அண்மையில் நாங்கள் வாங்கிய கொசுவலை, இரண்டு சிக்கல்களைத் தீர்க்கிறது. இது குறித்து எங்கள் அனுபவத்துடன் கூடிய மதிப்பாய்வு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அண்மையில் நாங்கள் வாங்கிய கொசுவலை, இரண்டு சிக்கல்களைத் தீர்க்கிறது. இது குறித்து எங்கள் அனுபவத்துடன் கூடிய மதிப்பாய்வு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பாடப் பாட இனிப்பது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டுப் பாடல். இதை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
The world’s tallest iron arch is the Indian Railway Bridge, Jammu & Kashmir. https://youtu.be/3sgcG40gYIM
On 7th November, 2017, the main arch of the rail bridge on river Chenab in Jammu and Kashmir which is being called the of world`s tallest rail bridge has been launched by Indian Railways.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் 2004 ஆண்டில் இந்திய இமயச் சரிவில், செனாப் ஆற்றைக் கடக்க மாபெரும் இரும்பு வளைவு ரயில் பாலம் ஒன்றைக் கட்ட, இந்தியா திட்டமிட்டது. நீண்ட பாலம் இணைக்கும் பக்கால் & கௌரி பகுதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ளன. இரும்பு காங்கிரீட் வளைவுப் பாலம் செனாப் நதிக்கு மேல் 1180 அடி [360 மீடர்] உயரத்தில் முதன்மையாக உலகத்திலே உயர்ந்த ஒரு ரயில் பாலமாக கட்டப்பட்டு உள்ளது. 2004ஆம் ஆண்டில் திட்டம் சிந்தையில் உருவாகி, 2017ஆம் ஆண்டில் செனாப் நதிப் பாலத்தின் அடித்தளப் பீடம் கட்டி முடிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில்தான் இருபுறத்துப் பெரும் வளையங்களின் மையத் துண்டு இணைக்கப்பட்டது. 1486 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட இந்தப் பெரிய பாலம், இந்திய உள்கட்டமைப்பின் உன்னதமாகக் [Infrastructure Marvel] கருதப்படுகிறது.
செனாப் நதிப் பால இடைத் தூரம் ; 4050 அடி [1315 மீடர்]. ஆக மொத்தம் 17 இடைவெளித் தூண்கள் கொண்டது. இந்த பாலம் குறைந்தது 120 வருடம் நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது. இமாலயப் பூகம்பப் [Seismic Zone IV ] பகுதி 4 இல் 8 ரிக்டர் ஆற்றல் தாங்கும் வலிமை உள்ளது. புயலடிப்பு வேகம் 150 mph [260 kmph ] எதிர்கொள்ளும் நிலைப்புத் திறன். பாலத்தில் போகும் ரயில் 100 kmph [60 mph] வேகத்தில் கடக்க டிசைன் செய்யப்பட்டது.
The Chenab Rail Bridge was originally intended to be completed in December 2009. However, in September 2008, the project was halted due to fears over the bridge’s stability and safety. Work on the bridge restarted in 2010, with the plan to complete it in 2015.
The design and construction was awarded to Afcons Infrastructure, a part of the Shapoorji Pallonji Group, the third-largest construction group in India, with the help of IISc Bangalore. Major construction decisions were taken by Konkan Railway Corporation. The Defence Research and Development Organisation (DRDO) helped in the design of the bridge, making it blast-proof using special steel.
The erection scheme for the bridge is a project in itself. Two pylons (about 130 m and 100 m high) were erected on either side of the river, and two auxiliary self-propelled cable cranes (capacity of 20 tonnes each) were used to tow temporary auxiliary ropes across these pylons. The ropes were used to support the partly finished arch parts. After arch completion, the trusses will be added, finally the girder will be constructed as a horizontal sliding type platform.
Project status
Maintenance
Regular painting of large bridges is an intimidating task; hence, a painting scheme was developed, having renewal of over 15 years, compared to approx. 5 to 7 years in most other Indian railway bridges.
Interesting Facts about the Chenab Railway Bridge
Given below are some interesting facts on the Chenab Railway Bridge.
The total cost estimated of the Chenab rail bridge is Rs 1,486 crores.
The Chenab bridge covers a total length of 1,315 metres.
There are 17 spans in total over the Chenab Rail Bridge.
The life of the Chenab Railway bridge is 120 years.
Trains are allowed to pass across the Chenab bridge at a maximum speed of 100 kilometres/hour.
The highest bridge in India has been designed by consulting DRDO (Defence Research and Development Organisation).
The Chenab Bridge is designed to withstand wind speed up to 266 kilometres/hour.
It is designed to bear earthquakes of up to 8 magnitudes.
For joining the different parts of the bridge, approximately 584km (Jammu to New Delhi) of welding has been done.
For the first time, the Indian Railways have launched the curved viaduct portion by using the method of End-launching.
Warning and health monitoring systems have been extensively planned through state-of-art instrumentation.
Srinagar’s cable crane pylon stands at the height of 127 metres, making it higher than Delhi’s Qutub Minar (72 metres).
For testing the welds, a phased array ultrasonic machine has been used by the Indian Railways for the first time.
Features of the Arch of the Chenab Bridge
Here are some of the features of the spectacular arch of the Chenab River Railway Bridge.
The Chenab River bridge is 35m higher than the world-famous Eiffel Tower in Paris.
The arch is made by using boxes of steel. The boxes will be stuffed with concrete to improve stability.
The arch of the Chenab River bridge weighs 10,619MT.
A first in the Indian Railways history, the members of the arch were erected by using overhead cable cranes.
The construction of the Chenab River Rail Bridge involved the usage of 28,660 Meta Tons of steel.
For structural detailing of the Chenab River bridge, Tekla software has been used.
List of Contractors Involved in the Chenab River Project
Below is the list of the contractors who were actively involved with the Chenab River Project.
Department Name of Project Contractor
Foundation Protection Designer Indian Institute of Science (IISc), Bangalore
Slope Stability Analysis Indian Institute of Technology (IIT), Delhi
Executing Agency Konkan Railway Corporation Ltd.
Seismic Analysis Indian Institute of Technology (IIT), Delhi & Roorkee
Proof Consultant for Foundation and Foundation Protection M/s COWI, UK
Arch Designer M/s Leonhart, Andra and Partners (Germany)
Viaduct and Foundations Designer M/s WSP (Finland)
Executing Agency Konkan Railway Corporation Ltd.
Challenges Faced while constructing the Chenab Railway Bridge
Here are the challenges faced while constructing the Chenab Railway Bridge.
The rugged and mountainous Himalayan terrain posed a threat to the construction of the Chenab Rail Bridge. 900 metres tall cable cranes were installed on both sides of the Chenab gorge to build the arch of the bridge.
At such a high altitude, the bridge construction was festered with winds up to 50-60 kmph. The construction work was also hampered because of frequent and unprecedented rains, thunderstorms, landslides and snowfall.
This is why assembling the arch showcased the great work projection of the engineering skill.
Work on the arch construction started back in 2005. It was only finally linked after 16 years in March 2021.
Analysis for tunnel construction and earthquake also posed a challenge due to the persisting winds and the treacherous terrain.
Never Seen before view from Crown of Arch of Chenab Bridge
INFORMATION

செண்பக ஜெகதீசன்
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை விழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
-திருக்குறள் -137 (ஒழுக்கமுடைமை)
புதுக்கவிதையில்…
ஒழுக்கத்தில் நல்லதாய்
ஒழுகுவோர் பெறுவர்
ஒப்பிலா மேன்மை
உலக வாழ்வினிலே,
ஒழுக்கம் தவறுவோர்
பெறுதற்குத் தகாத
பெரும்பழியே பெறுவர்…!
குறும்பாவில்…
ஒழுக்கமுடையோன் பெறுவான் வாழ்வில்
ஒப்பிலா மேன்மை, இல்லாதான் எய்துவான்
ஒன்றுமிலாப் பொல்லாப் பழியே…!
மரபுக் கவிதையில்…
நிலத்தில் மனித வாழ்வினிலே
நித்தம் தேவை நல்லொழுக்கம்,
நலமே பெறுவர் அதனாலே
நன்மை யோடு மேன்மைசேரும்,
பலமாம் இதனைப் பேணாதார்
பயனே இல்லா மாந்தராகிப்
பலனே இல்லா அழிவுதரும்
பழியை மட்டும் பெறுவரே…!
லிமரைக்கூ…
மேன்மைதரும் நல்லொழுக்க வழியே,
மேதினி வாழ்வில் இதைப்பேணார் பெற்றிடுவர்
மிகவும் அழிவுதரும் பழியே…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
ஒழுக்கம் வேணும்,
வாழ்க்கயில நல்ல
ஒழுக்கம் வேணும்..
ஒழுக்கத்தோட வாழுறவுங்களுக்கு
வாழ்க்கயில நல்ல
மேன்ம கெடைக்கும்,
ஒழுக்கமில்லாதவங்களுக்கு
ஒரு பயனுமில்லாத
பழிதான் வருமே..
அதால
வேணும் வேணும்
ஒழுக்கம் வேணும்,
வாழ்க்கயில நல்ல
ஒழுக்கம் வேணும்…!

‘கொங்குமலி கருங்குழலாள்’ மற்றும் ‘ஆலினிலைப் பாலகனாய்’ எனத் தொடங்கும் தாலாட்டுப் பாடல்கள் இதோ. குலசேகர ஆழ்வார் இயற்றி, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்ற இந்த அழகிய பாசுரங்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

குலசேகர ஆழ்வாரின் இனிய தாலாட்டுப் பாடல், ‘மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே’. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இந்த அழகிய பாசுரத்தை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

வையகம் போற்றும் வைணவ ஆசார்யர், இந்து மதத்தின் எழுச்சித் தலைவர், புதிய சீர்திருத்தங்களை நிறுவிய புரட்சிக் கனல் இராமானுஜரை அடியவர்கள் வணங்கி மகிழ்கிறார்கள். ‘ராமானுஜா ராமானுஜா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் பாடி ஆடுவதைப் பாருங்கள். திருநீர்மலை இராமானுஜர் கூடத்தில் நடைபெற்ற பஜனை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இப்படிப்பட்ட மோசமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள். நிர்மலா ராகவன் தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மதமாற்ற எதிர்ப்பு, பசுவதை தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன் இலங்கையில் சிவசேனை, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இவற்றை ஆதரிக்கும் பவுத்தர்களுடன் இணைந்து பயணிக்கிறது. திருவாசகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கையளித்துள்ளார். சிங்கள பவுத்தர்களுடன் நட்பு பேணுகிறார். சிங்களர்களும் முன்பு தமிழர்களாக இருந்தவர்களே. சிங்கள மொழியில் 70 சதம் தமிழ்ச் சொற்களே உள்ளன என்கிறார். சிங்கள மொழியை ஏன் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை என்ற சிந்தனை எழுகிறது. சமூக, சமய நல்லிணக்கம் சார்ந்த அவரது முன்னெடுப்புகள் குறித்து, சச்சிதானந்தன் அவர்களுடன் அர்த்தமுள்ள ஓர் உரையாடல் இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
கழனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும்!
ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென!
விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
செல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே!
ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
பண்டிதராயிருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார்!
பண்டிதரால் வெறுக்கப்பட்ட பாரதியார் படைப்புகளை
பண்டிதராய் இருந்தவரே பலபேரும் அறியச்செய்தார்
பல்கலைக்கழகம் தன்னில் பாரதிக்கு இடம்கொடுத்து
பாடமாய்ப் படிப்பித்தார் பண்பாளர் விபுலானந்தர்!
பேராசிரிராய்ப் பெருமையுடன் பணி ஆற்றி
ஆறாத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
யாருமே தொட்டிரா யாழ்தொட்டு நூல்செய்தார்!
பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே!
துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும்!
ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவுமாகி
தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர்!

திருமலை திருப்பதி கருட சேவையின் சிறப்பினைக் குறித்து, ‘வாராயோ வேங்கடேசா’ என்ற பாடலை இயற்றிப் பாடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சக்தி சக்திதாசன்
லண்டன்
ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன்.
என்ன! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது.
நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம். உலக அளவிலே உக்கிரைன் நாட்டில் ஈடம் பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பதிப்படைந்திருக்கிறார்கள்.
அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன்.
சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.
எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ளமாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள்.
மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு.
எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும்.
சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.
இதுதவிர அவருக்கு அவரது கட்சிக்குள்ளிருந்த செல்வாக்குக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். மிகவும் நெருக்கடியாக சொற்பமான பெரும்பான்மையுடன் வட அயர்லாந்துக் கட்சியின் கூட்டணியின் தயவில் ஊசலாடிக் கொண்டிருந்த அன்றைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தை “ப்ரெக்ஸிட்டை நடைமுறைப் படுத்துவேன்” எனும் சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டு 80 உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது முதற்காரணம், அவரை எதிர்க்கக்கூடிய ஆற்றல் மிக்க மற்றொருவர் அக்கட்சியில் இருக்கவில்லை என்பது அடுத்த காரணம்.
சரி இப்போ கேள்வி எழுகிறது. இத்தனை அனுகூலங்களைக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சன் இன்று பெரும்பான்மை வெற்றியீட்டிக் கொடுத்த தலைவர் எனும் நிலையிலிருந்து பதவியை இராஜினாமாச் செய்யும் நிலையை வந்தடைந்தது எப்படி?
பொரிஸ் ஜான்சனின் வெற்றிக்கும், தோல்விக்கும் கோவிட் 19 ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை எனலாம். எப்படி அது அவருக்கு வெற்றி என்று சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் கோவிட் 19 எனும் உலகம் எதிர்நோக்கிய முன்னேற்போதும் உலகு கண்டிராத நோயினூடாக நாட்டை வழிநடத்த வேண்டிய முதல் பிரதமராக நாட்டினை இழப்புகள் அதிகமின்றி அவ்விருளினைக் கடந்து கூட்டிச் சென்றிருக்கிறார். மேற்குலக நாடுகளிலேயே இந்நோய்க்குத் தேவையான தடுப்பூசிகளை தேவையான அளவு கொள்வனவு செய்து முதன் முதலில் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய நாடு எனும் பெயரைத் தக்க வைத்துக் கொண்டார்.
இனி இந்தக் கோவிட் 19 அவருக்கு எந்த வகையில் தோல்வியைப் பரிசாக்கியது என்று பார்க்கலாமா?
கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக நாட்டினை முடக்கும் தீவிர சட்டங்களை அமுலாக்கிய பொரிஸ் ஜான்சன் அவர்களது முக்கிய ஆலோசகராக இருந்தவர் டொமினிக் கமிங்ஸ் என்பவர் ஆவார். இந்தக் கோவிட் சட்டங்கள அமுலாக்க ஆலோசனை வழங்கிய அவரே அச்சட்டங்களை மீறியது வெளிப்பட்டதே பொரிஸ் ஜான்சன் அவர்களின் சறுக்கலுக்கு ஆரம்பச்சுழி இட்டது என்று சொல்லலாம்.
சட்டங்களை மீறிய அவரது ஆலோசகரை தண்டிக்காமல் மன்னித்தார் பொரிஸ். அதுவே அவரது தொடர்ந்த தவறான நடத்தைகளின் ஆரம்பம். கருத்து வேற்றுமைகளினால் பொரிஸ் ஜான்சனிடமிருந்து வெளியேறிய டொமினிக் கமிங்ஸ் தன்னுடன் பொரிஸ் ஜான்சனை விழுத்தக்கூடிய பல ஆவண இரகசியங்களோடு வெளியேறி இருக்கலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
கொஞ்சம் கொஞ்சமாக பொரிஸ் ஜான்சனின் முகச்சாயம் வெளுக்கத் தொடங்கியது. சிரித்து மழுப்பி முரண்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொரிஸ் ஜான்சன் அவர்களது அரசியல் அனுபவ வெற்றிடம் மக்களுக்குப் புலப்படத் தொடங்கியது.
தொடர்ந்து கசியத் தொடங்கிய அரசாங்க உள்நடவடிக்கைகள் அவருக்கு வெடி வைத்தன. தம்முடைய இரத்த உறவுகளின் மரணத்தின் போது உடனிருக்க முடியா நிலையிலிருந்த மக்கள் அப்போதைய கால கட்டத்தில் பிரதமரின் அலுவலகத்தில் மது உள்ளடங்கிய ஒன்றுகூடல்கள் நடந்ததை அறிந்தால் சும்மா விடுவார்களா என்ன?
வெறும் வாய்க்கு எப்போ அவல் கிடைக்கும் என்று காத்துக் கிடந்த எதிர்க்கட்சிகளுக்கு பத்துநாள் பட்டினி கிடந்த நாயின் முன்னால் வீசப்பட்ட மாமிசத் துண்டினைப் போல இந்தக் கசிவுகள் அமையவும். பாராளுமன்றத்தில் உண்டு இல்லை என்று விவாதம் செய்தார்கள். விழித்துக் கொண்ட ஊடகங்களுக்கு மென்று சப்பித் துப்புவதற்கு பிரதமரும், அவரைச் சார்ந்த பலரும் அகப்பட்டுக் கொண்டார்கள்.
தனக்கு கீழியங்கும் தனது அலுவலகத்தில் கோவிட் 19 சட்டங்களை மீறும் வகையில் எதுவிதமான ஒன்றுகூடல்களும் நடைபெறவேயில்லை என்று ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் உறுதியளித்த பிரதமரின் முகத்தில் கரி பூசப்பட்டது. துடைத்துக் கொண்டே சிரித்தார் பொரிஸ் ஜான்சன்.
விளைவாக நீண்டதோர் விசாரணையின் பின்பு பொலீசாரினால் கிரிமினல் குற்றத்துக்கான அபராதத்தைச் செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார் பொரிஸ் ஜான்சன்.
இதைவிடச் சிறிய குற்றச்சாட்டுகளுக்காகவே பதவி விலகிய பலர் உதாரணமாக இருக்க பதவியை இறுகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பொரிஸ் ஜான்சன் வெறும் மன்னிப்புடன் இந்த அத்தியாயத்தை மூடிவிட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த விடயமும், இவர் மீது மக்கள் கொண்ட அவநம்பிக்கையும் நிறுபூத்த நெருப்பாகத் தகித்துக் கொண்டுதான் இருந்தது.
எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா என்ன? ஒரு நாயின் கால்களில் கிடைத்த எழும்புத் துண்ட அது சும்மா விட்டு விடுமா என்ன? மக்கள் மனங்களில் பொரிஸ் ஜான்சன் பற்றிய அவநம்பிக்கை, மற்றும் தயங்காமல் உண்மைகளை மறுக்கும் வல்லமை பெற்றவர் எனும் எரிந்து கொண்டிருந்த அபிப்பிராய நெருப்புக்கு எண்ணெய் ஊற்ற ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் தவறவில்லை.
இதன்போது பொரிஸ் ஜான்சனைக் காப்பாற்ற வந்தது போலவே ரஸ்ய அதிபர் பூட்டின் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சனுக்கு முன்னால் ஒரு மிதக்கும் கட்டையை வீசினார் பூட்டின். விடுவாரா பொரிஸ் ஜான்சன்? எட்டிப் பிடித்துக் கொண்டார். ஒருவாறு கரையேறி விடுவார் என்றுதான் அரசியல் அவதானிகள் கருதினார்கள். அத்துடன் உக்கிரன் போரினால் ஏற்பட்ட எண்ணெய்த் தட்டுப்பாடு, ப்ரெக்ஸிட் மற்றும் உக்கிரைன் போர் முதலியனவற்றின் தாக்கத்தில் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவின் உயர்வு அவைகளும் பொரிஸ் ஜான்சன் மீது விழுந்த கற்களைத் தடுக்கும் கேடயங்களாகின.
சரி இவையெல்லாவற்றையும் ஒருவாறு பூசி மெழுகி சமாளித்து விட்டேன் என்று பெருமூச்செறிந்து நடந்த பொரிஸ் ஜான்சன் அவர்களுக்கு மற்றுமோர் பேரிடி காத்திருந்தது.
சரி அந்தப் பேரிடி எந்த வடிவில் அவருக்குக் காத்திருந்தது என்று அறிய ஆவலாக இருப்பீர்களே!
பொரிஸ் ஜான்சன் அவர்களால் தனது பாராளுமன்றக் கட்சி உறுப்பினர்களை வழிநடத்தவும், அவர்களின் நடத்தைகளைக் கண்காணிப்பதற்கும் அமர்த்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உப தலைவர் பதவிக்கு சிலகாலங்களின் முன்னால் அமர்த்தப்பட்டவர் கிறிஸ் பின்ச் என்பவர். பிரதமராவதற்கு முன்னால் பிரதமர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பொரிஸ் ஜான்சன் அவர்கள் வெளிநாட்டு அமைச்சராகவிருக்கும் போது இதே கிறிஸ் பின்ச் அவரின் கீழ் பணிபுரிந்தார். அப்போது அவர் மற்றொரு அலுவலகப் பணியாளருடன் முறைதவறி நடந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு பின்பு மன்னிப்புக் கேட்டதன் பிரகாரம் பொரிஸ் ஜான்சனினால் மன்னிக்கப்பட்டவர்.
சரி இப்போது இதே கிறிஸ் பின்ச் என்ன செய்து விட்ட்டார் தெரியுமோ? கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் ஒன்றுகூடும் கிளப் ஒன்றிலே இக் கிறிஸ் பின்ச் என்பவர் அதிகமாக மது அருந்தி விட்டு அங்கு இருந்த இரண்டு இளம் கன்சர்வேடிவ் ஆண் உறுப்பினர்களோடு முறை தவறி நடந்திருக்கிறார்.
இந்தப் பிரச்சனை வெளியே ஊடகங்களில் வருவதறிந்து இக் கிறிஸ் பின்ச் தானே தனது பதவியை இராஜினாமச் செய்தார். ஆனால் இதன் பின்னும் அவரை கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலக்க பொரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தவிர இவரை இப்பதவிக்கு அமர்த்தும் போது இவர் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் என்று தனக்குத் தெரியாது என்று வேறு ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்திலும் சொல்லி விட்டார்.
அது தவிர ஊடகங்களில் அதை வலியுறுத்தும்படி தனது அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்களைப் பணித்துள்ளார்.
அது பொரிஸ் ஜான்சன் நினைத்த பாதையில் செல்லவில்லை. கிறிஸ் பின்ச் அவர்களின் மீதான முந்தைய குற்றச்சாட்டு ஏற்கனவே பொரிஸ் ஜான்சனுக்குத் தெரியும் எனும் உண்மை வெளிவந்தது. “என்னை மன்னித்து விடுங்கள் நான் மறந்து விட்டேன்” என்றார் பொரிஸ் ஜான்சன். மன்னிப்புக்கும் ஒரு எல்லையுண்டு தானே! இனித்தன் சாயம் மக்களிடம் வெளுக்காது என்றுணர்ந்தும் பதவிக் கட்டிலை விட்டிறங்க மறுத்து விட்டார் என்றால் பாருங்களேன் !
“இதற்கு மேலும் தாங்காதடா சாமி!” என்று நிதியமைச்சர் ரிஷி சுனாக், மற்றும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் இருவரும் தமது அமைச்சர் பதவியை இராஜினாமச் செய்தார்கள். பொரிஸ் ஜான்சன் காகித அட்டையில் கட்டிய மாளிகை சரியத் தொடங்கியது. ஒவ்வொன்றாக அரசாங்கத்தில் இருந்த துணை அமைச்சர்கள், காரியதரிசிகள் எனச் சுமார் 54 பேர் ஒன்றன் பின் ஒன்றாக இராஜினாமாச் செய்தார்கள்.
அவர்கள் அனைவரதும் காரணம் பிரதமர் மீதான அவநம்பிக்கை.
வேறு வழியின்றி தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக பொரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறது,
“கெட்டிக்காரனின் பொய்யும், புளுகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்”
இது எட்டு நாளில் இல்லை சுமார் இரண்டு வருடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
சரி இதிலே எங்கே சர்வாதிகாரம்? எனும் கேள்வி எழுந்திருக்குமே!
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் இராஜினாமாச் செய்து விட்டார். அடுத்த பிரதமரை வெறும் 200000க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே தெரிவு செய்யப் போகிறார்கள்.
8 பேர் பிரதமராவதற்காக கட்சித் தலைவர் பதவிக்கு நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்த போதிலும் அவர்களுள் இருவரை மட்டுமே பாரளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியினர் வாக்களித்துத் தெரிவு செய்து தமது அடிப்படை உறுப்பினர் முன் நிறுத்துவார்கள்.
சரி வானோலி நிகழ்ச்சி ஒன்றில் நானறிந்து கொண்டது காதைக் கொடுங்கள் சொல்கிறேன்.
கடைசியாகத் தெரிவு செய்யப்படப் போகும் இருவரில் யார் பிரதமராக வேண்டும் என்று பெரும்பான்மை கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்களோ அவர்களோடு தெரிவு செய்யப்படும் மற்றைய வேட்பாளர் யாராக இருக்க வேண்டும்?
கன்சர்வேடிவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாதவராக இருக்க வேண்டும் என்பதால் அத்தகைய வழியில் தமது சக உறுப்பினர்களையும் வாக்களிக்கும் வகையில் வழி நடத்தி விடுவார்களாம். எப்படி இருக்கிறது ஐனநாயகம்?
ஓ! இதுதான் ஐனநாயகச் சர்வாதிகரமோ ?