Blog

  • குறளின் கதிர்களாய்…(431)

    குறளின் கதிர்களாய்…(431)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(431)

    சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
    சொல்லிய வண்ணஞ் செயல்.

    -திருக்குறள் -664(வினைத் திட்பம்)

    புதுக் கவிதையில்

    செயலிதனைச்
    செய்வேன் இப்படி எனச்
    சொல்வது
    எளிதே எவர்க்கும்,
    சொன்னபடியே செயலதைச்
    சொல்லிய விதத்தில்
    தொடங்கி
    உரிய காலத்தில
    செய்து முடித்தல் என்பது
    எளிதான ஒன்றல்ல…!

    குறும்பாவில்

    செயலொன்றை இங்ஙனம் செய்வேனெனச்
    செப்புதல் எளிதாம் எவர்க்குமே, சொல்லியபடி
    செயல்படுத்தல் மிகவும் சிரமமே…!

    மரபுக் கவிதையில்

    இன்ன படியே இச்செயலை
    எளிதாய்ச் செய்து முடிப்பேன்நான்
    என்னு முறுதி சொல்லுதலே
    எவர்க்கு மெளிதாம் அவனியிலே,
    சொன்ன வாறே செயலதனைச்
    சொன்ன விதத்தில் செயல்தொடங்கி
    முன்னர் குறித்த காலத்தில்
    முறையாய் முடித்தல் எளிதிலையே…!

    லிமரைக்கூ

    எளிதாகும் எவர்க்கும் சொல்லுதல்
    இப்படிச் செய்வேனென, எளிதல்ல உண்மையில்
    எதிலும் செயல்பாட்டில் வெல்லுதல்…!

    கிராமிய பாணியில்

    இருக்கணும் இருக்கணும்
    தெடமா இருக்கணும்,
    எந்தச் செயலையும் செய்யிறதில
    தெடமா இருக்கணும்..

    இந்தச் செயல
    இப்புடி இப்புடி செய்வேண்ணு
    சொல்லுறது ரெம்ப லேசு,
    சொன்னபடி அதச்
    செய்யத் தொடங்கி காலத்தில
    செய்து முடிக்கிறது
    கடினமான காரியந்தான்..

    அதால
    இருக்கணும் இருக்கணும்
    தெடமா இருக்கணும்,
    எந்தச் செயலையும் செய்யிறதில
    தெடமா இருக்கணும்…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 5

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 5

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘நோற்றுச் சுவர்க்கம்’ எனத் தொடங்கும் பத்தாவது பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை விளக்கம் – 3 | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    திருப்பாவை விளக்கம் – 3 | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் மூன்றாம் பாசுரம், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 9 | தூமணி மாடத்து

    திருப்பாவை – 9 | தூமணி மாடத்து

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘தூமணி மாடத்து’ எனத் தொடங்கும் ஒன்பதாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காலம் ஓர் ஆன்மா!

    காலம் ஓர் ஆன்மா!

    சி. ஜெயபாரதன், கனடா 

    காலமே ஆன்மாவின்
    கடிவாளம்,
    காலத்தின் கை எழுதும்
    ஞாலத்தின்
    வரலாற்றுச் சுவடு.
    பிரபஞ்சத்தின் ஆன்மா !
    ஒரு போக்குப் பயணம்
    காலத்துக்கு.
    எதிர்போக்கோ,
    இணைபோக்கோ இல்லை !
    இருபுறத்து
    பக்கப் பார்வை
    கிடையாது.
    நேர்போக்கு மட்டும் !
    காலம் மீளாது, கடிகாரம்
    நிற்காது !
    முதற் சுழி உண்டு.
    முற்றுப் புள்ளி இல்லை !
    காலத்தின்
    வேக மானி கதிரோன்.
    மானிடப் பிறப்பு, வளர்ப்பு
    இறப்புக்கு
    ஆன்மீக
    காலமே காரணி !

    Share
  • திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘கீழ்வானம் வெள்ளென்று’ எனத் தொடங்கும் எட்டாவது பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை விளக்கம் – 1 & 2 | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    திருப்பாவை விளக்கம் – 1 & 2 | பங்கஜமல்லிகா சேஷாத்ரி

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் முதல் பாசுரம், மார்கழித் திங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அம்மாவும் அலைபேசியும் (சிறுகதை)

    அம்மாவும் அலைபேசியும் (சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    யசோதா அவசர அவசரமாக மூன்று டிஃபன் பாக்ஸிலும் எலுமிச்சம்பழ சாதத்தைப் போட்டாள். உருளைக்கிழங்கு வறுவல், சின்னவன் சேதுவிற்கு காரமில்லாமல் தனியாக, பெரியவன் குமாருக்கு பெப்பர் போட்டு மொறுமொறுவென்று, கணவன் கணேசுக்கு ரொம்ப வறுக்காமல் மிருதுவாக. பொரியல் டப்பாவை நிரப்பினாள். சுடுதண்ணீர் வைத்து மூன்று பாட்டில்களிலும் ஊற்றினாள். மூன்று லஞ்ச் பேக் ரெடி. கணேஷ் இருவரையும் ஸ்கூலில் இறக்கிவிட்டு பிறகுதான் வாடகை எடுக்க வேண்டும். பெரியவன் குமாரின் பத்தாம் வகுப்பு பி ப்ளாக் ஒருபக்கம், சேதுவின் மூன்றாம் வகுப்பு இ ப்ளாக் ஒருபக்கம். பெரியவன் தனியாக போய்க் கொள்வான். சின்னவன வகுப்பு வாசல் வரை கொண்டுபோய் விடவேண்டும். ஆம்னி வேன் இ.எம்.ஐயில் வாங்கினது இது ஒரு சௌகர்யம். தனது பிள்ளைகளை கூட்டிட்டு வர்ற அதே வழியில் அதே பள்ளியில் படிக்கும் மேலும் இரண்டு மாணவிகள் வண்டியில் வருவார்கள்.  ஒருத்தி 3-ம் வகுப்பு சேதுவின் க்ளாஸ் மற்றொருத்தி ஏழாம் வகுப்பு.

    அவசர அவசரமாக மூவரும் வண்டியில் ஏறி உட்கார்ந்தனர். அவர்கள் சென்ற பிறகு யசோதா ஐந்து நிமிடம் உட்காருவாள். டீயைக்குடித்து விட்டு மறுபடியும் வேலை தொடங்குவாள். முதலில் பாத்திரம் கழுவி, வீட்டை ஒதுக்கி, வீடு கூட்டி துடைத்து, சாப்பிட உட்காருவதற்குள் மணி 10.00  ஆகிவிடும். காலை டிஃபன் சாப்பிடுவாள். டி.வி.ல பாட்டு மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வெளியில் வைத்திருக்கும் ரோசாச்செடி, கொய்யாமரம் சாமந்தி செடிக்கடியில் ஏதாவது செய்துவிட்டு இரண்டு பக்கெட் துணியை எடுத்துக்கொண்டு துவைக்கச்செல்வாள். துவைத்து விட்டு அவள் குளித்து வருவதற்குள் மணி 12.00 ஆகிவிடும். ஒரு மணிவரை ஓய்வு. ஒன்று வீட்டில் உள்ள ஏதாவது கிழிந்த தலையணைக் கவர், இல்லை துணிகளை தைத்துக் கொண்டிருப்பாள். இல்லை ஏதாவது அறையை சுத்தம் செய்வாள். எப்போதாவது பக்கத்து வீட்டு கீதாவிடம் போய் கொஞ்சநேரம் பேசிவிட்டு வருவாள். பல நாட்களில் கணவனின் வண்டி வாடகை வீட்டுப்பக்கம் வந்தால் மதியம் சாப்பிட்டு விட்டுதான் செல்வான். சாப்பிட்டபிறகு காய்ந்த துணிகளை எடுத்து மடக்கிவைத்து இரவு டிஃபனுக்கு ரெடி செய்வதற்குள் பசங்க ஸ்கூலில இருந்து வந்திருவாங்க. அப்புறம் அவங்களுக்கு பால் கலக்கிக் கொடுத்து சாப்பிட ஏதாவது வைத்துவிட்டு, கொண்டுசென்ற லஞ்ச் பாக்ஸெல்லாம் கழுவிவிட்டு சின்னவனுடன் கொஞ்சநேரம் பாடம் சொல்லிகொடுக்க உட்காருவாள். பெரியவன் டியூசன் போறதால அந்த வேல இல்ல. நைட் டிஃபன் வேல முடிஞ்சதும் அடுத்தநாள் சமையலுக்கான வெங்காயம் காய்கறிகளை எல்லாம் தோல் எடுத்து வைப்பாள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரிசி ஆட்டற வேலயும் இருக்கும். எல்லாம் முடிந்து படுக்கப்போவதற்குள் மணி 10.30 ஆகிவிடும். இதுதான் அவளது அன்றாட ஓட்டம். ஆனால் பேரு ஹெளஸ் வைஃப்.

    செவ்வாய் கிழமை

    வழக்கம்போல காலை சாப்பிட்டுவிட்டு துணி துவைக்க பக்கெட்டை எடுத்து வைத்துக்கொணடிருந்தாள். வீட்டு வாசலில் பைக் சத்தம் அவர்கள் குடியிருக்கும் தெருவில் ஆங்காங்கே சில வீடுகள்தான் இருக்கும் பகல்பொழுது பெரிதாக நடமாட்டமிருக்காது. ஹெல்மெட்டை கழட்டினபிறகுதான் தெரிந்தது வந்திருப்பது நிஷாந்த் என்று. நிஷாந்த் யசோதாவின் அக்கா குமுதாவின் பையன். காலேஜ் முடித்துவிட்டு சொந்தாமாக வர்க்ஷாப் வைத்திருக்கிறான். அக்கா குமுதாவிற்கு கவர்ன்மென்ட் ஆபீஸில் கிளர்க் வேலை. நிஷாந்திற்கு ஒரேஒரு தங்கை ஜோதி. இவனுக்கும் அவளுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். யசோதாவை அம்மா என்றுதான் கூப்பிடுவான் . குமுதாவை மம்மி என்று அழைப்பான்.

    ”வாடா என்ன இந்தப்பக்கம். திடீர்னு.”

    ”ஒண்ணுமில்லம்மா வர்க்ஷாப்ல பெரிசா வேல இல்ல.  அதுதா…. உங்கள பாத்து ரொம்ப நாளாச்சே பாத்துட்டு போலாம்னு வந்தே”

    ”மெலிஞ்ச மாதிரி இருக்கீங்கம்மா. ஏம்மா உடம்பு ஏதும் சரியில்லையா….”

    ”போடா நானே வெயிட் போட்டிட்டேனு இருக்கேன். ”

    யசோதா பேரழகி இல்லையென்றாலும் நல்ல கட்டை தேகம். உயரத்திற்கேற்ற உடல்வாகு. பெரிய  கண்கள். சிறிய மூக்கு, பெரிய உதடுகள், திரண்ட மார்பு, பார்த்தால் இரண்டு பிள்ளைகள் பெற்றவள் போலிருக்கமாட்டாள்.

    ”சரி நீ உட்காரு. காபி போடவா? டீ போடவா?”

    ”இல்லம்மா காலைல சாப்பிடல. டிஃபன் ஏதாவது இருக்கா?”

    அவன் எப்போதும் யதார்த்தம்தான். சின்னம்மா வீடுதானே தயங்கமாட்டான்

    சரி இரு வர்றேன் துணியை சோப்புபொடியில் ஊறவைத்து விட்டு வந்து தோசை வார்த்துக்கொடுத்தாள்.

    ”உங்களோட உளுந்து சட்னி சாப்பிட்டு ரொம்பநாளாச்சும்மா”

    ”சரி சாப்பிட்டு இருடா. நா போயி குளிச்சிட்டு வந்திடறேன்.”

    ”ஏ இனியும் குளிக்கலயா. இல்லேனா காலலயே குளிச்சிருவீங்க.”

    ”இல்லடா இப்ப எல்லா வேல முடியறதுக்கே 12 மணி ஆயிடுது. அதுக்கப்பறந்தா குளிக்கறது. தினமும் இந்த நேரமாயிடும்.”

    ”சரி நீங்க போயி வேலய பாருங்கம்மா. நான் கொஞ்ச நேரமிருந்திட்டு கிளம்பிடுவே.”

    அவள் அவசர அவசரமாக துணிகளை துவைத்து காய போட்டுவிட்டு குளித்துவிட்டு வந்தாள்.

    டி.வி.பார்த்துக் கொண்டிருந்த நிஷாந்த் எழுந்து

    ”சரிம்மா நான் கிளம்பறேன் என்றான். ”

    ”இருடா சாப்பிட்டு போலாம்”

    ”வேண்டாம்மா முடிஞ்சா நாளைக்கி வர்றேன்.”

    ”வர்றேனா முதலலேயே சொல்லுடா. ஏதாவது சிக்கன் கிக்கன் வாங்கி வெக்கறே.”

    ”அதெல்லாம் வேண்டாம்மா நேரம் கிடச்சா வர்றேன்.”

    புதன்கிழமை

    அடுத்தநாள் பசங்கள அனுப்பினதும். டயர்டா இருக்குனு யசோதா படுத்திட்டிருந்தா வண்டி சத்தம் கேட்டு வெளியில் பார்த்தா நிஷாந்த்

    ”வா….டா…..”

    ”உங்க கையால சிக்கன் வெச்சு தர்றேனு சொன்னீங்க. அதுதா மிஸ் பண்ண மனசுவரலம்மா. எங்க  வீட்ல இதெல்லா எங்க செய்றாங்க. எல்லா ஸ்விகிதா”

    ”ஐயோ நீ வர்றேனு உறுதியா சொல்லலயா வராம போயிடுவியோனு வாங்கலடா.”

    ”சரி பரவால்லம்மா ஒடம்ப பாத்துகோங்க. எனக்கு சங்கடமில்ல.” என்று டீ மட்டும் குடித்துவிட்டுச் சென்றான்.

    அன்றிரவு “ஏங்க நிஷாந்த் பாவம் சிக்கன் வெச்சிருப்பேன் சாப்பிடலாம்னு வந்தாங்க. பாவம் பைய ஏமாந்து போனா. அக்கா வேற கேம்ப்க்கு போயிருக்காளாம். வர்றதுக்கு ஒரு வாரம் ஆகுமாம். ஆசயா வந்திட்டு பைய சாப்பிடாம போனது சங்கட்டமா இருக்கு.”

    ”அதுக்கெதுக்கு இப்போ உட்கார்ந்து பெனாத்திட்டிருக்கே. நாளக்கி வாங்கி சமச்சு குடுத்திட்டா போச்சு. பேசாம தூங்கு. காலைல நானே வாங்கி குடுத்திட்டு போறேன்.”

    ”ம்ம்…….சரி”

    வியாழக்கிழமை

    ”ஹலோ நிஷாந்த்………. இன்னிக்கு வாப்பா இங்க வந்து சாப்பிடலாம். அவங்களுக்கு தக்காளி சாப்பாடு செஞ்சு குடுத்தனுப்பீட்டே. இனிமே தா சிக்கன் வேல ஆரம்பிக்கணும்.”

    ”அந்த வேல மட்டும்தானம்மா. குளிக்கற வேல துணி தொவைக்கற வேல எல்லாம் முடிஞ்சுதா.”

    ”இல்லப்பா இனிமேதா……. ஏ எதுக்கு கேட்கற”

    ”இல்ல நா எப்போ வந்தாலும் நீங்க பிசியா இருக்கீங்க. எல்லா வேலயும் முடிச்சு ஃப்ரீயா இருந்தா கொஞ்ச நேரம் பேசிட்டு போவேன். ”

    ”சரி நீ வா வர்றதுக்குள்ள முடிச்சர்றேன்.”

    அவன் வருவதற்குள் அவசரமாக சமைத்துவிட்டு, துணிதுவைத்துவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கதவு சாத்தினதும் வண்டி சத்தம் கேட்டது. அவர்களது பாத்ரூம் வீட்டிற்குள் இல்லை. வெளியில் தான் உள்ளது. 5சென்ட் இடத்தில் ஒவ்வொரு அறையாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஹாலும் சமையலறையும் எக்ஸ்ட்ரா ஒரு ரூமும் கட்டி குடி வந்துவிட்டார்கள். காசு கிடைக்கும் போது ஒவ்வொன்றாக கட்டிக்கொள்ளலாம் என்பதுத் திட்டம். எனவே பாத்ரூம் வெளியிலிருந்தது.

    வண்டி சத்தம் கேட்டதும்

    ”நிஷாந்த்……….. டி.வி போட்டு பாத்திட்டிரு இதோ ரெண்டு நிமிஷத்தில வந்தர்றே.” என்று பாத்ரூமிற்குள்ளிருந்து சத்தமிட்டாள் யசோதா

    ”சரிம்மா மெதுவா வாங்க” என்று டி.வில பாட்டு போட்டு உட்கார்ந்தான்.

    பாட்டு சத்தம் பாத்ரூம் வரை கேட்டது.

    திடீரென பாத்ரூம் கதவோரம் யாரோ ஓடுவது போல தோன்றியது யசோதாவிற்கு.

    வேக வேகமாக பாத்ரூம் கதவை  தாழிட்டுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா. நிஷாந்த் டி.வி பார்த்துக்கொண்டிருந்தான்.

    நிஷாந்த் உங்கூட யாராவது வந்தாங்களா?

    இல்லயே…. ஏம்மா

    இல்ல யாரோ இந்தப் பக்கம் போர்ற மாதிரி சத்தம் கேட்டுது. அதுதா கேட்டேன். அவன் சீக்கிரம் தனது வண்டி அங்கிருக்கா என்று வெளியில் வந்து பார்த்தான்

    அப்பாடா….சாவி வண்டிலேயே இருந்தது ஓடிப்போய் எடுத்து வந்தான்.

    இங்க யாரும்மா ஓடறா. உங்க பிரம்மையா இருக்கும். பகலிலே யாராவது வீடு புகுந்து கொண்ணு போட்டாக்கூட அக்கம்பக்கத்தில யாருக்கும் தெரியாது. இங்க யாரு வர்றா. நான்தா இங்கேயே உட்காந்திட்டிருக்கறனே.

    ஒரு வேள பேய் நடமாட்டம் ஏதாவது இருக்குமோ. ஏதோ யோசித்து விட்டவள் போல சரி வா…… சாப்பாடு போடறேன் என்று சோறு போட்டாள்.

    வயிறு நிறைய சிக்கனும் முட்டையும் தின்றுவிட்டு

    ”கைப்பக்குவம் மாறவே இல்லம்மா……. சூப்பர் லஞ்ச். சரிம்மா வர்க்ஷாப்ல ஒரு பையன உட்கார வெச்சிட்டு வந்திருக்கே. நான் போய் அவன சாப்பிட அனுப்பணும் என்று கிளம்பிவிட்டான்.

    யசோதா ஏதோ குழப்பத்துடன் வேலையைத் தொடர்ந்தாள்

    வெள்ளிக்கிழமை

    இன்றும் நிஷாந்த் சாப்பாட்டிற்கு வருவான் என்று தெரியும். அம்மா ஊரில் இல்லையென்றால் அவள் தங்கை ஏதாவது செய்து ஒப்பேத்திக்கொள்வாள். இவனுக்கு வக்கனையா வேணும்னு குமுதா திட்டிக்கொண்டே இருப்பாள்.

    அன்று என்றும் விட முன்னதாகவே அவள் வேலை முடித்து 11 மணிக்கே குளிக்கப்போனாள். நிஷாந்தின் வண்டி சத்தம்.

    ”நல்ல வேளை ப்பா குளிக்கப்போக பயந்திட்டே இருந்தே. நீ வந்தே”

    ”ஐயோ அம்மா இந்த வயசிலயுமா பயப்படுவீங்க. போங்க நா இங்க வெளியிலேயே உட்கார்ந்திருக்கே. யாரு வர்றாங்கணு பாக்கறே. ”

    ”யசோதா குளித்து முடிக்கும்போது அதேபோல ஓடும் சத்தம் கேட்டது.”

    ”டேய் இங்கதான உட்காந்திட்டிருந்த இன்னக்கி ஓடற சத்தம் கேட்டிச்சில்ல.”

    ”ம்மா… இங்கேயேதா இருக்கறே. எனக்கு ஒரு சத்தமும் கேட்கல.”

    ”நீ ஃபோன பாத்திட்டு உட்காந்திட்டிருந்தா எப்படி கேட்கும். எனக்கு நல்லா கேட்டிச்சு.”

    ”ம்மா பசிக்குது. ஏதாவது தர்றீங்களா. ”

    ”சரிடா வா.சாப்பிடு”

    நிஷாந்த் கிளம்பினதும் யசோதா பயந்துபோய் கதவை சாத்திக்கொண்டு கீதா வீட்டிற்குக் கிளம்பினாள்.

    சனிக்கிழமை

    அடுத்தநாள் காலைல குளிக்கற டைமிங்க மாத்திட்டு கீதா சொன்னமாதிரி பாத்ரூமுக்குள் போனாள். அன்றைக்கு காலைல டிஃபனுக்கே நிஷாந்த் வந்திருந்தான். அவனுக்கு தோசை சுட்டு கொடுத்துவிட்டு குளிக்கப்போனாள். அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

    பாத்ரூமிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டு, போட்டிருந்த நைட்டியை கழட்டி வேற நைட்டியை அவசரமாக எடுத்து போட்டாள். மெதுவாக குளிப்பது போல தண்ணீரை மொந்து மொந்து கீழே ஊற்றினாள். தண்ணீரை ஊற்றிக்கொண்டே சுற்றிலும் கண்பார்வையை ஓடவிட்டாள். திக்கென்று ஆனது. பாத்ரூம் சுவர் மேல்புறத்திற்கும் கூரைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் ரெட்கலர் ரெட்மி ஃபோன் ஒன்று, தான் குளிப்பதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தது. அவளுக்கு சத்தம் போடவேண்டும் என்றிருந்தது. வாயை பொத்திக்கொண்டு பதட்டப்படாமல் தண்ணீரை எடுத்து எடுத்து ஊற்றினாள். கொஞ்சநேரம் கழித்து தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தினதும் மெதுவாக ஃபோன் கை கீழே இறங்கியது.

    உள்ளே வந்தவள் நிஷாந்திடம் சொல்லலாம் என்று நினைத்தாள். வேண்டாம் மகனிடம் எப்படி? என்ன நினைப்பான்?

    கிச்சனில் நின்று அதையே யோசித்துக்கொண்டிருந்தாள். நிஷாந்த் தண்ணிகுடிக்க சமையலறைக்கு வந்தவன் தண்ணீர் குடித்துவிட்டு ஃபோனை திட்டிலேயே வைத்துவிட்டு போய்விட்டான். கறுப்பு நிற சாம்சங்க் ஃபோன். அப்போ ரெட்கலர் ரெட்மி இல்ல.

    கணவனுக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறலாம் என்று ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியில் வரும்போது நிஷாந்த் டி.வி பார்த்துக்கொண்டே யாரிடமோ பேசுகின்ற சத்தம் கேட்டது. கிச்சனில் பார்த்தாள் அவனது ஃபோன் அங்கேயே இருந்தது. அப்போ அவன் யார்கிட்ட பேசுறான். எட்டிப்பார்த்தாள். நிஷாந்த் கையில் அதே ரெட்கலர் ரெட்மி. ஒரு நிமிடம் இதயம் நிற்பது போலிருந்தது. அடக்கிக்கொண்டு மெதுவாக வெளியில் வந்து கதவை வெளியிலிருந்து தாழிட்டாள். சிறிது தூரம் வந்து கணவனுக்கு ஃபோன் செய்தாள்.

    அவன் உடனே வந்தான். நடந்ததை கூறினாள். அவனுக்கு கொஞ்சம் கூட நிஷாந்த் மேல் சந்தேகம் வரவில்லை. ஆதாரமில்லாம எப்படி கையாள்வது யோசித்தான்.

    ”என்ன சித்தப்பா இந்த நேரத்துக்கு”

    ”இந்தப்பக்கம் வாடக வந்துச்சு. சரி ஒரு டீ குடிச்சிட்டு போலாம்னு வந்தே. நீ கிளம்பிட்டியா.”

    ”ஆமா சித்தப்பா ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்திட்டு கிளம்பிடுவேன்.”

    ”ஃபோன வண்டில வெச்சிட்டேன்.. ஒரு நிமிஷம் ஃபோன குடு. ஒருத்தங்க இந்த நம்பருக்குக் கூப்பிடசொன்னாங்கணு கூறி ஒரு பேப்பரை கையிலெடுத்தான்”

    நிஷாந்த் திடீரென்று தெரியாம ரெட்கலர் ரெட்மியை எடுத்து நீட்டினான். கிச்சனில் வைத்த ஃபோனை மறந்தே போய்விட்டான். கொடுத்தபிறகுதான் கவனித்தான்.

    ”சரி ஃபோன் பேசிட்டு தந்திருவாரு” என்று பார்த்துக்கொண்டே இருந்தான்.

    டப்பென்று ஃபோனை கட்பண்ணிவிட்டு கேலரியை பார்த்தான் கணேசன். அதில் யசோதா குளிக்கும் வீடியோ இருந்தது.

    அவள் குளிக்கவில்லை. ஆடையுடன் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்

    நாடி நரம்பெல்லாம் துடித்தது. இரண்டு மூன்று நாளா அவ சொல்லிட்டிருக்காளே. அப்போ இவன் குளிக்கறத வீடியோ எடுத்திருப்பானே. ஐயோ அவ சொன்னப்பவே கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம்.

    வெக்கு வெக்கென்று வீட்டிற்குள் போனான்.

    நிஷாந்தை செயரோடு சேர்த்து எட்டி ஒரு உதை.

    செயரோடு கீழே விழுந்தான்.

    ”என்னாச்சு சித்தப்பா”

    ”என்னடா இது என்று மொபைலை காட்டினான்.

    நகர்ந்து வந்து கணேசின் இருகால்களையும் கட்டிக்கொண்டான்.

    மன்னிச்சிடுங்க சித்தப்பா

    என்ன காரியம்டா செஞ்சிருக்கே. அவ உனக்கு அம்மாடா

    யசோதா வாயை பொத்தி நின்று அழுது கொண்டிருந்தாள்.

    ”நா தப்பான கண்ணோட்டத்தில எடுக்கல சித்தப்பா என்ன நம்புங்க. ஃப்ரண்டஸ்தா சித்தப்பா. யு ட்யூப்ல போட கேட்டாங்க. வீடியோ குடுத்தா காசு தர்றேனு சொன்னாங்க சித்தப்பா. நம்புங்க ப்ளீஸ்……..

    ”அதுக்கு என்ன கார்யம்டா பண்ணி வெச்சிருக்கே”

    என்ன மன்னிச்சிடுங்கம்மா என்று யசோதாவின் கால்களை ஓடிவந்து கட்டிப்பிடித்தான்.

    அவள் எதுவும் பேசவில்லை

    கணேசன் பெல்ட்டை உருவி சரமாரியாக அடித்தான்

    நகர்ந்து நகர்ந்து சுவரில் சாய்ந்து அழுதுகொண்டே உட்கார்ந்தான்

    உன் தங்கச்சியையும் அம்மாவையும் இப்படிதா வீடியோ எடுப்பியாடா. மகனப் போல நினச்சிருக்காளேடா…. எப்படிடா மனசு வந்துது.

    என்ன மன்னிச்சிடுங்க சித்தப்பா

    போடா நாயே வெளில…….. இனிமே இந்தப்பக்கமே தல வெச்சு படுக்காத

    ஃபோனையும், சிம்கார்டையும் சுக்கு நூறாக உடைத்தான்.

    ”ப்ளீஸ் சித்தப்பா மன்னிச்சிடுங்க. மம்மிகிட்ட சொல்லிடாதீங்க. ப்ளீஸ் சித்தப்பா மம்மிக்கு தெரிஞ்சா என்ன உயிரோடயே விட மாட்டாங்க”

    ”ப்ளீஸ்……. ப்ளீஸ்…….

    ”கிளம்படா இங்கிருந்து நீ செஞ்ச கார்யத்துக்கு உன்னப் பாக்கறதே பாவம். முதல்ல வெளில போ.

    அழுதுகொண்டே வண்டியை ஸ்டார்ட்செய்தான். சத்தத்தை அந்தத்தெருவே வேடிக்கை பார்த்தது.

    அவனை விரட்டிவிட்டு உள்ளே வந்து பார்த்தான். யசோதா மயங்கிக்கிடந்தாள். தண்ணீர் தெளித்து எழுப்பினான்

    அவள் பித்துப்பிடித்தவள் போல ஓரிடத்திலேயே பார்த்துக்கொண்டிருந்தாள். ”ஏங்க இப்படியெல்லா…………………………………. நா என்னங்க தப்பு செஞ்…….சே”

    ”ஒண்ணுமில்ல. அவன் வீடியோவ பாத்தே அப்படியொண்ணுமில்ல. ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்திடு.”

    ”இல்லங்க ஊர்க்காரங்க தெரிஞ்சா நான்தா அவன இங்க வரவெச்சதா சொல்லுவாங்களே. என் நடத்தையதானே கேவலமா பேசும்.”

    ”ஊர்க்காரங்கள பத்தி கவலப்படாத. நம்ம வேலய பாப்போம்.”

    ”ஏங்க உங்களுக்கு எம்மேல கோபம் வரலியா. என் மேல சந்தேகமா இருக்கா.”

    ”போ போய் வேலயப்பாரு. பசங்க பாட்டி வீட்டில இருக்கறதும் நல்லதுதா. பசிக்குது ஏதாவது சாப்பிட எடுத்திட்டு வா.”

    ”இல்லீங்க எனக்கு………”

    ”இனிமே இதப்பத்தி பேசாதே. குமுதா வீட்டுக்கு வந்தரட்டும் அதுக்கப்பறம் என்ன பண்றதுனு யோசிக்கலாம்.”

    காபி போடப்போனவள் வெகு நேரமாகியும் வராததால் கிச்சனில் போய் பார்த்தால் மயங்கிக்கிடந்தாள். தண்ணீர் தெளித்துப் பார்த்தான் எழவில்லை. மூச்சுவிட சிரமப்பட்டுகொண்டிருந்தாள்.

    யசோதாவை காரில் ஏற்றி உட்கார வைத்தான்.

    நேராக மருத்துவமனைக்கு வண்டியை ஓட்டினான்.

    டாக்டர் இவ வீட்டில தனியாதா இருக்கா. எதையோ பார்த்து பயந்திட்டானு நெனக்கறே திடீர்னு ஃபோன் பண்ணி வரச் சொன்னா.

    பரிசோதித்த டாக்டர் ஒண்ணுமில்ல நல்லா தூங்கி எழுந்திருச்சா சரியாயிடும். ஒரு ரெண்டு பாட்டில் ட்ரிப்ஸ் போட்டிட்டு கூட்டிட்டுப் போய்க்கோங்க. ரொம்ப டயர்டா இருக்காங்க. தூக்க மருந்து போட்டிருக்கே.  பயப்பட ஒண்ணுமில்ல.

    அட்மிட் பண்ணி  ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது

    நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள்

    கண்களின் ஓரங்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

    ”ஏங்க சார் எதையோ நினைத்து வருத்தப்படறமாதிரி தெரியுது.” என்றார் டாக்டர்

    ஒண்ணுமில்ல டாக்டர். அவ அழுதிட்டு இருக்காளே அதுதா

    இட்ஸ் குயட் நேச்சுரல். ஓவர் டிப்ரஷனா இருக்காங்க அதனாலதா.

    அவன் சொல்லவும் முடியாமல் தவித்தான்.

    ’இவளுக்கு எதுக்காக தூங்கும்போது கூட கண்ணீர் வருது. மகனா நெனச்சவன் இப்படி செஞ்சிட்டானேன்னு அழுகறாளா? யுட்யூப்ல எல்லாரும் பாத்திருப்பாங்கணு நெனச்சு வருத்தப்படறாளா?. ஊர்க்காரங்கள நெனச்சு கவலப்படறாளா? இல்ல என்னை யோசிக்கறாளா?

    மருந்தின் வீர்யம் இமைகளை மயக்கி. எண்ணங்களை உறக்கியது. ஆழ்மன நினைவலைகளை உறங்க வைக்க முடியவில்லை.

    ஆறுதல்களால் ஆறாத ரணமாக அவள் மனது வலித்தது. நன்றாக மயங்கிய போதும் கண்ணீர் நிற்கவில்லை

    பெண்களின் சில ஆழ் மன உணர்வுகளுக்கும் மௌனமான கண்ணீருக்கும் யாராலும் ஆறுதல் கூறமுடியாது.

    Share
  • திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘கீசுகீசு என்றெங்கும்’ எனத் தொடங்கும் ஏழாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தேசிய ஓய்வூதியத் திட்டம் – முழு விவரங்கள்

    தேசிய ஓய்வூதியத் திட்டம் – முழு விவரங்கள்

    தனியார் துறையில் பணியாற்றுவோரும் அரசுப் பணியாளருக்கு இணையாக ஓய்வூதியம் பெற முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? தேசிய ஓய்வூதியத் திட்டம் நமக்கு எப்படி உதவும் என்பதை விரிவாக விளக்குகிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். பார்த்துப் பயன் பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பின காண்

    திருப்பாவை – 6 | புள்ளும் சிலம்பின காண்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘புள்ளும் சிலம்பின காண்’ எனத் தொடங்கும் ஆறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாவலி | வீர விளையாட்டு | தீப்பொறி வேடிக்கை

    மாவலி | வீர விளையாட்டு | தீப்பொறி வேடிக்கை

    கார்த்திகைத் தீப நாளில் ‘மாவலி’ சுற்றுதல், தமிழகத்தின் பண்டைக் கால வீர விளையாட்டு.

    பனம் பூக்கள் மலரும் காம்பை நன்கு காய வைத்து, தீயிட்டுக் கரியாக்கிவிடுவார்கள். பிறகு, அதை நன்கு அரைத்துச் சலித்து, பஞ்சால் ஆன துணியில் சுருட்டிக் கட்டுவார்கள். அடுத்து, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவார்கள்.

    பிறகு அதை உறியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள். இதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்துக் கனலை ஏற்படுத்துவர். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரி நட்சத்திரங்கள் பறப்பதுபோல் காட்சி தரும். மாவலிக்கு கார்த்திகைப்பொறி என்ற பெயரும் உண்டு.

    இக்காலத்தில் பலரும் மறந்துவிட்ட இந்தத் தீப்பொறி வேடிக்கையை இதோ கண்டு களியுங்கள்.

    காணொலி ஆக்கம்: ராஜ்குமார் நடராஜன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமரர் வானவன் ஏகாம்பரம் – வானளந்த மாண்பு

    அமரர் வானவன் ஏகாம்பரம் – வானளந்த மாண்பு

    ஒளவை அருள்

    டாக்டர் வானவன் ஏகாம்பரம் (4.12.1953 – 19.12.2022)

    நிலவியல் முது அறிவியல் மாணவராகச் சென்னை மாநிலக் கல்லூரியில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ந்தவராவார்.

    இவர் என் அம்மாவிற்குக் குதியுந்து (scooter) ஓட்டும் கலையைக் கற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அம்மா வாயிலாக நாங்கள் மூவரும் குதியுந்து ஓட்ட ஊக்கம் பெற்றோம்.

    இவர் அமெரிக்காவில் அணுசக்தி பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    டென்வரிலுள்ள உட்வேர்டு கிளைடு நிறுவனத்திலும் மற்றும் பல நிறுவனங்களிலும் சுற்றுப்புறச் சூழல் விஞ்ஞானியாகப் பணியாற்றிய பெருமை வாய்ந்தவர்.

    இவர், சென்னை திரு. கே. செல்வராசப் பிள்ளையின் புதல்வி ஆனந்தியை குசலாம்பிகை மண்டபத்தில் 3.9.1981 அன்று திருமணம் செய்துகொண்ட பொழுது, பள்ளி மாணவர்கள் நாங்கள் மணவிழாவில் கலந்து கொண்டது பசுமையாக நினைவில் உள்ளது.

    இவர்களுக்கு இரு ஆண்மக்கள், மனோஜ் மற்றும் மகேஷ் ஆவர்.

    செல்வன் மனோஜ், தற்போது ஜப்பானிய மருந்தியல் நிறுவனமான ‘NS Pharma’ நிறுவனத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.

    செல்வன் மகேஷ், மருத்துவப் படிப்பு நிறைவு செய்து கள மருத்துவராக ஃபுளோரிடாவில் பணியாற்றி வருகிறார்.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு, முதுநிலை ஆய்வாக 1990களில் அமெரிக்காவிற்குச் சென்று பயில வேண்டும் என்பது என் தணியாத ஆர்வமாகும். அதற்கு ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் வான் மாமா மிளிர்ந்தார்.

    அங்குள்ள பல பல்கலைக்கழகங்களில் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியர்களுடன் அவரே பேசி விண்ணப்பங்களைப் பெற்று நிறைவு செய்து உதவியதை இன்றும் நினைந்து உருகுகிறேன்.

    வான் எனும் சொல்லுக்கு ‘நேர்மை, ஒழுக்கம்’ என்றும் பொருளுண்டு என்று எந்தையார் என் அண்ணன் கண்ணனிடம் சொன்னதை நினைவுகூர்கிறேன்.

    1999ஆம் ஆண்டில் என் இனிய நண்பர் மலேசியா குமாருடன் திருச்சியில் மின் திட்டக் கூட்டத்தில் இருந்த பொழுது அமெரிக்காவிலிருந்து வருகை புரிந்த பொறிஞர் சேகர் நடராஜன் என்னிடம் திரு.வானவனின் கீர்த்தியை நண்பர்கள் பலர் மத்தியில் சொன்ன பொழுது எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்து, என் பெற்றோர்களிடம் சொல்லி மகிழ்ந்த நினைவலைகள் இப்பொழுது வந்து செல்கின்றன.

    நோய்கள் பல தொடர்ந்து அவரை வாட்டினாலும் கலங்காமல் எதிர்த்து வென்று காட்டிய வான் மாமாவின் திறம் அளப்பரியதாகும்.

    அண்மையில் 23.08.2022 அன்று தொலைபேசியில் என்னிடம் நீண்ட நேரம் பேசிய பொழுது, தன் மாமியார் எழுதிய பக்திப் பனுவல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    எந்தையாரைக் குறித்து எப்பொழுதும் பெருமிதமாகப் போற்றிப் பேசுவார்.

    அப்பா மறைவதற்கு முன்பே வான் மாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இன்முகத் திலகம் ஏகாம்பர மாமாவின் நூற்றாண்டு நிறைவின் பொழுது வான் மாமா வானில் கலப்பது துயரம் மிகுந்தாகும்.

    ஆற்றொணாத் துயருடன்
    ஒளவை அருள்

    Share
  • திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ எனத் தொடங்கும் ஐந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share