நேற்று முடிச்சூர் ஏரி அருகில் மகிழுந்தில் சென்றபோது, இந்த அரிய காட்சியைக் கண்டேன். சட்டென்று இறங்கிப் படம் எடுத்ததில் இம்மட்டே எடுக்க முடிந்தது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பறவைகள் இடப்பெயர்வை நான் காண்பது இதுவே முதல் முறை. இன்று உலகளாவிய பறவைகள் இடப்பெயர்வு தினம் என்பது எதிர்பாராத ஒற்றுமை.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.