து எடுத்து விடுமாறு  அன்போடு கேட்டுக் கொண்டேன். சில மணி நேரங்கள் அவரிடம் பேசிய பிறகு அவர் எனது கணக்கை ஆக்டிவேட் செய்தார்கள்.

    பலமுறை நான் ஆவணங்கள் கொடுத்தும் அதனை வங்கியின் இணையத்தில் ஏற்றாதது அவர்களுடைய தவறு தானே தவிர  அது எனது தவறு கிடையாது.

    ஆனால் முக்கியமான கட்டத்தில் வங்கியில் முன்பு கொடுத்த ஆவணங்கள்  இல்லை என்பதற்காக கணக்கை freeeze  செய்தது மிகவும் தவறானது  என்பதை பதிவு செய்துவிட்டு வந்தேன்.

    பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு உங்களுடைய கணக்குகள் ஃப்ரீஸ் ஆகி இருந்தால் அதனை சரி செய்து கொள்ளுமாறு இந்த தகவலின் மூலமாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    நன்றி

    Share
  • குறளின் கதிர்களாய்…(451)

    குறளின் கதிர்களாய்…(451)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(451)

    இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்
    துன்பந் துடைத்தூன்றுந் தூண்.

    – திருக்குறள் – 615 (ஆள்வினையுடைமை)

    புதுக் கவிதையில்…

    இன்பம் தனக்கு வருதலை
    விரும்பாதவனாய்
    எடுத்த செயலை நன்முறையில்
    முடிக்கவே விரும்புபவன்,
    தன் உறவுகளுக்கு வரும்
    துன்பத்தைப் போக்கித்
    தாங்கி நிற்கும்
    தூணாய் ஆவான்…!

    குறும்பாவில்…

    தனக்குவரும் இன்பத்தை விரும்பாதவனாய்
    தொடங்கிடும் செயலை முடிக்க விரும்புபவன்,
    தன்சுற்றத்தாரின் துன்பந்தாங்கும் தூணாவான்…!

    மரபுக் கவிதையில்…

    இன்பம் தனக்கு வருவதையே
    என்றும் விரும்பா குணத்தவனாய்
    தன்னால் தொடங்கும் செயலதையே
    தரமாய் முடிக்க விரும்புவோனே,
    இன்ன லெல்லாம் போக்கியேதான்
    இனிய சுற்றம் நட்பதனின்
    துன்பந் தாங்கும் தூணாகித்
    துணையா யிருப்பான் காண்பீரே…!

    லிமரைக்கூ…

    விரும்பாமல் வந்திடும் இன்பத்தை,
    வினைமுடிக்க விரும்புவோன், இடர்போக்கித் தூணாய்த்
    தாங்குவான் சுற்றத்தாரின் துன்பத்தை…!

    கிராமிய பாணியில்…

    முடிக்கணும் முடிக்கணும்
    செயலச் செய்துமுடிக்கணும்,
    நல்லபடியாச் செய்துமுடிக்கணும்..

    தனக்கு வாற
    இன்பத்தயெல்லாம் விரும்பாம
    செய்யிற செயல
    செம்மயா முடிக்க விரும்புறவந்தான்,
    சொந்த பந்தங்களோட
    துன்பம் போக்கி
    அவுங்களோட
    துன்பம் தாங்குற
    தூணா இருப்பானே..

    அதால
    முடிக்கணும் முடிக்கணும்
    செயலச் செய்துமுடிக்கணும்,
    நல்லபடியாச் செய்துமுடிக்கணும்…!

    Share
  • சிரிப்பு யோக ரத்னா விருதுகள்

    சிரிப்பு யோக ரத்னா விருதுகள்

    சிரிப்பு யோகிகள் இதோ. தமிழகம் முழுவதும் சிரிப்பு யோகாவில் தொடர்ந்து சிறப்பாக இயங்கி, மக்களைச் சிரிக்க வைத்து, அரிய சேவை ஆற்றி வருவோர் இவர்கள். இந்தச் சிரிப்பு யோகிகள் பத்துப் பேருக்கு, சிரிப்பு யோக ரத்னா என்ற விருதினை அம்பத்தூர் சிரிப்பரங்கம் வழங்கிக் கெளரவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சிரிப்பாய்ச் சிரிக்கவைக்கும் ஆளுமைகளின் அணிவகுப்பு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 7

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 7

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • கட்டுமானத் துறையில் உள்ள வாய்ப்புகள் & சவால்கள்

    கட்டுமானத் துறையில் உள்ள வாய்ப்புகள் & சவால்கள்

    குதிரைப் பாய்ச்சலில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2030க்குள் இந்தியப் பொருளாதாரம், 7 டிரில்லியன் டாலரைத் தொடும் எனக் கணிக்கிறார்கள். இதில் கட்டுமானத் துறையின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். இந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள், சவால்கள் என்னென்ன? கட்டுமானப் பொறியாளர்களுக்கு (சிவில் எஞ்சினியர்கள்) எத்தகைய தேவை உள்ளது? சிவில் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்பு எப்படி உள்ளது? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒற்றைக் கம்பியில் இரு கிளிகள்

    ஒற்றைக் கம்பியில் இரு கிளிகள்

    ஒற்றைக் கம்பியைப் பற்றித் தொங்கியபடி ஆடும் இரு கிளிகள். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இன்று கண்ட காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மிகப் பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வு

    மிகப் பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வு

    நேற்று முடிச்சூர் ஏரி அருகில் மகிழுந்தில் சென்றபோது, இந்த அரிய காட்சியைக் கண்டேன். சட்டென்று இறங்கிப் படம் எடுத்ததில் இம்மட்டே எடுக்க முடிந்தது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வை நான் காண்பது இதுவே முதல் முறை. இன்று உலகளாவிய பறவைகள் இடப்பெயர்வு தினம் என்பது எதிர்பாராத ஒற்றுமை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோடாலி கருப்பூர் சீதா கல்யாணம்

    கோடாலி கருப்பூர் சீதா கல்யாணம்

    அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூர் ஸ்ரீ ராம நாராயணப் பெருமாள் பிரும்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சீதா கல்யாணம்.

    படப்பதிவு – மது என்கிற ரங்காச்சாரி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாழைப்பழத்தை உண்ணும் குரங்கு

    வாழைப்பழத்தை உண்ணும் குரங்கு

    கொடைக்கானலில் வாழைப்பழத்தை ரசித்து உண்ணுகிறது, இந்தக் குரங்கு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொடைக்கானலில் உள்ள லிரில் அருவி

    கொடைக்கானலில் உள்ள லிரில் அருவி

    கொடைக்கானலில் உள்ள லிரில் அருவி இதோ. லிரில் சோப்பு விளம்பரம் எடுத்த இடம் என்பதால் இந்த அருவியையே லிரில் அருவி என அழைக்கிறார்கள். காட்சி ஊடகத்தின் தாக்கம் எத்தகையது என்பதை இதைக் கொண்டே அறியலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share